-
25th June 2020, 10:04 PM
#271
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*பேரரசர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பாகிய /ஒளிபரப்பாகும் விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
22/06/20* - புது யுகம் டிவி - இரவு 7 மணி* - குடும்ப தலைவன்*
* * * * * * * * *பாலிமர் டிவி - இரவு* 11 மணி* - நீரும் நெருப்பும்*
23/06/20* *முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - விவசாயி*
* * * * * * * * சன் லைப் - மாலை 4 மணி* - நல்ல நேரம்*
24/06/20 - வேந்தர் டிவி - காலை 10 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * சன் லைப் - காலை 11* மணி - இதயக்கனி*
* * * * * * * * மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
25/06/20 -புது யுகம் டிவி - இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * மூன் டிவி* - இரவு* 7.30 மணி* - முகராசி*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி - நீதிக்கு பின் பாசம்*
26/06/20- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -குமரிக் கோட்டம்*
* * * * * * * மெகா 24 டிவி* - காலை 8.30 மணி -தாயை காத்த தனயன்*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th June 2020 10:04 PM
# ADS
Circuit advertisement
-
30th June 2020, 11:54 AM
#272
Junior Member
Diamond Hubber
1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று..
பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனர்.
சிறிது நேரத்தில் tmx 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.
காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.
காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..
பாதுகாவலர்கள் புடைசூழ விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.
"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"
-என்று மாவட்ட ஆட்சியர்களிடமும், உயர் அலுவலர்களிடமும், ஆலோசனை கேட்கிறார்.
அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.
காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..
"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.
இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.
அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.
'கூறியவன் ஒரு எளியவன்தானே' என்று நினைக்காமல், "அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள்" என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.
"கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.
என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.
என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.
என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.
உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"
-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.
உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்..
ஒரு எளிய குடிமகன் வைத்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது............
-
30th June 2020, 11:56 AM
#273
Junior Member
Diamond Hubber
30.6.1977
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் ,
************************************************** *****************************************
43 ஆண்டுகள் முன்பு இதே நாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று சென்னை அண்ணா சாலையில் 20 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தினம்
1954ல் மலைக்கள்ளனில் திமுக அரசியல் கொள்கைகளை பாடல்கள் மற்றும் காட்சிகள் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்தார் .1956ல் மதுரை வீரனில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய காட்சிகளை மறக்க முடியாது .
1957ல் வெளிவந்த சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆர் பெயர் உதய சூரியன் .
1958ல் வெளிவந்த நாடோடிமன்னன் - 100 சதவீத திமுகவின் லட்சிய காவியம்
1959- 1977 வரை வெளிவந்த அவருடைய எல்லா படங்களிலும் கட்சியின் சின்னம் ,கொடி
கொள்கை பாடல்கள் இடம் பெற்று இருந்தது .
1967ல் திமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் .
1971 ல் மீண்டும் திமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் .
1977ல் அதிமுகவின் தலைவராக தமிழக முதல்வராக பதவி ஏற்று உலக அரசியல் அரங்கில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தார் .
கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் கொண்டாடும் இனிய திரு நாள் இன்று ...........
-
30th June 2020, 11:57 AM
#274
Junior Member
Diamond Hubber
#நிழலும் #நிஜமும்
#வாத்தியார்
தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். #சிக்கலான, #சவாலான #காரியம் #இது. #அதை #நிறைவேற்றுவதற்கு #அவர் #படாதபாடுபட #வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
உலகில் எம்ஜிஆரைப் போல ஈடுஇணையற்ற வெற்றிகளையும், மக்களின் இதயசிம்மாசனங்களில் நிரந்தமாக அமர்ந்திருப்பதையும் இதுவரை யாரும் பெற்றதுமில்லை. இனி பெறப்போவதுமில்லை. இது சத்தியம் ...
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.
#ஏழைப்பங்காளனாக #மக்கள் #மனதில் #நிரந்தரமாகப் #பதிந்தேவிட்டார்.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
"காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ"
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
"நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை"
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
#தனது #கதாபாத்திரங்களின் #அத்துணை #தன்மைகளையும் #தன் #நிஜவாழ்விலும் #சிறிதும் #பிசகாது #கடைபிடித்ததால் #இன்றும் #இறைவனாக #வணங்கப்படுகிறார்.
