-
11th February 2020, 04:39 PM
#2641
Junior Member
Diamond Hubber
சந்தரோதயம் படத்தில் வரும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
என்ற பாடல் படமாக்க பட்ட போது
தேவைப்பட்டது ..
ஒரு ஆட்டுக்குட்டி ...
25 துணை நடிகர்கள். ..
10 குழந்தைகள். ....
50 அண்டாக்களில் நிரப்பப்பட்ட தண்ணீர்.
தலைவர் ஸ்டுடியோவுக்குள் வந்ததும்
முதலில் கவனித்தது குழந்தைகளை. ..
பின்னர் பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு
முன் குழந்தைகள் நனையும் காட்சி
என்பதால் தண்ணீரை தொட்டுப்பார்த்தார்
தண்ணீர் சில்லென்று இருந்ததால்
அது குழந்தைகளுக்கு ஒத்து வராது
என்பதால் சுடு தண்ணீரில் படப்பிடிப்பு
நடத்த உத்தரவிட்டார். ...
தயாரிப்பாளர் ..தண்ணீரை சுட வைத்து
படப்பிடிப்பு நடக்க சிறிது நேரம் ஆகும்
என்றார். ...தலைவர் சரியென்றார்....
பொன்மனச்செம்மல் ...குழந்தைகள்
பசியோடு இருக்கக்கூடாது என்று
உடனே தனது சொந்த பணத்தில்
பால் மற்றும் சக துணை நடிக நடிகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு
செய்தார். ....
நண்பர்களே நீங்கள் நன்றாக பாடலை
பார்த்தால் குழந்தைகள் வயிறு
நிரம்பி இருப்பதை பார்க்கலாம். ....
பாடல் படப்பிடிப்பு தொடங்கியது...
ஆட்டுக்குட்டியை தலைவர் தூக்கி
பாட ஆரம்பிக்க வேண்டும். ...
ஆடுக்குட்டி மிரண்டு ஓடியது. ...
மீண்டும் மீண்டும் காட்சி படமாக்கப்பட்டது. ...
குழந்தைகள் நனைந்து நின்றுக்கொண்டு
இருந்தனர்.....
தலைவர் உடனே ஆட்டுக்குட்டியின்
காலை கட்ட சொன்னார் நனைந்த சின்ன
குழந்தைகளுக்கு தொப்பி அணிய சொல்லி மீண்டும் படப்பிடிப்பை
ஆரம்பித்தார். ....
நண்பர்களே நாம் அனைவரும்
இந்த பாடலை ஆயிரக்கணக்கான
முறை பார்த்து கேட்டு ரசித்திருப்போம்
ஆனால் இந்த பாடல் எடுக்கப்பட்டதற்கு
பின்னால் இருக்கும் அந்த மனித நேயத்தை என்னவென்று சொல்லுவது....
நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு
பாசமிக்க தலைவரை இறைவன்
நமக்கு அளித்தார் என்று பெருமிதம்
கொள்வோம்..........
அருமை நண்பர்கள் அனைவருக்கும்
பிற்பகல் வணக்கம். ................ Thanks.........
-
11th February 2020 04:39 PM
# ADS
Circuit advertisement
-
12th February 2020, 11:17 PM
#2642
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
12th February 2020, 11:22 PM
#2643
Junior Member
Diamond Hubber
-
12th February 2020, 11:23 PM
#2644
Junior Member
Diamond Hubber
-
12th February 2020, 11:23 PM
#2645
Junior Member
Diamond Hubber
-
12th February 2020, 11:30 PM
#2646
Junior Member
Diamond Hubber
"அன்னமிட்ட கை " காவியத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்களுடன் பதிவை தொடர்கிறேன் ..
1.வெள்ளத்துக்கு அனை போடலாம் ஆனால் உள்ளத்தோடு பாசத்துக்கு அணை போட முடியாது ..
2 .ஊதுபத்திக்குப் பக்கத்தில் சிகரெட் இருக்க கூடாது. பாத்ரூம் பக்கத்தில் பூஜை அறை இருக்க கூடாது.
3. நல்லதைச் சொல்றவன்தான் நண்பனாக இருக்க முடியும்.
4. வீட்டுப் பாதுகாப்புக்கு பூட்டு போடற மாதிரி ஒமுக்கத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கனும்.
5. அவமானம் படுத்துவது வேறு அறிவுரை கூறுவது வேறு. இரண்டையும் ஒன்றாக நினைக்க கூடாது.
6. உடையை மட்டும் மாற்றினால் போதாது. உள்ளத்தையும் மாற்றியாகனும். அதற்கு அன்பு காட்டனும் அடுத்தங்களை மதிக்கனும்.
