-
29th March 2020, 06:26 PM
#2851
Junior Member
Platinum Hubber
கடந்த*20/02/20* வியாழனன்று*மாலை 5 மணியளவில் , சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில் வேல்ஸ்*பல்கலை*கழக*வேந்தர்*திரு.ஐசரி*கணேஷ்*தலைமையில ் , பிரபல*திரைப்பட*இயக்குனர் எஸ். பி. முத்துராமன் சிறப்புரையில் , பிரபல*இசை அமைப்பாளர் லஷ்மண் சுருதி* இன்னிசையில்* ஒளி - ஒலி* *காட்சிகளுடன் , கவிஞர் காவிரி*மைந்தன் அவர்களின்*நூல் *20-20-20 (மணியளவில் ) பொற்கால*பாடல்களின் பூக்கோலங்கள்* வெளியீட்டு*விழா , பார்வையாளர்களின் இலவச*அனுமதியுடன் அரங்கம்* நிறைந்த*காட்சியாக*நடைபெற்றது .**
மறைந்த*பிரபல*திரைப்பட*பாடலாசிரியர்களின்* வாரிசுகள் பிரம்மாண்டமாக*ஒரேமேடையில் பங்கேற்று நிகழ்ச்சியை*சிறப்பித்தனர் .
பிரான்ஸ்*எம்.ஜி.ஆர். பேரவை, மற்றும் புதுவை*எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.முருகு*பத்மநாபன்* சிறப்பு*விருந்தினராக கலந்து கொண்டார்.* மேலும் சிலர்*வெளிநாட்டில் இருந்து வந்து சிறப்பு*விருந்தினர்களாக கலந்து கொண்டனர்*.
நிகழ்ச்சியில் பேசும்போது*கவிஞர் திரு.காவிரி*மைந்தன் இந்த நூல் வெளியீட்டு*விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு ,ஆதரவு மற்றும் உதவிகள்*செய்த*திரு. சைலேஷ்*பாசு*அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் .* நிகழ்ச்சியில் கவிஞர்களின் வாரிசுகளுக்கு**மேடையில்*பொன்னாடை அணிவிக்கப்பட்டு , நினைவு பரிசுகள்*வழங்கப்பட்டன . கவிஞர்களின் வாரிசுகளும் தங்களது*பெற்றோர்களின் சினிமா*தொடர்பு, பாடல் களின்*பெருமை குறித்து*பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது .,*
நிகழ்ச்சி தொகுப்பாளர்* ஒவ்வொரு பாடலுக்கும்* திரைப்படத்தில்*இடம் பெற்ற சூழல், சில*பாடல் வரிகள், பாடலாசிரியரின் பெயர் , போன்ற விளக்கத்துடன்*மிக அழகாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு*தகுந்தாற்*போல பழைய பாடல்களுக்கு பிரபல*இசை அமைப்பாளர் லஷ்மண் சுருதி*மிகுந்த சிரத்தையுடன் கம்போஸ் செய்து பாடல்களை*இனிமையாக வழங்கினார் . சுமார்*3 மணி நேரம் மறைந்த*பிரபல*தமிழ் பின்னணி பாடகர்*திரு.டி.எம்.எஸ். அவர்களின்*புதல்வர்*திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார ் பாடல்களை*பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள்*நிகழ்ச்சியில் பெரும்பான்மை பங்கு பெற்றிருந்தது .* தொகுப்பாளர்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல் பற்றி விளக்கம் தரும்போதும், புரட்சி தலைவர் பெயரை*மேடையில்*யார் உச்சரித்தாலும்,*ரசிகர்கள் / பக்தர்கள்*கரகோஷம் அரங்கம் அதிரும் வகையில் இருந்தது .கவிஞர் காவிரி*மைந்தன் , இயக்குனர் எஸ். பி. முத்துராமன், திரு.முருகு*பத்மநாபன் ஆகியோர்*பேச்சுகள்*, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*புகழாரம்*சூட்டும் வகையில் இருந்தது*என்பது குறிப்பிடத்தக்கது . மொத்தத்தில்*ஒரு அருமையான நிகழ்ச்சியை*கண்டுகளித்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது*என்று கூறினால் மிகையாகாது .
