-
26th April 2020, 10:06 AM
#3651
Junior Member
Diamond Hubber
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -24/04/2020 அன்று* வின்*டிவியில் வெளியான* தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த கருத்தான பாடல்கள் அமைப்பதில் முனைப்புடன் இருந்தார் .* குழந்தைகள்தான்* எதிர்காலத்தில் வளர்ந்த சக்திகள் , நாட்டை முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தும் தலைவர்களாக வரக்கூடியவர்கள்*பல உயர்ந்த பட்டம், பதவிகளை அடைந்து மத்தியிலும், மாநிலத்திலும் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியை செவ்வனே நடத்தக் கூடியவர்கள்* அப்படிப்பட்ட குழந்தைகளின் கருத்தை கவரும் வண்ணம் ஏராளமான பாடல்கள் தன் படங்களில் அமையும்படி பார்த்துக் கொண்டார் .**
ஒருமுறை படப்பிடிப்பில் நடிகை கே.ஆர். விஜயாவுடன் நடித்து வந்தார். நடிகைக்கு காலையில் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருந்தது .* காபியில் உள்ள நச்சுத்தன்மைகளை விளக்கி நடிகை கே.ஆர். விஜயா அந்த பழக்கத்தை கைவிடும்படி செய்தார் .* இதுபோன்று படப்பிடிப்புகளில் பல கலைஞர்கள் உடன் நடிக்கும்போது அறிவுரைகள், போதனைகள் செய்ய தவறுவதில்லை .
எம்.ஜி.ஆர். தன் படங்களில் வரும் பாடல்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடும்படி அமைய வேண்டும் ,அவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,என்று கூறியதோடு , குழந்தைகள் மீது அளவற்ற*அன்பு, பாசம் வைத்திருந்தார் .*நீதி போதனைகள், சமூக*சீர்திருத்த*கருத்துக்கள்*அடங்கிய*பாடல்கள ுக்கு முக்கியத்துவம் அளித்தார் .அந்த பாடல்கள்*சமூகத்தில் பெரிய தாக்கத்தை*ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையில்*கவிஞர்**பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரம் எழுதிய*சின்ன*பயலே*, சின்னப்பயலே சேதி*கேளடா*,.......* ஆளும் வளரனும் , அறிவும்*வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை*ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்*மகிழ்ச்சி ..... மனிதனாக வாழ்ந்திட வேணும்*மனதில் வையடா*, தம்பி மனதில்*வையடா ....* வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா*.. ... என்று காலம் கடந்து*நிற்கும்*வைர வரிகளை* அரசிளங்குமரி திரைப்படத்தில்*அறிமுகப்படுத்தினார்.**
சில*காலம்* சந்தர்ப்ப சூழ்நிலை, சமுதாய சீரழிவு*காரணமாக*திருடனாக வாழ்ந்தவன் ,நல்லவனாக திருந்தி வாழ்வதற்கு ஏற்ப ஒரு திரைக்கதை தயாரானது . அதற்கு*டைட்டில்**பெயர் வைப்பதற்கு* பல பேர் சொன்ன*தலைப்புகளை நிராகரித்து , அந்த சமயத்தில் வித்வான் லட்சுமணன் அவர்களின்*யோசனைப்படி திருடாதே*என்று தலைப்பை*தேர்வு செய்து , அதற்காக*அவருக்கு*ரூ.500/- பரிசளித்தார்* எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் படத்தின்*தலைப்புகளை தேர்வு செய்வதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக*இருந்தார்.எதிர்மறை கருத்துக்கள்*மக்களை சென்றடையக்கூடாது என்று* .*மக்களுக்கு*பாசிட்டிவ்*ஆன* தலைப்புகள், செய்திகள், கருத்துக்கள்*தன் படத்தில் புகுத்துவதில் ஆர்வம் செலுத்தினார் .இந்த படத்தில்*கவிஞர் பட்டுக்கோட்டை*கல்யாண சுந்தரத்தின் திருடாதே, பாப்பா திருடாதே,வறுமை நிலைக்கு*பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே .......சிந்தித்து*பார்த்து செய்கையை*மாத்து, சிறிசாய் இருக்கையில் திருத்திக்கோ,தெரிஞ்சும்*தெரியாம*நடந்திருந்தா திரும்பவும் வராமல்*பாத்துக்கோ*..........திருடனாய்*பார்த்த ு திருந்தாவிட்டால் திருட்டை*ஒழிக்க முடியாது*போன்ற*வரிகள்*எக்காலத்திற்கும் பொருந்தும்*.
