-
27th April 2020, 11:30 AM
#3791
Junior Member
Diamond Hubber
Manithaneyam MGR:
Manithaneyam MGR: உண்மை இப்படி இருக்க
திமுக ஆதரவாளர்கள் கருணாநிதி தான் உங்க தலைவருக்கு புரட்சி நடிகர் பட்டத்தையே கொடுத்தார் என பொய்யாக பேசி வருகின்றனர் மேலும்
புரட்சித்தலைவரின் நினைவுநாள் சிறப்பு செய்திகளை சொல்லும் போது News 18 .Puthiya Thalaimurai and. News 7 ஆகிய சேனல்களும் அதையே திரும்ப திரும்ப பல வருடங்களாக சொல்லி வருவது பெரிய கொடுமை.......... Thanks...
-
27th April 2020 11:30 AM
# ADS
Circuit advertisement
-
27th April 2020, 11:41 AM
#3792
Junior Member
Diamond Hubber
"கணவன்", புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதை எழுதியத் திரைப்படம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் முழக்கத்தில் மதுரை எஸ் குமார் ... எம்ஜிஆர் மன்றம்...
Sundarajan MGR: கண்ணியமிக்க
காவியநாயகனின்
கலைத்தென்றல்
கருணையின் வடிவம்
"கணவன்" படம்
கண்டுகளித்தேன்.
காணக்கிடைக்காத
தலைவரின் காட்சி
கதையும் அவர்தானே....👌👍💐....... Thanks...
-
27th April 2020, 11:45 AM
#3793
Junior Member
Diamond Hubber
மதுரை- தங்கம் தியேட்டர் தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்போர் ,அப்படிப்பட்ட தியேட்டரில் தலைவரின் "கணவன்" படம் ரிலீசன்று கூட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்,ஞாபகம் இருக்கிறதா... மதுரை குமார் சார்,அந்தசம்பவத்தன்று நீங்கள் தியேட்டருக்குப் போனீர்களா?!......MKR, Erode... Thanks...
-
27th April 2020, 11:46 AM
#3794
Junior Member
Diamond Hubber
"நினைத்ததை முடிப்பவன்", சேலத்தில் ஜெயா தியேட்டரில் ரிலீஸ் ஆனது,முதல் நாள் அன்று கூட்ட நெரிசலில் நான்கு பேர் உயிரிழந்தனர்... Thanks...
-
27th April 2020, 12:00 PM
#3795
Junior Member
Diamond Hubber
சேலம் -அலங்கார் 5 வாரங்கள் ,ஜெயா 11வாரங்கள் "நினைத்ததை முடிப்பவன்" , அரங்குகள் நிறைந்து வெற்றிகரமாக நடைபெற்று ஒடியது. ஒரே நாளில் 2 அரங்கு திரையிடப்பட்டது.......இது போன்ற நிகழ்வுகள் நம் புரட்சிநடிகரை தவிர வேறு எந்த நடிகருக்கு , நடிகர்களுக்கு நடந்துள்ளதா??????!!!!!......... Thanks...
-
27th April 2020, 12:03 PM
#3796
Junior Member
Diamond Hubber
மறக்கமுடியாத சம்பவம்... நான் திரையரங்கு போகவில்லை... இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலைவர் நிதியுதவி செய்தார். அன்றைய தி.மு.க நிர்வாகிகளை நம்பி அவர்கள் மூலமாகக் கொடுத்தார். அன்றைக்கே தி.மு.க போர்ஜரி நிதியில் பாதியை ஏப்பம் விட்டனர்கள். தலைவர் மதுரை வந்தபோது எதிர்கட்சிகள் பஞ்சாயத்து செய்தனர். மறக்கமுடியுமா?!.........SK... Thanks...
-
27th April 2020, 12:27 PM
#3797
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆாின் தமிழ் உணா்வு எப்படி பட்டது அறிவோமா!.....
ஒ௫சமயம் இதயம் பேசுகிறது அலுவகத்திற்கு தொலைபேசியில் தொடா்பு கொண்டு மணியன் இ௫க்கிறாரா என்று விசாாித்து இ௫க்கிறாா் எம்ஜிஆா் போனை எடுத்த டெலிபோன் ஆப்ரேட்டா் குட் ஆஃபடா் நுான் சாா் நீங்கசாா்?என்று கேட்டி௫க்கிறாா் எம்ஜிஆா்
நான்யா௫ என்று சொல்கிறேன் நீங்க இப்ப என்னவோ சொன்னீங்களே என்ன? என்று கேட்டாா் எம்ஜிஆா்
குட் ஆஃப்டா் நுான் னு சொன்னேன் சாா்
அம்மா நீங்களும் தமிழில் பேசுறீங்க நானும் தமிழிலே பேசுறேன் இதுக்கு நடுவில் ஆங்கிலம் எதற்கு? வணக்கம் என்று தமிழில் சொல்லாமே என்று சொல்லி விட்டு நான் எம். ஜி. ராமச்சந்திரன் பேசுறேன் னு சொல்லும்மா என்று சொல்ல அதைக் கேட்டதும் அந்த ஆபரேட்டா் பெண் தடுமாறி வாா்த்தை களைத் தந்தி அடித்தி௫க்கிறாா் நீ. பதட்டப்படாதே இனிமேல் போன் எடுத்துப் பேசும்போது வணக்கம் என்று சொல்லும்மா என்றாராம் எம் ஜி ஆா் என்னே எம் ஜிஆாின் தமிழ் உணா்வு வாழ்க எம்ஜிஆா் பரவட்டும் எம்ஜிஆாின் தமிழ் உணா்வு
நன்றி: எம் ஜிஆாின் வெற்றி ரகசியம் என்ற நுாலிலி௫ந்தது ......... Thanks...
-
27th April 2020, 12:55 PM
#3798
Junior Member
Diamond Hubber
#எம்ஜிஆர் #விட்ட #குத்து
புரட்சித்தலைவர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்...சாண்டோ சின்னப்ப தேவர் நாள் தவறாமல் சென்று பார்த்து வந்தார்...
ஒரு நாள் மாலை தி.நகர் ராஜா தெருவில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தீஸ்வர் கோயிலில் எம்ஜிஆர் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதங்களுடன் பணமும் எடுத்துக்கொண்டு, வசனகர்த்தா ஆரூர் தாஸையும் அழைத்துக்கொண்டு எம்ஜிஆரைப்பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அறைக்குள் சென்றவுடன் விக்ரஹத்தின் மீது சாற்றப்பட்ட பூச்சரங்களை எம்ஜிஆர் கழுத்தில் போட்டு பிரசாதத்தையும் கொடுத்தார்.பணப்பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தார்.
எம்ஜிஆர் முற்றிலும் குணம் அடையாவிட்டாலும் முக்கால்வாசி உடல் நலம் தேறி, கழுத்துப்பகுதியில் முகவாய்க்குக் கீழே பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பட்டையுடன் இருந்தார். அன்றைக்கு மருத்துவமனை அறைக்குள் இருந்த எம்ஜிஆர் குத்துச்சண்டை-பாக்சிங் வீரனைப்போல தன் இடது காலை முன்னே நீட்டி வைத்து வலது காலைபின்னுக்கு வைத்த நிலையில் நின்றபடி வலது கை விரல்களை மடித்து அந்த 'முஷ்டி'யினால் தேவரண்ணனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத தேவர் "அப்பா முருகா!" என்று கூறி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆருர் தாஸைப் பார்த்து "தாசு! அண்ணன் ஏன் இப்படி என் வயித்திலே குத்து விடுறாருன்னு புரிஞ்சிக்கிட்டியா? "
தாஸ்:--நல்லா புரிஞ்சுக்கிட்டேண்ணே. குண்டடி பட்டாலும் கூட, தன் பலம் தன்னை விட்டு போகலேங்குறதை உங்களுக்கு உணர்த்துறாரு. (எம்.ஜி.ஆரைப் பார்த்து) ஏண்ணே! அப்படித்தானே?