இன்னிசை நிகழ்ச்சியின் போது இசைக்கப்பட்ட பாடல்களின் விவரம் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது*
படம்* * பாடல்* * * * * * * * * * * *ஆசிரியர்
1.குலேபகாவலி* * - மயக்கும்* மாலை பொழுதே* - தஞ்சை*ராமையாதாஸ்*
2. சபாஷ்*மீனா* * *- சித்திரம் பேசுதடி*-* * * * * * * * * -கு.மா. பாலசுப்ரமணியம்*
3. அரச கட்டளை* *- ஆடி வா , ஆடி வா* * * * * * * *- முத்து கூத்தன்*
4.சிரித்து*வாழ வேண்டும்* -மேரா நாம் அப்துல்ரஹ்மான் -புலமைப்பித்தன்*
5.கலங்கரை விளக்கம்* *- சங்கே*முழங்கு* * * * * * * * - பாரதிதாசன்*
6.குடியிருந்த கோயில்* * -குங்கும*பொட்டின்*மங்கலம் -ரோஷனாரா* பேகம்*
7.அடிமைப்பெண்* * * * * *-தாயில்லாமல் நானில்லை* - ஆலங்குடி*சோமு*
8.வஞ்சி கோட்டை*வாலிபன் -கண்ணும்*கண்ணும்*கலந்து*-கொத்தமங்கலம் சுப்பு*
9.நினைத்ததை முடிப்பவன்* -கண்ணை*நம்பாதே* -* * * * * * *மருதகாசி*
10.உத்தம*புத்திரன்* * * - முல்லை மலர் மேலே* * * * * -* * * * *மருதகாசி*
11.நீதிக்கு*தலைவணங்கு* - கனவுகளே, ஆயிரம்* கனவுகளே /நா. காமராசன்*
12.தை பிறந்தால்*வழி பிறக்கும்*-அமுதும்*தேனும்*எதற்கு*-* சுரதா*
*13.நான் பெற்ற செல்வம்*-வாழ்ந்தாலும்* ஏசும்* * * * * - கா. மு. ஷெரீப்*
14.மிஸ்ஸியம்மா - பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -தஞ்சை ராமையாதாஸ்*
15.உயிருள்ளவரை உஷா* *- வைகை*கரை*காற்றே நில்லு*- டி.ராஜேந்தர்*
16.குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை*கேட்டு -ஆலங்குடி*சோமு*
17.புதிய பூமி* * * * * * * * *-நான் உங்கள் வீட்டு*பிள்ளை -பூவை செங்குட்டுவன்*
18.பொன்னகரம்* -வாழுகின்ற மக்களுக்கு*வாழ்ந்தவர்கள்* பாடமடி**-காமகோடியான்*
19.கொஞ்சும் சலங்கை*- சிங்கார வேலனே*தேவா*- கு.மா.பாலசுப்ரமணியம்*
20.இதயவீணை* * * * -பொன்னந்தி* மாலை பொழுது* - புலமை பித்தன்*
21. உதயகீதம்* * * * * - பாடு நிலாவே*தேன் கவிதை*-மு. மேத்தா*
22.நீதிக்கு*தலை வணங்கு* - இந்த பச்சைக்கிளிக்கு* - புலமை பித்தன்*
23.ஆடிப்பெருக்கு -* தனிமையிலே*இனிமை காண முடியுமா*-கே.டி.சந்தானம்*
24.அரசிளங்குமரி* - சின்னப்பயலே, சின்னப்பயலே -ப.கோ.கல்யாணசுந்தரம்*
25.தங்கமலை*ரகசியம் - அமுதை*பொழியும்*நிலவே*-கு.மா. பாலசுப்ரமணியம்*
26. விவசாயி* * * * * * * * *-கடவுள்*எனும்*முதலாளி* * * * * *மருதகாசி**
27. ராஜாதிராஜா* * * -மீனம்மா , மீனம்மா* * * * * * * * *-* * *பிறைசூடன்*
28.மீனவ*நண்பன்* * - தங்கத்தில் முகமெடுத்து* * *- முத்துலிங்கம்*
29.உலகம் சுற்றும் வாலிபன் - நமது வெற்றியை*நாளை* சரித்திரம்* *-* *வேதா*
Last edited by puratchi nadigar mgr; 29th March 2020 at 06:31 PM.