கன்னித்தாய் என்கிற*படத்தில்*குழந்தைக்கு அறிவுரை சொல்லும்*பாடலில்*தவிதவிக்கிற ஏழைக்கெல்லாம் திட்டம் போடணும்*, அதை சரிசமமான*பங்கு போட சட்டம் போடணும், குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்*ஏழை குடிசை*பகுதியில்*பாலும் தேனும்*ஆறா*ஓடணும்*. ... கேளம்மா*சின்ன*பொண்ணு கேளு*என்ற பாடலில் இந்த வரிகள்*இருக்கும்.*ஏழை எளியோரின் துயர் துடைக்கும் வகையில்*தன் எண்ணங்கள் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்பதை*இந்த பாடலில்*வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.*
*வேட்டைக்காரன் படத்தில்*எம்.ஜி.ஆர். கௌபாய்*வேடத்தில்*நடித்தார்.எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான வேடம்.* அந்த படத்தில்*மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓடியாடி*நடித்தார். சில*காட்சிகளில் துள்ளல்கள் அதிகம்.* ஒரு இடத்தில உட்காராமல் படுவேகத்துடன், பம்பரம் போல சுழன்று சில காட்சிகளில் நடித்திருப்பார் படம் முழுவதும் மிகவும் உற்சாகமாக*நடித்திருப்பார் ..* இந்த படத்தில் வெள்ளி நிலா முற்றத்திலே என்ற பாடலில்*, தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லும்போது, நான்கு பேர்கள்*போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும், மானத்தோடு வாழ்வதுதான் சுய மரியாதை ......என்கிற வரிகளில் சுய மரியாதை பற்றிய விளக்கத்தை மிகவும் எளிதாக*குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில்*இருந்தது*.
நான் ஏன் பிறந்தேன் என்கிற படத்தில்*குடும்ப*பாங்கான கதை.* அவரது குடும்பத்தில் குழந்தைகள் நால்வர் இருப்பர்.* எம்.ஜி.ஆர். நடித்த*குடும்ப*பாங்கான படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது . வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற , திருமணம் ஆனவர்*என்ற உண்மையை*சொல்ல முடியாமல் , தன்னை காதலிப்பவரின் உடல்நலத்தையும், உயிரையும்*காப்பாற்ற வேண்டிய பொறுப்புகளை சுமந்து*பல துன்பங்களை கடந்து*இறுதியில் குடும்பத்துடன் ஐக்கியம் ஆவதுதான் கதை .இந்த படத்தில்*, தம்பிக்கு*ஒரு பாட்டு*அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடலில்* உயர்ந்தவர் யாரும் சுயநலம் இருந்தால்*தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே, உழைப்பால் பிழைப்போர்*தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே என்கிற* வரிகளில் ஜனநாயக*நாட்டிற்கு*தேவையான பொது உடைமை கருத்துக்கள்*அடங்கி இருக்கும் . வளரும் குழந்தைகளுக்கான நீதி போதனைகள், அறிவுரைகள் இந்த பாடலில் அமைந்தன .