எம்.ஜி.ஆர்:-- அதேதான்...
அண்ணனுக்கு முழுக்குத்து.இதோ உங்களுக்கு(ஆரூர் தாஸுக்கு) ஒரு அரைக்குத்து என்று தன் கையை ஆரூர்தாஸின் வயிற்றை நோக்கி நீட்டினார். உடனே ஆரூர் தாஸ் தன் இரு கைகளையும் வைத்து வயிற்றை மூடிக்கொண்டு...."ஐயோ! அண்ணே! அவரு 'சாண்டோ' தாங்கிக்குவாரு.நான் வெறும் 'போண்டா' புட்டுக்குவேன், வேண்டாம். இதைக்கேட்டு இரு அண்ணன்களும் சிரித்தனர்.
தாஸ்:-- எப்பவுமே எச்சரிக்கை உணர்வோட இருக்குற நீங்க, அன்னிக்கு மட்டும் எப்படிண்ணே அவ்வளவு அலட்சியமா இருந்தீங்க?
எம்ஜிஆர்.:-- எப்பவுமே எச்சரிக்கையா இருந்தா எதுவுமே நடக்காது. எப்ப நாம் கொஞ்சம் கவனக்குறைவா இருக்கிறோமோ அப்பத்தான் ஏதாவது விபரீதம் நடக்கும்...அப்படி ஏற்கனவே நான் நிறைய அனுபவப் பட்டிருக்கேன்...ஆனாலும் நாம் சிலரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையினால் என்னையும் மீறி எது நடந்ததோ அது நடந்துதானே தீரும்...!!!???
அதை யாராலும் தடுக்க முடியாது இல்லியா?...... Thanks...
-
27th April 2020, 12:56 PM
#3799
Junior Member
Diamond Hubber
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்
செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்
பொன்மன தலைவரின் வாழ்வில் அவரின் தத்துவங்கள் தானே வென்றது..... Thanks...
-
27th April 2020, 01:15 PM
#3800
Junior Member
Diamond Hubber
MGR Filmography - Film 50 (1961) Poster
தலைவரின் 50வது படம் பிரமாண்ட சரித்திரபடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சமூக படமாகவும்இல்லாமல் அமைந்ததிரைப்படம் 1959ஆம் வருடம் தாய் மகளுக்குக் கட்டிய தாலி என்றொரு .சராசரி படத்திற்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் அண்ணாதுரை கதையில் எம்ஜியார் நடித்த படம் நல்லவன் வாழ்வான். இந்த முறை அண்ணாதுரை கதையோடு நிறுத்திக் கொள்ள வசனத்தை நா. பாண்டுரங்கன் எழுத, எம்ஜியாரின் அபிமான டைரக்டரான ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். அரசியலில் உச்சிக்குப் போனாலும், திரையுலகில் அண்ணாதுரை மகத்தான வெற்றிகளை ஈட்டவில்லை. டி.ஆர். பாப்பாவின் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தாலும், படம் ஆவரேஜாகத்தான் போனது.
எம்ஜியாரின் வழக்கமான ஜோடிகள் அல்லாமல், பல படங்களில் வாம்ப்பாக நடித்த ராஜசுலோசனா இதில் அவருக்கு ஜோடி சேர்ந்ததும் ரசிக்கப்படாமல் போனதும் ஒரு காரணம்.
இந்தப் படத்தின் விசேஷம்: 'குத்தால அருவியிலே' மற்றும் 'சிரிக்கின்றாய் இன்று சிரிக்கின்றாய்' ஆகிய இரண்டு பாடல்களையும் எழுதிய வாலிக்கு இந்தப் படம்தான் எம்ஜியார் யூனிட்டில் என்ட்ரி என்பதே....... Thanks...
Bookmarks