-
10th April 2020, 07:07 PM
#2931
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
10th April 2020 07:07 PM
# ADS
Circuit advertisement
-
10th April 2020, 07:24 PM
#2932
Junior Member
Diamond Hubber
-
10th April 2020, 07:46 PM
#2933
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes tv*
------------------------------------------------------------------------------------------
1 yes tv யில் வியாழனன்று*(09/04/20) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த பேட்டியின்* விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த நம்நாடு படத்தை தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் 1965ல் தயாரித்து வெளியிட்ட எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றி மற்றும் சாதனையை அடுத்து நாகிரெட்டி எம்.ஜி.ஆரை வைத்து 1969ல்* தயாரித்து தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது . நம்நாடு படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது .* நம்நாடு படத்தில் அரசியல் நெடியுடன் கூடிய வசனங்கள் பன்ச் வசனங்கள், மற்றும் ஊழல் பேர்வழிகள் நாட்டுக்கு செய்யும் தீமைகள் , மக்களுக்கு எதிரான திட்டங்கள் ,அன்றைய ஆட்சியின் அவலங்கள்*,ஆகியன* அடங்கிய காட்சிகள் ஏராளம் இருந்தன.
படத்தின் வெற்றியையும், மக்களின் வரவேற்பையும் நேரில் கண்டுகளிக்க எம்.ஜி.ஆரும் , நாகிரெட்டியும்* புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு படம் ஆரம்பித்து நெடுநேரம் கழித்து , அரங்க மேலாளருக்கு மட்டும் வருகையை தெரிவித்து ரசிகர்களுக்கு தெரியாமல் கதவை திறந்து ஓரமாக நின்று பார்வையிட்டனர் . ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள், பொதுமக்கள் ஆரவாரம், வரவேற்பு, கைதட்டல்கள் ஆகியவற்றை கண்டு மெய்சிலிர்த்தனர் . நம்நாடு படத்தின் வரவேற்பு, வெற்றியை நேரில் கண்டு* ரசித்ததும் ரசிகர்களுக்கு தெரியாமல் பின்பு வெளியேறினார்கள் .* பின்னர் எம்.ஜி.ஆர். நாகிரெட்டியிடம்*பிற்காலத்தில் ஒருவேளை நான் அரசியல் உலகில் களமிறங்க நேரிட்டால்**இதுவே பிள்ளையார் சுழியாக இருக்கும். எனக்கு இருந்த சந்தேகங்கள்* தீர்ந்தன .என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.* பதிலுக்கு நாகிரெட்டி நீங்கள் எந்த துறையில் போட்டியிட்டாலும், ஈடுபட்டாலும், அந்த துறையின் சிகரத்திற்கு*சென்றடைவது திண்ணம் .* உங்களது கடந்த கால வாழ்க்கையின் வெற்றியே அதற்கு சிறந்த உதாரணம் .* சினிமா வாழ்க்கையில் சிகரத்தை அடைந்தாற்போல*அரசியல் வாழ்க்கையிலும் இமயத்தின் உச்சிக்கு செல்ல எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்*
நாடக துறையில் ஓரளவு அனுபவம் பெற்ற எம்.ஜி.ஆர். தனது 20 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைக்க நல்ல தருணம் பார்த்து வாய்ப்புகளை தேடினார் .அப்போது வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஒற்றை வாடை கொட்டகை அருகில்*(யானை கவுனி அருகில் ) வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். வசித்து வந்தபோது*எம்.ஜி.ஆரின் தாயார் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார் .