-
8th August 2019, 11:20 PM
#941
Junior Member
Platinum Hubber
நாளை முதல் (09/08/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை உலகின் "காவல்காரன் " தினசரி 2 காட்சிகள்
நடைபெறுகிறது .
Last edited by puratchi nadigar mgr; 9th August 2019 at 10:44 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th August 2019 11:20 PM
# ADS
Circuit advertisement
-
9th August 2019, 10:16 PM
#942
Junior Member
Diamond Hubber
இன்றுமுதல் ராஜபாளையம் செங்கோட்டை வழி சேத்தூர் வீ.பி.எஸ் திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் புரட்சித்தலைவரின் "எங்கவீட்டுப்பிள்ளை " வெற்றிப்பவனி மதுரை.எஸ் குமார்......... Thanks...
-
9th August 2019, 10:18 PM
#943
Junior Member
Diamond Hubber
எங்கள் தங்கம் !
____________________
தங்கபதக்கத்தின் மேலே !
ஒரு முத்து பதித்தது போலே !
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ ?
நீயும் விட்டு கொடுத்திடலாமோ ?
கவிஞர் வாலி !
இந்த பாடல் காட்சியை ஊன்றி பாருங்கள் பின் கண்களை மூடி இந்த பாடல் காட்சியை அசைபோடுங்கள் பிறகு கண்ணாடி முன் நின்று உங்களை கவனியுங்கள் உங்களுக்கு ஐந்து வயது குறைந்திருக்கும்
இது தான் எம் ஜி ஆர் !
ஹயாத் !......... Thanks...
-
9th August 2019, 10:48 PM
#944
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2019, 10:52 PM
#945
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th August 2019, 10:58 PM
#946
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th August 2019, 11:11 PM
#947
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th August 2019, 02:44 PM
#948
Junior Member
Diamond Hubber
மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.......
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."
(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...)......... Thanks...
-
10th August 2019, 02:52 PM
#949
Junior Member
Diamond Hubber
சரித்திர, சாதனை, சகாப்த சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களின் சில துளிகள் தங்க... வைர... நவரத்தின தடயங்கள்....................................1 931 முதல் 1958 வரை சென்னையில் 4 தியேட்டர்கள் 100 நாள் "மதுரைவீரன்" (1956) சித்ரா 126,பிரபாத் 105, சரஸ்வதி126,காமதேனு 105. மொத்தம் ஒடிய நாள் : 462 நாட்கள். அடுத்து மூன்று அரங்கில் சாதனை "நாடோடி மன்னன்".........
பாரகன் 133, அஸ்ரீ கிருஷ்ணா 147, உமா 112. பாரகன் ஒடி முடிந்த பின் சன் தியேட்டர் 70 நாள். ஆக மொத்தம் ஒடிய நாட்கள்: 462 நாட்கள்........... இரண்டு மக்கள் திலகத்தின் படங்களும் சராசரியாக 462 நாட்கள் ஒடிய சாதனையை அது வரை எந்த படமாவது இந்த இரண்டு திரைப் படங்களின் ஒடிய நாட்களை வென்று இருக்கிறதா.... 1965 ல் தான் மக்கள் திலகத்தின் திரைப்படமே வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.... ஆம் உண்மை தான். காஸினோ 211, பிராட்வே 176, மேகலா 176. காஸினோவில் இருந்து மாற்றப்பட்டு ஸ்ரீனிவாசா 50 நாள், மேகலாவிலிருந்து மாற்றப்பட்டு பெரம்பூர் வீனஸ் 71 நாள். முதலில் ஒடிய மூன்று அரங்குகள் மட்டும். ஒடிய மொத்த நாட்கள் : 563 ஆகும். இந்த நாளை 1977 வரை எந்த படமும் தாண்டியது கிடையாது..... தொடருவோம்....... நன்றி! ....... உரிமைக்குரல் ராஜு.......... Thanks...........
,
Last edited by suharaam63783; 10th August 2019 at 02:56 PM.
-
10th August 2019, 09:09 PM
#950
Junior Member
Diamond Hubber
குமுதம் வார இதழ் 14.08.19ல் பெரு துளசி ஞானவேல் அவர்கள் மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன்.... கர்ணன் படத்தின் பின்னணி முதல் வசூல் வரை எழுதியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் அதிக வசூலை கொடுத்தது என்று எழுதியுள்ளார் 100%உண்மை, இதற்கு முன்னால் எழுதிய வார்த்தையை நன்றாக கவனிக்கவும், ரீலீஸான தியேட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான சிறுத்தையை அதில் அடைத்து வைத்தார்கள். சிறுத்தை யை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் எம் ஜி ஆராயும் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தது என்று எழுதி யுள்ளதை வன்மையாக மறுத்து கண்டிக்கிறோம். மக்கள் திலகம் எம்ஜிஆரையும் வேட்டைக்காரன் படத்தையும் பார்க்க வந்த கூட்டம் தான் வெளியே கூண்டில் இருந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்தது. இது தான் மறுக்க முடியாத உண்மை. உலகம் போற்றும் உத்தமத்தலைவனை பற்றி உண்மையை எழுதுங்கள், வயிற்றுப் பிழைப்புக்காக பொய்யை எழுத வேண்டாம்.வன்மையாக கண்டிப்போம்......... Thanks...
Bookmarks