-
30th June 2020, 09:03 PM
#275
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
27/06/20 -சன் லைப் - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * மெகா டிவி* - மதியம் 12 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -இரவு 7.30 மணி -அடிமைப்பெண்*
* * * * * * பூட்டோ டிவி - இரவு 7.30 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * *ஷாலினி டிவி - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
* * * * * மெகா 24 டிவி - இரவு 9 மணி* - நீதிக்கு பின் பாசம்*
28/06/20-பூட்டோ டிவி - பிற்பகல் 2 மணி* - நம் நாடு*
* * * * * * *- மெகா 24* டிவி - பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * * *முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - கொடுத்து வைத்தவள்*
29/06/20 -சன்* லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * புது யுகம் டிவி - இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
30/06/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - விக்கிரமாதித்தன்*
* * * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * சன் லைப்* - மாலை 4 மணி* - எங்கள் தங்கம்*
-
1st July 2020, 10:22 AM
#276
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரி.,ன் சத்துணவு தொடங்கப்பட்ட பொன்நாள இன்று ...01-07-1982...
ஐக்கிய நாடுகள் சபை பாராட்டிய ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர் .,
சீருடையுடன் ஆண்டான் அடிமை செருப்பை கையில் துக்கி நடத்த வீதிகளில் செருப்பு அணிந்து வீரநடை போட்டு குழந்தைகள் பள்ளி சென்று பசி ஆற உண்டு நல்ல பாடம் படித்து வாழ்வு பெற்ற நாள் இன்று...
எம்ஜிஆர் தமிழகத்திற்க்கு உலகதர அண்ணா பல்கலை கழகம் முதல் எட்டு அரசு பல்கலை கழகம் தந்து தமிழகத்ததை இந்தியாவிலே முதல் மாநிலமாக மாற்றினார்...
தமிழகத்தின் கல்வி ஆண்கடவுள் எம்ஜிஆர்
எம்ஜிஆர் புகழ் வளர்க...வாழ்க ...
-
1st July 2020, 10:24 AM
#277
Junior Member
Diamond Hubber
காட்சிக்கு எளியவனாய் இருந்து இன்சொல்லால் இனிமையாகப் பேசுவது :
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைவிட எளிமையான ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா ? திரைப்படத்துறையில் முடிசூடா மன்னன். அரசியலில் முடிசூடிய முதல்வர். ஆனாலும் காட்சிக்கு எளியவர். மிகவும் ஆடம்பரமான உடைகளை படப்பிடிப்புகளில் மட்டுமே அணியும் அவர், விரும்புவது வெள்ளை நிற வேட்டிகளும், வெள்ளை நிற முழுக்கை சட்டை களையும் தான் 120ம் எண்ணுள்ள அந்த வேட்டியை மல்லிகை பூ வேட்டி என்பார்கள். இடுப்பில் இருப்பதே தெரியாமல் பூ போன்று இருக்குமாம். இந்த ரக வேட்டிகள் ஸ்பெஷலாக 48 குஞ்சம் வைத்து நெய்திருப்பார்கள்.
அவரைப் பார்த்து அந்த நாளில் அரசியல்வாதிகள் பலர் இந்த வேட்டிகளை அணிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த ரக வேட்டிகள் கடைகளில் கிடைப்பதில்லை. 120ம் நம்பர் மல்லிகை பூ வேட்டி புரட்சித் தலைவரோடு மறைந்து போய்விட்டது என்று சொல்கிறார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானாலும் எளிமையாக சந்தித்துப் பேசலாம். சென்னையில் அவர் இருக்கும்போது காலையில் ராமாவரம் தோட்டத்தில் அடையா நெடுங்கதவு தாண்டி பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நின்றால் போதும். திருக்கோயிலின் தலை வாசல் தாண்டி வெள்ளை உடையில் ரோஜா வண்ண தேவனாய் எதிரில் காட்சி கொடுப்பார். அவரிடம் குறைகளைச் சொல்லி முறையிடலாம்.