* சினிமா வாய்ப்புகள் தேடி வந்த போது, போதிய வருமானம் இல்லாததால் , பெண் வீட்டார் சில காலம் தங்கமணியை கேரளாவில் பாலக்காடு அருகில் உள்ள ஊரில் தங்களுடன் தங்குவதற்கு அழைத்து சென்றனர் .* சில காலம் கழித்து திடீரென நோய்வாய்ப்பட்டு தங்கமணி* இறந்து போனார் .* * தகவல் அறிந்து எம்.ஜி.ஆர். பாலக்காடு சென்று இறுதி அஞ்சலி கண்ணீருடன் செலுத்தினார் . பெண் வீட்டார்* ஈம சடங்குகள் ஆனதும் , சம்பிரதாயப்படி*வேட்டி , சட்டை , துண்டு , ஆகியன 2 செட்* கொடுத்தனுப்பினர் . பதிலுக்கு எம்.ஜி.ஆரின் தாயார் வீடு சார்பில் பெண் வீட்டாருக்கு மரியாதைகள் செய்யப்பட்டது .**
எம்.ஜி.ஆர். இரவு வேளையில் தானே துணிகளை துவைத்து, காய்ந்ததும் ,காலையில் எழுந்து ஒரு பித்தளை சொம்பில் கரிகள் போட்டு நெருப்பு வைத்து*துணிகளை இஸ்திரி போடுவார் .* காலை சிற்றுண்டி முடிந்ததும் , நடந்தே ,கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டூடியோ சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பார் .* அவர்கள் வாய்ப்பு இருந்தால் தருகிறோம் , அழைக்கிறோம் என்பார்கள்* அங்கிருந்து சில சமயம் பேருந்தில் அல்லது நடந்தே வடபழனியில் உள்ள கோல்டன் ஸ்டூடியோ செல்வார் . அங்கும் வாய்ப்பு கேட்டு காத்திருப்பார் .ஒரு சமயம் மதுரை பாய்ஸ் கம்பெனியில் நாடகத்தில் நடித்த நடிகர் ஒருவர் தாடியுடன் தென்படவே நலம் விசாரித்தார் .* அவர் வாய்ப்புகள் தேடி மிகவும் சோர்ந்து இருந்தார் .* இறுதியில் சாப்பீட்டீர்களா என்று எம்.ஜி.ஆர். கேட்க, அவர்*தலை குனிந்தவாறு இருக்க, சூழ்நிலையை* புரிந்து கொண்டு , அவருக்கு தனது சட்டையில் இருந்து ரூ3/-* எடுத்து கொடுத்தார் . காலை சிற்றுண்டி, மற்றும் பேருந்து கட்டணம் செலவு ரூ.3/- போக கைவசம் இருந்த ரூ.7;ல் இருந்து தானம் செய்துள்ளார்.* எம்.ஜி.ஆருக்கே* நிரந்தர வாய்ப்புகள் கிடையாது . இன்றைக்கு வருமானம் வருமா தெரியாது . நாளைக்கு என்ன வருமானம் இருக்கும் என்பது தெரியாது . இந்த நிலையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை, அடுத்தவர்*பசிப்பிணி போக்கும் தன்மை ஆகிய குணங்கள் அப்போதிருந்தே இருந்துள்ளது .இன்றைய உலகத்தில் கையில் ரூ.100/- இருந்தாலும், ரூ.1,000/- இருந்தாலும் எவ்வளவு பேருக்கு அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையோ* , தர்ம சிந்தனையோ* இருக்கும் யோசித்து பாருங்கள் .* இந்த நற்குணங்கள் தான் மக்கள் மனதில் எம்.ஜி.ஆருக்கு நிலையான புகழை , இடத்தைக் கொடுத்தது . அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் யார் வந்தாலும் பசியோடு திரும்பி சென்ற வரலாறில்லை .* தன்* வாழ்நாள் முழுவதும் அதை ஒரு கொள்கையாகவே எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். நடிகர் சோ ஒரு முறை பேட்டியில் வீட்டில் உலை வைத்துவிட்டு அரிசிக்காக ஒருவரை தேடி செல்வதாக இருந்தால் நிச்சயம் அது எம்.ஜி.ஆர். வீடாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் . அதனால் தான்*வாழ்ந்தவர்கள் கோடி , மறைந்தவர்கள் கோடி, மக்கள் மனதில் என்றும் நிற்பவர் எம்.ஜி.ஆர். என்று சொல்கிறார்கள் . இந்த வரிகள் அவரது மன்னாதி மன்னன் படத்திலும் இடம் பெற்றுள்ளது .