எம்.ஜி.ஆர். தான் நடித்த**தனக்கு*பிடித்த*ஒரு சில*படங்களில் பெற்றால்தான் பிள்ளையா முக்கியமானது .* அதில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்கிற பாடலில் , கருணை இருந்தால்*வள்ளலாகலாம்.* கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,* இந்த மூன்றும் இருந்தால்*தலைவனாகலாம். என்ற வரிகள் அமைந்திருக்கும்.* வளரும் குழந்தைகள் நாளைய தலைவர்களாகவும், கடமை வீரனாகவும், பொறுப்பு மிகுந்த தேசியவாதியாகவும் உருவாக*இந்த பாடல் நல்ல படிப்பினையாக*இருக்கும் .இந்த பாடலில்*மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று ஒரு வரி இருக்கும். எம்.ஜி.ஆரின் உச்சரிப்பு அப்படியே இருக்கும். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனபோது* , இந்த படம் மறு தணிக்கைக்கு*சென்ற போது பாடல் வரியில்*அறிஞர் அண்ணா*போல் என்பதற்கு பதிலாக திரு.வி.க . போல் என்று வரும்படி செய்தார்கள்.* அப்போதைய அரசியல் சூழலில் சில*எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு இப்படி சில*சோதனைகள்*கொடுத்து*அவரது*தேர்தல் வெற்றிக்கு*தடை ஏற்படுத்தினர். ஆனால் அதையெல்லாம் மீறி*அவற்றை*தவிடு பொடியாக்கி*எம்.ஜி.ஆர். ஆட்சி பீடத்தில்*அமர்ந்தார் என்பது வரலாறு .
ஆனந்த ஜோதி படத்தில்*எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்தார் .இந்த படத்தில்*வரும் ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்,* தலைவன் ஒருவன்தான்*என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்*என்ற பாடலில் , தர்மத்தின்*சங்கொலி*முழங்கிடுவோம், தமிழ்த்தாயின் மலரடி*வணங்கிடுவோம்**என்கிற வரிகளில் மொழிப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகள் அடங்கிய கருத்துக்கள்*இருக்கும்.* அந்த காலத்தில் , இந்த பாடல்*பல பள்ளிகளில், சுதந்திர*தினம், குடியரசு தின*விழாக்களில்*மாணவ மாணவிகள்*பாடும் பாடலாக*அமைந்தது .
நம் நாடு படத்தில்தனது அண்ணனின் குழந்தைகளுக்காக** நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, என்கிற பாடலில்* விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் . தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் . என்ற வரிகள்*குழந்தைகளுக்கு நீதி போதிக்கும்* *வாத்தியாராக இருந்து சொன்ன கருத்துக்கள்*, நிஜத்தில்*எம்.ஜி.ஆர். தனது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குழந்தைகளை* தன் குழந்தைகளாக பாவித்து அவர்களை*படிக்க வைப்பதில் இருந்து , திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தானே* முன்னின்று நடத்தி வைத்துள்ளார்*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல்**சினிமா , அரசியல் , பொது வாழ்க்கை என்று மூன்று உலகிலும்*உச்சத்தை*தொட்டவர் வேறு எவருமில்லை .ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஒரு மனக்குறை*இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்*கவிஞர் வாலி எழுதிய பாடலில்*பணம் படைத்தவன் படத்தில்*தனக்கொரு குழந்தை பிறக்கும்*தருவாயில், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான், தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்* (பேரறிஞர் அண்ணா*) வழியிலே*நடப்பான்*என்ற*பாடலில் நடித்தார் .பொதுவாக* எம்.ஜி.ஆர். குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் . அதனால்தான் , வறுமை, பசிப்பிணி காரணமாக எந்த குழந்தையும் பாதிக்க கூடாது என்கிற வகையில்*பள்ளிகளில், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் .* ஆரம்பத்தில் நிதிநிலை நெருக்கடி, எதிர்க்கட்சிகள் விமர்சனம் , அமுல்படுத்துவதில் சிக்கல்*இவையெல்லாம் இருந்தும்*திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை*அமுல்படுத்தி வருகின்றன தமிழகத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகள் சத்துணவு கூடம் என்ற பெயரில் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது . உலகமே இந்த திட்டத்தை வியந்து பாராட்டுகிறது . இதன் காரணமாக*பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
