-
13th April 2020, 09:01 AM
#2961
Junior Member
Diamond Hubber
இலங்கை கொழும்பு கெப்பிட்டல் 105 நாள் ஓடியது.
பாரத் எம்ஜிஆர் நடித்த" ராமன் தேடிய சீதை" 13-04-1972 வெளியானது.
புதுமையான கதை அருமையான பாடல்கள் 43 வகையான உடைகளில் பொன்மனச்செம்மல் super Title music இருந்தும் படம் வசூலில் பெரிய வெற்றி எம்ஜிஆர் ரசிகர்களுக்கு திருப்தி. சென்னை மிட்லண்ட் 64 நாள் கிருஷ்ணா 64 நாள் சரவணா 50 நாள் ஓடியது. மதுரை சிந்தாமணி 78 நாள் ஓடியது.......... Thanks.........
-
13th April 2020 09:01 AM
# ADS
Circuit advertisement
-
13th April 2020, 09:05 AM
#2962
Junior Member
Diamond Hubber
மாபெரும் பிரம்மாண்டமான வெற்றிப்படமான "மதுரை வீரன் ",வெளியாகி இந்த ஆண்டுடன் 64 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 65ம் ஆண்டு தொடங்குகிறது.
ஒன்றிரண்டு தியேட்டரில் படத்தை 100 நாள் ஒட்டுவதற்கே பெரும் பாடு பட்டு கொண்டிருந்த கால கட்டத்தில் கண்மண் தெரியாமல் புழுதியை கிளப்பி 33 திரையரங்கில் முதல் வெளியீட்டிலேயே 100 நாட்கள் கண்ட படம்.
அடுத்த கட்ட வெளியீட்டிலும் பெங்களூர், இலங்கை போன்ற இடங்களிலும் 100 நாட்கள் ஓடி மொத்தம் 38 திரையரங்குகளில் அதிரடி வெற்றியை பதிவு செய்த படம். மதுரையில் வெள்ளி விழாவை கொண்டாடிய படம். இதுதான் வெற்றி என்று வெற்றியின் வீரியத்தை திரையுலகுக்கு எடுத்து
காட்டிய படம். ............ Thanks.........
-
13th April 2020, 01:58 PM
#2963
Junior Member
Diamond Hubber
Raman thediya seethai - 1972
13.04.1972. இன்று என்னவொரு பொருத்தம்?! அதே ஏப்ரல் 13 ம் தேதி sunlife சனெலில் ஒளிபரப்பு செய்கிறார்கள்...
மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை'''.
ஜெயந்தி பிலிம்ஸ் 2 வது வண்ணப்படம் .
மக்கள் திலகம் நடித்த படங்களிலே மிக அதிகமான 43 வகையான உடைகளில் தோன்றிய படம் .
காஷ்மீரில் பாடல்கள் படமாக்கப்பட்டது .
மெல்லிசை மன்னரின் அருமையான எல்லா பாடல்கள் .
மக்கள் திலகம் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை
மிகவும் அழகாகவும் இளமையாகவும் தோன்றி நடித்திருப்பார் .
பாடல் காட்சிகள் - ஒரு அலசல்
முதல் பாடலில் காஷ்மீரில் மக்கள் திலகம் பாடும் திருவளர் செல்வியியோ ... நான் தேடிய பாடலில் மூன்று வகையான உடையில் தோன்றி மிகவும் பிரமாதமாக நடனமாடி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருப்பார் .
என் உள்ளம் உந்தன் ஆராதனை ........
இசை அரக்கனும் இசை அரக்கியும் மெல்லிசை மன்னரும்
மக்கள் திலகமும் ஜெயாவும் நம்மையெல்லாம் சொர்கத்துக்கு அழைத்து சென்ற பாடல் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் நமக்கு என்றுமே முதலிடம்தான் .
நல்லது கண்ணே ...........
1972ல் சென்னை நகரிலும் மற்றும் தமிழ் நாடெங்கும் ''வருகிறது '
மற்றும் இன்று முதல் போஸ்டரில் நல்லது கண்ணே ... பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா காட்சி, மறக்கமுடியாத ஸ்டில் .
மக்கள் திலகம் - நம்பியார்
மக்கள் திலகம் - அசோகன்
மோதும் சண்டை காட்சிகள் பிரமாதம் .
கிளைமாக்ஸ் காட்சி - ஒகேனக்கல் வெளிப்புற படபிடிப்பும் - அங்கு நடைபெறும் சண்டைகாட்சி அருமை .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் .