Last edited by puratchi nadigar mgr; 10th April 2020 at 07:50 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th April 2020, 07:48 PM
#2934
Junior Member
Platinum Hubber
என்றென்றும் கவிஞர் கண்ணதாசன் - ராஜ்*டிவி*
----------------------------------------------------------------------------
ராஜ் டிவியில் வியாழனன்று*(09/04/20) மாலை 5.30 மணி முதல்* 6 மணி வரையில்* என்றென்றும் கவிஞர் கண்ணதாசன் என்கிற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் வசனம் எழுதிய , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றிய சில தகவல்கள் வெளியான விவரம் :
நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் நிறுவனம் 1958ல் தயாரித்தது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , சிறப்பாக இயக்கி இருந்தார் .பெரும் பொருட்செலவில் , தனது சொத்துக்களை எல்லாம் அடகு வைத்து , இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றால் நான் மன்னன் , தோல்வியுற்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு இருந்தார் . படத்தில் பானுமதி, எம்.என். ராஜம், பி.சரோஜாதேவி என மூன்று கதாநாயகிகள் .* இரண்டு வில்லன்களாக , வீரப்பாவும், நம்பியாரும் , நடித்திருந்தனர் . எம்.ஜி.ஆர். அண்ணன் திரு. சக்கரபாணி துணை வேடத்தில் நடித்திருந்தார் .* வசனம்* கவிஞர் கண்ணதாசன்* இசையமைப்பு எஸ்.எம். சுப்பையா நாயுடு . இயக்கம் எம்.ஜி.ஆர். 1958ல் வெளியான நாடோடி மன்னன் சிறப்பான வெற்றி பெற்று அதுவரை வெளியான படங்களின் வசூலை தவிடு பொடியாக்கி இமாலய சாதனை பெற்றது .* 1958ம் ஆண்டின் சிறந்த படம் , சிறந்த இயக்குனர் எம்.ஜி.ஆர். என* பரிசுகள்* பெற்றது . அந்த ஆண்டில் வசூல் சாதனையில் முதலிடம் .* இந்த படத்தின் வெற்றிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் , பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் எம்.ஜி.ஆருக்கு 110 சவரனில் தங்கவாள் பரிசு அளிக்கப்பட்டது* * அந்த வாளை ,எம்.ஜி.ஆர். அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று வந்த பின்னர் உடல் நலம் தேறியதும் , மூகாம்பிகை அம்மனுக்கு தானமாக அளித்துவிட்டார் .
நாடோடி மன்னன் திரைப்படம் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களிலேயே மிகவும் நீளமான படம் .அதாவது கிட்டத்தட்ட 4மணி நேரம் திரையில் ஓடும் .புதிய கதாநாயகியாக பி.சரோஜாதேவியை எம்.ஜி.ஆர். படத்தின் இறுதி பகுதியில் வண்ணத்தில் ( கோவா கலர் ) அறிமுகப்படுத்தினார் .* சரோஜாதேவி அதற்கு பின் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் கதாயாகியாக நடித்துள்ளார் .* நாடோடி மன்னன் அளித்த அறிமுகம் காரணமாக நட்சத்திர கதாநாயாகியாக உருவெடுத்தார் .இதை பல சமயங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில் தெரிவித்துள்ளார் .1958 லேயே* , சினிமாத்துறை முன்னேறாத காலத்திலேயே* மிகவும் நவீன உத்திகளுடன் அப்போதைய தொழில்நுடபத்துடன் காட்சிகள் அமைத்து , மிக சிறப்பாக தனது சொந்த படத்தை வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.* ஒரு காட்சியில் இரண்டு எம்.ஜி.ஆர்களும் இணைந்து கை கொடுக்கும் காட்சி* இதற்கு உதாரணம் .**
அந்த காலத்தில் தி. மு.க. கட்சியின் சின்னம் , அடையாளம் ஆகியவற்றை பல சர்ச்சைகளுக்கு நடுவே , நீதிமன்றத்தில் போராடி எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார்* *தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில்* செந்தமிழே வணக்கம் என்ற பாடல் , உழைப்பின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் என்ற பாடல் ,*முற்போக்கு சிந்தனையுடன் கூடிய சமுதாய கருத்துக்கள் அடங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்* தூங்காகே தம்பி தூங்காதே* என்ற பாடல் ,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழி பாடல் , மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் , காடு வெலெஞ்சென்ன* மச்சான்* என்ற பாடல்*காதல் கனிரசமான* சம்மதமா,* கண்ணில் வந்து மின்னல் போல் ஆகிய பாடல்கள்* நகைச்சுவைக்கு தடுக்காதே என்கிற சந்திரபாபுவின் பாடல்* பாடுபட்டா தன்னாலே , பலனிருக்குது கைமேலே என்கிற தத்துவ பாடல் ஆகியன படத்திற்கு பலம் சேர்த்தன* .