எம்.ஜி.ஆர். சொந்தமாக இயக்கி தயாரித்த*நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் கண்ணதாசன், இன்னொருவர் எம்.ஜி.ஆர். கதை இலாகாவை சார்ந்த*ரவீந்தர். ரவீந்தருக்கு ஒரு சமயம்*திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது .எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மூலம் எம்.ஜி.ஆருக்கு*விஷயம் தெரிய வருகிறது .* எம்.ஜி.ஆர். ரவீந்தரை*திருமண பரிசாக*என்ன வேண்டும் கேள்,ஏதுவாகிலும் செய்கிறேன் என்று சொன்னபோது மாங்கல்யம் வாங்குவதற்கு ரூ.16/- வேண்டும் என்று கேட்டார் .அதை நீங்கள்தான்*தரவேண்டும் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். மறுத்ததோடு*, நான் இருமுறை*திருமணமாகி* மனைவியரை இழந்தவன். எனக்கு குழந்தை இல்லை.* எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். நீ வாழ வேண்டியவன். எனவேதான்*என் அண்ணனை*தரும்படி*கேட்டுக் கொண்டேன் என்று விளக்கினார் .**
ஊருக்கு உழைப்பவன் படத்தில்*கவிஞர் முத்துலிங்கத்தின் பிள்ளை தமிழ் பாடுகிறேன், ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் என்ற பாடல்* வரும்.,இந்த பாடலில்*எம்.ஜி.ஆருக்கு பிள்ளை இல்லை என்ற மனக்குறை, துயரம், சோர்வு*எல்லாம் தன்னுடைய முகபாவத்தில் தெரியும்படி***உணர்வுபூர்வமாக*நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்*, எல்லா துறையிலும் சாதித்த*எம்.ஜி.ஆர். தனக்கு*வாரிசு இல்லை என்ற மனக்குறையை போக்க தவித்தது போல் இந்த பாடல் அமைந்தது .*
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே*, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே*என்கிற தத்துவப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பாடலின்*கருத்துக்கள் அமைந்தன . எம்.ஜி.ஆர். குழந்தைகளை நேசித்ததன்*பலனாக*, அவர்களது*ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு ,எந்தெந்த சொற்களை கேட்டால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்களோ ,அதற்கு தகுந்தபடி ,அவர்களின் சிரிக்கும் பாஷையில்* சிக்கு*மங்கு சாச்சா பாப்பா என்று குழந்தைகளே கோரஸாக பாடும்படி*பாடலில் முதல் வரியில் அமைத்திருந்தார் .
1972ல் தி.மு.க.வில் இருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அவர் கட்சி பதவி ஆசையினாலோ, அதிகார பதவி ஆசை யினாலோ அப்படி கேட்கவில்லை .* தவறு எங்கிருந்தாலும் தட்டி கேட்பது என்பது அவரது சிறிய வயதில் இருந்தே இருந்த வழக்கத்தில் ஒன்று .*** அவர் கும்பகோணம் ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும்போது கோடையில் மண்பானை வாங்க வேண்டி பள்ளி ஆசிரியர் சிறுவர்களிடம் தலா 3 பைசா, 5 பைசா என்று வசூல் செய்து ,திட்டமிட்டபடி, பெரிய பானை வாங்காமல் , சிறிய பானை வாங்கி , காசு மிச்சம் சேர்த்திருந்தார் . இதை அறிந்து சிறுவர்களிடம் கலந்து ஆலோசித்த அவர் அதை தட்டி கேட்க முற்பட்டார் என்று தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தனது பாடல்கள்மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை ,பாட வகுப்பில் சொல்வது போல , ஒரு பல்கலை கழகமாக , வாத்தியார் எம்.ஜி.ஆர். திகழ்ந்திருப்பார் .* தனது ஒவ்வொரு செயலிலும் யாருக்காவது , எதையாவது நல்ல முறையில் செய்ய வேண்டும், எளிதாக சொல்ல வேண்டும்* தனது ஒவ்வொரு மூச்சிலும் , தன்னுடன் பழகுபவர்கள், தொடர்புடையவர்கள் வாழ்க்கைத்தரம் உயர தன்னாலான உதவிகள் தன் வாழ்நாள் முழுவதும்*செய்யவேண்டும் என்பதை, கொள்கையாக எந்தவித* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வந்தார் ..**
மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் தி.மு.க. வின் கொள்கை பாடலாக இருந்தது எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் அவர்* காரில் பயணித்தபோது இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை என்று சொல்லலாம் .**
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம் :
1.சின்ன பயலே சின்ன பயலே - அரசிளங்குமரி*
2.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*
3.கேளம்மா சின்ன பொன்னு -* *கன்னித்தாய்*
4.வெள்ளி நிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
5.தம்பிக்கு ஒரு பாட்டு -நான் ஏன் பிறந்தேன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
7.ஒருதாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
8. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம் நாடு*
9.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
10..பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் -* ஊருக்கு உழைப்பவன்*
11.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
12.ஏன் என்ற கேள்வி* -ஆயிரத்தில் ஒருவன்*....... Thanks...