-
29th March 2020 06:26 PM
# ADS
Circuit advertisement
-
29th March 2020, 06:58 PM
#2852
Junior Member
Platinum Hubber
தினமலர் - மறக்க முடியுமா*?* - அன்பே வா*
----------------------------------------------------------------------
வெளியான நாள் : 14/01/1966
நடிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பி.சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மாதவி,** * * * * * * *டி.ஆர். ராமச்சந்திரன், ராமராவ்* மனோரமா மற்றும் பலர்*
வசனம் : ஆரூர் தாஸ்* * * * * * *இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்*
ஒளிப்பதிவு : மாருதிராவ்* * * *இயக்கம் : ஏ.சி.திருலோகச்சந்தர்*
தயாரிப்பு* ஏ.வி.எம்.
இது வழக்கமான எம்.ஜி.ஆர். படமல்ல .* ஈகோவில் துவங்கி , காதலில் முடியும் .அழகான காதல் படம்.* ஏ.வி.எம்.நிறுவனத்தின்* 50 வது படம் . முதல் வண்ண படம் அந்நிறுவன தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் .* என பல்வேறு சிறப்புகள் உண்டு .**
ராபர்ட் முல்லிகன் இயக்கத்தில் உருவான கம் செப்டம்பர் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் என்றாலும் , தமிழுக்கு ஏற்றவிதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் .*
பணம் இருந்தும் ஓய்வுக்காக ஏ ங்கும், எம்.ஜி.ஆர். சிம்லாவில் இருக்கும் தன்*மாளிகைக்கு செல்கிறார்.* அங்கு பணிபுரியும் நாகேஷ் அந்த மாளிகையை சரோஜாதேவி குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பார்.* நான் யார் என்பதை சொல்லாமல் , அங்கு எம்.ஜி.ஆர். நடத்தும்* நாடகமே கதைக்களம்
*.ஜே,பி.என்கிற பாலுவாக* எம்.ஜி.ஆரும், கீதா கதாபாத்திரத்தில் சரோஜாதேவியும் ரசிக்கும்படியான நடிப்பை வழங்கியிருந்தனர் .* நாகேஷ் மனோரமா கூட்டணி வழக்கம் போல நகைச்சுவையில் வெற்றிக்கொடி நாட்டியது .
ரொமான்டிக் காமெடி வகையை சார்ந்த இப்படம், விமர்சகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது .* எம்.எஸ். விஸ்வநாதன் இன்னிசையில் , வாலியின் வரிகளில் புதிய வானம், லவ் பேர்ட்ஸ் , நான் பார்த்ததில், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் , அன்பே வா,* நாடோடி, வெட்கமில்லை* ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன .* நாடோடி பாடலில் எம்.ஜி.ஆரின் நடனம் புதுமையாகவும் இளைஞர்களை கவரும் விதமாகவும், மிகவும் சுறுசுறுப்பாக ,*நளினமாக , அற்புத நடனம் ஆடியிருந்தார் .* நெல்லூர் காந்தாராவுடன் மோதும் சண்டை காட்சியில் அவரை அலாக்காக தூக்கி போட்டு சண்டை பிரியர்களின் பாராட்டை பெற்றார் எம்.ஜி.ஆர்.*
எம்.மாருதிராவின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு குளிர்ச்சியான அனுபவத்தை* கொடுத்தது எனலாம்.* காதல், மோதல், நடனம், நகைச்சுவை என கொண்டாட்டமான படம் .* *விஜய் நடித்த குஷி போன்ற படங்களின் முன்னோடி அன்பேவா தான் . சிறந்த பொழுது போக்கு சித்திரம் .
-
29th March 2020, 08:22 PM
#2853
Junior Member
Platinum Hubber
இனிய உதயம் மாத*இதழ் -மார்ச்*2020
--------------------------------------------------------------
பிம்பங்களின் அரசியல் -எம்.ஜி.ஆர் -பாலமுரளிவர்மன்*
---------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். தனது படங்களிலும், பாடல்களிலும் நல்ல* நல்ல கருத்துக்களை பரப்பினார் .* நேர்மையாளராக , ஊழலுக்கும், அநியாயத்துக்கு எதிரானவராக தனது பிம்பத்தைக் கட்டமைத்தார் .* அடித்தட்டு மக்களின் நேர்மறைத் தன்மையை கிளர்ந்தெழ செய்து அவர்களது தன்னம்பிக்கையைத் தூண்டி நிலையான நம்பிக்கையை பெற்று, தமிழகம் எதிர்கொள்ளும் நிலைக்கு விதைநெல்லாக இருந்திருக்கிறார் .அவரது வெற்றிக்கு சொந்த செல்வாக்கும், குணநலன்களே காரணம் . எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு அவரது உழைப்போடு* தமிழ் மக்களின் எளிய மனமும் அடிப்படையாக இருந்தது .