7..ஆடம்பரமாக அவியலும் பொறியலும் போட வேண்டாம். பாசத்தோடு பழைய சோறு போட்டா போதும் ..
8. .ஏமாற்ற நினைக்கறவங்கத்தான் அடிக்கடி இடத்தை மாற்றுவாங்க.
9. மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அன்பு காட்டனும் அதிகாரம் காட்டக் கூடாது.
10. வீட்டைக் பாதுக்காத்தான் நாயை வளர்க்கறாங்க அது வெறி பிடித்து அலைந்தா நாயை குறை கூற மாட்டாங்க வளர்த்தவங்கத்தான் குறை சொல்வாங்க.
11. சமுதாயத்தில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருடையை கையே தொட்டுப் பார்த்து நோயை தீர்ப்பவங்க டாக்டர்தான் ..
12 இதயத்தை சத்திரமாக வைத்தால் எல்லோரும் தங்குவாங்க அதே நேரத்தில் பத்திரமாகவும் இருக்கனும்.
13. ரத்த வெறிக்கொண்ட புலிக்கிட்ட தற்புகழ்ச்சி பற்றி பேசினால் அது கேட்காது. அழிவில்தான் நியாயம் என்று பேசினவங்க கிட்ட அன்பைப் பற்றி பேசினால் கேட்க மாட்டாங்க.
14 ஒரு முறை கேட்டு நியாயம் கிடைக்கலைன்னா மறு முறை வேறு வழியில் முயற்சி பண்ணனும்.
15 மரத்திலே ஏறி தவறி விழுந்துட்டாங்கன்னா அதற்காக மரத்தை வெட்ட மாட்டாங்க ஏறின விதம் தவறு என்றுத்தான் நினைப்பாங்க.
16. இன்னார்கிட்ட இன்னார் பற்றித்தான் பேசனும் என்கிற விதிமுறை இருக்கிறது.
17. டாக்டர் எக்ஸ்ரே எடுத்தா இதயத்தைத்தான் பார்ப்பாங்க அதில் உள்ள எண்ணங்களை பார்க்க முடியாது.
18. செடிக்கிட்ட மலர் கைமாறு எதிர்ப்பார்க்காது பிள்ளைக்கிட்ட தந்தை கைமாறு எதிர்ப்பார்க்கக்கூடாது.
19. எதிரியை யாராலும் கண்டுபிடிக்கப் முடியாது. உண்மையே யாராலும் அழிக்கவும் முடியாது.
20 அனாதைகள் மேல் யாராவது அக்கறைப்பட்டுத்தான் ஆகனும். உண்மையே பலமாக பேசும் போது மிரட்டுகிற மாதிரித்தான் இருக்கும்.
21.எந்த தாய்மீதும் யாரும் பாசம் காட்டலாம் தவறைக் மன்னிக்கிற ஒரே தெய்வம் பெற்றத்தாய்தான்
பின்குறிப்பு ..15- 09- 1972. ஆண்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வெளியிடபட்டது. (தலைவரின் கடைசி கறுப்பு & வெள்ளை காவியம்) படத்திற்கு வசனம் எழுதியவர் .A .L. நாரயணன்
அடுத்த பதிவு வள்ளல் புகழ் தொடரும்... Thanks......
-
13th February 2020, 07:50 PM
#2647
Junior Member
Diamond Hubber
நாளை முதல்
கோவை
சண்முகாவில்
நினைத்ததை முடிப்பவன்
-
14th February 2020, 11:10 PM
#2648
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (14/02/20) மூலக்கடை* ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
-
14th February 2020, 11:11 PM
#2649
Junior Member
Platinum Hubber
குமுதம் வார இதழ் -19/02/20
-----------------------------------------------
உங்க எம்.ஜி.ஆர். எப்படி இருக்கார் ? -பூவாளி - ஆர்.சி.சம்பத்*
--------------------------------------------------------------------------------------------------
தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். திடுதிப்பென்று நீக்கப்பட்டுவிட்டார் .தமிழகமே பரபரப்பாகிவிட்டது* பூதாகரமான இப்பிரச்னையில் தலையிட்டு என்னால் தீர்வு காணமுடியுமா தெரியவில்லை .* ஆனாலும் அசட்டு துணிச்சலுடன் கலைஞர் வீட்டுக்கு போனேன் .* அங்கே கொந்தளிப்பான சூழ்நிலை .