சண்டை காட்சிகள் , புதுமையாகவும், திரில்லிங்காகவும், இருந்தன .* வீரப்பா, மற்றும் நம்பியாருடன் மோதும் வாள் வீச்சு சண்டை காட்சிகள்* அபாரம் .ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டை காட்சிகளில் கண்ணாடி விளக்குகள், கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாவது போன்ற காட்சிகள் மிகுந்த சிரத்தையுடன் படமாக்கியுள்ளனர் .* எம்.ஜி.ஆரின்* சிறப்பான இயக்கத்தில் விறுவிறுப்பான காட்சிகள் , சுறுசுறுப்பான திருப்பங்கள் கொண்ட படமாக அமைந்தது . எம்.ஜி.ஆர். தனது ரசிகர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த வகையில் இருக்கையை விட்டு அகலாதவாறு* திறம்பட இயக்கி உன்னதமான படத்தை தயாரித்து வெளியிட்டு அனைவரின் பாராட்டை பெற்றார் .
நாடோடி மன்னன் படத்தை 10க்கு மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டு புகழ்மாலை சூட்டின ,கவிஞர் கண்ணதாசன் , அந்த காலத்திற்கு ஏற்றாற்போல அரசியல் பன்ச் வசனங்கள், , காதல், வீரம், அன்பு, தாய்மை, பாசம்,*மக்கள் நலம் , நகைச்சுவை, மன்னராட்சியின் அவலங்கள், மக்களாட்சியின் தத்துவங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எளிதில் உணர்த்தும் வகையில் மிக சிறப்பாக எழுதியிருந்தார் .* திரைப்படத்தின் நடுவே, பானுமதி இறக்கும் காட்சியை சிம்பாலிக்காக ஒரு ஆண் மான் நிற்க , பெண் மான் அம்பால் வீழ்த்தப்பட்டு இறந்து கிடக்கும் காட்சி , சிறந்த இயக்குனர் எம்.ஜி.ஆர். என்ற*பாராட்டும் , கைத்தட்டல்களும்* பெற செய்தது .**
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th April 2020, 07:54 PM
#2935
Junior Member
Diamond Hubber
புரட்சிதலைவர் ஆட்சி காலத்தில் அவரின் துணிச்சல் தன்மையும் அதே நேரம் ரத்தத்தில் ஊறிய மனிதாபிமானம் குறித்த இரு செய்திகள் இன்று.
1981 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பெரும் ஜாதி கலவரம் உருவானது...
வழி விடும் முருகன் கோவில் திருவிழாவில் மூண்ட கலவரம் அடங்காமல் யார் யாரோ பேச்சுவார்த்தை நடத்தியும் அடங்கவில்லை.
முதல்வர் அங்கு போக முனைந்த போது வேண்டாம் என்று தடுத்து விட்டனர் உயர் அதிகாரிகள்.
தீயசக்தி மறைமுக தூண்டுதல் ஒருபுறம் நடக்க துப்பாக்கி சூட்டில் 4 நபர்கள் பலி ஆனார்கள்...கலவரம் நின்றபாடு இல்லை.
இனி பொறுப்பதில்லை என்ற முதல்வர் எம்ஜியார் யார் தடுத்தும் கேட்காமல் திடீர் என்று விமானம் மூலம் மதுரை சென்று அங்கு இருந்து காரில் ராமநாதபுரம் நோக்கி சென்றார்..
உயரதிகாரிகள் , காவல்துறையினர் தடுத்தும் பலன் இல்லை....தலைவர் யோசனை படி சில கட்சி முக்கிய நிர்வாகிகள் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய ஜாதி தலைவர்கள் உடன் பேச ஏற்பாடு செய்து இருந்தனர்...இந்த விவரம் அரசு சார்ந்த சில அதிகாரிகளுக்கு தெரியாது.
ராமநாதபுரம் சென்ற தலைவர் நேராக கோட்டாட்சியர் அலுவலகம் சென்று அந்த கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரையும் உடனே பணி இட மாற்றம் செய்தார்.
பிற மாவட்ட காவல்துறை சார்ந்தவர் உடனே வரவழைக்க பட்டனர்.
