-
17th June 2019, 11:47 PM
#141
Junior Member
Diamond Hubber
திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் நகர எம்.ஜிஆர் மன்றத்தின் 54-ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா இவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ”பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்” என்ற பெயரில் திருவண்ணாமலை நகரிலும், மலேசியா நாட்டின் தலைநகரமான கோலாலம்பிலும் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. பரபரப்பாக விற்பனையாகும் இந்த புத்தகம் எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு தேவை என்றால் கீழ் கண்ட முகவரிக்கு உடன் தகவல் தெரிவிக்கவும் புத்தகம் நன்கொடை ரூ.100/-
இரண்டாவது பதிப்பாக மிக விரைவில் பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பகுதி-2 வெளியிடப்பட உள்ளது இந்த புத்தகத்தில் விளம்பரம், கவிதை, கட்டுரை, (எம்.ஜி.ஆர் பற்றிய)
அனுப்பவேண்டிய முகவரி
எம்.ஜி.ஆர்.பித்தன் அ.அ.கலீல் பாட்சா,
நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், (தலைமை கழக பேச்சாளர்)
நெ.30இ, மாரியம்மன் கோயில் 5வது தெரு,
திருவண்ணாமலை.
செல் 94430 19160............. Thanks wa.,
-
17th June 2019 11:47 PM
# ADS
Circuit advertisement
-
17th June 2019, 11:48 PM
#142
Junior Member
Platinum Hubber
திரு.ஆவடி குமார் (அ.தி.மு.க.பிரமுகர் ) பேசும்போது
-
17th June 2019, 11:49 PM
#143
Junior Member
Platinum Hubber
முனைவர் திருமதி பாண்டியம்மாள் பேசும்போது
-
17th June 2019, 11:51 PM
#144
Junior Member
Platinum Hubber
முனைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது
-
17th June 2019, 11:52 PM
#145
Junior Member
Platinum Hubber
முனைவர் திரு.பெ.செல்வகுமார் பேசும்போது
-
18th June 2019, 12:03 AM
#146
Junior Member
Platinum Hubber
கருத்தரங்கில் திருவாளர்கள் மூர்த்தி,பெங்களூரு (2ம் நபர் ), ஆவடி குமார் , சுவாமிநாதன், லோகநாதன்
-
18th June 2019, 12:04 AM
#147
Junior Member
Platinum Hubber
முனைவர் திரு.சதீஷ் பேசும்போது
-
18th June 2019, 12:06 AM
#148
Junior Member
Platinum Hubber
முனைவர் திரு.சுலோச்சனா பேசும்போது
-
18th June 2019, 12:08 AM
#149
Junior Member
Platinum Hubber
முனைவர் திரு.சரளாதேவி பேசும்போது
-
18th June 2019, 06:54 AM
#150
Junior Member
Diamond Hubber
*_எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவரும் சி.பொன்னையன்_*
சைதை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக அரசின் சாதனைகளுடன் எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.
அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான சி.பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக தினமும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்து பணியாற்றிய மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, எம்ஜிஆரின் வாழ்க்கை சம்பவங்களையும் கூறி வருகிறார். இது சைதாப்பேட்டை வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் பொன்னையன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
சைதாப்பேட்டையில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் என்பதால், எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது, இந்த தொகுதியில் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வழியில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல சுகாதாரம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அளித்து வருகிறார்.
பசியின் கொடுமை
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வரும்போது, ரூ.300 கோடி செலவாகும், அதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இருந்த மத்திய அரசு கைவிரித்து விட்டது. ஆனால், எம்ஜிஆர், ‘‘பசியின் கொடுமை எனக்கு தெரியும். எனவே, நான் பட்ட துயரத்தை இனி எந்த குழந்தையும் படக்கூடாது’’ எனக் கூறி அரசின் மற்ற துறைகளில் சிக்கனத்தை கடைபிடித்து, அதன்மூலம் கிடைத்த நிதி ஆதாரம் கொண்டு சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்பிறகு, இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது முதலமைச்சர் ஜெயலலிதாவை சேரும். அதிமுக தொடர்ந்து நல்லாட்சி வழங்கிட எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
காரை மறித்த பெண்கள்
பொன்னையன் பேசும்போது, ‘‘கடந்த 1977-ல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எம்ஜிஆருடன் காரில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 பேர் திடீரென காரை மறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், அவர்களிடம் விசாரித்தார். ‘எங்களுக்கு வேலை எதுவும் இல்லை, பணம் கொடுங்கள்’ என்று அந்த பெண்கள் கூறினர். எவ்வளவு வேண்டுமென எம்ஜிஆர் கேட்டார். அதற்கு ரூ.300 கொடுங்கள் என்றனர்.
‘‘அது போதுமா?’’ என்று கேட்டபடியே, எம்.ஜி.ஆர். தன்னிடம் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை தலா ரூ.4 ஆயிரம் என 10 பெண்களுக்கு பிரித்துக் கொடுத்தார். ‘‘நீங்கள் வெவ்வேறு இடங்களில் காய்கறி கடை, இட்லி கடை, பழக்கடை என வைத்து வியாபாரம் செய்யுங்கள். இனி யாரிடமும் பணம் கேட்கக் கூடாது’’ என அந்தப் பெண்களிடம் அறிவுரை கூறிய எம்ஜிஆரை பார்த்ததும் நான் வியந்துபோனேன்’’ என மக்களின் கரகோஷத்துக்கிடையே பொன்னையன் தெரிவித்தார்........... Thanks wa.,
Bookmarks