-
12th July 2020, 08:29 PM
#301
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
08/07/20* சன் லைப் - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * * ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி - பறக்கும் பாவை*
09/07/20 - வேந்தர் டிவி - காலை 10* மணி - வேட்டைக்காரன்*
* * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - தேர் திருவிழா*
* * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - காலிபாபாவும்* 40* திருடர்களும்*
* * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாய்க்கு தலைமகன்*
* * * * முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - மருத நாட்டு இளவரசி*
10/07/20 - சன்* லைப்- காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - அரச கட்டளை*
* * * * * எம்.எம்.டிவி* - இரவு 8 மணி - குடியிருந்த கோயில்*
11/07/20- சன் லைப் - காலை 11 மணி* - ஆசைமுகம்*
* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * *எம்.எம்..டிவி - பிற்பகல் 2 மணி - மாட்டுக்கார வேலன்*
12/07/20-தமிழ் மீடியா டிவி - காலை 9 மணி - தர்மம் தலைகாக்கும்*
* * * * * * * * -வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி /இரவு* 10.30 மணி**அவசர போலீஸ் 100
* * * * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
புதுயுகம் டிவி*- இரவு 10 மணி - காதல் வாகனம்*
Last edited by puratchi nadigar mgr; 13th July 2020 at 06:13 PM.
-
12th July 2020 08:29 PM
# ADS
Circuit advertisement
-
12th July 2020, 11:11 PM
#302
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின் டிவியில்* 24/06/20 அன்று**திரு.துரை பாரதி*சொன்ன*செய்திகள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் சகாப்தம், சாதனை, சரித்திரம் எட்டு திக்கிலும் வெற்றிகரமாக* எதிரொலியை உருவாக்கி வருகிறது . எங்கே, எந்த பக்கம் பார்த்தாலும், புன்முறுவலோடு, எம்.ஜி.ஆரின் சகாப்த செய்திகளை பகிர்ந்து கொள்கிற ஒரு நேசம் பிறந்திருக்கிறது .அந்த கொடை வள்ளலின் ஈகை தன்மைக்கு வெளிப்பாடாகத்தான் இன்றைக்கு, இத்தனை தூரம் இவ்வளவு மக்களிடையே, முகம் தெரியாத பலர் , உருகி, உருகி, தொலைபேசியில் பேசும்போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது .அந்த சாதனையாளரின் சரித்திர பக்கங்கள் சிலவற்றை இன்று புரட்டுவோம் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பாக ,நடை, உடை, பாவனை போன்றவற்றில்*எப்படியெல்லாம் மாற்றங்கள் கொண்டு வருவார் என்பது குறித்து எனது அன்பு நண்பர், என் வகுப்பு தோழர்* திரு.நெல்லை வசந்தன்,* விலாவாரியாக பேசுவார் .ஏன் இந்த படங்களில் இந்த வேடம் ஏற்றார் , அந்த படங்களில் முக பாவனைகளை மாற்றினார் .என்று . இரட்டை வேடங்களில் இரண்டு விதமாக தோன்றுவது மட்டுமல்ல .இரண்டு வேடங்களிலும்* எப்படி**உணர்ச்சி ,முக பாவங்கள் காட்டுவது ,எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பல உதாரணங்கள் காட்டுவார் .* எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் இந்தியில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்பதன் தழுவல் .இந்தியில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார் .படத்தில் வில்லனை கதாநாயகன் சவுக்கால் அடிக்கும் காட்சியானது இந்தியில் திலீப்குமார் காட்டிய உணர்ச்சிகள், நடிப்பில் முக பாவனைகள், வேகம், சுறுசுறுப்பு, லாவகம்**அனைத்தையும் பன்மடங்கு* வித்தியாசமாக , மிக சிறப்பாக எம்.ஜி.ஆர். எங்க வீட்டு பிள்ளையில் காட்டியிருப்பார் . நம்பியார் , எம்.ஜி.ஆரை ஆரம்பத்தில் சவுக்கால் அடிக்கும் காட்சியில் நம்பியாரை தீட்டாத, வசை பாடாத ரசிகர்களே இல்லை .ஆனால், எம்.ஜி.ஆர். நம்பியாரை அடிக்கும்போது, அரங்கத்தில் ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினார்கள் . திரை அரங்குகள் அதிர்ந்தன . எங்க வீட்டு பிள்ளை வெளியான பிறகு பல இடங்களில் நம்பியாரை வழி மறித்து, எங்கள் அண்ணனை, எப்படி அடிக்கலாம் என்று கேள்வி கேட்டு துளைத்துவிட்டனர் ரசிகர்கள் .அதற்கு சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்துவிடுவார் நம்பியார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் .*
மன்னர்கள் அந்த காலத்தில் , புலவர்கள், கவிஞர்களை ,தங்களை பாராட்டி பாடல் எழுதிவைத்து,மகிழ்ந்து பரிசளித்தார்கள். ஆனால் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு, அவர் சொல்லாமலேயே, போற்றி* பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம் .உண்டு . அவரை போற்றி புகழ்ந்து, காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ , வேதனை தீர்த்தவன் , விழிகளில் நிறைந்தவன், வெற்றி திருமகன் நீ என்றும், என்னை பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ,ஒரு குற்றமில்லாத மனிதன், அவன் கோயில் இல்லாத இறைவன் என்றும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ,அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்* *என்று பல பாடல்களை கவிஞர்கள் போட்டி போட்டு எழுதினார்கள் . இன்னும் ஏராளமான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம் .
எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஒரு தொலை நோக்கு பார்வை எப்போதும் உண்டு . அதனால்தான் 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தை ,இடைவேளைக்கு பிறகு,பரீட்சார்த்தமாக* வண்ணத்தில் , கோவா கலரில் உருவாக்கினார் .1972ல் திரையுலகம் பற்றி ஒரு பேட்டி அளிக்கும்போது , காலப்போக்கில்* தொலைகாட்சி கருவி என்று ஒன்று எதிர்காலத்தில் உருவாகும் இதன் வருகை ,சினிமா உலகை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று சொன்னார் .நம் நாடு மட்டுமல்ல, இன்று உலகமே கொரோனா நோய் பாதிப்பால் தலைகீழாக புரண்டு கிடக்கிறது . பொது இடங்களில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் . உலகம் முழுவதும், மால்கள், திரை அரங்குகள், பல மாதங்களாக*மூடப்பட்டுள்ளன . படப்பிடிப்புகள் நடைபெறவில்லை . இந்த சூழலில் அரங்குகள் நாளடைவில் திறக்கப்பட்டாலும், மக்கள் முன்பு போல்*எளிதாக வருகை தரமுடியுமா, சினிமா உலகம் புத்துயிர் பெறுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி. காலம்தான் இவற்றிற்கு பதில் சொல்ல வேண்டும் .இனிமேல் ஓ.டி.பி.யில்தான் படம் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை .இதை 1972லேயே* ஒரு தீர்க்கதரிசியாக சிந்தித்து சொன்னவர் எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1959ல் நாடகத்தில் நடிக்கும்போது, நடிகர் குண்டுமணியை தூக்கும்போது கை நழுவி அவரது காலிலேயே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து குணமானார் .அப்போது அவரது சகாப்தம் முடிந்தது. இனி எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது . இந்த சரிவில் இருந்து எம்.ஜி.ஆர். மீண்டார் .1967ல்*எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டதும் , எம்.ஜி.ஆர். கதை முடிந்துவிட்டது. இனி,படங்களில் நடிப்பதோ, பழையபடி பேசுவதோ முடியாத காரியம் என்று* அவரது சரிவை எதிர்பார்த்தவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் .* இந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு, வெகுண்டு எழுந்தார் எம்.ஜி.ஆர். குரல் மட்டும் சற்று பாதிப்பு அடைந்தது .பின்னணி குரல் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்கள் கருத்தை ஏற்காமல் ,சொந்த குரலில் பேசுவேன், நடிப்பேன், மக்கள் விரும்பாவிட்டால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று பேசினார் . பாதிப்படைந்த குரலை வைத்து ,படங்களில் நடித்து இதிகாசம் படைத்தார் . பல சாதனை படங்களை உருவாக்கினார் .வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் . அவரது உயர்வை கண்டு எதிரிகள் ஏமாந்து போனார்கள் .**
1984ல்* மீண்டும் உயிர் போராட்டம் . மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று, வெற்றிகரமாக மீண்டும் முதல்வராக திரும்பினார் .எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன . எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று .தி.மு.க. தலைவர் கருணாநிதி,, எம்.ஜி.ஆர்* எனது 40 ஆண்டுகால நண்பர் . ஒருவேளை எம்.ஜி.ஆர். உயிருடன் திரும்பி வந்தால் அவர் முதல்வர் பதவியில் அமரட்டும் . அதுவரையில் நான் முதல்வராக இருக்கிறேன்* எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார் . அ .தி.மு.க.வினரும், அமைச்சர்களும் இணைந்து எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பது, உணவருந்துவது , முக்கிய நபர்களை சந்திப்பது , மருத்துவர்களுடன் சில வார்த்தைகள் பேசுவது போன்ற வீடியோக்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்கள்* காணும் வகையில் ஏற்பாடு செய்தார்கள் .அதில் வெற்றி கண்டார்கள் . கருணாநிதியின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது .அமெரிக்காவில் இருந்து 1985* பிப்ரவரி மாதம் எம்.ஜி.ஆர். திரும்பியபோது,*பரங்கிமலை ராணுவ மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெரும் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .விமான நிலையத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆரின் கார் மேடை அருகில் வந்து நிற்பது போலவும் , சக்கர நாற்காலியில் அவரை மேடைக்கு அழைத்து வருவது போல ஏற்பாடுகள் தயார் .ஆனால் மேடை அருகில் காரில் இருந்து இறங்கி, மேடைக்கு நடந்து சென்று ,லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கையசைத்து ,நான்கு புறமும் இருகரம் கூப்பி தனது வணக்கத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார் .அதைக் கண்ட மக்கள் எழுப்பிய குரல், கைதட்டல்கள், விசில் சத்தம் விண்ணை பிளந்தவாறு இருந்தது .முப்பிறவி கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள் .
எம்.ஜி.ஆர். தங்க பஸ்பம் சாப்பிடுவதாக சிலர் பிரச்சாரம் செய்ததுண்டு. பொது கூட்டங்களில் எதிர் கட்சியினர் பேசியதுண்டு . அவர் ஆசிரியராக இருந்த நடிகன் குரல் பத்திரிகையில் கூட கேள்விகள் எழுப்பியதுண்டு .* அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர். நான் சாப்பிடுவதாக பலர் சொல்வதுண்டு . ஆனால் அரசர்கள் காலத்தில் இந்த நடைமுறை இருந்ததாக பேசப்பட்டது அது ஒரு பக்குவப்பட்ட ,நல்ல தேர்ந்த சித்தர்களுடைய ஆலோசனைப்படி ஒரு குண்டூசி* நுனி அளவுதான் சாப்பிட முடியும் .அப்போதுதான் உயிர் வாழ முடியும் அது ரத்தத்தில் கலந்து உடல் நிறம் கூடும்* அந்த அள்வு தவறி கொஞ்சம் அதிகமானால்* கூட**உயிர் போய்விடும் அபாயம் உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது . இப்படி இருக்கும்போது எதற்கு இந்த விஷ பரீட்சையில் நான் இறங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பதில் அளித்திருக்கிறார் .**