ஒரு பிரிவின் தலைவர் கூரியூர் வக்கீல் கோவிந்தன், மற்றும் அடுத்த பிரிவை சேர்ந்த மொடலூர் நிலக்கிழார் துரை சிங்கம் மற்றும் முனியாண்டி ஆகியோருடன் தனி தனியாக பேச்சு வார்த்தை நடத்த.
ஒரு கட்டத்தில் இழுபறி ஏற்பட பின்னர் அனைவரையும் வெளியே போக சொல்லி விட்டு அவர்களிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
வெளியே வரும் போது முகம் வெளுத்து மகுடிக்கு மயங்கிய நாகம் போல இரு தரப்பு தலைவர்களும் வெளியே வந்தனர்.
18 நாட்கள் மகாபாரத போர் போல நடை பெற்ற அந்த ஜாதி யுத்தம் அந்த நிமிடம் முதல் முடிந்து சகஜ நிலை திரும்பியது.
அது தான் எம்ஜியார் வைத்தியம்....தீயசக்தி அரண்டு போனது...
ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியும் போது துணிச்சல் ஆக எதிர் கொண்டு அரை மணி நேரத்தில் அதை முடிவுக்கு கொண்டு வந்த முதல் முதலமைச்சர் நம்ம தலைவரே...
என்ன வைத்தியம் தெரியவில்லை...ஆனால் கொடிய ஜாதி நோய் உடனே முடிவுக்கு வந்தது.
கண்டிப்பு முடிந்து இனி கருணை நிகழ்வு..
1983 டிசம்பர் மாதம் கஜா புயல் போல பெரு மழை வெள்ளம் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில்... சேதம் மிக அதிகம்...
பார்வையிட மக்கள் முதல்வர் புறப்பட்டு பார்வையிட்டு வர மதியம் உணவுக்கு அறந்தாங்கி அரசினர் விடுதியில் உணவு எல்லோருக்கும்...அது சின்ன இடம்.
முதல்வர் உடன் வந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், மற்றும் கட்சியினர் கூட்டம் அதிகம்.
தலைவர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அடுத்த பகுதி பார்க்கும் அவசரத்தில் வெளியே வர காலை முதல் சுற்றிய பலர் சாப்பிடாமல் மீண்டுமா என்று யோசிக்க காரில் ஏற வந்த முதல்வர் இடம்.
அப்போது அமைச்சர் ஆக இருந்த திருச்சி சவுந்திரராஜன் தலைவர் காதில் போய் மற்றவர் நிலை சொல்ல உடனே திரும்பி அறைக்குள் சென்றார்.
முக்கால் மணி நேரம் கழித்து வெளியே வந்த நம் தலைவர் காரில் எற போக திடீர் என்று முன்னால் நோக்கி நடக்க அனைவரும் விவரம் தெரியாமல் பர பரக்க.
பைலட் போலீஸ் கார் அருகில் வந்து நின்ற முதல்வர் அந்த காரில் இருந்த போலீஸ் ஓட்டுனரை சைகையால் அழைக்க
பயந்து கொண்டு வந்த காவலரிடம் இங்கே வாங்க நல்ல சாப்பிடீங்களா என்று கேட்க அவர் நடுங்கிய படி ஆமாம் ஐயா என்று சொல்ல.
கிட்டே வாருங்கள் என்று அவரை அழைத்து அவர் வலது கையை எடுத்து தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து ஆமாம் சாப்பிட வாசம் வருகிறது என்று சொல்லி.
திரும்பி தன் முதல்வர் வாகனம் நோக்கி திரும்பி மக்களை சந்திக்க புறப்பட்டார் நம் சரித்திர நாயகன் எம்ஜியார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்கு கீழே பணியாற்றும் எவரும் பசியுடன் இருக்க கூடாது என்பதில் அவரை போல இனி ஒருவரை இந்த உலகம் காண்பது சந்தேகமே.
முதன்முதலாக அரசு துறை ஓட்டுனர்களுக்கு உணவு படி என்ற திட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்த முதல் முதல்வர் நம் முதல்வரே.
அதன் பின்னரே மற்ற இந்திய மாநிலங்கள் இந்த சட்டத்தை தத்தம் மாநிலங்களில் கொண்டு வந்தன.
வீரமும், நெஞ்சில் ஈரமும் கொண்ட பொன்மனசெம்மல் புகழ் என்றும் காப்போம்.