தேவைகளை அழுது கேட்கலாம். வேண்டியவர் - வேண்டாதவர் ஏழை, பணக்காரர், படித்தவர் ,படிக்காதவர் என்னும் பேதம் பார்க்காத மனம் அது . தெய்வம் எப்படி தனக்கு பத்து பைசா கற்பூரம் கொளுத்தும் பக்தனையும் 10 லட்சம் செலவு செய்து தங்க கிரீடமும் கவசமும் அணிவிக்கும் பக்தனை யும் ஒன்றாய் நினைத்து பக்திக்கு ஏற்ப அருளுகிறதோ அதைப்போலவே தன்னை நாடி வருபவர்களின் தேவையறிந்து வாரிக் கொடுக்கும் வள்ளல் அவர். காட்சிக்கு எளியவர் எம்ஜிஆர் என்பதை உலகமே அறியும்.
இன்சொல்லைத் தவிர வேறு பேசி அறியாதவர் புரட்சித் தலைவர். நிஜவாழ்வில் மட்டுமல்ல திரைப்படத்தில் கூட கடுஞ்சொல் சொல்லி யாரும் கேட்டிருக்க முடியாது. கடுஞ்சொல் பேசியிருந்தால் இத்தனை கோடி மக்களை அவர் மீது அன்பாய் இருக்க கட்டிப்போட்டு இருக்க முடியாது. எப்போதும் சிரித்த முகமும் அன்பான இன்சொல்லுமே அவருடைய அடையாளம் என்று சொல்லலாம். அரசியல் ரீதியாக அவரை குற்றம் குறை சொல்லி எதிர்ப்பவர்கள் கூட அவரை அன்பு மனதை மலர்ந்து சிரிக்கும் ரோஜா பூ முகத்தை ... இனிமையே நிறைந்த பேச்சை குற்றம் சொல்லவே மாட்டார்கள்.
மேடையில் அவர் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஒரே ஒரு சொல் சொன்ன மாத்திரத்தில் மக்கள் தரும் கையொலியும் விசில் சத்தமும் நிற்க குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும் . துப்பாக்கியால் சுடப்பட்டு பழைய கம்பீரக் குரலை அவர் இழந்த போதும் மக்கள் அவருடைய புது குரலையும் ரசித்தார்கள். ஏனென்றால் சத்தம் மாறினாலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இன்சொல் மாறவில்லையே. அவரது பாசத்தின் வெளிப்பாடு தடங்கலாகவில்லையே... அவருடைய ஆதரவு எப்போதும் தடைபடவில்லையே ... அந்தக் குரல் மாற்றத்திற்குக் பிறகுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தங்கத் தமிழ்நாட்டின் முதல்வரானார். மக்கள் அவரை தெய்வத்துக்கு இணையாக கொண்டாடினார்கள் ஏனென்றால் அவருடைய இன்சொல்லும் காட்சிக்கு எளியவராக இருந்து அவர் செயல்பட்டதும்தான் .
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அவர் திரும்பியபோது பேசமுடியாத நிலையிலும் பொதுக்கூட்டத்திற்கு சென்றார். மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் பேச முயற்சித்தவரை மக்களே தடுத்த நிகழ்வுகள் உண்டு . #உங்களைப் #பார்த்ததே #போதும் #தலைவா ... நீங்கள் பேசவேண்டாம் என்று மக்கள் கூறியதெல்லாம் வரலாறு.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு எந்தவிதமான பயமோ தள்ளி நிற்க வேண்டும் என்னும் தயக்கமோ கிடையாது. ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய மகன், அவர்களுடன் பிறந்த அண்ணன் , நன்மை மட்டுமே செய்யும் தெய்வம் , அறிவு போதித்த வாத்தியார் , வீரம் தந்த தந்தை , உணவிட்ட அன்னை ...
எப்படி ஒரு நாட்டின் மன்னன் தன் குடிமக்களுக்கு எல்லாமுமாக இருந்தானோ. அதைப்போலவே மக்கள் தலைவர். எம்.ஜி.ஆரும் தமிழக மக்களுக்கு எல்லாமுமாகவே இருந்தார்.
கொடை வள்ளல் எம்ஜி.ஆர் புகழ் வாழ்க...
-
1st July 2020, 10:26 AM
#278
Junior Member
Diamond Hubber
திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்கின்றன. உதாரணம்
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’
சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.
’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’
ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட
‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.
ராமண்ணாவின் r.r.பிக்சர்ஸ்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் பறக்கும் பாவை.
சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.
தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.
பெரும் பட நிறுவனமான ஜெமினி தயாரித்த முதல் வண்ணப் படமும்
'ஒளி விளக்கு '
இதில் என்ன ஒரு விசேஷம் எனில், எல்லா படங்களிலும் கதாநாயகன் #மக்கள் #திலகம் #எம்ஜிஆர்.
இதில் எம் ஜி ஆர் அவர்களின் முதல் படத்தின் கதையை எழுதியவர் s. S.வாசன் . வாசன் அவர்களின் படத்தயாரிப்பு நிறுவனமான ஜெமினியின் 100வது படம் ஒளி விளக்கு.
மது, புகைப்பழக்கம் இல்லாத புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தப் படத்தில் மதுவின் தீமையை உணர்த்த ஒரு பாடலில் மது அருந்தியது போல நடித்திருப்பார்.
இந்த பட குழுவுடன் நடந்த கலந்துரையாடலில் எம்ஜிஆர்
"ஒரு குடிகாரனாக நான் எப்படி நடிப்பது? மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் "
என்று மறுத்து விட்டார். ஆனால் கதைப்படி (இது தர்மேந்திரா நடித்த ஒரு ஹிந்தி பட தழுவல், ) மாற்ற முடியாத சூழ்நிலை. அப்போது வாலி சொன்ன யோசனை தான் இந்த பாடலுக்கு திருப்புமுனை.
குடிப்பது போன்ற எம்ஜிஆரை பார்த்து இன்னும் நான்கு எம்ஜிஆர்கள் வந்து புத்திமதி சொல்வது போல படம் எடுத்தால் ஒத்துக்கொள்வார்கள் என்று
" இது சாத்தியமா? "
என்று எம்ஜிஆர் கேட்க அந்த காலத்தில் வந்த ஆர்யமாலா படத்தில் பி.யூ. சின்னப்பா ஐந்து இசை கலைஞர்களாக ஒரே காட்சியில் வருவதை சுட்டி காட்டி அதை எடிட்டிங் செய்த அதே டெக்னீஷியனை வர வழைத்து அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள் என்று வாலி ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி உள்ளார்.
ஐந்து தோற்றங்களில் அவர் தோன்றிய இந்தப் பாடல் டெக்னாலஜி வளராத
1968 களில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தது. .இந்த பாடல் காட்சியில் காலை முதல் இரவு வரை சிரமப்பட்டு நடித்த எம் ஜி ஆர் களைப்பாக இருந்ததால்,
"ரஷ் பார்த்து சொல்லுங்கள், குறை இருந்தால் வந்து நடித்து கொடுக்கிறேன்"
என்று சொல்லி வீடு திரும்பி விட்டாராம்.
இரவு ரஷ் பார்ந்த படக்குழுவினர் காட்சி நன்றாக வந்துள்ளதாக எம் ஜி ஆர் வீட்டுக்கு போன் செய்து சொன்ன போது, அங்கேயே வீட்டுக்கு செல்லாமல் பின் வரிசையில் அமர்ந்திருந்தாராம் எம் ஜி ஆர்.
அவ்வளவு ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்திருந்தார் எம் ஜி ஆர். இப்படத்தில் தான் நடிகர் வி.எஸ்.ராகவன் எம் ஜி ஆருடன் முதன் முதல் இணைந்து நடித்திருந்தார்.
ஒளி விளக்கு படத்திலிருந்து டி.எம்.செளந்திரராஜன் குரலில், விஸ்வநாதன் இசை அமைக்க பாடலை எழுதியவர் வாலி.
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா
இல்லை, நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்.
மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்...........
-
1st July 2020, 05:25 PM
#279
Junior Member
Diamond Hubber
#எங்க #வீட்டுப்பிள்ளை...
நாம் போற்றுபவர்களை, வேறு யாராவது புகழ்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்...!!!
அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே!
அதிலும் நம்ம வாத்தியாரை மற்றவர்கள் புகழ்ந்தால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையேது!!!