1972ல் எம்.ஜி.ஆர். மன்ற சிறப்பு மாநாடு ஒன்றை சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்திருந்தார் . அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது .அனால் கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை .அதற்கு சில வாரங்களுக்கு பின்னர் எம்.ஜி.ஆர். தி.மு.க. கட்சியில் பொருளாளராக இருந்ததால் அனைவரையும் கணக்கு கேட்பேன், கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது* என்று தனது நியாய கோரிக்கைகளை முதன் முதலாக திருக்கழுக்குன்றம் பொது கூட்டத்தில் மக்கள் முன் வைத்து பேசினார் .தி.மு.க.கட்சியின் பொதுக்குழு கூடி எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து நீக்கம்*செய்கின்றனர் . தொண்டர்கள் பேராதரவு, சில முக்கிய நபர்களின் ஆலோசனைப்படி அண்ணா தி.மு.க.வை அக்டொபர்* 17ல் எம்.ஜி.ஆர். துவக்குகிறார் . 29ந்தேதி சென்னை கடற்கரையில் நடைபெறும் மாபெரும் பொது கூட்டத்தில் புரட்சி நடிகர் இன்று முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று*அழைக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி மேடையில் அறிவித்தார் . திரையுலகில் புரட்சி நடிகராக உதயமாகி சாதனைகள் படைத்த எம்.ஜி.ஆர். அரசியல் உலகிலும் பல புரட்சிகள், சாதனைகள் படைத்து*மறைந்தும் மறையாமல் புரட்சி தலைவராக மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
2.எம்.ஜி.ஆர். பண்டரிபாய்* உரையாடல் - எங்க வீட்டு பிள்ளை*
3.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -வேட்டைக்காரன்*
4.கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - நாடோடி மன்னன்*
5.கட்டித்தங்கம் வெட்டியெடுத்து -தாயை காத்த தனயன்*
6. மெல்லப்போ மெல்லப்போ* - காவல்காரன்*
7.கடவுள் இருக்கின்றார்* - ஆனந்த ஜோதி*
8.கட்டண கட்டழகு கண்ணா - குடும்ப தலைவன்*
9.எம்.ஜி.ஆர். அசோகன், திருப்பதிசாமி* உரையாடல் - நம் நாடு*
10.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து - நேற்று இன்று நாளை*
-
14th July 2020, 08:58 PM
#303
Junior Member
Platinum Hubber
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில்*வின் டிவியில்*25/06/20 அன்று திரு.துரை பாரதி*சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வீடு ஜப்தியாக போகிறது என்று உதவியாளர் ரவீந்திரனிடம் கூறும்போது, ரவீந்திரன் இதற்கு மாற்று வழியே இல்லையா என்று கேட்கிறார் . அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர். யாராயிருந்தாலும், தவறு செய்திருந்தால் நீதிக்கு தலைவணங்கியே ஆகவேண்டும் என்றார் . ஆனால் மாலையில் வந்த* நீதிமன்ற**தீர்ப்பு சாதகமாக வந்ததால் வீடு ஜப்தியாகவில்லை .எனவே எம்.ஜி.ஆர். மகிழ்ச்சி அடைந்து , ரவீந்திரனிடம் நீதிக்கு தலைவணங்கு*என்கிற தலைப்பு பிரமாதமாக உள்ளது .அந்த தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் . அதாவது எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் எப்போதும் தொழில் சிந்தனையுடன் இருப்பார் . பின்னாளில் அவர் நடித்த நீதிக்கு தலை வணங்கு மார்ச் 1976ல் வெளியாகி , வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது .
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தர்மசிந்தனை* இருந்தது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வை சொல்லலாம் .* ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்தம் வழியும் நிலையில், அவரை அவசரமாக காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் ,அண்ணன் ராதாவையும் கவனியுங்கள், அவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார் . தான் சுடப்பட்டிருந்த அந்த சூழலிலும் அடுத்தவருக்கும் உதவ வேண்டும் என்ற தர்மசிந்தனை எம்.ஜி.ஆருக்கு இருந்தது . அதனால்தான்* அந்த தர்ம சிந்தனை அவர் தலையை காப்பாற்றியது என்று பேசப்பட்டது அதற்கு* 4 ஆண்டுகள் முன்பே, 1963ல்* வெளியான தர்மம் தலை காக்கும் என்ற* கண்ணதாசன் எழுதிய*பாடலை எம்.ஜி.ஆர். பாடி நடித்திருந்தார் .
1977ல் ஜூன் மாதம் இறுதியில் எம்.ஜி.ஆர். முதல்வராகிறார் . 1980ல் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வுடன் இ .காங்கிரஸ் கூட்டணி அமைத்து*37 இடங்களை வென்றது . இதனால்* தி.மு.க. தலைவர் கருணாநிதி , பிரதமர் இந்திரா காந்தியிடம் , எம்.ஜி.ஆர். இரு தொகுதிகளில் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வென்றதால் மக்கள் ஆதரவை இழந்துவிட்டார் . ஆகவே எம்.ஜி.ஆர்.*ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .அதன்படி 1980ல்*எம்.ஜி.ஆர். கட்சி கலைக்கப்பட்டது . விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் அதுபற்றி கவலை கொள்ளாமல் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை முதலில் இனிப்பு சாப்பிடுங்கள் என்று சொல்லி , பின்னர் அவர்களை*அனுப்பிவிட்டு , சிவகவி திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் . பின்னாளில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போது*இது குறித்து என் கோரிக்கைகளை மக்களிடம் முன்வைப்பேன் .அவர்கள் முடிவு செய்யட்டும் என்றார் .வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிறது .தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது உள்மனதில் இருந்து வெளியாகும் நியாயமான கேள்விகள், கோரிக்கைகளை மக்கள் முன்வைத்து பேசுகிறார் .*நான் யாருக்கேனும்* வேண்டாதவர்களுக்கு***உதவினேனா , எனக்கு விருப்பமானவர்களுக்கு உதவிகள், பதவிகள்* அளித்தேனா , எந்தவிதமான அராஜகம் செய்தேன், எப்படிப்பட்ட துஷ்பிரயோகம் செய்தேன் ,என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்தவகையிலாவது உதவினேனா , அ.தி.மு.க. ஆட்சியில்*ஊழல் பிரச்னை ஏதாவது இருக்கிறதா , எதற்காக எங்களை 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆள விடாமல் ஆட்சியை கலைத்தார்கள் .என்ன குற்றம் கண்டார்கள் சொல்ல முடியுமா என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் .இந்த கேள்விகளுக்கு விடைதரும் வகையில், நான் குற்றமற்றவன், ஆட்சியில் குற்றங்கள் அறவே இல்லை* என்று நீங்கள் எண்ணினால் , தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்றார் . அதன்படி மக்கள் அமோக ஆதரவு அளித்தனர் .மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார் . கருணாநிதியின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது .
சட்ட பேரவையில் , எதிர்க்கட்சியான தி.மு.க.வின்* உறுப்பினர் துரை முருகன்* அரசின் சத்துணவு திட்டத்தை குறை கூறி பேசினார் .* குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுத்தட்டிலே ஒரு நடிகையின் படம் உள்ளது என்று சில குறைகளை மிக ஆவேசமாக சில நிமிடங்கள்* பேசிவிட்டு , தன இருக்கைக்கு திரும்பி அமரும் நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே சரிந்தார் . அதை கவனித்த முதல்வர் எம்.ஜி.ஆர். உடனே விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்து,தன் மடியிலே கிடத்தி, பணியாட்களை கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர சொல்லி,*அவர் முகத்திலே தெளித்து, கண்களை வருடி, கன்னத்தில் லேசாக தட்டி ,துரை*கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் என்று எழுப்பினாராம் .சட்டமன்றத்தில் அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல இருக்க , எம்.ஜி.ஆர். தான் முதலில் வந்து அவரை ஆசுவாசப்படுத்தினார் . இத்தனைக்கும் துரை முருகன்*எம்.ஜி.ஆர். ஆட்சியையும், சத்துணவு திட்டத்தையும் குறைகூறி பேசி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .* துரை முருகனுக்கு எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் படிப்பதற்கு உதவினார் . அவரது திருமணத்திற்கு மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்து* தங்க சங்கிலி திருமண பரிசாக* அளித்தார் .துரை முருகன்மீது எப்போதும்* எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு, அக்கறை இருந்ததுண்டு .இந்த நேரத்தில் அவரது* தாய்மை பண்பை* வெளிப்படுத்தும் விதத்தில் உதவியது* அனைவரையும் வியப்பு கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாத்தியார் என்கிற பட்டம் அவ்வளவு சுலபமாக*வந்துவிடவில்லை . கவிஞர்கள் எழுதிய பாடலை உரிய திருத்தங்கள் செய்வதில், பாடல்களில் எந்த இடங்களில் எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் ,என்பதில், காமிரா கோணங்கள்*அமைப்பதில், படத்தொகுப்பில் எந்த காட்சிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதில்* பின்னணி இசை சேர்ப்பு விஷயங்களில்* லைட்டிங் அளவு தேர்வு செய்வதில், சண்டை காட்சிகளை அமைப்பதில் ,கலைஅரங்கங்கள் அமைப்பதில் யோசனைகள் *இப்படி சினிமா துறையில் அனைத்து விஷயங்களையும் கற்று அறிந்தவர் என்பதனால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார் என்று பேசப்பட்டது* மேலும் அவரது படங்கள் ,மக்களுக்கு பாடங்களாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் . ஒவ்வொரு பாடலிலும், பாடலின் ஓசை நயத்தை விட ,மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் எளிதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவார் .பாடலில் எந்த வார்த்தைக்கு பக்கத்தில்* *எந்த**இசைக்கருவி இருந்தால் *வார்த்தைகள்* அழுத்தாமல் இருக்கும் ,**தெளிவாக பதிவாகும் என்ற நுட்பம் அறிந்தவர் . இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்பட்டதால்தான் இன்றைக்கும் அவரது பாடல்கள் மக்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் பெறுகிற*உணர்வை விதைக்கிறது .* அதனால்தான் கவிஞர் கண்ணதாசனே ,என் பாடல்களை கூட திருத்தம் செய்கிற வாத்தியார் என்று குறிப்பிட்டதுண்டு .தெய்வத்தாய் படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதிய கே.பாலச்சந்தரின்*வசன வரிகளையே எம்.ஜி. ஆர். திருத்தியுள்ளார் என்று பாலசந்தரே ஒரு* பேட்டியில்**தெரிவித்து இருந்தார் .* இப்படித்தான் எம்.ஜி.ஆர். வாத்தியாரானார்*
திரைப்படங்களில் எந்த இடத்தில பாடல்கள் அமைய வேண்டும், எந்த இடத்தில அழுத்தமான வசனங்கள் இடம் பெற வேண்டும், திரைக்கதை எப்படி அமைக்க வேண்டும் , எந்த இடங்களில் சண்டை காட்சிகள் அமைய வேண்டும், கலை* அரங்கங்கள் எப்படி இருக்க வேண்டும்* போன்ற பல விஷயங்களில் அத்துப்படியான ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்று கவிஞர் கண்ணதாசன்*எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசியுள்ளார் .**
கவிஞர் புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நான் யார்*நீ யார் என்கிற பாடலை எழுதி எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு சற்று சிந்தனையில் இருந்தார் . அப்போது எம்.ஜி.ஆர். என்ன விஷயம் , ஒரே சிந்தனையில் உள்ளீர்கள் என்று கேட்க , உங்களிடம் மனம் விட்டு சொல்கிறேன்.என் வீடு அடமானத்தில் இருக்கிறது . நீங்கள் கொஞ்சம் கூடுதல் பாடல்கள் எழுத வாய்ப்பு அளித்தால் , அதன் மூலம் எனது வீட்டை மீட்பதற்கு உதவியாக இருக்கும் என்று கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார் . அதை கேட்டதும் ,கவலைப்படாதீர்கள். உங்களுக்கு போதிய வாய்ப்பும் கிடைக்கும் .வீட்டை மீட்பதற்கு பணமும் தருகிறேன் என்றார் . புலமைப்பித்தன் அதன்பின் எம்.ஜி.ஆருக்கு பல பாடல்கள் எழுதினார் . எம்.ஜி.ஆரின் உதவியால் வீட்டையும் மீட்டெடுத்தார் .எம்.ஜி.ஆரின் உதவியை பல பேட்டிகளில் புலமைப்பித்தன் நன்றி பெருக்குடன் கூறியுள்ளார் . பின்னாளில் எம்.ஜி.ஆரால் அரசவை கவிஞர் ஆக்கப்பட்டார் .**அரசவை கவிஞரானதும், குழந்தையின் பல்பட்ட இடத்தில,*பால் மட்டுமே சுரக்கும் அன்னை இதயம் எம்.ஜி.ஆருக்கு என்று புகழுரைத்தார் .