வாழ்க எம்ஜியார் புகழ்..
Courtesy: Nellaimani Aiadmk......... Thanks.........
-
10th April 2020, 08:38 PM
#2936
Junior Member
Platinum Hubber
ஜூனியர்*விகடன்* வார இதழ் -12/04/20
-----------------------------------------------------------------
ரஜினி ஏன் முதல்வராக விரும்பவில்லை ?
------------------------------------------------------------------
வரி பாக்கி செலுத்த வேண்டும் .* சினிமாவில் நடிக்க அனுமதி தாருங்கள் என்று முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதினர் .42* ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதம் நடந்த விஷயம் இது .
அ . தி .மு.க வை தொடங்கிய பிறகு 1977 ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன்முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள்* கழித்துதான் முதல்வராக பதவி ஏற்றார் .* காரணம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு மீதம் இருந்தது .* முதல்வராக ஆன பின்பு* நடிக்க முடியாது* என நினைத்ததால் என்னவோ இந்த ஏற்பாட்டை செய்தார் .**
ஆட்சியில் அமர்ந்த பிறகு எம்.ஜி.ஆருக்கு சினிமா மோகம் குறையவில்லை .எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆர். கோப்புகளில் கையெழுத்திடும் எளிமையான பணியில் அமர்ந்து விட்டார் என சொல்ல , சினிமாவில் நடிக்க ஆசை உண்டு , 15 நாள் முதல்வராகவும் , 15 நாள் நடிகராகவும் இருக்கப் போகிறேன்* என அதே மேடையில் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர்.* அதன் பிறகு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , நடிப்பை விட்டு விட போவதில்லை , இரண்டு பொறுப்புகளையும் என்னால் சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார் .**
1978ம் வருடம் பிப்ரவரி 11ம்* தேதி* நெல்லை பாளையங்கோட்டை அரசு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர். , மேற்கு வங்காள* முதல்வர் பி.சி.ராய்* ஒரே நேரத்தில் டாக்டராகவும், முதல்வராகவும் செயல்பட்டார் .* அதே போல் என்னாலும் நடித்துக் கொண்டே முதல்வர் பணியையும் செய்ய முடியும் . அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது .
விஷயம் பிரதமர் மொரார்ஜியின் கவனத்திற்கு சென்றது . சினிமாவில் நடிப்பது , முதல்வர்* பதவிக்கு கண்ணியம் சேர்க்காது என்றார் . சினிமாவில் நடிக்க முடிவான நிலையில் , பிரதமரின் கருத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் என எண்ணி மொரார்ஜிக்கு கடிதம் எழுதினர் எம்.ஜி.ஆர்.* முதல்வர் பதவிக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை . அதனால் அவகாசம் கிடைக்கும் நேரங்களில் பணம் சம்பாதிக்க திரைப்படங்களில் நடிக்க வேண்டியுள்ளது .* எனவே அனுமதி தாருங்கள் என கடிதத்தில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார் .
1978 ஏப்ரல் 2ம் தேதி* மொரார்ஜி தேசாயிடமிருந்து எம்ஜி.ஆருக்கு பதில் வந்தது .**சினிமாவில் நடிப்பது உங்கள் விருப்பம் .* அதற்கு பிரதமரின் அனுமதி தேவையில்லை .* முதல்வருக்கான கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நடிப்பதில் எனக்கு ஆட் சேபனை* இல்லை என சொல்லியிருந்தார் .**
புதிய படவேலைகள் வேகமெடுத்தன .* கதாநாயகியாக லதா, இசை அமைப்பாளராக இளையராஜா, கதை வசனம் வாலி, இயக்கம் கே. சங்கர் ,தயாரிப்பு தர்மராஜ் என முடிவாகி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி , தொடக்க விழாவுக்கு தேதி குறித்தனர் .* படத்தின் பெயர் உன்னை விடமாட்டேன் .*பிரசாத் ஸ்டுடியோவில்* ஏப்ரல்**14ம் தேதி படத்தின்* தொடக்கவிழா , ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது , அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியானது .சொந்த படமான இமயத்தின் உச்சியில் என்ற படத்தில் நடிக்க போகிறேன் என 1979 ஜனவரி 31ம் தேதி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.*
1978ம் ஆண்டு ஏப்ரல்*மாதம் பிரசாத்*ஸ்டுடியோவில் உன்னைவிட மாட்டேன்*படத்தின்*பூஜையின்போதும், தொடர்ந்து இசை ஞானி இளையராஜா*இன்னிசையில் டி.எம்.எஸ். பாட , படிக்கிறேன் இன்னும் படிக்கிறேன் என்ற பாடல் 9 வது* டேக்கில்*ஓ.கே. ஆனபோதும்* நான்(லோகநாதன் ) உடனிருந்து நேரில் கண்ட*காட்சி*பசுமையான நினைவுகள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பூஜைகள்*முடிந்ததும்*, பாடல் பதிவிட்டு*எனக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் .அந்த பாடல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பிடிக்காமல் போக பின்பு மலேசியா*வாசுதேவனை*வைத்து பின்னாளில் பாட வைத்து ஒலிப்பதிவு* செய்தார்கள் .* ஆனால் என்ன காரணமோ*தெரியவில்லை*, அதற்குப்பின் படப்பிடிப்பு தொடங்கவில்லை .எம்.ஜி.ஆர். அவர்களும்*முதல்வர் பணியில்*பிஸியாகிவிட்டார் .