இந்தக் காட்சியைப் பாருங்கள்.
பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் ... பூதமானது நியூஸ்பேப்பரில் நாகேஷ் & ஜெய்சங்கருக்கு திருவிளையாடல் படத்தைக் காண்பிக்கும்.
பிறகு நாகேஷ், 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தைக் காண்பிக்க சொல்வார்.
அதில் 'நான் ஆணையிட்டால்' பாடல் ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் போது அந்த மூவரின் 'Expressions' ரொம்ப பிரமாதமாயிருக்கும். அதில் நாகேஷோட ரியாக்ஷன் சூப்பராயிருக்கும்.
அந்த பூதம் கடைசியாகக் கேட்கும்.....
"இவ்வளவு வீரமா நடிக்கிறாரே! யாரிவர்?"
அதற்கு நாகேஷ்,
'இவர் தான் மக்கள்திலகம் எம்ஜிஆர்' னு ரொம்ப சந்தோஷமா சொல்வார்.
இந்த ஒரு சீனுக்காகவே இந்தப் படத்தை மிகவும் பிடிக்கும்....
-
1st July 2020, 05:25 PM
#280
Junior Member
Diamond Hubber
#அறிவுடைமை :
அறிவென்பது ஏட்டுக் கல்விக்கு அப்பாற்பட்டது. உலக வாழ்வியலின் வெளிப்பாடு என்று போற்றப்படுவது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அறிவுடைமை எல்லோராலும் பாராட்டப்பட்ட விஷயம். அறிவுடைமை என்பதே சமயோஜிதம் என்பதுதான். புரட்சித்தலைவரின் சமயோஜிதம் மிகவும் பிரசித்தமானது. இல்லையென்றால் அவரால் கலைத்துறை , அரசியல் , பொது வாழ்வு என்ற மூன்றிலும் சரியான முறையில் "பேலன்ஸ் " செய்திருக்க முடியாது.
கலைத்துறையில் பல இடங்களில் பல நேரங்களில் அவருடைய அறிவுடைமை அதாவது சமயோஜித புத்தி வெளிப்பட்டு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியது. எங்க வீட்டு பிள்ளை திரைக்காவியத்தின் வெள்ளி விழா தமிழ் நாடெங்கும் நடைபெற்றது. அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தன்னோடு நடித்த நடிக நடிகை மற்றும் பலருடன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். திரைப்படத் திரையரங்குகளில் மக்கள் முன்னால் தோன்றினார். ஊரெல்லாம் திருவிழாக்கோலம் தான் குதூகலம். ரசிகர்களின் கும்மாளம்தான். அப்போது ஒரு மேடையில் நடிகர்கள் பேசி முடித்ததும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் பேசினார். மைக் செட் ஏற்பாடு செய்திருந்தவர் இன்னொரு மைக்கையும் அவரருகில் வைத்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேச ஆரம்பித்தபோது நம்பியார் குறிப்பிட்டு, எங்களுக்கெல்லாம் ஒருமைக் உனக்கு மட்டும் ரெண்டா ? என்று கேட்டார் . உடனே ஒரு வினாடி கூட தாமதிக்காமல் எம்ஜிஆர் சொன்னார், படத்தில் நான் ரெட்டை வேடம் போட்டு இருக்கேன் இல்லே ? அதான் ரெண்டு மைக்.
அதைக்கேட்டு நம்பியார் மட்டுமில்லை. அவையோரும் வியந்து போனார்கள். அடுத்த கணம் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரை உலக பேரதிசயங்கள் சொல்லிமாளாது.
அவரது அரசியல் சமயோஜிதம் பல பிரச்சனைகளைத் தீர்த்து விண் கலவரங்கள் நடக்காமல் தடுத்திருக்கிறது. துணிவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவருடைய அறிவுடமையை வெளிக்காட்டும். அவர் முதல்வராக இருந்தபோது ' மதுரை பல்கலைக்கழகம் ' என்ற பெயரை மாற்றிவிட்டு ' காமராஜர் பல்கலைக்கழகம் ' என்று பெயர் வைக்க வேண்டும். தாங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என்று ஒரு கூட்டம் சொன்னது. அவர்களுக்கு எதிராக மற்றொரு கூட்டம் பெயரை ' மதுரை பல்கலைக்கழகம் ' என்றே இருக்கவேண்டும் மாற்றினால் போராட்டம் தான் என்று பயம் காட்டியது.