திரைப்படங்களின் வழியே தி.மு.க ஏற்படுத்திய தாக்கம் அதன் வெற்றிக்கு சமபங்கு வகித்தது போலவே திரைப்படத்தின் வாயிலாகவும், தி.மு.க. வழியேயும் நட்சத்திர குறியீடாக உருவான எம்.ஜி.ஆரின் பிம்பமே தி.மு.க. வை வீழ்த்தவும், எம்.ஜி.ஆரை உயர்த்தவும் செய்திருக்கிறது . காரணம், தமிழ் திரைப்படங்களின் மிக முக்கியமாக சமூகத்தாக்கமென்று குறிப்பிடும்போது, தொலைகாட்சி யுகத்திற்கு முன்பாக* தமிழ் படங்களின் வெற்றி பெண்களாலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது .* குறிப்பாக நடுத்தர , மற்றும் அடிதட்டுப் பெண்களிடையே ஆழமாக வேரூன்றிய திரைப்பட மோகம் அவர்களுக்கு பாரிய ஆற்றுப்படுத்துதலை அளித்திருக்கிறது .* இதனூடாகவே எம்.ஜி.ஆரின் வெற்றி நிர்ணயமாயிருக்கிறது* இங்கு எம்.ஜி.ஆர். தனக்கு தானே கட்டமைத்துக் கொண்ட பிம்பம் அவருக்கு கைகொடுத்தது எனலாம் .
1984 பொதுத்தேர்தலில் நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாது பேச முடியாத நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும்* பிரச்சாரம் செய்யாமலேயே பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து* தேர்தலி ல்* வென்று* முதல்வரானார் என்பது ஒரு தனி மனிதனின் பெருமை .எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இது போல் அமையுமா என்பதை நினைத்து பார்க்க கூட முடியாது .* அந்த அளவுக்கு தமிழக மக்கள் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக திகழ்ந்தார் . பரவியிருந்த தன் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவே அவர் முனைந்திருக்கிறார் .எனவே பிம்ப அரசியலே அவரால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது .திரைப்படத்தால் உருவாக்கிக் கொண்டதை அரசியலுக்கும் கடத்தி தக்க வைப்பதில் முழு மூச்சாக செயல்பட்டு*வெற்றியும் கண்டிருக்கிறார் .**
-
29th March 2020, 08:27 PM
#2854
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
27/03/20* *- வசந்த்* டிவி.* - பிற்பகல் 1.30மணி* *- ஆனந்த ஜோதி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * இரவு 7.30* மணி* - பட்டிக்காட்டு பொன்னையா*
29/03/20* *- ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி -ஊருக்கு உழைப்பவன்*
* * * * * * * * * * மெகா 24 டிவி* *- காலை 8.30மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * * * * சன்லைப்* * * - காலை* 11 மணி* - தாயின் மடியில்*
-
30th March 2020, 07:50 AM
#2855
Junior Member
Diamond Hubber
30 03.2020
Book park
M.Shajahan.Bsc.,
Mynaty media
மக்கள் திலகம் எம்ஜிஆருக்குப் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும்...!
போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்...!
நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்
காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை...!
படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார்...!
பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது...!
விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும்...!
இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்
கிவிடும்...!
‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன..!
‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது...!
எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார்.
எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது...!
படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.பாடல் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டது...!
பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்...!
தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார்...!
அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்...!
‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார்...!
பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்...!
ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார்...!
விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது...!
‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது..?
அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே..?’ என்று ஸ்ரீதர் கவலை அடைந்தார்...!
பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்...!
போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார்...!
பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார்...!
சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு...!
எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார்...!
எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார்...!
எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார்...!
எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது...!!!......... Thanks.........
-
30th March 2020, 07:54 AM
#2856
Junior Member
Diamond Hubber
[#பழச #மறக்கமாட்டாரு
சிவகங்கை நகர முன்னாள் திமுக செயலாளர்...
