-
6th October 2019, 09:17 AM
#171
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019 09:17 AM
# ADS
Circuit advertisement
-
6th October 2019, 09:18 AM
#172
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019, 09:21 AM
#173
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019, 09:25 AM
#174
Senior Member
Devoted Hubber

நன்றி சிகரம் தொடு
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019, 09:29 AM
#175
Senior Member
Devoted Hubber
அன்றும் சரி, இன்றும் சரி...
தன்னை நம்பியவர்களை
உயரத்தில் வைத்து அழகு பார்க்கும்
குணம் கொண்டவர் தான் ...
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
அன்று #2015ல்
அரசு சார்பில் மணிம்ண்டபம் கட்ட வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி
சிவாஜி சமூகநல பேரவை சார்பில நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் தான் இவர்கள்...
இன்று #2019ல்
இவர்கள் அனைவரும்
முக்கிய பதவிகளில்
இருப்பவர்கள்.
#சிவாஜியை நம்பி
#வாழ்ந்தவர்கள் உண்டு...
#வீழ்ந்தவர்கள் இல்லை....
இதுதான் #வரலாறு...

நன்றி சுந்தர்ராஜன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019, 09:32 AM
#176
Senior Member
Devoted Hubber
புதுவை சிவாஜி மன்றத்தினர் உருவாக்கி இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச நோட்டு புத்தகம்,
முன்பக்க பின்பக்க அட்டைப் பட அலங்காரம் என கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மற்றும் மாகா கவி பாரதியாக நடிகர் திலகம் சிவாஜியின் அழகிய படங்கள்,
குழந்தைகள் குதூகலமாக பேசிக்கொள்ளும் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை,
ஏனைய பிற ஊர்களிலும் பின்பற்றுவோம் இதே பாணியை,
... நண்பர் சதீஷ் அவர்களுடன் மகிழ்ச்சியாக ஒரு க்ளிக்,

நன்றி சேகர்.ப
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019, 09:36 AM
#177
Senior Member
Devoted Hubber
எங்கிருந்து தான் கிளம்பி வருகிறார்கள் இந்த டிவி விவாதங்களில் பேசுவதற்கு?
இன்று தந்தி டிவியில் "ஆயுத எழுத்து" விவாத நிகழ்ச்சியில் இன்றைய தமிழ்ப் படங்களின் நில...ையைப் பற்றிய விவாதத்தில் இயக்குனர் ஆர்.பார்த்திபன் அவர்களது "ஒத்த செருப்பு " திரைப்படத்திற்கு நன்றாக மக்கள் ஆதரவு கொடுத்தும் திரையரங்குகளில் தொடர முடியாத சூழல் இருக்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் மீதான வருத்தத்தை பதிவு செய்த விவாதத்தில்,
அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மக்கள் வராத பட்சத்தில் மட்டுமே பெரிய திரையரங்குகளில் தொடர முடியவில்லை என விவாதம் இருந்தது,
இந்த சூழலில் "பிஸ்மி" என்ற திரைப்பட செய்தியாளராம் அவர் சொல்லும் போது "இல்லை இல்லை பொதுவாக மஸாலா படம் என்றால் மட்டுமே மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்" என்ற அவரது கண்டுபிடிப்பை வாதத்தில் வைத்தார்,
அதற்கு மறுப்பு தெரிவித்த தந்தி டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் " அது எப்படி 50 வருடத்திற்கு முன்பு வந்த கர்ணன், வசந்த மாளிகை எல்லாம் மீண்டும் ரி ரிலீஸாகி ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறதே அப்படி என்றால் நல்ல படங்களுக்கு வரவேற்பு இருக்கத் தானே செய்கிறது" என அழுத்தமாக பதிவு செய்தவருக்கு
பிஸ்மி சொன்னான் பாருங்கள் விளக்கம்
" கர்ணன், வசந்த மாளிகை எல்லாம் குறைந்த தியேட்டரில் தான் ரிலீஸாகின, தியேட்டர் எண்ணிக்கையும் பார்க்க வேண்டும்" என அவிழ்த்து விட்டான்
இந்த பிஸ்மி போன்ற அரை குறை சினிமா செய்தியாளர்கள் முழுவதுமாக தெரிந்து கொண்டு பொது விவாதத்திற்கு வர வேண்டும்,
கர்ணன் புதிய படங்களுக்கு இணையாகவே 75 தியேட்டர் என ஆரம்பித்து 200 தியேட்டர்கள் என தொடர்ந்தது
அதே போல சமீபத்தில் வசந்த மாளிகையும் வெற்றி பெற்றது, இரண்டு வாரங்கள் கூட எட்ட முடியாத புதிய திரைப்படங்களுக்கு இடையே கர்ணன், வசந்த மாளிகை ஆகியவை 100 நாட்களைக் கடந்ததோடு இல்லாமல் வசூலில் சாதனையையும் படைத்தன,
இந்த வெற்றிகளை ஜீரனிக்க முடியாத கூட்டங்கள் ஏற்கனவே ஒப்பாரி வைத்து திரியும் வேளையில் பிஸ்மி போன்ற செய்தியாளர் என ஒரு கூட்டம்??