நல்ல நேரமும் - நான் ஏன் பிறந்தேன் இரண்டு படங்களுக்கு நடுவே இந்த படம் வந்து சிக்கியதால் எதிர் பார்த்த மஹா வெற்றி பெற முடியாமல் 12 வாரங்கள் ஓடியது .( ஒரு சில நடிகர் படங்கள் காசு கொடுத்தோ, சொந்த அல்லது ஒப்பந்த செய்த தியேட்டர்களில் கட்டாயப்படுத்தியோ பேருக்காக ஓட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இலங்கை - கொழும்பு - கேபிடல், லக்ஷ்மி அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது . இலங்கையில் பல இடங்களில் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடி திருப்தியான நல்ல வசூலை அள்ளியது......... Thanks.........
-
13th April 2020, 07:34 PM
#2964
Junior Member
Diamond Hubber
"தாய் சொல்லை தட்டாதே", தேவர் பிலிம்ஸில் எம்.ஜி.ஆர்., நடித்த இரண்டாவது படம். தமிழ் சினிமா உலகத்துக்கே வெளிச்சத்தை தந்த படம். குறைந்த பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜனரஞ்சகமான படம். பாடல்களில் புதுமை இசையில் இனிமை என ரசிகர்கள் துள்ளிக் குதிக்கும் அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியான தாய் சொல்லை தட்டாதே வியக்க தக்க வெற்றியை பெற்றது. அந்த காலத்தில் "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்" பாடல் இல்லாத
கல்யாண வீடே கிடையாது.
எம்ஜிஆரை தயாரிப்பாளர்கள் மொய்க்க துவங்கியது இந்த படத்திலிருந்துதான். மக்கள் குடும்ப கதையிலிருந்து மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்ததும் இந்த படத்திலிருந்துதான்.குடும்ப கதையில் கோலோச்சியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்துக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். சமூக படங்களுக்கு தலைவர் தாமதமாக வந்தாலும் விரைவில் சினிமா உலகத்துக்கே முடிசூடா மன்னனாக மாறினார். மக்கள் சக்தியை தன்னுடைய வசீகர நடிப்பாலும் சினிமா உலகின் நுணுக்கங்களை அறிந்ததாலும் எவரும் தன்னை நெருங்க முடியாத உயரத்துக்கு சென்றார். வடக்கே ராஜ்கபூர், தெற்கே தலைவர் கர்நாடகாவில் ராஜ்குமார், ஆந்திராவில் என்.டி.ஆர் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒருவர் ஆதிக்கத்தை செலுத்தினாலும் நடிப்பிலும்,மக்களை ஈர்ப்பதிலும் எம்ஜிஆர் அளவுக்கு எங்களால் முடியாது என்று அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணம் எங்க வீட்டு பிள்ளை தான். பல மொழிகளில் தயாரித்த படத்தில் எம்ஜிஆர் அளவுக்கு சிறப்பாகவும், எனர்ஜியாகவும் நடிக்க யாராலும் முடியவில்லை. அதே போல் எங்க வீட்டு பிள்ளை தமிழில் பெற்ற வெற்றிக்கு ஈடாக எந்த மொழியிலும் பெறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால்தான் அவருக்கு நடிகப்பேரரசர் என்று பட்டம் மிகவும் பொருத்தமாக அமைந்தது..
தாய் சொல்லை தட்டாதே 7.11.1961 ல் வெளிவந்து தமிழ் நாட்டில் 7 திரையரங்குகளிலும் இலங்கையில் ஒரு தியேட்டர் என்று மொத்தம் 8 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. தலைவர் படத்தோட வெளிவந்த மற்றுமொரு தேசபக்தி படம் வெளியான சில தினங்களிலேயே கட்டணத்தை குறைத்தும் ஓட்டமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது........... Thanks.........
-
13th April 2020, 10:12 PM
#2965
Junior Member
Platinum Hubber
தினமலர் -வாரமலர்*-12/04/20
-------------------------------------------------
கவிஞர் வாலி எழுதிய வாலிப வாலி நூலில் இருந்து*
சென்னை காமராஜர் அரங்கில் , ஒரு இந்து மத மாநாடு.* அதில் என் தலைமையில் கவியரங்கம், .* முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.*
மண்ணிலிருந்து புறப்பட்டது புழு*
புழுவை பூச்சி தின்ன*
பூச்சியை புறா தின்றது*
புறாவை பூனை* தின்றது*
பூனையை மனிதன் தின்ன*
மனிதனை மண் தின்றது*
மறுபடியும் மண்ணிலிருந்து புறப்பட்டது புழு*
புனரபி ஜனனம்*
புனரபி மரணம்*
என்று நான் கவிதையை படித்து முடித்தபோது , கைதட்டி ரசித்தார்* எம்.ஜி.ஆர்.*
-
13th April 2020, 10:13 PM
#2966
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் கலை*சுடர்*எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------
11/04/20* -* மெகா டிவி* *- காலை* 10 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி* -தாயை காத்த தனயன்*
12/04/20* - சன் லைப்* * * - காலை 11 மணி - புதிய பூமி*
* * * * * * * * * *முரசு டிவி* *- பிற்பகல் 2 மணி - வேட்டைக்காரன்*
13/04/20* - முரசு டிவி* - காலை 11 மணி* & இரவு 7 மணி*- நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * * *சன் லைப்* *- காலை 11 மணி* - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * * *மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * *புதுயுகம்* டிவி - இரவு 7 மணி - தர்மம் தலை காக்கும்*
14/04/20* - சன்* லைப்* * *-* காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
15/04/20* - ஜெயா*மூவிஸ்*-காலை*7 மணி - தாயின்*மடியில்*
15/04/20 -* முரசு டிவி* * - காலை 11 மணி & இரவு 7 மணி *- *நீதிக்கு தலை வணங்கு*
Last edited by puratchi nadigar mgr; 13th April 2020 at 10:16 PM.
-
14th April 2020, 08:32 AM
#2967
Junior Member
Diamond Hubber
வாழ்க வளமுடன்... அனைவருக்கும் மங்களகரமான இனிய, இன்ப "தமிழ் புத்தாண்டு", நல்வாழ்த்துக்கள்... கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் மக்கள் திலகம் புகழ், மாண்பு விளங்கிட தொடர்ந்து நன்முறையில் பரப்புவோம்...
-
14th April 2020, 08:35 AM
#2968
Junior Member
Diamond Hubber
☘☘☘☘☘☘
*மலரும் நினைவுகள்....*
*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*
*விகடன் : -*
உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
*எம்.ஜி.ஆர் :-*
சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.
என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.
இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
*- விகடன் பொக்கிஷம்*
☘☘☘☘☘☘.......... Thanks.........
-
14th April 2020, 08:39 AM
#2969
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர்., என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு!
சிவாஜி அன்று அளித்த மனம் திறந்த பேட்டி
https://www.thaaii.com/?p=34538
கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்?
சிவாஜி : தன்னைப் பற்றி உணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது திறமை பற்றி அவருக்கே தெரியும். யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர் அப்போதே அரசியலில் பெரிய அளவுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டார்.
அதனால் மக்களிடம் நன்மதிப்பு காணும் பாத்திரங்களிலேயே நடித்தார். ஆனால், நான் எனது கேரக்டர் தான் முக்கியம் என்று நினைத்தேன். எந்தப் பாத்திரமானாலும் சரி, அதை எப்படிச் செய்வது என்பதில் தான் எனது கவனம் இருந்தது.
பின்னாளில் நானும் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனாலும் காமராஜருடைய தொண்டனாக மட்டும் தானே இருந்தேன். அவருக்குப் பக்கத்திலேயே தலைவனாக வரவேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லையே!
கேள்வி : நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் ‘நல்ல’ பாத்திரங்களிலேயே நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?
சிவாஜி : இல்லை.. நடிப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால், சம்பந்தம் உண்டு என்று மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.
அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற்றார். He did it. I missed the bus. எனக்கு அரசியல் இரண்டாம் பட்சம் தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலை காரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால் தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.
அரசியலில் இன்று வந்துவிட்டு, நாளை போய் விடுவார்கள். எத்தனை பேருக்குப் பேர் இருக்கு? ‘செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு’ என்று கூட, எடுத்துக் கொள்ளலாம்.
அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதற்காக, ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்வதாகக் கூட வைத்துக் கொள்ளுங்களேன்( சிரிக்கிறார்).
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்து கொண்டேன்.
அவர்கள் என்னை நடிகனாக மட்டும் தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சில பேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லை என்றால், அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள் ( உரக்கச் சிரிக்கிறார்).
கேள்வி : இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல இருக்கிறதே?
சிவாஜி : கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க.. நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள்.. அதுவும் இப்படித் தான் நடக்கிறது.. நடக்கப் போகிறது!
கேள்வி : எம்.ஜி.ஆருக்கும், உங்களுக்கும் உள்ள உறவு எப்படி இருந்தது?
சிவாஜி : நாங்கள் எதிரும், புதிருமாக இருந்ததாகத் தான் வெளியிலே தெரியும். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒற்றுமையாகத் தான் இருந்தோம்.
எவ்வளவு நாட்கள்.. எத்தனை பேர்களை.. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றியிருப்போம்… (சிரித்துக் கொண்டே சொல்கிறார்)
தனிப்பட்ட முறையில், எங்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றால், எதற்காகக் கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்?
எதற்காக நான் சார்டர்ட் பிளைட் வைத்துக் கொண்டு, பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன். எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு “வீட்டுக்கு வாடா.. முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்’’ என்று சொல்கிறார்?
எதற்காக மனைவியிடம் “தம்பி வருகிறான்.. அவனுக்குப் பிடித்த ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் செய்து வை’’ என்று சொல்கிறார்?
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தான் இருந்தோம்..