அமைச்சர்கள் பலர் வந்திருந்தனர் ,* மாடியில் அவர்களோடு கலந்து பேசிக் கொண்டிருந்தார் கலைஞர் . அவரது உதவியாளர் என்னிடம் நீங்கள் அவரை நாளை சந்திக்கலாமே என்றார் .* நான் ஒரு சிறு காகிதத்தில் மிக முக்கியம் , மா . லட்சுமணன் என்று எழுதி , இதை* முதல்வரிடம்**கொடுங்கள் .அவர் அழைத்தால்*சந்திக்கிறேன் என்றேன் .* *காகிதத்தை பார்த்ததும் கலைஞர் என்னை உடனே அழைத்தார் .* எம்.ஜி.ஆர். விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டார் .* அறிஞர் அண்ணா பாடுபட்டு வளர்த்த கழகம் அழிவதா ? என்று கேட்டேன் .**
இதை எம்.ஜி.ஆரிடம் கேட்கலாமே . அவர் உங்களுக்கு வேண்டியவராயிற்றே என்றார் முதல்வர் . கேட்கத்தான் போகிறேன் .* முதலில் உங்களை சந்திக்கத்தான் இங்கு வந்தேன் என்று கூறினேன் .
எம்.ஜி.ஆர். கூறும் குற்றச்சாட்டுக்கள் ஒருதலைப்பட்சமானவை .ஆதாரமற்றவை .* எந்த நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் .
எம்.ஜி .ஆரை பார்த்து பேசிவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று கூறிவிட்டு* புறப்பட்டேன் .* எம்.ஜி.ஆருக்கு போன் செய்து கலைஞரை சந்தித்த விவரத்தை சொன்னேன் .* சத்யா ஸ்டுடியோவில் நேற்று இன்று நாளை படப்பிடிப்பு உள்ளது . நாளை காலை 10மணியளவில் அங்கே வாருங்கள் என்றார்.* ஸ்டுடியோவுக்கு போனேன் .**
மேக்கப் ரூமிற்கு சென்றேன் .* மேக்கப் மீனை வெளியே அனுப்பிவிட்டு கதவை தாழிட்ட எம்.ஜி.ஆர். பிறகு என்னிடம் என் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ஆளும் கட்சிக்கு* பங்கு இருக்கிறது .* ஆனால் இல்லை என்கின்றனர் .* மதுரை மாநாட்டில் நான் ஒதுக்கப்பட்டேன் .* புறக்கணிக்கப்பட்டேன் .* ஒரு நடிகையை* படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தேன் .* அவர் மேஜரில்லை . மைனர் .* அதனால் ஒப்பந்தம் செல்லாது என பிரித்த செயல் யாருடையது .* என்றெல்லாம் கேட்டு 50 நிமிடம் தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி தீர்த்தார் .**
அதன்பின் எம்.ஜி..ஆர். தனிக்கட்சி துவங்கி ஆட்சி யை பிடித்தார் .* அவரை சந்திக்க போனேன்* * அங்கிருந்த எஸ்.டி.சோமசுந்தரம், நாஞ்சில் மனோகரனிடம் இவர் கருணாநிதிக்கு ரொம்ப வேண்டியவர்* என்று கூறி அறிமுகப்படுத்தினார் .பின் ஒருமுறை கருணாநிதியை சந்திக்க போனேன்* உங்கள் எம்.ஜி.ஆர். எப்படி இருக்கிறார் என்று கேட்டார் . என் நிலையை எண்ணி நொந்து கொண்டேன் .
திரையுலக* நினைவுகள் என்ற நூலில் திரைப்பட உதவி இயக்குனர் மற்றும் வசனகர்த்தா* திரு. மா. லட்சுமணன்*
-
14th February 2020, 11:12 PM
#2650
Junior Member
Platinum Hubber
குங்குமம் வார இதழ் -21/02/20
-------------------------------------------------
அன்பே வா -
---------------------
பார்க்க தெவிட்டாத* காதல் படம் .* ஓய்வுக்காக மலை பிரதேசத்துக்கு வரும் எம்.ஜி.ஆர். அங்கே அவருக்கு கிடைக்கின்ற அனுபவங்கள் , ,,,,,, இப்போது வரை*ரீமேக்கிலும் இனிக்கும் காதல் .**
ஏ.வி.எம். நிறுவனத்திற்காக எம்.ஜி.ஆர். அன்போடு செய்து கொடுத்த ஒரே படம் .எம்.ஜி.ஆரின் துடிப்பும் , சரோஜாதேவியின் வனப்பும் , எம்.எஸ். விஸ்வநாதனின் தேன் சொட்டும் பாடல்களும்,மெல்லிய காதல் சரசங்களும், இழையோடிய நகைச்சுவையும் படத்தை ஆகப் பெரிய வெற்றிக்கு அழைத்து சென்றன .
Bookmarks