ஒருமுறை ,எம்.ஜி.ஆர். புதுடெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்ய புறப்படுகிறார் .காரில் ஏறும் முன்பு ,தன்* தாயாரின்* சமாதி அருகே சென்று ஒரு நிமிடம் கும்பிட்டுவிட்டு புறப்படும் சமயம் காலில் ஏதோ துண்டு ஒன்று* தட்டுப்படுகிறது . உடனே ,ஜானகி அம்மையார் குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் .* தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, சில நிமிடங்கள் நின்று யோசிக்கிறார் இன்று விமான பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று திடீர் முடிவு எடுத்து தன்* அறைக்கு திரும்புகிறார் . சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு தகவல் வருகிறது ..அதாவது எம்.ஜி.ஆர். புதுடெல்லிக்கு பயணம் செய்ய இருந்த விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 60 நபர்கள் இறந்துவிடுகிறார்கள் . அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மோகன் குமாரமங்கலமும் ஒருவர் . இந்த செய்தி அறிந்து எம்.ஜி.ஆர். மட்டுமல்ல ,அவர் உடனிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள் .எம்.ஜி.ஆரின் தான, தருமங்களும் , தர்ம சிந்தனைகளும்தான்*அவர் உயிரை காப்பாற்றியது என்று* அப்போது பேசப்பட்டது .
நாடக துறையிலும் சரி, திரை துறையிலும் சரி, எம்.ஜி.ஆருக்கு உதவியாக ,ஆதரவாக*இருந்தவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதாவின்*தந்தை .*எம்.ஜி.ஆர். முதல்வரானதும், எம்.கே. ராதாவின் வீடு தேடி சென்று*அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் .* அதே போல பொது மேடையில், எம்.ஜி.ஆர். பாரத் விருது பெற்றபோது , திரையுலகை சார்ந்த நடிகர் நடிகைகள்*பாராட்டுவிழா*நடத்தியபோது , அனைவரின் முன்னிலையில் மீண்டும் நடிகர் எம்.கே. ராதா அவர்களது காலில் விழுந்து நன்றியை தெரிவித்துக் கொண்டார் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகியது*.ஆகவே , வாழ்க்கையில் தன் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக திகழ்ந்தவர்கள், தன்னை*ஏணியில்*ஏற்றி விட்டவர்களுக்கு* ஒரு காலத்திலும் நன்றி மறக்காதவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு அந்த புகைப்படமே சான்று .
மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் / காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.1.கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்கு*தலைவணங்கு*
2.தர்மம் தலை காக்கும்*பாடல் - தர்மம் தலை காக்கும்*
3.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
4.அன்புக்கு நான் அடிமை - இன்றுபோல் என்றும் வாழ்க .
5.ஏமாற்றாதே ஏமாற்றாதே - அடிமைப்பெண்*
6.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். - ரிக்ஷாக்காரன்*
7.எம்.ஜி.ஆர்.-மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -குடியிருந்த கோயில்*
8.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
9.ஏன் என்ற கேள்வி - ஆயிரத்தில் ஒருவன்*
10.என்னம்மா ராணி* - குமரிக்கோட்டம்*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2020, 10:00 PM
#304
Junior Member
Diamond Hubber
செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர்...
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்
’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.
வாத்தியார்
ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.
உளவியல் கருத்து
ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும்.
ரசிகர் வகைகள்
சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர்.
சண்டையின் பாரம்பர்யம்
ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை, நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.
எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு
தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும்.
1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது.
2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத் தாக்குகிறார்.
3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார்.
4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார்.
சண்டைப் போடும்போது
எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார்.
வில்லிகளுடன் சண்டை
எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.
சண்டைக்குப் பின்
எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.
வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும்
எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.
வாள் சண்டை
வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்
எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர்.
ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட் நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.
மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர்.
எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.
சண்டைக் கருவிகள்
வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார்.
சிலம்பு
சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்*ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்*ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்*ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.
எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார்.
செடிக்குச்சி
செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர்.
கோபுடா
கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மான் கொம்பு
மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம்.
மல்யுத்தம்
எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார்.
காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்..........
-
15th July 2020, 10:01 PM
#305
Junior Member
Diamond Hubber
வள்ளலே ..
எங்கள் வாழ்வின் ...
இதயக்கனி ..
--------------------------------
காமராஜர்-
தன் உதவியாளர் வைரவனுடன் .. வாழ்ந்து கொண்டிருந்த காலம்!!
ஒரு நாள் ....
ஒரு நண்பர் ...
காமராஜ் அவர்களளை
சந்திக்க வந்திருந்தார்....
பெருந்தலைவரும் ..
அவருடன் உரையாடி விட்டு அவரைத் தம்முடன் உணவருந்துமாறு அழைக்க அந்த நண்பரும் ஒப்புக் கொள்கிறார்!!
வைரவனோ தனக்கும் ... காமராஜருக்கும் மட்டுமே உணவு தயாரிப்பது வழக்கம்!!
அமைதியாக இருவருக்கும் --தான் சமைத்ததை பரிமாறி விட்டு--தான்-வெறும் வயிற்றோடு அந்த இரவைக் கழிக்கிறார்!!
இது காமராஜருக்குத் தெரிய வருகிறது!!
வருத்தத்தையும் கொடுக்கிறது!!
சரி!!
இனி தம் இருவருக்கும் மேல் உபரியாக ஒருவருக்கு உணவு தயாரிக்க சொல்லலாம் என்றால்--
யாரும் வராத நிலையில் அந்த உணவு வீணாகி விடும்!!
குளிர்ப் பெட்டி போன்ற உணவு பாதுகாப்பு வசதிகளும் இல்லை??
எப்போதாவது தான் நண்பர்கள் வருவார்கள்!!
