-
16th July 2019, 03:55 PM
#591
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019 03:55 PM
# ADS
Circuit advertisement
-
16th July 2019, 03:59 PM
#592
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019, 04:01 PM
#593
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019, 04:06 PM
#594
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019, 04:20 PM
#595
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019, 04:30 PM
#596
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019, 04:47 PM
#597
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th July 2019, 08:16 PM
#598
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவரின் மனிதநேயத்தை என்றும் எக்காலத்திலும் பறைசாற்றும் விதமாக புதிய அமைப்பு ...... நம் தலைவரின் அபிமானிகள் பக்தர்கள் பல அமைப்பிலும் செயல்படுபவர்கள் அங்காங்கே இருப்பவர்கள் தனியாக செயல்படுபவர்கள் இப்படி தலைவர் மீது பற்றுள்ள உண்மை உள்ளங்கள்...... தென்னகமெங்கும் உள்ள பொன்மனச் செம்மலின் விசுவாசிகளை இணைக்கும் ஒரே நல் அமைப்பு .... "எம்.ஜி.ஆர்.புகழ் பரப்பும் இயக்கம் " நல்லவர்களின் ஆதரவுடன் விரைவில் .. இந்த அமைப்பில் செயலாளர்கள் மட்டும் (மாவட்டம் வாரியாக) பொருளாளர் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே! (தலைவர் துணைத் தலைவர் யாரும் கிடையாது) இன்னும் பல தீர்மானங்கள் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழில் இடம் பெறும். நம் தலைவர் எந்த ஜாதியோ....... எந்த மாதத் தலைவரோ.... எந்த மொழி போதகரோ. கண்டிப்பாக கிடையாது.
மனிதரை மனிதராக நேசித்த பாராட்டிய பெருமை சேர்த்த மனித புனிதர் உலகில் தலைவர் மட்டுமே! நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks...
-
16th July 2019, 11:49 PM
#599
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நேற்று இன்று நாளை 12-7-1974 வெளியானது.
சென்னை பிளாசா 105 நாள் மகாராணி 105 நாள் சயானி 69 நாள் கிருஷ்ணவேணி 77 நாள் மதுரை சிந்தாமணி 124 நாள் நெல்லை பார்வதி 124 நாள் ஓடியது. காஞ்சிமாநகரில் லட்சுமி திரையரங்கில் 50 நாள் ஓடியது.
நேற்று இன்று நாளை படத்தை வெளியிட திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்தது கருணாநிதி அரசு. அப்போதிருந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.ஏ.எல்.சீனிவாசன் மூவி மேக்கர்ஸ் கவுன்சில் யாவும் வாய் மூடி மவுனியாக இருந்தார்கள். புரட்சித்தலைவர் தன்னந்தனியாக கருணாநிதி யின் திட்டங்களை தவிடு பொடி ஆக்கினார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.அசோகன் கோபாலபுரம் கருணாநிதி வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு எம்ஜிஆர் அவர்களை தாக்கி கருணாநிதி வசனம் எழதிய வண்டிக்காரன் மகன் மற்றும் ஜெய்சங்கருடன் சேர்ந்து எம்ஜிஆர் அவர்களை தாக்கி நடித்தார். எதுவும் எடுபட வில்லை.
: விஸ்வரூபம் பட பிரச்சனை வந்த போது கமல்ஹாசன் நாட்டை விட்டே போகிறேன் என்று சொல்லி மறு வாரமே ஜெயா தொலைக் காட்சி வந்து உட்கார்ந்தார். இன்னொரு நடிகர் அஜீத் என்னை விழாவுக்கு வர மிரட்டுகிறார்கள் என்று தைரியமாக முதல்வர் கருணாநிதி முன் பேசி விட்டு மறு நாள் கோபலபுரம் சென்றார். இன்னோரு சூரப்புலி விஜய் என்ற நடிகர் தலைவா என்று பெயர் வைத்து ஆளும் கட்சி கோபத்துக்கு ஆளாகி கொட நாடு வரை சென்று முதல்வரை பார்க்க முடியாமல் திரும்பினார்.
: இன்னொரு நடிகர் 1996 முதல் அரசியலுக்கு வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வருகிறார். வந.தால் தெரிந்து விடும் இவருடைய செல்வாக்கு !