உன்னைவிட மாட்டேன்*பிரச்னை*ஓய்ந்து*,மூன்று ஆண்டுகள்*கழித்து நடிகர்*ரஜினியின் திருமணம் 1981 பிப்ரவரி*26ம் தேதி திருப்பதியில் நடந்தது .அதற்கு*முன்தினம்*பத்திரிகையாளருக்கு அளித்த*பேட்டியில்*திருமணம் முடிந்ததும்*படப்பிடிப்பில்*கலந்து கொள்வேன்*. மனைவியை விட எனக்கு*சினிமா*தொழில் முக்கியம் என்று பேசியிருந்தார் . லதாவின் கரம் பிடிக்க எம்.ஜி.ஆரும் ஒரு காரணம்* என்று ரஜினி*குறிப்பிட்டார் .* எம்.ஜி.ஆர். சிபாரிசு*செய்ததால்தான் எனக்கு*லதாவை*திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் சம்மதித்தனர் .* என்று 2018 மார்ச்சில்*ஏ.சி.சண்முகம் அவர்களின்*எம்.ஜி.ஆர். கல்வி*நிறுவனத்தில் நடந்த*எம்.ஜி.ஆர். சிலை*திறப்பு விழாவில்*சொன்னார்*நடிகர்*ரஜினி .* அங்குதான்*அரசியலுக்கு யார்* வந்தாலும்*அவர் எம்.ஜி.ஆர். ஆக முடியாது*. அவர் ஒரு தெய்வப்பிறவி .* அவரைப்போல் ஒரு தலைவர் உருவாவது இனி கடினம் . சாமான்ய*மக்களுக்கு*எம்.ஜி.ஆர். அளித்த ஆட்சியை என்னால் ஆட்சிக்கு வந்தால் தர முடியும் என்றும் ரஜினி*பேசி இருந்தார்*.
இப்போது பிரச்னைக்கு வருவோம் .* எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்*என்று 2018ல்**பேசிய ரஜினி* , இப்போது , கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்கிறார் .* முதல்வர் ஆவதற்கு விருப்பமில்லை .அதை நினைத்துப் பார்க்கவே முடியாது*.* நான் கட்சி தலைவராகத்தான் இருப்பேன்*. ஒரு நல்லவரை*ஆட்சியில் அமர வைப்பேன்*என்றும் கூறியிருக்கிறார் . முதல்வர் பதவியில்*அமர்ந்தால்* நடிக்க முடியாது என தீர்க்கமாக ரஜினி*நம்புகிறார் . முதல்வரானபின் எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க முடியாமல் போனது .* ஆந்திராவில் என்.டி.ராமாராவ் கூட*முதல்வரானதும் ஒரு படத்தில்*நடித்தார்*அதன்பின் நடிக்க முடியாமல் போனது* ஆட்சியில் இருந்து கொண்டு , சினிமாவில் நடிக்க முடியாது என்பது முன்னவர்களின் கடந்த கால வரலாறு .* இதையெல்லாம் மனதில் வைத்துதான்*முதல்வர் ஆவதை நினைத்து பார்க்க வே முடியாது*. கட்சி தலைவராக மட்டுமே இருப்பேன் என்று அழுத்தமாக சொல்கிறார் போலும் .**
எம்.ஜி.ஆர். சிபாரிசில் லதாவின் கரம் பிடித்த*நடிகர் ரஜினி*,எம்.ஜி.ஆருக்கு* கிடைத்த*சினிமா*, அரசியல்* பாடங்களை வைத்து , புதிய அரசியல் அரிச்சுவடி எழுத*திட்டமிட்டுள்ளார் .* அதில்*வெற்றி பெறுவாரா*என்பதை*காலம்தான்*உணர்த்தும் .**
-
10th April 2020, 09:46 PM
#2937
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக* பேரரசர்*எம்.ஜி.ஆர்.படங்கள் ஒளிபரப்பு .