அதுவும் இரவு உணவு உண்ணும் நேரத்தில் அனேகமாக யாரும் வரமாட்டார்கள்!!-
-இத்தகைய காரணங்களால்--
வரும் விருந்தினர்களை உணவு அருந்தச் சொல்லும் பழக்கத்தையே அடியோடு விட்டுவிட்டார் பெருந்தலைவர் ...
ஒரு நாள்_-
காமராஜரை சந்திக்க வருகிறார்
ராம ராஜர் எம்.ஜி.ஆர் ...
காமராஜர் --எம்.ஜி.ஆரிடம் அன்று அதிசயமாக
உணவருந்தச் சொல்லி வற்புறுத்துகிறார்??
எம்.ஜி.ஆரோ நாகரீகமாக மறுத்து விட்டு விடை பெறுகிறார்!!
திரு வைரவனும் ஆச்சர்யம் கொண்டு அது பற்றி காமராஜரிடம் கேட்கிறார்??
யாரையும் சாப்பிட--கூப்பிட பழக்கம் இல்லாத உங்களுக்கு எம்.ஜி.ஆர் மட்டும் அதுவும் வற்புறுத்தி--
என்ன விலக்கு??
சற்றே விளக்கு ..
அமைதியாக பதில் சொன்னாராம் அந்த படிக்காத மேதை!!
ஊருக்கே உணவிடும் ... எம்.ஜி.ஆருக்கு ...
ஒரு வேளை உணவிட்ட புண்ணியம் எனக்குக் கிடைக்கட்டுமே ...
என்பது தான் காரணம்..............
-
15th July 2020, 10:03 PM
#306
Junior Member
Diamond Hubber
"ஆயிரத்தில் ஒருவனி"ன் மகத்தான வெற்றிக்கு பின்னர் வந்த பத்மினி பிக்சர்ஸின் குறுகிய கால தயாரிப்பில் வெளியான கலர் படம்தான் "ரகசிய போலீஸ் 115"
புதுமையான கவர்ச்சிகரமான
தலைப்பு. தலைப்பே ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது. அதுவும் 1968 ம் ஆண்டு பொங்கலையொட்டி வெளியானது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. வால்போஸ்டரை பார்க்கவே கூட்டம் அலைமோதியது.
எனக்கு தெரிந்து தூத்துக்குடியில் ஒரு டிக்கெட்டின் பிளாக் மார்க்கெட் விலை 1ரு44 பைசா டிக்கெட் 20 ரூக்கு விலைக்கு போனது இந்த படத்துக்கு மட்டும்தான். தூத்துக்குடியில் முதன்முறையாக 30 நாட்களை கடந்து 33 நாட்கள் மேட்னி ஷோ நடைபெற்று 53 நாட்கள் ஓடி புதிய சாதனையை தொடங்கி வைத்தது. மேலும் ஒரு அதிசயம் இந்த படத்துக்கு நிகழ்ந்தது. சென்னையில் 10 நாட்களில் ரூ 2,37,000 வசூலாக பெற்றது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. "ரிக்ஷாக்காரன்" படம்
கூட இந்த வசூலை முறியடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
இவ்வளவுக்கும் பெரிய வசூல் கொடுக்கும் ஏர்கண்டிஷன் தியேட்டர் கிடையாது. சாதாரண தியேட்டர்கள்தான். 5 தியேட்டர் ரிலீஸ் அதனால்தான் என்பார்கள் எதிர்முகாம் அணியினர். நீங்களும் திரையிட்டு பாருங்கள். மூன்று தியேட்டருக்கே ஆட்களை தேடிப்பிடிக்கும் அவலநிலை. இதில் 5 தியேட்டருக்கு ஆள் பிடிக்க வேண்டுமென்றால் நினைத்தே பார்க்க முடியாது கணேசன் ரசிகர்களுக்கு. பந்துலுவின் தயாரிப்பில் வெளியான வேறு எந்த படமும் இந்த சாதனையை செய்யவில்லை.
இத்தனைக்கும் பிரம்மாண்ட செட்டிங்ஸ் கிடையாது. நிறைய ஆட்களை திரட்டி நடிக்க வேண்டிய காட்சி அமைப்பு கிடையாது.நட்சத்திர பட்டாளங்கள் கிடையாது வெற்றியை பங்கு போடுவதற்கு. ஆனாலும் பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நின்ற பரந்தாமன் போல படத்தின்
வெற்றிக்கு வித்திட்ட ஒரே நட்சத்திரம் புரட்சி நடிகர் மட்டுமே.
படத்தில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இருந்தால் போதும் வெற்றி என்ற மூன்றெழுத்து தன்னால் வந்து சேரும் என்பதை மீண்டும் நிரூபித்த வெற்றி காவியம்தான் "ரகசிய போலீஸ் 115."
படம் சென்னையில் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வெள்ளிவிழா ஓடிய கணேசன் படங்கள் கூட பெற முடியாத வசூலை "ரகசிய போலீஸ்115" பெற்றது. ஓடி முடிய
சுமார் ரூ 9,23,000 ஐ வசூலாக பெற்றது.."கட்டபொம்மனோ","கப்பலோட்டிய தமிழனோ", பல லட்சம் செலவு செய்து பந்துலுவை கடனாளி ஆக்கிய "கர்ணனோ" போன்ற
பந்துலுவின் பிரமாண்ட படங்கள் பெற முடியாத வசூலை எம்ஜிஆரின்
சாதாரண ஒரு கலர் படம் பெறுகிறது என்றால் அந்த மூன்றெழுத்தின் மகிமையை நினைத்து பலருக்கு அடிவயிறு ஏன் கலங்குகிறது என்பதற்கான காரணம் புரிகிறதா?
