-
2nd September 2019, 10:51 AM
#1141
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd September 2019 10:51 AM
# ADS
Circuit advertisement
-
2nd September 2019, 07:09 PM
#1142
Junior Member
Diamond Hubber
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....
ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,
" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வித்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...
" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....
அவர் தானைய்யா எவர்க்ரீன் ஹீரோ........... Thanks...
-
3rd September 2019, 11:34 AM
#1143
Junior Member
Diamond Hubber
#நடிப்புக்கு #மட்டுத்தான் #சம்பளம்
#அன்பே #வா படப்பிடிப்பிற்காக மக்கள்திலகம் கோவை செல்வதற்காக, சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள விமானநிலைய அதிகாரி ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர்...
அவர் எம்ஜிஆர் வைத்திருந்த சூட்கேஸை எடைபோட்டு அதற்கு ரூ.7000/- பணம் கட்டச்சொன்னார்...
அதற்கு எம்ஜிஆர் ..."பெட்டிக்குத் தான் மதிப்பா ? அதிலிருக்கும் 40000/- ரூபாய்க்கு மதிப்பில்லையா ? எனக்கேட்டார்...
அதற்கு ஜெயக்குமார்..."நீங்கள் பணத்தை சூட்கேஸில் வைக்கவேண்டாம். கையிலுள்ள "பேக்" ல் வைத்துக்கொள்ளுங்கள்...என்று பணத்தை எடுத்துக்கொடுத்து ... அது சரி, "ஷூட்டிங்கிற்குத் தானே போகிறீங்க.? அதுக்கு இவ்வளவு பணம் எதுக்குக் கொண்டு போகணும் ? " என்று கேட்டார்.
அதற்கு எம்ஜிஆர் ... "நான் ஊட்டி, கொடைக்கானல் போனால் அங்கு உடன் வரக்கூடிய அலுவலர்களுக்கும், நான் தங்குகிற இடத்தில் வேலை செய்யறவங்களுக்கும் மப்ளர், ஸ்வெட்டர் வாங்கித் தருவேன். அப்புறம் கொஞ்சம் பணம் என் சொந்த தேவைகளுக்காகவும் " என்று சொன்னார்...
அதற்கு ஜெயக்குமார்..."#அதெல்லாம் #புரொட்யூஸர் #தானே #பாத்துக்குவாங்க..#நீங்க #ஏன் #கொடுக்கணும் ? "
எனக்கேட்டார்.
"#அவங்க #என் #நடிப்புக்கு #மட்டும்தான் #கொடுப்பாங்க...#என் #சௌகர்யத்துக்கெல்லாமா #கொடுக்கச்சொல்லணும்...? #நான் #கொடுப்பதற்காகத்தான் #சம்பாதிக்கிறேன், #சேர்த்துவைக்க #அல்ல..."
என்றார் நம் வள்ளல்பெருந்தகை
ஆனால் இன்றைக்கு...?.......... Thanks.........
-
4th September 2019, 07:35 PM
#1144
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து 1947 - 1977 வரை 31 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி வசூலில் புதிய சாதனைகள்படைத்தது . தொடர்ந்து 1977 முதல் 2019 இன்று வரை அவருடைய பழைய படங்கள் ஓடிக்கொண்டு வருகிறது .
1947 - ராஜ குமாரி மக்கள் திலகத்தின் முதல் கதாநாயகன் படம்
1948 - மோகினி
1949 - ரத்னகுமார்
.புரட்சிகரமான படஙகளில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்து திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்
1950 - மந்திரகுமாரி
1951- மர்மயோகி
1952 - என்தங்கை
1953 - ஜெனோவா
1954 - மலைக்கள்ளன்
1955 -குலேபகாவலி
1956 - மதுரை வீரன்
எம்ஜிஆரின் ஆளுமைகள் மிக திறம்பட ரசிகர்களால் கவரப்பட்டது .