நன்றி சேகர்.ப
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th October 2019, 07:05 PM
#178
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
திரு சுந்தரபாண்டியன்
மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள்
வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.
வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது
தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து
பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .
உங்களைப்போலவே நானும் கேட்கவா?
ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.
சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.
இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?
103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.
அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?
மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.
அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.
அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.
நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.
உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.
அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?
காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.
-
6th October 2019, 07:11 PM
#179
Junior Member
Senior Hubber
இதைத்தான் சொன்னேன்.
சிவகாமியின் செ்ல்வன் படம் பல நாட்கள் காட்சிகள் ரத்தாகி தொடர்ந்து ஓடவே இல்லை. இதுபற்றி ஏற்கெனவே விவாதங்களிலும் சொல்லி அதற்கான செய்திகளையும் போட்டுள்ளோம்.
ஆனால், 50, 100 நாள் என்று போஸ்டர் அடித்து அன்று மட்டும் காட்சி நடத்திவிட்டு விழா கொண்டாடுவது, பிறகு ஒரு வருசம் 2 வருசம் கழிச்சு மறுவெளியீட்டில் சிவாகாமி செல்வன்100 நாள் ஓடியது என்று தம்பட்டம் அடிக்க வேண்டியது.
சரி. உங்களைப் பொறுத்தவரை இதுவே பெரிய வெற்றிதான்.
Last edited by SUNDARA PANDIYAN; 6th October 2019 at 07:13 PM.
-
7th October 2019, 04:36 AM
#180
Senior Member
Devoted Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN
சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.
ஆகஸ்ட் 13 க்கு முதல் பேசப்பட்டவிடயம் அதற்கு உங்களிடமிருந்து பதிலில்லை
அதன்பின் பலமுறை வந்து போனீர்கள் ஒன்றும் கேட்கவில்லை ஆனால் இப்பொழுது கேட்பதாக சொல்கிறீர்கள்
உங்களுக்கே முன்னுக்கு பின் முரண் தெரியவில்லையா? தற்பொழுது வசந்த மாளிகை இணைந்த 100 நாட்கள் கண்டதும் மனம்
பொறுக்கமுடியாமல் ஓடிவந்து மறுபடி ஆரம்பித்துவிட்டு நீங்கள் ஆரம்பிக்கவில்லை என்கிறீர்கள்.
இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் இணைந்த என எழுதப்பட்டுள்ளது கவனித்துப்பாருங்கள்
ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?
பல இடங்களில் தொடர்ந்து வெளியிப்பட்டு ஊர் தியேட்டர் விபரங்கள் வெளியிடப்பட்டன.
103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.
தவறவிடப்பட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது
அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
அந்த தியேட்டர்களில் ஓடவில்லை என்பதை சென்று பார்த்தீர்களா?
எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
பணமா பாசமா? படத்தை நெல்லையில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தார்கள் 174 நாளுடன் நிறுத்தப்பட்டது .சின்னத்தம்பி படத்தையும் நெல்லை மற்றும் சில ஊர்களில் வெள்ளிவழா ஓடவிடாமல் தடுக்கப்பார்த்தார்கள் உரியவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டதனால் ஆட்டம் பலிக்கவில்லை. ராஜா மறுவெளியீடு கண்டபொழுது ஆட்டம் போட்டு சிவாஜி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள் . சிவந்த மண் படத்தை வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது இப்படி பல உண்டு. இப்படி அடாவடித்தனம் செய்து மற்றவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்துத்தான் உங்கள் படங்கள் முன்நிலை என்று காட்டநினைப்பது பிட் அடிச்சு பாஸ் பண்ணுவதற்கு சமன்.
உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?
மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.
புத்தகத்தில் வந்தது பற்றி புத்தகத்தை எழுதியவரிடம்தான் கேட்கவேண்டும். அது ஒரு விளம்பரத்தில் வந்தது அதில் உள்ள கமா, புள்ளி என்பனவற்றை தவறான இடத்தில் போட்டுவிட்டாரா என்பதை அவர்தான் சொல்லமுடியும்.
மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?
மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?
ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.
அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.
அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.
நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.
சிவாஜி கணேசன் அவர்கள் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் கௌரவ நடிகராக வில்லத்தனம்கொண்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார் வயதானபின் வயதான வேடத்தில் தந்தை பாதத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவாஜி அவர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பாத்திரங்களைப்பற்றி கவலைப்படாதவர் . ஸ்டண்ட் நடிகர்தான் (personality disease ) ஆளுமை வியாதி பிடித்த மனநோயாளி
உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.
அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?
காமராஜர் அரசியலில் நடிக்கத்தெரியாததனால்தானே தோற்கடிக்கப்பட்டார்.
காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்துதானே சிறந்த அரசியல் ஞானியை தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டீர்கள்

தமிழகமெங்கும் இணைந்த 100 வது நாள்
Last edited by sivaa; 7th October 2019 at 04:39 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks