-
16th April 2020, 02:50 PM
#3051
Junior Member
Diamond Hubber
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைய முழு காரணம் #புரட்சித்தலைவரே...!
வரலாறு தெரியாமல் வாயை கொடுத்து, வம்பில் மாட்டிய ஸ்டாலின்..
"சென்னை பெருநகர மேம்பாட்டுக் குழு உறுப்பினராக 1985-86-ல் என்னை எம்ஜிஆர் நியமித்தார்.
அவர் தலைமையில் கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில்தான் திட்டத்தின் அவசியத்தை நான் வலியுறுத்தி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மனுவாக அளித்தேன்.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நல்லுசாமிக்கு எம்ஜிஆர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில்தான், 1986-87-ல் முதன்முதலில் இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது.
'கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, புறநகர் பேருந்து நிலையம் மற்றும் சுமை வண்டி நிலையம் உள்ளிட்டவை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப்படும்'
-என்று 1986-87-ம் ஆண்டு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, எம்ஜிஆர் உத்தரவின்படி, அப்போதைய துறை அமைச்சர் நல்லுசாமி அறிவித்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 3 ஆயிரம் கடைகள், பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவெடுத்தவர் எம்ஜிஆர்தான்.
இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால் இது யார் குழந்தை என்பது தெரிந்திருக்கும்.
பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 3 ஆயிரம் கடைகள், பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவெடுத்தவர் எம்ஜிஆர்தான்."
வரலாறு இப்படி இருக்க, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதே தில்லு முல்லு திமுக-வின் வேலையாகி போய்விட்டது...
-சைதை துரைசாமி | சென்னை முன்னாள் மேயர்......... Thanks.........
-
16th April 2020 02:50 PM
# ADS
Circuit advertisement
-
16th April 2020, 02:51 PM
#3052
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவர் ஆட்சியில் தான் சென்னை பாரிமுனையில் இருந்த திருவள்ளுவர் பேருந்து நிலையம், பூக்கடைகள், கொத்தவால் சாவடி என்ற மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை வாகன நெரிசல் காரணமாக அன்றாடம் தினறும் சென்னை வாகனநெரிசலை போக்க நிரந்தரமாக மாற்றியவர். தவிரவும் எண்ணற்ற ஊர்களுக்கு பஸ் வசதி /கிராமங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தவரும் அவர் தான். தவிரவும் 1977ஆடசிக்கு வந்த நிலையில் உயிர் காட்சி சாலையை வண்டலூர்க்கு மாற்றினார். திருவள்ளூர் /கும்மிடிப்பூண்டி ரயில் தடங்களை அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஒத்துழைப்புடன் மின்மயமாக்கினார். 11ஆண்டு எஸ் எஸ் எல் சி பாடத்திட்டத்தை நீக்கி 10வகுப்பு எஸ் எஸ் எல் சி /+2 புகுமுக பாடத்திட்டத்தை உருவாக்கி PUC ஒழித்து ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டத்தை உருவாக்கி ஏழை, நடுத்தர மக்கள் பயிலும் வகையில் எஞ்ஜினியர்/மருத்துவம்/வக்கில் படிப்பை எளிமையாக்கினார். ஐம்பது சதம் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார். நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கினார்.ரேஷன் அட்டைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கி, கடைகோடி கிராமங்களில் கூட ரேஷன் கடை உருவாக்கினார். கர்ணம், முன்சீப் பதவியை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை ஏற்படுத்தி எண்ணற்ற ஏழைவீட்டு பிள்ளைகளும் விஎஒ ஆக்கினார். குடிசைகள் ஒரு மின்விளக்கு பெற செய்தார். மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தார். போலீஸ் காவலர்களுக்கு ட்ரவுசர் பதிலாக பேன்ட் மற்றும் கோபுர தொப்பியை நீக்கி அழகான தொப்பி அணிய செய்தார். தமிழ் பல்கலை கழகம்/மகளிர் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார். எண்ணற்ற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார். இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.......... Thanks fb., Friends.........
-
16th April 2020, 03:09 PM
#3053
Junior Member
Diamond Hubber
வணக்கம்..!
இன்று உலகக் (World Voice Day) குரல் தினம்..!
இந் நாளில் ஒரு மகிழ்ச்சியான நற்செய்தி..!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "நான் ஆணையிட்டால்." படத்தில் இசையரசர் திரு.டி.எம்.எஸ். பாடிய "தாய்மேல் ஆணை." எனும் பாடல் ரசிகர்களின் ஏகோபித்த நல் வரவேற்பினைப் பெற்ற ஒரு அதியற்புதப் பாடலாகும்..!
இந்த இனிய பாடலின் இறுதி வரிக் காட்சியில் புரட்சித் தலைவர் கையில் ஒரு "திருக்குறள்" புத்தகம் இருக்கும்..! (இந் நற்தகவல் உதவி:- மெகாத் தொலைக் காட்சித் "தமிழ்நதி ஆதவன்")
அதாவது இசையரசரின் தேமதுரக்குரலுக்கும் வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனைக்கும் புரட்சித் தலைவரின் தமிழ்ப் பற்றிற்கும் மெல்லிசை மாமன்னரின் இசைநயத்திற்கும் பெருமை சேர்க்கும் இந்த அதியற்புதப் பாடலை இன்றைய (World Voice Day) "உலகக் குரல் தினத்தில்" முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுத்து முகநூல் பக்கத்தில் பகிர்வதைப் பயனுள்ளப் பொருத்தமானச் செயலாக யான் கருதுகின்றேன்..!
-கவிச்சாரல் காமராஜ் மாரியப்பன் கொள்ளிடம் காமராஜ்,
சர்வதேச வானொலி நேயர்,
கரோகிப் பாடகர்,
ஸ்ரீசத்ய சாய் இல்லம்,
நெ.1.டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி - 621 216....... Thanks...
-
16th April 2020, 03:24 PM
#3054
Junior Member
Diamond Hubber
இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து இந்திக்கும் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்கள் எவை...?
தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்திப்படம் இயக்குனர் சாந்தாராமின் மகத்தான படைப்பு அதை தமிழில் எம்ஜிஆர் பல்லாண்டு வாழ்க என மாற்றினார்.
சச்சா ஜூட்டா –இந்தியில் ரொமான்டிக் ஹூரோவாக இருந்த ராஜேஷ் கன்னா முதன்முறையாக ஆக்சன் படத்தில் நடித்தார்.இரட்டை வேடம் கொண்ட இப்படத்தை எம்ஜிஆர் நினைத்ததை முடிப்பவன் என்று தமிழில் மாற்றினார். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலில் ராஜேஷ்கன்னாவின் உருக்கமான நடிப்பை எம்ஜிஆர் தமிழில் மெருகேற்றியிருந்தார். உருக்கத்தை முழுவதுமாக ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதாவிடம் தந்துவிட்டார் எம்ஜிஆர்.
ராம் அவுர் ஷ்யாம் இந்தப் படத்தில் இந்தியில் நடித்தவர் திலீப்குமார். நடிப்புலக ஜாம்பவான் எனப் பெயர் பெற்ற அவரே தமிழில் எடுக்கப்பட்ட எங்க வீட்டுப்பிள்ளையில் எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரைப் போல தம்மால் நடிக்க முடியாது என பெருந்தன்மையுடன் பாராட்டினார்.
ஜன்ஜீர்- அமிதாப்பச்சனுக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தந்த படம். சல்மான் கானின் தந்தை சலீம் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற இரட்டையராக கதைவசனம் எழுதிய படம் இது. பின்னர் இதே ஜோடிதான் ஷோலே, தீவார் போன்ற வெற்றிப்படங்களை அளித்தது. தமிழில் இப்படத்தை எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார். கதாநாயகனுக்கு இணையான மற்றொரு பாத்திரத்தில் இந்தியில் பிரான் நடித்தார். அந்த வேடத்தையும் எம்ஜிஆர் ஏற்று முஸ்லீம் பத்தானாக நடித்து மேரா நாம் அப்துல் ரகுமான் எனப்பாடி இஸ்லாமிய ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.
ஜிக்ரி தோஸ்த்- இந்தியில் ஜித்தேந்திரா நடித்த இந்தப் படத்திலும் இரட்டை வேடம் ஏற்று தமிழில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மாட்டுக்கார வேலனாக நடித்தவர் எம்ஜிஆர். ஒரு பக்கம் பார்க்குறா என்ற நயமான பாடல்காட்சியில் எம்ஜிஆரின் நளினமான நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்கது.
ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் இந்தியில் தர்மேந்திராவும் அவரால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்ட மீனாகுமாரியும் நடித்தது. தமிழில் மீனாகுமாரியின் வேடத்தில் சவுகார் ஜானகி நடித்தார். ஒளிவிளக்கு என பெயர் மாறிய இப்படத்தில்தான் முதல்முறையாக எம்ஜிஆர் குடிகாரனாக நடித்தார். அந்தப் படம் இரட்டை வேடம் இல்லை என்பதால் அவரே தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்று பாடி குடி குடியை கெடுக்கும் என்ற தனது கொள்கையையும் பிரச்சாரம் செய்தார்.
இந்தப்படத்தில்தான் இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்ற பாடலில் உயிருக்குப் போராடும் எம்ஜிஆருக்காக சவுகார் பாடுவார். புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் போதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இந்தப்பாடல் ஒலித்தது.
ரக்வாலா- இதுவும் தர்மேந்திரா நடித்த படம்தான். காவல்காரன் என்ற பெயரில் தமிழில் உருவாக்கினார் எம்ஜிஆர். இப்படத்தில் இடம் பெறும் பாக்சிங் காட்சிகளும் ரகசிய போலீஸ்காரராக எம்ஜிஆர் ஏற்ற கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்தன.
ரிக்சாவாலா- தமிழில் எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற ரிக்சாக்காரன் படமே இந்தியில் ரந்தீர் கபூரும் இளமை துள்ளும் பெரிய மார்பகங்களுடைய நீத்து சிங்கும் நடித்தனர்.
ஜீனே கீ ராஹா இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆர் நான் ஏன் பிறந்தேன் என மாற்றினார். இரு பெண்களுக்கு இடையில் பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு ஆண் என்ற கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம். எம்ஜிஆரின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லாத குடும்பக்கதை ஆயினும் நான் ஏன் பிறந்தேன், சித்திரச் சோலைகளே, தம்பிக்கு ஒரு பாட்டு போன்ற பாடல்களில் எம்ஜிஆர் தனது கொள்கைகளை பதிவு செய்துவிட்டார். இந்தியில் ஜித்தேந்திரா நடித்த மென்மையான காதலனின் அப்பாவித்தனமான தோற்றம் எம்ஜிஆருக்கும் அழகாகப் பொருந்தி விட்டது. இப்படத்தில் இசையமைத்த சங்கர்-கணேஷ் தனிப்புகழ் பெற்றனர்
சைனா டவுண்- இதுதான் தமிழில் குடியிருந்த கோயில் என்று வந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் பின்னர் இதே கதையை தமிழிலிருந்து இந்திக்கு உல்டா செய்த இயக்குனர் மகேஷ் பட் இதனை இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கினார்.
யாதோங்கி பாரத் –தர்மேந்திரா நடித்த இந்திப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக இதை எடுத்த எம்ஜிஆர் முற்பகுதியில் மற்றொரு கதாநாயகனான விஜய் அரோராவே பாதிக்கதையை ஆக்ரமித்ததால் அந்தப்பாத்திரத்தையும் தானே நடித்து இரட்டை வேடம் ஏற்றார். லதாவின் தூக்கலான கவர்ச்சியுடன் இனிமையான பாடல்களுடன் உருவான இப்படத்தில் மூன்றாவது தம்பியாக தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்தார்.
உல்ஜன்- இதயக்கனியாக மாறிய இந்தப்படம் இந்தியில் சஞ்சீவ்குமார், சுலக்சனா பண்டிட்டின் பக்குவமான நடிப்பாலும் கிஷோர்- லதா பாடல்களாலும் மெருகேற்றப்பட்டது. இதனை தமிழில் மிக அழகாக மாற்றம் செய்தார் இயக்குனர் ஏ.ஜகன்னாதன். தோ ரஹா படத்தில் கற்பழிப்புக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ராதா சலூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர். ராதா சலூஜா எம்ஜிஆருடன் இன்றுபோல் என்றும் வாழ்க படத்திலும் நடித்து எம்ஜிஆருடன் நடித்த ஒரே இந்தி நடிகை எனும் மதிப்பை பெற்று அதற்குபின்னர் காணாமல் போனார்.
ஹாத்தி மேரே சாத்தி –தேவர் பிலிம்சின் இந்தப் படம் தமிழில் நல்லநேரமாக எடுக்கப்பட்டது. இந்தியில் ராஜேஷ் கன்னா ஹீரோ. தமிழுக்கும் இந்திக்கும் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் முகமது ரபி குரலில் யானையின் மரணத்திற்காக ஒலிக்கும் பின்னணி பாடல் தமிழில் இல்லை.
தமிழில் நம் நாடு என எம்ஜிஆர் நடித்த படமே இந்தியில் அப்னா தேஷ்- இதுவும் ராஜேஷ் கன்னா நடித்த படம். இந்தியில் கவர்ச்சிப் புயல் மும்தாஜின் நடிப்பு ராஜேஷ்கன்னாவையே சில இடங்களில் ஓரம் கட்டியது.
கோரா அவுர் காலா- ராஜேந்திரகுமார் நடித்த இந்தப்படமும் இரட்டைவேடம் கதைதான். தமிழில் நீரும் நெருப்பும். இந்தியில் இந்தப் படம் பெற்ற வெற்றியை தமிழில் வசூலில் வழக்கமான வெற்றி பெற்றது, கரி பூசிய எம்ஜிஆரை ரசிகர்கள் ஏற்கவில்லை. உருவத்திலும் பொன்மனச்செம்மலாகவே பார்த்துப்பழகி விட்டார்கள்.
ராஜா ஜானி – தர்மேந்திரா-ஹேமாமாலினி ஜோடியாக நடித்த இப்படத்தை தமிழில் ராமன்தேடிய சீதையாக ஜெயலலிதா எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறந்த திரைக்கதை கொண்ட படம் இது.
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலிக்கிறது............ Thanks fb.,
-
16th April 2020, 07:49 PM
#3055
Junior Member
Diamond Hubber
1982 ஆம் ஆண்டு நம் மக்கள்திலகம் முதல்வர்.
சென்னையில் 5 ஆண்டு மருத்துவ படிப்பு முடிந்து ஹவுஸ் சர்ஜென் ஆக ஓராண்டு பயிற்சி மருத்துவர்கள் ஆக பணி புரிவோர்கள் தங்களுக்கு வழங்க படும் மாத சிறப்பு அரசு ஊதியம் 375 ரூபாய் தங்களுக்கு போதவில்லை என்று.
போராட்டம்...ஆர்பார்ட்டம்.... உண்ணாவிரதம்..ஊர்வலம் நடத்துகிறார்கள்.அப்போது சுகாராதத்துறை அமைச்சர் திருமிகு ஹண்டே அவர்கள்.
ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் சிலர் திரு ஹண்டே அவர்களை சந்திக்க அவர் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கி தர ஒப்புக்கொள்ள.
அதன் படி ஒரு நியாயிற்று கிழமை காலை 10.30. மணிக்கு தன் வீட்டுக்கு மருத்துவ குழுவினரை வர சொல்கிறார் மன்னர்.
அதன் படி முதல்வர் 10.30 மணியில் இருந்து காத்து இருக்க போராட்ட குழுவினர் 11.30 மணி தாண்டி தலைவர் வீட்டுக்கு செல்ல.
என்ன இவ்வளவு தாமதம் என்று முதல்வர் கேட்க எங்க கிட்ட வாகன வசதி இல்லை அனைவரும் பஸ்ஸில் வர லேட்டா ஆகி விட்டதை சொல்ல.
நீங்க சொல்லி இருந்தால் நான் டி.நகர் வந்து இருப்பேனே என்கிறார் முதல்வர்...என்ன சிந்தனை பாருங்கள்.
விவரங்கள் சொல்ல பட ஆம் உண்மை 375 ரூபாய் காணாது ஒரு மாதத்துக்கு..
படிக்கும் போது அப்பா அம்மா செலவழிப்பது சரி நீங்கள் முடித்த பிறகு அது தவறு.
சரி நீங்கள் எவ்வளவு கேட்கிறீர்கள் என்று தலைவர் கேட்க 500 ரூபாய் கொடுத்தால் சமாளித்து விடுவோம் என்று குழுவினர் சொல்ல.
நீங்கள் உயிர் காக்கும் மருத்துவர்கள் 500 ரூபாய் எப்படி பத்தும் மாதத்துக்கு என்று 1500 ரூபாய் கொடுக்க ஒப்புக்கொள்கிறார் நம் தங்க தலைவர்..
யாருக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று கணிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
அன்று அவர் போட்ட அஸ்திவாரத்தில் தான் இன்று தமிழக சுகாதாரத்துறை தலை நிமிர்ந்து நடை போடுவது பலருக்கும் தெரியாத உண்மை.
அன்று முதல்வரை சந்தித்த அந்த குழுவில் இருந்த 6 மருத்துவர்களின் பல முறை அதிமுக எம்பி ஆக இருந்த மருத்துவர் வேணுகோபால்
அவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல்... அவர் அப்போது ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.
பின்னர் கழகத்தில் தீவிர பணியாற்றி கட்சி எம்பி ஆனார்...எப்படி..
நன்றி....வாழ்க எம்ஜியார் புகழ்...நன்றி
தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி... Thanks.........
-
16th April 2020, 08:11 PM
#3056
Junior Member
Diamond Hubber
#மனிதநேயம் #நம் #இனம்
#அன்பு #நம் #மதம்
P2 Media விற்காக நம்ம எம்ஜிஆர் லதாம்மா பிரத்யேக பேட்டி
You tube link :
#புரட்சித்தலைவர் #தான் #என் #ஆசான்...!
நான் எங்கு சென்றாலும் என்னை எம்ஜிஆர் லதா என மக்கள் அழைப்பதை நான் மிகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்...!
குறிப்பறிந்து உதவுவார்...! நிறைய நேரங்களில் நானே பார்த்து வியந்திருக்கிறேன்...!
அவரைப் போல சிறந்த தொழில்நுட்ப வல்லுந*ர் கிடையாது, எந்த வசதியுமில்லாத அந்த காலகட்டத்திலேயே அவரது தொழில்நுட்பம் மிகப் பிரம்மாண்டமாய் இருக்கும்...!
பிறருக்கு உதவும் குணம் நான் அவரிடம் கற்றது...! மனித நேயத்தில் முன்னேற இன்னமும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன்...!
அன்றைய சினிமா மற்றும் இன்றைய சினிமாக்கள் பற்றிய கருத்து...!
(எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்புடீ...!)
இன்னும் பலப்பல பசுமையான நினைவுகளை நமக்குப் பகிர்ந்துள்ளார் நம்ம எம்ஜிஆர் லதாம்மா!!! .......... Thanks.........
-
16th April 2020, 08:26 PM
#3057
Junior Member
Diamond Hubber
வட இந்தியாவில் உள்ள ஒரு தனியார் டி.வி சேனலில் எடுக்கப்பட்ட சர்வே யார் சிறந்த மனிதர் சிறந்த முதல்வர் மூன்று பேர்கள் பெயர் குறிப்பிட்டு கருத்து கணிப்பு எடுத்தனர் அதில் நம்ம தெய்வம் பொன்மனச்செம்மல்க்கு ஐந்தரை கோடி பேர் வாக்களித்தனர். ஜெயலலிதாவுக்கு மூன்று கோடி பேர் வாக்களித்தனர் கருணாநிதிக்கு இரண்டு கோடி பேர் வாக்களித்தனர். ..இந்த செய்தி அதிகமாக சேர் செய்யுங்கள் மக்கள் அனைவரிடமும் போய் சேரும். .......... Thanks.........
-
16th April 2020, 08:58 PM
#3058
Junior Member
Diamond Hubber
#கண்ணன்_என்_காதலன் படத்தில் #அம்மா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார்.
ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் மக்கள்திலகம் #எம்ஜிஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை.
"காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள்" என்று #புரட்சித்தலைவர் கேட்க,
இயக்குனரோ "சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி" என்று விளக்க, காரில் ஏறப்போன #எம்ஜியார் இறங்கிவிட்டார்.
"அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன். அந்தப்பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது?" என்று கூறி அவரும் அங்கேயே இருந்துவிட்டார்.
படியில் உருள்வது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார்.
எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்திற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர்., தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா? என்று உறுதி செய்தார்.
ஒருமுறைக்கு பல முறை உறுதி செய்த பின்னர் தான் ஜெயலலிதா நடித்த அந்த காட்சி படமாக்கப்பட்டது.
அந்த அளவு உடன் நடிப்பவர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர்தான் நம் #மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.......... Thanks...
-
16th April 2020, 09:08 PM
#3059
Junior Member
Diamond Hubber
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன்....
ஒரு கேள்வி?
இந்த வீடியோ காட்சியை காணுங்கள்?
பல நாடுகளில் ஜனநாயக முறைப்படி மக்களால் வாக்களித்து தங்களுக்கான முதலவர்களை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது?
ஆனால் இந்த அமெரிக்காவில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி ஒன்றை மட்டும் நம்பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாடு திரும்பிய எங்கள் மனிதபுனிதர், புரட்சி தலைவர்,மக்கள் திலகம்,பொன்மனச்செம்மல், பாரத்ரத்னா, டாக்டர்."திரு.எம்.ஜி.ஆர்" போல் சாதனை படைத்தவர்கள் எந்த நாட்டிலாவது உண்டோ?
தெரிந்திருந்தால் கருத்தை பதிவு செய்யவும்?
எம்.ஜி.ஆர் பக்தன்
A .A. பாலு...... Thanks...
-
16th April 2020, 09:10 PM
#3060
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர் புகழ் மக்களால்
எம் ஜி ஆரால் பலன் கண்டோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா
இதில் நன்றி மறந்தோர் அதிகம்
அண்ணா முதல் இன்றைய ஆட்சி வரை எம் ஜி ஆர் எனும் சக்தியால்
எம் ஜி ஆரை மறப்பது மக்களை மறப்பது போன்று
திராவிட இனம் ஆட்சி நடக்க எம் ஜி ஆர் எனும் ஆணிவேர் வேண்டும்
எம் ஜி ஆர் எவரையும் எதிரியாக காணவில்லை எம் ஜி ஆர் முன் எதிரியாக நிற்க்க எவராலும் முடியாது
எம் ஜி ஆர் சக்தியின் பலம் அப்படி
வெற்றி வேண்டுமா எம் ஜி ஆர் சக்தி அங்கு வேண்டும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...
Bookmarks