1957 - சக்கரவர்த்தி திருமகள்
1958 - நாடோடி மன்னன்
1959 - தாய் மகளுக்கு கட்டிய தாலி .
எம்ஜிஆர் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய வெற்றி படைப்புகள் . வசூலில் பிரமாண்டம் .
1960 -மன்னாதி மன்னன்
1961 - திருடாதே
1962 - தாயை காத்த தனயன்
1963 - பெரிய இடத்து பெண்.
எம்ஜிஆரின் புகழ் உச்சத்தை தொட்ட காலம்
1964 - பணக்கார குடும்பம்
1965 - எங்க வீட்டுப்பிள்ளை
1966 - அன்பே வா
அரசியல் மற்றும் சினிமாவில் வெற்றி பவனி .
1967 - காவல்காரன்
1968 - குடியிருந்த கோயில்
1969 அடிமைப்பெண்
காவல்காரன் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு . குடியிருந்த கோயில் - சிறந்த நடிகருக்கான விருது .அடிமைப்பெண் - பிலிம் பேர் விருது
மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா . ரிக் ஷாக்காரன் 21 வாரங்கள் . நல்ல நேரம் - சென்னை நகரில் 4 திரை அரங்கில் 100 நாட்கள்
வசூலில் பிரமாண்ட சாதனைகள்
.
1970 - மாட்டுக்கார வேலன்
1971 - ரிக் ஷாக்காரன்
1972 - நல்ல நேரம்
மக்கள் திலகத்தின் தீவிர அரசியல் மற்றும் ஆட்சி அமைத்த கால கட்டங்களில் வெளிவந்த வெற்றி படைப்புகள் .
1973 - உலகம் சுற்றும் வாலிபன்
1974 - உரிமைக்குரல்
1975 - இதயக்கனி
1976 - நீதிக்கு தலை வணங்கு
1977 - மீனவ நண்பன்
1978 - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்........... Thanks...
-
5th September 2019, 12:39 AM
#1145
Junior Member
Diamond Hubber
த*லைவ*ர் வெளிப்புற ஷூட்டிங்கில் இருந்த ச*மய*ம் வ*ழக்கம்போல் கூட்ட*ம் கூடிவிட்ட*து. அதில் வ*யதான அம்மாள் ஒருவ*ர் எம்ஜிஆரைக்காண சிர*மப்ப*ட்டு கொண்டிருந்தார். அந்த அம்மாவை பாதுகாவ*லர் மூலம் அருகே அழைத்து ஏன் அம்மா இப்ப*டி சிர*மப்ப*ட்டு வ*ருகிறீர்க*ள்? எந்த ஊர்? எனக்கேட்டார்.
அந்த தாயோ என மகராச*னைப் பார்க்க புதுக்கோட்டையிலிருந்து வ*ருகிறேன் என்றார். உட*னே த*லைவ*ர் உங்க*ள் ஊரில்தானே ஏற்கெனவே ஒரு மகாராஜா இருக்கிறாரே! என்று கூற அந்த தாயோ, நீங்க*ள்தான் எங்க*ளுக்கு என்றும் ம*காராசா என்று த*லைவ*ரின் க*ன்ன*த்தை திருஷ்டி க*ழித்து கூறினார்.
த*லைவ*ரோ, அம்மா! இப்ப*டியெல்லாம் என்னை சிரமப்பட்டு பார்க்க வ*ர*வேண்டாம்! உங்க*ள் ஊர் திரைக்கு நான் அடிக்க*டி வ*ருகிறேனே! அதில் பார்த்தால் போதும்! உங்க*ளைப்போன்றோர் நினைவு எனக்கு எப்போதும் உண்டு என்று கூறி கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து ப*த்திர*மாக ஊர்போய்ச் சேருங்க*ள் என்று அனுப்பிவைத்தார். இந்நிக*ழ்ச்சி தேர்த்திருவிழா ப*ட ஷூட்டிங் கும்ப*கோணம் அருகே ந*ட*ந்தபோது நிக*ழ்ந்தது!.......... Thanks...........