-
26th April 2020 10:06 AM
# ADS
Circuit advertisement
-
26th April 2020, 11:48 AM
#3652
Junior Member
Diamond Hubber
தன்னை சுட்டவனையே மன்னித்தவர் எம்ஜிஆர்
தன்னை ஏசிய கண்ணதாசனுக்கு பதவி கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர்
தனக்கு இடைஞ்சல் கொடுத்த பானுமதியை இசைக்காக பதவி கொடுத்து மதித்தவர் எம்ஜிஆர்
எதிரியின் திறமையை ரசிப்பவர் எம்ஜிஆர்
எம்ஜிஆரின் சக்தியின் முன் எவராலும் எதிரியாக இருக்க முடியாது
அதனால் தான் அவர்களை மன்னித்தாரா எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ் ......... Thanks.........
-
26th April 2020, 12:14 PM
#3653
Junior Member
Diamond Hubber
******************************** "ராஜராஜன் / Rajarajan"
********************************
மக்கள் திலகம் எம்ஜிஆர் , பத்மினி , ராகிணி , எம்.ஜி.சக்ரபாணி , பி.எஸ்.வீரப்பா , எம்.என்.நம்பியார் , திருப்பதி சாமி மற்றும் பலரது நடிப்பி்ல் 26 / 04 / 1957 ல் வெளியான திரைப்படம் "ராஜராஜன்".
கதை - வசனம் இளங்கோவன் , இசை - மகாதேவன்.
திருவனந்தபுரம் மெரிலாண்ட் சுப்ரமணியம் , வீரப்பா , நம்பியார் இவர்களது கத்தி சண்டை அபாரம்.
சீர்காழி கோவிந்தராஜன் / ஏ.பி.கோமளா குரலில்...
"நிலவோடு வான்முகில் விளையாடுதே" எனும் அருமையான பாடலை கு. சா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதியிருந்தார்.
************
RAJA RAJAN is a Tamil Language film.
Starring : M.G.Ramachandran , Padmini and Lalitha in the lead role.
The film was released in the 26th April 1957 (1) Though it is a good entertainer with hit songs the film didn't do well at box office and ran for just above 50 days.
(it was screened at Raja theatre Vellore also.
Vananghamudi , Maya bazhaar andRaja Rajan came at the same time. Lalitha and Padmini look very pretty in this good entertainer.)
The film has exellent meaningful dialogues by Elangovan. The dialogues can be enjoyed even now (2)
RAJA RAJAN
Directed by :
T.V. Sundaram
Produced by :
S.G.A.Cars
Written by :
Saravanan .P
Story by :
Raja
Starring :
M.G.Ramachandran
Padmini
Lalitha
P.S.Veerappa
M.N.Nambhiyar
M.G.Chakrabhani
Music by :
K.V.Mahadevan
Cinematography :
N.S.Mani
P.B.Mani
Edited by :
K.D.George
Production company :
Neela Productions
Distributted by :
Merryland Productions
Release date
26 April 1957
Running time
170 mints
Country
India
Language
Tamil
********************
M.G.Ramachandran as Prince RAJA RAJAN
M.N.Nambhiyar as Udhayachandran
P.S.Veerappa asGeneral Nagavelan
M.G.Chakrapani as Uthselan kavirayar
Friend Ramasami as sargunam
T.N.Sivathanu
C.V.V. Panthulu
N.M.Muthu koothan
R.M.Somasundaram
Jose prakash
Female cast
Padmini as princess Rama
Lalitha as priya mohini
S.D.Subbu lakshmi as queen senbagavalli
G.Sakunthala
S.V.Vasantha
R.Balsubramaniam as king keerthivarman
Producer :
T.V.Sundaram
Production company :
Neela productions
Director :
T.V.Sundaram
Music :
K.V.Mahadevan
Lyrics :
Mahakavi bharathiyar /
Kavi Lakshmanadass / A.Marudakasi / Ku.Sa.Krishnamoorthy /Muthukoothan / Pugazhendhi
Story , Screenplay ,dialogues :
Elangovan
Art Direction :
M.V.Kochappu
Editing:
K.D.George
Choreography :
P.S.Gopalakrishnan / Balaram
Cinematography :
N.S.Mani & P.B.Mani
Stunt :
R.N.Nambhiyar
Dance :
None
Music Composed :
K.V.Mahadevan (3) (4)
playback singers :
Seergazhi Govindarajan , Thiruchi Loganadan , S.C.Krishnan , R.Balasaraswathi Devi , A.P.Komala , P.Leela , Soolamangalam Rajalakshmi ana Vadivambal.