: புரட்சித்தலைவர் ஒருவர் தான் ஆளும் கட்சியை எதிர்த்து தைரியமாக தன்னந்தனியாக போராடி 1972 முதல் 1976 வரை ஜெயித்தார்!
: இப்போது வாரிசு அரசியல் பேசப்படுகிறது. 1974 ல் கவிஞர் வாலி மூலம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார். தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். என்று அன்றே கருணாநிதி யின் முகமூடியை கிழித்தார்.
: No one is equal to mgr.
நேற்று இன்று நாளை திரைப்படம் வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவு ஆனது .
இனிமையான பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் , பொழுது போக்கு அம்சங்கள்
அரசியல் நெடி நிறைந்த வசனங்கள் நிறைந்த ஜனரஞ்சக படமாக அமைந்தது .
ஒரு கதாநாயகன்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (ஆனால் இரட்டை வேடம் ) மூன்று கதாநாயகிகள் , மஞ்சுளா, லதா, ராஜஸ்ரீ , திரைக்கதை நேர்த்தியாகவும், பல திருப்பங்களுடன் கிளைமாக்சில் இயக்குனர் ப.நீலகண்டன் திறம்பட இயக்கி
இறுதியில் சுபமாக முடித்தார். நடிகர்கள் அசோகன், நம்பியாரின் வில்லத்தனம் அபாரம். பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி சில காட்சிகளில் நடித்திருந்தார் .
நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுகுமாரி, மற்றும் ஐசரிவேலன் தமது நகைச்சுவையால் நன்கு சிரிக்க வைத்தனர் . வி.கே.ராமசாமி, பண்டரிபாய், கரிக்கோல் ராஜு மற்றும் பலர் நன்கு சோபித்தனர் .
பாடல்கள் :
1. பாடும்போது நான் தென்றல் காற்று ( அருமையான காதல் பாடல் )
2. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே( அந்த காலத்தில் அரசியலில் ஊழல் மற்றும்
ஆளும் கட்சியின் நிர்வாக சீர்கேடுககளை அப்பட்டமாக தோலுரித்து காட்டிய து )
3.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை ( காதல் பாடல் )
4. நெருங்கி நெருங்கி பழகும்போது (காதல் பாடல் )
5. பாடும்போது நான் தென்றல் காற்று ( 2 வது முறை -காதல் பாடல் )
6.அங்கே வருவது யாரோ (காதல் பாடல் )
7.ரோமியோ ஜூலியட் - இன்னொரு வானம் , இன்னொரு நிலவு
(இனிமையான காதல் பாடல் )
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வகையில் மிக இனிமையாக பாடல்கள் வடிவமைத்தார்
நான் முதன் முறையாக குரோம்பேட்டை வெற்றியில் முதல் நாள் மேட்னி காட்சியில் பார்த்து ரசித்தேன் வெற்றியில் 50 நாட்கள் ஓடியிருந்தது
பிறகு பிளாசா, மகாராணியில் (மூன்று முறை ) கிருஷ்ணவேணியில் பார்த்து மகிழ்ந்தேன் .பிளாசாவில் ரிசர்வேஷனில் 54 காட்சிகளும் , மகாராணியில் 63 காட்சிகளும் வெளியாகும் முன்பு அரங்கு நிறைந்தது எதிர்க்கட்சிகளின் சதியால் சயானி அரங்கில் வெள்ளித்திரை கிழிக்கப்பட்டது .இருப்பினும் அதை சரிசெய்து
திரைப்படம் ஓடியது . பார்வையாளர்களுக்கு தீப்பெட்டி, பீடி, சிகரெட் , சிகர்லைட்
போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை இந்த மாதிரி கட்டுப்பாடுகள்,
கெடுபிடிகள் ,ஆளும் கட்சியின் எதிர்ப்புகள் , போஸ்டர் விளம்பரங்கள் அனுமதி மறுப்பு எல்லாவற்றையும் மீறி வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது .இந்த நிலைமை எந்த தமிழ் படத்திற்கும் நேர்ந்ததில்லை என்பது வரலாறு என்பதை
நினைவில் கொள்ள தக்கது .
Last edited by puratchi nadigar mgr; 17th July 2019 at 06:42 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th July 2019, 12:02 AM
#600
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks