-
25th August 2019, 07:34 PM
#1091
Junior Member
Diamond Hubber
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.
ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட
'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..
நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.
அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.
உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..
“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."
-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR
இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்
“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.
“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.
திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”
SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”
இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.
“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.
ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.
சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”
*.............சபை நாகரிகம் கருதி மூன்று வரிகள் (Lines)...........delete செய்யப்பட்டுள்ளது......... Thanks...
-
25th August 2019 07:34 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2019, 07:35 PM
#1092
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் நடிப்பில் உருவாக, “இயேசு நாதர்” துவக்கக் விழா 1969 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 26 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை சத்யா ஸ்டுடிவில்,சிறப்பாக நடைபெற்றது.
நீண்ட வெள்ளை அங்கியுடன், உடலை சுற்றி தோளிலே சரிந்த சிவப்பு துண்டும், தோள் அளவு தாழ்ந்த தலைமுடியும், எழில் நிறைந்த குறுந்தாடியும், கனிவு சிந்தும், புன்னகையுடன் ஏசுநாதராக வேடம் புனைந்து காட்சி அளித்த நம் பொன்மனசெம்மலை கண்டதும், துவக்க விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள். அப்படியே ஏசுநாதரை போன்றே தோற்றமளித்த அவரை வணங்கியவர்கள் பலர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அப்போதைய கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள், நமது புரட்ச்த்தலைவரின் வேட பொருத்தத்தை கண்டு வியந்து, ஏசுபிரானின் வேடம் தாங்கிய திரு. எம். ஜி. ஆர். அவர்களின் உடல் அமைப்பு தனக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதாக கூறினார்.
பாதிரியார் அடைக்கலம் அவர்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், “ஏசு பிரானின் வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என்றார்.
பின்பு, வாழ்த்தி பேசிய ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள், “தேர்தலில், வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற நாளில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ஏழை எளியவர்களின் நலனுக்காக ஏசு பிரான் சிலுவையை சுமந்ததைப் போல், தான் இந்த அரசு பாரத்தை சுமக்க ஆரம்பித்துள்ளதாக கூறியதை நினைவ கூர்ந்த பொழுது, அனைவரின் கண்களிலும், கண்ணீரை வரவழைத்தது. அப்போதுதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமாகி சுமார் 1௦ மாதங்கள் ஆகியது.
இறுதியில் நமது மக்கள் திலகம் உரையாற்றிய போது, “இங்கே நான் அமைதியாக இருக்கிறேன் என்று பலரும் பேசினார்கள். ஏசு நாதரைப் பற்றி அறிந்தவர்கள் அமைதியாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்றும், அதனால்தான், நான் அமைதியாக இருந்தேன்”
என்று தன்னடக்கத்துடன் கூறினார். இந்த நிகழ்வு, ஏசு நாதரே நேரில் வந்து பேசியது போல் இருந்தது அன்று பலரும் சிலாகித்தனர்.
தயாரிப்பாளர் தாமஸ் நன்றி கூறினார்.
இந்த ஏசு நாதர் காவியத்தை, வின்சென்ட் அவர்கள் ஒளிப்பதிவில், ஜோசப் தளியத் அவர்கள் இயக்குவதாக இருந்தது.......... Thanks...
-
26th August 2019, 06:29 AM
#1093
Junior Member
Diamond Hubber
இப்போது டிஜிட்டல் வடிவில் தயாராகி விரைவில் வெளியாக இருக்கும் கலையுலக காவலர் மக்கள் திலகம் காவியங்கள்... " அன்பே வா" , & " நம்நாடு ".........
-
26th August 2019, 02:55 PM
#1094
Junior Member
Veteran Hubber
27.8.2019 தாலிபாக்கியம்
28.8.2019 கலங்கரை விளக்கம்
29.8.2019 தேடிவந்த மாப்பிள்ளை
31.8.2019 பாசம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th August 2019, 09:31 AM
#1095
Junior Member
Diamond Hubber
27-08-1966 - 27-08-2019 இன்று கலை சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "தாலி பாக்கியம்" 53 ஆண்டுகள் நிறைவு... மக்கள் திலகத்தின் யதார்த்த சிறந்த நடிப்பில் நம்மை கட்டி போட்ட காவியம்...
-
27th August 2019, 09:32 AM
#1096
Junior Member
Diamond Hubber
*நாம் இப்படி அவர்கள் அப்படி*
இன்று மாலை எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது ...
அவர் சிவாஜி படங்களை மாதாமாதம் ஒரு ஊரில் அமைப்பு வைத்து நடத்தி ஒளிபரப்புகிறார் (பெயரும் .. ஊரும் வேண்டாம்)
நம் தலைவரின் தம்பி என்பதாலும் நம் தலைவரும் சிவாஜி அவர்களை நேசித்தார் என்பதாலும் எனக்கு சிவாஜி அவர்களை வெறும் நடிகராகப் பிடிக்கும் ...
அவர் சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை ...
ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையில் என்னை அவர் ஊருக்கும்... அமைப்புக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் ... சென்றேன்.. அமைப்பின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் பயணமும் .. தங்கலும் சற்று வசதி குறைவு தான்..
நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன்..
நம் தலைவர் காணாத கடினங்களா என்று எந்த சூழ்நிலையையும் அப்படியே முகம் கோணாமல் ஏற்றுக் கொள்வது தலைவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது ...
தலைவர் தினசரி உடற்பயிற்சியோடு தியானமும் செய்வார்...
அந்த தியானத்தை தினசரி நானும் கடைபிடிக்கிறேன்...
ஆக.. சிவாஜி அவர்களின் நடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அங்கே வாசித்தேன்...
அனைவருக்கும் பிடித்திருந்தது ...
இதுவல்ல விஷயம்...
நம் தலைவரின் அழியாப் புகழைத் தாங்க முடியாத சில சிவாஜி ரசிகர்கள் தலைவரை சம்மந்தமே இல்லாமல் குறை சொல்லினர்..
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என் தாயின் தந்தை திரு.எஸ்.வி.எஸ் மணி தலைவரின் நண்பர் மற்றும் Production Manager for FR Pictures... உரிமைக்குரல் திரைப்பட விநியோகஸ்தர்... இதை எல்லாம் அறிந்தும் இங்கிதமில்லாமல் பேசினர்...
தர்ம சங்கடமாக இருந்தது ...
ஏன்டா நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம் என்று...
இது நிற்க ..
அந்த நண்பர் அடிக்கடி பேசுவார்...
நம் தலைவரின் பக்தர்கள் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் திரைப்படம் காட்டுதல் பற்றியும் உச்சியில் ஏற்றிப் பேசுவேன்...
நான் இது வரை சிவாஜி அவர்களைப் பற்றி குறை சொன்னதில்லை..
என் தலைவர் என்னை அப்படி வளர்க்கவில்லை...
இன்று பேசிய அதே நண்பர் அரசகட்டளைக்கான என் முகநூல் பதிவைப் படித்து குசலம் விசாரித்தார்...
நான் ஏற்கனவே பெரிய திரையில் தலைவரின் ராஜ வசீகரத்தைப் பார்த்து சொக்கிப் போயிருந்ததால் நிகழ்வை மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்...
சிற்றுண்டி தருகிறார்கள் .. நீங்கள் தண்ணீராவது தர வேண்டும் .. என்று சொன்னேன்...
என் கெட்ட பழக்கமே இதயத்திலிருந்து பேசுவது தான்..
உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து உரைப்பது நம் தலைவருக்கு மிகவும் பிடித்த குணம் ...
அதற்கு அவர் அரசியல் அமைச்சர்கள் உதவியிருப்பார்கள் என்றார்..
நான் இல்லை என மறுத்தேன்...
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பொய் சொல்வார்கள் அவரின் நிறைய படங்கள் ஓடவே இல்லை என்றார்...
நான் அதற்கும் மறுத்து என்னிடம் அவர்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கிறார்கள் ...
அரசகட்டளையை ஒரு மூத்த தலைவரின் பக்தரோடு பார்த்துக் கொண்டிருந்தேன்...
படம் நிகழும் போதே ...
அந்த மூத்த பக்தரிடம் படம் உங்கள் காலத்தில் எத்தனை நாட்கள் ஓடியது எனக் கேட்டேன்..
அவர் சற்றும் யோசிக்காமல் 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..
அய்யோ.. எவ்வளவு அருமையாக இருக்கிறது 80 ×2 =160 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படமல்லவா எனக் கூறினேன்..
சில அரசியல் காரணமாக 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..
அந்த நேர்மை தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
அந்த சத்தியம் தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட சிவாஜியை குறை சொல்லி நான் கேட்டதே இல்லை...
ஒரு சிவாஜி ரசிகர் கூட எம்.ஜி.ஆரை குறை சொல்லாமல் இருந்ததை நான் கேட்டதே இல்லை...
தாழ்வு மனப்பான்மை தான் குறை சொல்லும் ...
நாம் நிறைவானவர்கள்..
வான் புகழை அந்த வயிறுகளால் ஜிரணிக்க முடிவதில்லை...
தொடர்ந்து பேசிய அவர் இருவரும் கடினப்பட்டுத் தான் வந்தார்கள் என்றார்...
ஆம்.. சிவாஜி நுழைந்த உடனே பிரபலமாகி விட்டார்...
எம்.ஜி.ஆர் கடந்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றேன்..
சிவாஜியும் சினிமாவில் கஷ்டப்பட்டார் என்றார்...
நாடகத்தோடு அவர் கடின காலங்கள் முடிந்துவிட்டது பராசக்தியில் இருந்து அவருக்கு ஏறுமுகம் என்று சொல்லி..
பராசக்தியில் கதை தான் ஹீரோ... சப்ஜெக்ட் தான் கதாநாயகன் என்ற ஒரு உண்மையை சொல்லி.. அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதால் அடுத்த படத்திலிருந்து ஹீரோவானார் என்றேன்...
சிவாஜி நடித்திருக்காவிட்டால் ஓடியிருக்குமா? எனக் கேட்டார்.. அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்ற வகையில் மெளனம் காத்தேன்...
நான் 1984 என்றபடியால் எம்.ஜி.ஆர் படங்கள் எப்படி ஓடியது என்பதை எல்லாம் என் தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்
என் தாயின் தந்தை திரு எஸ்.வி.எஸ் மணி அவர்கள் எம்.ஜி.ஆர் மட்டும் தான் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாதவர் என முன்பே சொல்லி இருந்ததையும் பதிவு செய்தேன்...
உரிமைக்குரல் படமே அதற்கு சிறந்த உதாரணம் என்றிருக்கிறார்...
தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த சிவாஜி ரசிகர் பிறகு பேசுகிறேன் எனத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ...
சத்தியத்தின் முன் நிற்க... சத்தியத்தாயின் திருமகன் புகழ் முன் நிற்க இந்த உலகத்தில் எவருக்குமே தகுதியோ அருகதையோ இருந்ததில்லை... இருக்கவும் போவது இல்லை...
இதை எந்த சபையிலும் துணிவோடு சொல்வேன்...
நம் தலைவரைப் பற்றி ஒன்றல்ல.. அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை.. அவரின் மிகையில்லா மேன்மை திரை நடிப்பைப் பற்றி அனைத்துப் படங்கள் பற்றியுமே எழுதிப் பேச நான் பேனா வாளோடு தயாராகவே இருக்கிறேன்...
அமைப்பினர் மேடை தந்தால் ... வாய்ப்பு தந்தால் அரங்கேற்றிடலாம்..
ஏற்கனவே தோட்டத்து விஜயகுமார் (எம்.ஜி.ஆர் விஜயன்) அவர்களின் பேராதரவோடு அவரின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் ரசிகன் மாத இதழில் என் பல கட்டுரை வெளியாகி இருக்கிறது .. என் கல்லூரி கால அனுபவங்கள் அவை..
அவரே என் தலைவர் கவிதைக்கு முன் பக்கம் தந்து என் எழுத்துக்கு மகுட மரியாதை தந்தவர்.. நான் அப்போதெல்லாம் சின்னப் பையன்..
அவர் நல்ல பண்பாளர்..
நேர்மையாளர்..
என் தலைவிதி அவரை இழந்தேன் ..
அவர் உயிர் இழப்பதற்கு பத்து நாட்கள் முன்பு என்னோடு நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய பொங்கல் வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் பேசினார்...
அன்றே நான் அவர் குரலை கடைசியாகக் கேட்டது...
இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது...
அவரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்...
அவரே தோட்டத்தில் தலைவரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தலைவரின் டைரியை காண்பித்தவர்..
இந்த நேரத்தில் அவருக்கென் இதய அஞ்சலி...