நாங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்ததால் தான் இருவருமே பெரிய நிலைக்கு வர முடிந்தது. ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.
கேள்வி : எம்.ஜி.ஆர் எந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுக்க எண்ணியிருப்பார் என்று கருதுகிறீர்கள்?
சிவாஜி : எந்தப் பொறுப்பை என்னிடம் கொடுக்க நினைத்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது அதைச் சொல்வதில் என்ன பிரயோசனம்?
என்னுடைய நினைவுகள் என்னுடனே போகட்டும்’’
அரிதாரம் கலைத்த குரல்கள் – சுகதேவ் தொகுப்பு நூலில் – சிவாஜி கணேசனிடம் சுகதேவ் எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
பேட்டி முதலில் வெளிவந்தது 1997 தினமணி-தீபாவளி மலரில்.
நன்றி : சுகதேவ்
#MGR #MGRforever #CM #political #cinema #எம்ஜிஆர் #அரசியல் #அதிமுக #பொன்மனச்செம்மல் #சிவாஜி #மக்கள்திலகம் #SivajiGanesan #Actor #Parasakthi #Friendship #MGR_SIVAJI #Nadikar_Sangam....... Thanks...
-
14th April 2020, 05:32 PM
#2970
Junior Member
Diamond Hubber
பொக்கிஷம்!!
---------------------
நிறையப் படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன்,,இவர்,,என் கடமையில் மட்டுமே தோன்றியவர்!
இவரது சுஜாதா கம்பெனி,,சிவாஜி,,ரஜினி கமல் போன்றோரை வைத்து நிறையப் படங்கள் எடுத்திருக்கிறது!!
சிவாஜியுடன் நிறையப் படங்கள் செய்திருக்கும் நடிகர் பாலாஜி இல்லையென்றால்--
நாகேஷ் என்ற அற்புதக் கலைஞர் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்??
ஆரம்ப நாட்களில் வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த நாகேஷுக்கு,,இருக்க இடம்,,உணவு ஆகியன தந்து,,அவருக்கு நிறையப் படங்களில் சான்ஸ் வாங்கித் தந்தவர்!!
நடிகர் கம் தயாரிப்பாளர் பாலாஜியை இந்தியத் தொலைக்காட்சியினர் பேட்டி காண்கிறார்கள்!!
இரண்டு மணி நேரங்கள் நடந்த அந்தப் பேட்டி 1980களின் மத்தியில் டிவியில் ஒளி பரப்பாகிறது!!
தாம் திரையில் ஜெயித்தது,,சிவாஜி,,கண்ணதாசன் இவர்களைப் பற்றியெல்லாம் சுவை படக் கூறிக் கொண்டே வந்தவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது?
இவ்வளவு சாதித்தும் விருதுகள் பல சம்பாதித்தும் உள்ள உங்களது மனதுக்குப் பிடித்த விருது எது??
அவர் சிவாஜி,,ரஜினி,,கமல் மூவரில் யாரைக் குறிப்பிடப் போகிறார் என்று ஆவலோடு நோக்க--
இந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக பாலாஜி சொன்ன பதில்,,பேட்டி காண்பவரை மட்டுமல்லாது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவையுமே திகைப்பில் ஆழ்த்துகிறது??
எனக்குக் கிடைச்ச பெரிய விருது மட்டுமல்ல,,அதைப் பொக்கிஷம்ன்னும் சொல்லலாம் என்று கூறியபடியே நூறு ரூபாய் நோட்டு அன்றைக் காட்டியவர்,,மேலும் தொடர்கிறார்--
இது ஒரு பொங்கல் அன்னிக்கு தோட்டத்துல எம்.ஜி.ஆர் அண்ணனிடம் பரிசா வாங்கினது--
நான் அப்படி வாங்கணுன்னே அன்னிக்குப் போனேன்! என்ன இவ்வளவு லேட்டா வரியே என்று கேட்டபடியே இந்த நோட்டுல--வாழ்க வளமுடன் என்று எழுதித் தந்தார்!!
எம்.ஜி.ஆர் அண்ணனுக்குக் கைராசி உண்டுன்னு எல்லோரும் சொல்வாங்க. என் வாழ்க்கைலே அது நிஜமாச்சு!1
நான் எடுத்தப் படங்கள் எல்லாமே என்னை சினி லைன்லே தூக்கி விட்டுது!!
அதனால இந்த நோட்ட மட்டும் பொக்கிஷமா என் பர்சுலேயே வச்சிருப்பேன் என்று கூறி பாலாஜி புன்னகைக்கிறார்--
எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆரின் பாதிப்பு சிறிதளவாவது பேசியிருக்கிறது என்று பிரமிப்போடு நினைக்கத் தொன்றுகிறது.
உங்களுக்கு???............ Courtesy: Mr.Venkat Thiyagu...
Bookmarks