பெயரை மாற்றினாலும் எதிர்ப்பு அதே பெயரை வைத்தாலும் எதிர்ப்பு. எம்.ஜி.ஆரிடமா அவர்களின் போராட்ட பயம் காட்டல்கள் எடுபடும் ? உடனே " மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் " என்று பெயரை அறிவித்தார் அதன்பிறகு எந்த சத்தமும் அங்கே இல்லை. அவருடைய ராஜதந்திர நடவடிக்கையை நாட்டு மக்களும் நடுநிலையாளர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
தான் முதல்வராக பதவியேற்றபோது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு அற்புதமான அறிவுடமை காரியத்தை செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் பதவியேற்க மாடமாளிகைகளும், பெரிய இடங்களும் தயாராக இருந்தன. ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ தன் பதவியேற்பு வைபவம் மக்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகில் நடைபெற தான் விரும்புவதாகவும் மக்களை அங்கே வரும்படியும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வுகளை செய்தித்தாள்களில் புகைப்படங்களில் மட்டும் பார்த்திருந்த மக்கள் அதை நேரிலேயே கண்ணெதிரில் கண்டு களித்தார்கள். இந்த சமயோஜிதம் எந்த முதல்வருக்கும் வந்ததில்லை. 1977 - ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி பதவியேற்பு நடைபெற்றது. புரட்சித் தலைவருக்கு மக்களே குடும்பம் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்தது.
பொது வாழ்வில் அவர் சந்தித்த பல இக்கட்டான நேரங்களில் அவருடைய அறிவுடமையால் வென்றிருக்கிறார். தேர்தல் காலங்களில் அவர் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்காக வெகு தூரம் பயணப்பட வேண்டியிருக்கும். பலதரப்பட்ட மக்களை சந்திக்க நேரும். அப்போதெல்லாம் திமுகவில் எம்ஜிஆர் தான் பிரச்சாரத்திற்கு அதிகம் போவார். தன்னுடைய தொழிலையும் மறந்து கட்சிப் பணிக்காக அவர் ஓடோடியும் செல்வார். அந்த நேரங்களில் அவரை கொலை செய்யவும் அயோக்கியர்கள் கூட்டம் ஒன்று சுற்றி வரும். புரட்சித் தலைவரை சுற்றி பாதுகாப்புக்காக உதவியாளர்கள் இருந்தாலும் அவர் மிகவும் கண்காணிப்பாக இருப்பார். அவருக்கு மாலைகள் அணிவிக்க வருபவர்களை அவர் கவனிப்பது வழக்கம். தன்னுடைய ரசிகர்களையும் பொதுமக்களையும் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார். தொல்லைத் கொடுக்க வருபவர்களை மாலை போட அவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் அந்த மாலைகளில் பூக்களுக்கு நடுவே கூரான புதுபிளேடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். அதை கழுத்தில் போட்டால் ஒரே வினாடியில் பிளேடுகள் உடலை காயமாக்கிவிடும். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை இனம் கண்டு தள்ளிவிட்டு விடுவார். அதைப்போலவே நடக்கும் பாதையில் கண்ணாடித் துண்டுகள் முட்கள் என்று போட்டு வைத்திருப்பார்கள். காலில் அவர் போட்டிருக்கும் ' கட் ஷூ ' அவற்றிலிருந்து அவரைக் காக்கும்.
பொது வாழ்வில் அவருடைய மனத்தூய்மையை பலப்பல நல்லவர்களை இழுத்தது. இன்றும்கூட மாற்றுக் கட்சியினர் கூட புரட்சித் தலைவரைப் பற்றி குற்றமாக எதையும் சொல்ல முடிவதில்லை பொது இடங்களில் சுலபமாக மக்கள் கூட்டத்தில் போகும் மன உறுதியும் அதற்கான கண்காணிப்பு கவனிப்பும் நிறைய இருந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான். அதையும் அறிவுடைமையோடு செய்தவரும் அவர்தான்.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...
Bookmarks