தோட்டத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் தலைவரின் பள்ளியில் ஒரு விழா .. என் கவிதைக்கு விசில் சப்தம் கேட்டது அன்றே முதன் முறை..
எம்.ஜி.ஆர் சிவா படகோட்டி கெட்டப் அப் பில் மேடையில் வலம் வந்தது .. மக்கள் அவரின் கால்களில் விழுந்தது.. நான் பிரம்மித்த தருணங்கள் அவை ...
எம்.ஜி.ஆர் சிவாவும் இப்போது உயிரோடு இல்லை...
விஜயகுமார் அண்ணா அவரோடு என்னையும் ஒரு புகைப்படம் எடுத்தார்.. அதுவும் என்னிடம் இல்லை..
நான் விஜயகுமார் அண்ணாவின் இதழில் வெளிவந்த தலைவர் கவிதைகள் .. கட்டுரைகள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்..
இதை எல்லாம் நான் சொல்ல காரணம்..
எனதருமை தலைவரின் ரசிகர்களே .. பக்தர்களே ... சரியான பாதையில் தான் நாம் பயணம் செய்கின்றோம்..
உங்களின் கொடை உள்ளம் தொடரட்டும்..
தலைவரைப் பற்றிய என் எழுத்துக்களும் தொடரும்...
சிறு மதி படைத்த அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் வயிறு எரிகிறார்கள் என்றால்...
நாம் இன்னமும் சரியான பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்...
நடிகர்கள் எல்லாம் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது...
திரையில் மட்டுமல்ல நம் உயிர் வரையில் ஆள்கிறார் நம் தலைவர்...
அவரின் கொள்கைக் கொடி பிடித்து வீறுநடை போடுவோம்...
குறை சொல்வதல்ல என் உள்நோக்கம்..
இங்கிதமும் இதயமும் பெருந்தன்மையும் நமக்கு அதிகம்...
நன்கொடை கேட்க வந்தவர்களிடம்
காசுக்கு பாட்டெழுதிய கண்ணதாசனுக்கு எதற்கு சிலை? என்று ஆரம்ப சிலை அமைப்பாளர்களிடம் கேட்டவர் உயிர் திரு சிவாஜி அவர்கள்..
(அவர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது)
அது போகட்டும்...
அவர்கள் அப்படி
நாம் இப்படி
அரசன் எவ்வழி
மக்கள் அவ்வழி
நம் அரசன்
கொடை சக்கரவர்த்தி...
வள்ளலாரின் அவதாரம்...
இதயம் திறந்து வைத்தே ஒரு நயவஞ்சக கழகத்தால் ஏமாற்றப்பட்ட இறைவன் அவன்...
அந்த இறைவனே என் வழிபாட்டு தெய்வம்
இப்படிக்கு
தலைவரின் கடைக்கோடி பக்தன்
*வைரபாரதி*............ Thanks...
-
27th August 2019, 09:36 AM
#1097
Junior Member
Diamond Hubber
மறு வெளியீட்டு காவியங்களின் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " எங்க வீட்டு பிள்ளை" மதுரை திருப்பரங்குன்றம் - லட்சுமி dts அரங்கில் வெற்றி பவனி... Thanks...
-
27th August 2019, 06:37 PM
#1098
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th August 2019, 07:03 PM
#1099
Junior Member
Diamond Hubber
நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!
‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.
அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.
பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை............. Thanks.........
-
27th August 2019, 07:13 PM
#1100
Junior Member
Diamond Hubber
மக்கள் இதயங்களை வென்றெடுத்த மனித நேய சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் மாண்பினை பொறுத்து கொள்ள இயலாமலும், பொது மக்கள் சார்பில் தானாக கொடுத்த பட்டங்களை கூட விடாமல் காப்பியடித்து அந்த முகாம் நண்பர்கள் பிள்ளைகள் கூத்தடிப்பது பலரும் அறிந்ததே... மிகவும் பாவமாகத்தான் இருக்கு, பரிதாபமாகவும் இருக்கு... ரொம்பவும் மனதளவில் பாதிக்கப்பட்ட நபராக தெரிகிறது... முதலில் நல்ல ... மருத்துவராக பார்த்து சிகிச்சை எடுப்பது தான் உடனே பலனளிக்கும்...
Bookmarks