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
வாத்தியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
வாத்தியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு (???) முதல் பத்திரிகை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு...
நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்பு, கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார்...
உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
அப்போது உடனிருந்த அவரின் சகோதரி மகன்...
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
"வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.
அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.
நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு...
என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜிஆரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக கூட்டம்.
வாத்தியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும், தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....நான் கொடுத்தது யாருக்குமே தெரியக்கூடாது...
நல்லபடியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் நம்ம வாத்தியாரு.
சொந்தக்காரனுக்கு மட்டுமே உதவி செய்யும் தானைத்தலைவன் (???!!!) எப்படி
சொந்த கட்சிக்காரனுக்கு உதவி செய்வார்...???]......... Thanks.........
-
30th March 2020, 07:55 AM
#2857
Junior Member
Diamond Hubber
[M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,
அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.
கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.
அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.
கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.
அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
Cont...]............ Thanks.........
-
30th March 2020, 11:39 PM
#2858
Junior Member
Diamond Hubber
காய்ந்து சிவந்தது...
சூரியகாந்தி...
அனலில் தோய்ந்து சிவந்தது...
காய்ச்சிய தங்கம்...!
ஆய்ந்து சிவந்தது...
அறிஞர்தம் நெஞ்சம்...!
தினமும் ஈந்து சிவந்தன...
#எம்ஜிஆர் இருகரமே...!!
எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!
தங்கக்குணம் உள்ள
கலை மன்னன்...!
#மக்கள்திலகம் எங்கள்
#எம்ஜிஆர்_அண்ணன்...!
மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!!
வாரி வாரி வழங்குவதில்
பாரிவள்ளல்...!
வண்ணத்தமிழ் வளர்ப்பதிலே
காஞ்சி மன்னன்...!
காரிருளை நீக்கி இன்று
கட்டுப்பாட்டைக் காத்து நிற்கும்...
கொள்கைக் காவலன்...!
கொள்கைக் காவலன்...!!
எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!!
மின்னுகின்ற பொன்னைப் போன்ற நிறத்தைப் போன்றவர்...!
மூடிவைக்கத் தெரியாத
கரத்தைப் பெற்றவர்...!!
எண்ணுகின்ற எண்ணத்திலும்
அறத்தைப் பெற்றவர்...!
எல்லோரும் போற்றுகின்ற
தரத்தைப் பெற்றவர்...!!
தன்னலம் கருதாத மனத்தைப் பெற்றவர்...!
#திராவிடர் என்னோர்
இனத்தைப் பெற்றவர்...!!
உண்மையில் வழுவாத
நடத்தை பெற்றவர்...!
ஒவ்வொருவர் உள்ளத்திலும்
இடத்தைப் பெற்றவர்...!!
அன்பு கொண்ட #அண்ணாவின்
தம்பியல்லவா...!
அவர் அறவழியில் நடக்கும்...
தங்கக்கம்பியல்லவா...!
#தங்கக்கம்பியல்லவா...!!
எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!
தங்கக்குணம் உள்ள
கலைமன்னன்...!!
மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!
மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!!!
நன்றி : நாகூர் E.M.அனீபா........... Thanks.........
-
1st April 2020, 12:50 PM
#2859
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் 100வது திரைப்பட காவியம் "ஒளிவிளக்கு" இந்த திரைப்படத்தில் இப்போது நாட்டுக்கு வந்திருக்கும் கொரொனோ போல் விஷ காய்ச்சல் பற்றி அப்போதே இந்த திரைப்படத்தில் இடம் பெற்றது அதில் ஊரைவிட்டும் அனைவரும் சென்று விடும்போது மக்கள் திலகம் சொல்வார் "இந்த நோய் கூட என்னைப்பார்த்து ஓடும்" என்பார். விஷ காய்ச்சலால் ஊயுருக்கு போராடும் சௌகார் ஜானகியை காப்பாற்றுவார் எப்போதும் தன்னைப்பற்றி கவலைப்படாமல் ஊரைப்பற்றியும் மக்கள் நலனைப்பற்றி கவலைபடுவர் அதுதான் மனித நேயம் எம் ஜி ஆர் (இந்த பதிவு பற்றி தங்கள் எண்ணங்களை பதிவிடவும்).......... Thanks.........
-
1st April 2020, 12:51 PM
#2860
Junior Member
Diamond Hubber
Bookmarks