-
5th September 2019, 12:40 AM
#1146
Junior Member
Diamond Hubber
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.
1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது MGR குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.
தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். MGR படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை MGR தகர்த்து எறிந்தார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் MGR கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். MGR ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.
1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர்.அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் MGR தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக MGR இருந்தார்.
பேரறிஞர் அண்ணா தான் MGR ரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். MGR ரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக MGR நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், MGR கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு MGR மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.
படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி MGR என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் MGR என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று பேரறிஞர் அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.
1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு MGR வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.
அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை MGR ரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் MGR உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் MGR தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் MGR தான்.
பேரறிஞர் அண்ணாவை நாட்டின் முதலமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் அமருவதற்கு காரணம் MGR தான். இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக
எடப்பாடி.K.பழனிச்சாமி இருப்பதற்கும் MGR தான் காரணம். MGR இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.......... Thanks...
-
5th September 2019, 12:49 AM
#1147
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செய்தி. அதை நம்முடைய ஃபிலிமி பீட் வாசகர்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
mgr பற்றிய செய்திகளும் அள்ள அள்ள குறையா 'அக்ஷயபாத்திரமே'!........ Thanks...
-
5th September 2019, 12:52 AM
#1148
Junior Member
Diamond Hubber
வருகின்ற 6-09-2019 வெள்ளிக்கிழமை முதல் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " ரிக்க்ஷாக்காரன்" டிஜிட்டல் திண்டுக்கல்- NVGB dts தினசரி 4 காட்சிகள் வெற்றி உலா... Thanks...
-
5th September 2019, 07:30 PM
#1149
Junior Member
Diamond Hubber
எம். ஜி.ஆர் ., வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..!
By Ezhil MozhiFirst Published 5, Sep 2019, 12:41 PM IST
HIGHLIGHTS
கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம். ஜி.ஆர் வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..!
திமுக எம்பி கனிமொழி அவர்கள் சிறுவயதாக இருக்கும்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் கையில் தூக்கி வைத்தவாறு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனும் சிறுவயதாக இருக்கும்போது தன் தந்தை குமரி அனந்தனுடன் கலைவாணர் அரங்கில் நடைபெறும் பல்வேறு அரசியல் சார்ந்த கூட்டத்திற்கு சென்று தலைவர்கள் பேசும் பேச்சை தொடர்ந்து கவனித்து வருவாராம்.
அப்போது எம்ஜிஆர் தமிழிசையை அழைத்து உன் தந்தையை போல் நீயும் அரசியலில் பெரும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்து கூறி ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில் கனிமொழி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால் கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தற்போது மிக உயரிய பதவியான தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகமொத்தத்தில் எம்ஜிஆர் வாழ்த்திய இவ்விரு அரசியல் புள்ளிகளின் மகளும் இன்று அரசியலில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளனர் என்பதற்கு இந்த இரு படங்களுமே சான்றாக அமைந்துள்ளது என்றால் யாராலும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது...! எம். ஜி .ஆர் ., வாழ்த்து அப்படியோ...!
Last Updated 5, Sep 2019, 12:41 PM IST
TAGS
Lifestyle
tamilisai
kanimozhi
mgr wishes ......... Thanks..........
-
5th September 2019, 08:54 PM
#1150
Junior Member
Diamond Hubber
கோவை மாநகரில் தொடர்ந்து 3 மாதங்களாக பட்டையை கிளப்பி வரும் கலையுலக என்றும் ஏக சக்கரவர்த்தியாம் மக்கள் திலகம் " எங்க வீட்டுப்பிள்ளை" டிஜிட்டல் நாஸ் dts அரங்கில் தினசரி 4 காட்சிகள் மீண்டும், மீண்டும் அதிரடியாக ஆரம்பம்... இதுவல்லவா அஃக் மார்க் சாதனை உச்சம்.......... Thanks...
Bookmarks