No song singers :
1 - Aadum Azhage Azhagu :
P.Leela / Soolamangalam Rajalakshmi
Pugazhendi 05:06
2 - Aala piranda Rajapaadu
Tiruchi Loganadan /Muthukoothan & vadivaambhal Muthukoothan 01:35
3 - Haiyahoo jingadi jayya
Srinivasan & party
Kavi Lakshmana dass 02:27
4 - Idhayam Thannayye
Seerghazhi govindarajan & A.P.Komala / A.Marudhakasi 03:32
5 - Kalaiyaada Aasai kanave
R.BhalaSarashwathi Devi / A.Marudhakasi 02:19
6 - Kaththinaale Kaariyam Saadhik
S.C.Krishnan / Vadivaambhaal Muthukoothan 02:28
7 - Mahamaayi Anghaala deviye
S.C.Krishnan / Muthukoothan 04:32
8 - Nilavodu Vaanmughil
Seerghaazhi govindarajan / A.P.Komala and Ku.sa.krishnamurthy
9 - Senthamizh Naadennum
Udutha Sarojini & Chores
Mahakavi Bharathiyaar 03:47
10 - Vettaiyaada Vaarum Mannavaa
Tiruchi Loganathan / S.C.Krishnan & Vadivaambhaal Muthu koothan 02:16
11 - Kalaiyaadha Aasai Kanave (pathos)
R.Balasaraswathi Devi / A.Marudhakasi
(Thanks : Makkal Thilagam MGR .
நன்றி : மக்கள் திலகம் எம்ஜிஆர்)
Tipping & editting
Creative by :
MGR in Kaaladi Nizhal
Ka. PALANI
Admin :
"Uzhaikkum Kural"
(Whatsapp Group)
எழுத்தாக்கம் & தொகுப்பு
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி
அட்மீன் :
" உழைக்கும் குரல் " தளம்
உதவி :
ஆர்.ஜி. சுதர்சன்
அட்மீன் :
"ஆண்டவன் mgr குடும்பத்தளம்"
வெளியீடு :
"உழைக்கும் குரல் " மாத இதழ்......... Thanks...
-
26th April 2020, 12:26 PM
#3654
Junior Member
Diamond Hubber
தற்போது " கணவன்" மக்கள் திலகத்தின் அசால்ட்டாக நடிக்கும் துள்ளல் performance, "நான் உயிர் பிழைத்தேன்" பாடல் காட்சிக்கு முன்பாக வந்து ஒரு கலக்கு கலக்குவாரே... சான்சே இல்லை... என்ன மாதிரி ஸ்டைல்?! ரகளை... அப்புறம் பாட்டு scene லும் தலைவர் அட்டகாசம்... தூள் தான் போங்கள்......... Thanks...
-
26th April 2020, 12:27 PM
#3655
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 12:31 PM
#3656
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 12:32 PM
#3657
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 12:32 PM
#3658
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 12:33 PM
#3659
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 12:43 PM
#3660
Junior Member
Diamond Hubber
Bookmarks