---------------------------------------------------------------------------------------------------------------------------
09/04/20* *- மெகா 24 டிவி - இரவு 9 மணி* - குடும்ப தலைவன்*
10/04/20* - ஜெயா டிவி* - காலை 10 மணி* - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * * *மீனாட்சி டிவி - காலை 10.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *-சன் லைப்* - காலை 11 மணி* *- என் அண்ணன்*
* * * * * * * * ராஜ் டிவி* * - பிற்பகல்* 1.30 மணி* - அடிமைப்பெண்*
* * * * * * * * * ஜெயா* டிவி - பிற்பகல் 2 மணி* * *- குமரிக்கோட்டம்*
11/04/20* - முரசு டிவி* *- காலை 11 மணி* - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * * * முரசு டிவி* -இரவு* 7 மணி* * - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * * *ராஜ் டிவி* *- பிற்பகல் 1.30 மணி* - நாடோடி மன்னன்*
* * * * * * * *** * * *சன் லைப்* - மாலை 4 மணி* *- நீரும் நெருப்பும்*
12/04/20* * *ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - இதய வீணை** * * * * * * * **
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th April 2020, 02:55 PM
#2938
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் நடித்த "குமாரி ",11-04-1952 வெளியானது. திரையிசையில் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்த முதல் எம்ஜிஆர் படம் குமாரி.
குமாரி முதல் பல்லாண்டு வாழ்க வரை 35படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க படங்களாக அடிமைப்பெண் அரசகட்டளை,மாட்டுக்கார வேலன், அன்னமிட்டகை, என்அண்ணன், பல்லாண்டு வாழ்க, பரிசு ,காஞ்சித்தலைவன், உட்பட தேவர் பிலிம்ஸ் 16 படங்கள் அருமையாக இசை அமைத்திருந்தார்.......... Thanks.........
-
11th April 2020, 03:00 PM
#2939
Junior Member
Diamond Hubber
இயக்குநர் A.C.திருலோகசந்தர் உதவி இயக்குநர் ஆக பணியாற்றிய முதல் படம் இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் குமாரி படத்தில் உதவி இயக்குநர் ஆக எம்ஜிஆர் அவர்களுடன் பணிபுரிந்தார். அப்பொழுதே அரசியல் பற்றி பேசியுள்ளார்.தவிர எம்ஜிஆர் பானுமதி சந்திரபாபு நடித்த அபூர்வ சிந்தாமணி படத்தில் உதவி இயக்குநர் ஆக பணி புரிந்தார். ஆனால் படம் நின்று விட்டது. பிறகு அன்பே வா படத்தை அற்புதமாக இயக்கினார். வெற்றி விழாவில் இந்த படம் டைரக்டர் படம் என்று பெருமையாக பேசினார் எம்ஜிஆர். தன் புத்தகத்தில் அன்பே வா படம் பற்றியும் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து 10 பக்கம் எழுதியுள்ளார்.இந்த படத்தின் போது மக்கள் திலகம் பணியாற்றிய அனுபவங்கள் தான் எழுதிய நெஞ்சம் நிறைந்த நினைவுகள் புத்தகத்தில் எழுதியுள்ளார்......... Thanks...
-
11th April 2020, 03:03 PM
#2940
Junior Member
Diamond Hubber
Kumari is a 1952 Indian Tamil language film directed by R. Padmanaban and starring M. G. Ramachandran and Sriranjani in the lead roles. Wikipedia
Initial release: 1952
Director: R. Padmanaban
Music director: K. V. Mahadevan
Producer: R. Padmanaban... Thanks......
Bookmarks