நெல்லையில் இரண்டு தியேட்டர்களில் வெளியாகி 52 நாட்கள் ஓடி சுமார் ரு89000 வசூலாக பெற்றது. 100 நாட்கள் திருச்சி மற்றும் சேலத்தில் ஓடியது. மதுரையில் பிரமாண்ட தியேட்டர் தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய "கர்ணன்" பட வசூல் ரூ 186000ஐ ஆர்ப்பாட்டம் இல்லாமலே 100 நாட்கள் ஓடாமலே 92 நாட்களில் ரூ228000 வசூலாக பெற்று அசுர சாதனை படைத்தது பந்துலுக்கு ஆச்சர்யத்தை மூட்டியதுடன் முன்பே வந்திருந்தால் அனாவசியமாக பணத்தையும்,வீணான உழைப்பையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்குமே! என்று மனத்தெளிவு பெற்றதாக சொல்வார்கள்.
பொறாமை பட்டது கணேசன் ரசிகர்கள் மட்டுமல்ல அநேக தினசரி, வார பத்திரிக்கைகளும்தான். "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" என்ற பாடலின் பொருள் விளங்கியிருக்கும் அவர்களுக்கு. ஓய்வில்லாமல் பத்திரிக்கையில் விமர்சனம் என்ற பெயரில் மிகை நடிப்பை போற்றியும்,
புரட்சி நடிகரின் திறமைகளை மறைத்து எழுதியும் மக்கள் மனம் மயங்காமல் வெற்றியை
மக்கள் திலகத்தின் படங்களுக்கு தாரை வார்த்தது விந்தையிலும் விந்தை.
அன்று வெளியான படம் இன்று வரை ரீ மாஸ்டர் பண்ணியும் ஓடுகிறது என்றால் அந்த வெற்றியின் மகிமையை அறிய முடிகிறதா?.
அந்த வெற்றியை முறியடிக்க சில நடிகர்கள் கத்திப்பேசி, விசித்திரமான ஒலிகளை எழுப்பி,
விதவிதமான நடை நடந்து, உடை பல அணிந்து, புதுமையான முறையில் அழுது, ரத்த வாந்தி எடுத்து, துணைக்கு பல நட்சத்திரங்களை சேர்த்தாலும் மக்கள் திலகத்தை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை............
-
15th July 2020, 11:48 PM
#307
Junior Member
Platinum Hubber
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*திரு.துரை பாரதி அவர்கள் 27/06/20 அன்று சொன்ன*செய்திகள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படகோட்டி படத்தில் இரண்டு குப்பங்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை தடுப்பது, பிரச்னைகளை சமாளிப்பது, குப்பங்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்பது , படகு போட்டியில் மாறு வேடத்தில்* தன் குப்பத்திற்காக தலைவர் பொறுப்பில் இருந்து வெற்றி பெறுவது ,இறுதியில் வில்லனின் சதி திட்டங்களை முறியடித்து இரு குப்பங்களின் ஒற்றுமையை நிலைநாட்டி, அரசு உதவிகள் பெறுவது என்கிற கதையமைப்பில் மீனவர்கள் நண்பனாக நடித்து , அந்த படம் சென்னையில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது . இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ,உரிமைக்குரலுக்கு பிறகு* மீனவ நண்பன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார் இந்த படத்திலும் மீனவ சமுதாயத்திற்கு உதவும் வேடம் .ஆனால் சற்று வித்தியாசமான கதை .*.படம் முடிவடைவதற்கு முன்பு முதல்வராகிவிட்டார் . அதனால் பதவி ஏற்பதற்கு முன்பு சில நாட்கள் நடித்து முடித்தபின் படம் 14/08/1977ல்* வெளியானது . எம்.ஜி.ஆர். முதல்வராகுவதற்கு முன்பு வெளியான இன்று போல் என்றும் வாழ்க , முதல்வரான பின்* 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது . முதல்வரான பின் வெளியான மீனவ நண்பன் சென்னை, மதுரை,சேலம் ஆகிய நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடியது .ஒரு நடிகர் முதல்வராக பதவியில் இருக்கும்போது இரண்டு படங்கள் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டன* அந்த வகையில் , எம்.ஜி.ஆர். புரிந்த இந்த அரிய சாதனை சினிமா உலகில் வேறு எவரும் செய்ததில்லை .
ஒரு அரசு அதிகாரி மீது தொடர்ந்து புகார் வருகிறது . எம்.ஜி.ஆர். ஒரு நாள் அவரை பதவி இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறார் .விவரம் அறிந்த அதிகாரி, ராமாவரம் தோட்டத்திற்கு வந்து எம்.ஜி.ஆரை பார்க்கிறார் . தகுந்த விளக்கம் அளிக்கத்தான் வந்திருக்கிறார் என்று எம்.ஜி.ஆர். கருதி, முதலில் சாப்பிட்டு வாருங்கள் என்கிறார் .உணவருந்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். பதவி இடைநீக்க உத்தரவு கடிதம் அளிக்கிறார் .நீங்கள் எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்க கூடிய நிலையில் நானில்லை . நான் பலமுறை உங்களை மறைமுகமாக எச்சரிக்கை செய்தும் நீங்கள் திருந்தவில்லை ,எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது .இருந்தாலும் வேறு வழியில்லை என்கிறார் . அதிகாரி, சோகத்துடன் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற* வேதனையுடன் செல்கிறார் .வீடு போய் சேர்ந்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அதாவது மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான்கள்,,துணிமணிகள் இதர பொருட்கள்* அவர் வீட்டில் குவிந்து கிடக்கின்றன .அத்துடன் வீட்டு செலவிற்கு ரூ.10,000/-* கொடுத்து அனுப்பியிருந்தார் .அதுதான் எம்.ஜி.ஆரின் குணாதிசயம் . தண்டனையும் உண்டு. அதே நேரத்தில் நிவாரணமும் உண்டு .ஒரு முதல்வராக இருந்து எம்.ஜி.ஆர். தவறு செய்த அதிகாரிக்கு தண்டனை அளிக்கிறார்.அதிகாரி செய்த தவறுக்கு குடும்பம் பாதிக்க கூடாது என்று கருதி*.அதே நேரத்தில் ஒரு குடும்பஸ்தனாக , மனிதாபிமானியாக*
அந்த குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார் .
எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் மீது* தனி மரியாதை உண்டு.* **தர்மம் தலை காக்கும் , புதிய பூமி* போன்ற ப*டங்களில் எம்.ஜி.ஆர். மருத்துவராக நடித்திருந்தார் தர்மம் தலை காக்கும் படத்தில் இருப்பவர்களிடம் இருந்து பணம் வாங்கி , ஏழைகள், வசதியற்றவர்களுக்கு**இலவச வைத்தியம் செய்வார் . புதிய பூமி படத்தில்**கொரோனா நோய், போன்று பல கொடிய,தொற்று நோய்**வந்தாலும் அதற்கான ஆராய்ச்சிகள் செய்து மருந்துகள் தயார் செய்து வைத்தியம் செய்வார் .கொடிய நச்சு பாம்புகள் கடித்தாலும்,அந்த விஷக்கடியில் இருந்து,மாற்று மருந்துகள் கண்டுபிடித்து நோயாளிகளை**காப்பாற்றும் வகையில், பச்சிலை, மூலிகை பொருட்கள்* கொண்டு குணமாக்கும் வைத்தியராக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருப்பார் .ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதியில் அனைவரும் எம்.ஜி.ஆரை தலைவன் பதவி ஏற்று கொள்ளும்படி வற்புறுத்துவார்கள் . அவர் அதை மறுத்து ,நம்மில் மனமாற்றம் ஏற்பட்ட பிறகு யார் தலைவனாக இருந்தால் என்ன, என்னை வற்புறுத்தாதீர்கள் .பலகாலம் கற்றறிந்து நோய் பிணியை நீக்க மருத்துவ தொழிலை நடத்தி வருகிறேன் .இந்த தொழில் மூலம் மக்களுக்கு தொண்டாற்றவே விரும்புகிறேன் என்று கூறி மருந்து பெட்டியுடன் புறப்பட்டுவிடுவார் .மக்களின் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆருக்கு தனி அக்கறை உண்டு . அதனால்தான்*தி.மு.க. ஆட்சியில் சுகாதார அமைச்சர் பதவி கேட்டார் என்று சொல்லப்படுவதுண்டு .
எம்.ஜி.ஆர்.முதல்வரான பின்பு 1978 ஏப்ரலில்* உன்னைவிட மாட்டேன் என்கிற படத்திற்கு பூஜை போடப்பட்டு தான் மீண்டும்*, நடிக்க போவதாக அறிவித்தார் அதற்கான* விளம்பரங்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்தார் .. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் கேட்டதற்கு*,* முதல்வர் பதவிக்கு எந்த பங்கமும் வராமல் நடந்து கொள்வதாக இருந்தால் ,எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதற்கு எந்த ஆட்செபனையும் இல்லை என்று அறிவித்தார் இதுதான் எம்.ஜி.ஆர்.எதிர்பார்த்த* பதில் /அறிவிப்பு . அதில் வெற்றி பெற்று ,நிரூபித்தும் காட்டினார் .*.பூஜைக்கு ஆளுனர் வருவதாக இருந்தது .இறுதி கட்டத்தில் ஆளுனர் வரவில்லை .* *முதல்வர் பதவிக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று உத்தரவாதம் தரும் வகையில் அவரது செயல்பாடு இருந்தது . ஆனால் என்ன காரணமோ, தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக படம் தொடங்க படவில்லை . எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்க முடியாமல் போனது .
சிவந்த மண் படத்திற்கு கதை வசனம் எழுத , முதலில் கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். மூலம் ஆலோசனை கேட்கபட்டது* .சட்டத்தில் அதற்கு இடம் உண்டா தெரியவில்லை .யோசித்து சொல்கிறேன் என்று கருணாநிதி சொன்னார் பின்னர் மறுத்துவிட்டார் .ஸ்ரீதரும் அவரிடம் கேட்கவில்லை .அதன்பிறகு கருணாநிதி முதல்வராகிவிட்டார் ..காலம் கடந்ததால் , இயக்குனர் ஸ்ரீதர் , நடிகர் சிவாஜி கணேசனை வைத்து படத்தை முடித்து வெளியிட்டு விட்டார் . ஸ்ரீதர் நேரடியாக என்னிடம் கேட்காமல் படத்தை எடுத்து வெளியிட்டுவிட்டார் என்றுசுட்டிக்காட்டி* அவர் மனம் புண்படும்படி கருணாநிதி பேசினார் .என்று சொல்லப்பட்டது .
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்திருந்த காலத்தில், ஸ்டுடியோக்களில் பொதுவாக நாங்கள் சாப்பிடுகிற சாப்பாடு எம்.ஜி.ஆர். சாப்பாடு என்று திரையுலகில் பெருமையாக சொல்லுகிற அளவிற்கு* மிக* பிரபலம் .ஏனென்றா ல்***எம்.ஜி.ஆர். உணவருந்தும் போது , தன்னை சுற்றியுள்ள நடிகர் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், பலரையும் வைத்துதான் சாப்பிடுவார் .அவருடைய சாப்பாட்டில் உள்ள வகை வகையான உணவு பொருட்களை பற்றி புகழ்ந்து பேசாத நடிகர், நடிகைகள், திரைப்பட கலைஞர்களே இல்லை எனலாம் . எம்.ஜி.ஆர். பற்றி பேசுகிறவர்கள், அவரை அறிந்தவர்கள் ,அவர் வீட்டிலோ, அல்லது ஸ்டுடியோவிலோ* சாப்பிட்டு*மகிழ்ந்ததை சொல்லாமல் இருந்த வரலாறில்லை .ஏனென்றால் தன்* சிறுவயதில் இருந்தே பசி கொடுமையை எம்.ஜி.ஆர். அறிந்து இருந்தவர் .எனவே மற்றவர் பசிப்பிணியை நீக்கினார் .பலருக்கு பசியாறுதல் செய்த, பசி அறிந்த* வள்ளல் .
தொடர்ந்து பல செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். -வில்லன் கண்ணன் உரையாடல் -மீனவ நண்பன்*
2.எம்.ஜி.ஆர்.-நாகேஷ் உரையாடல் - நம் நாடு*
3.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
4.மருத்துவராக எம்.ஜி.ஆர். -புதிய பூமி*
5.எம்.ஜி.ஆர்.-நாகேஷ* உரையாடல்* -ஆயிரத்தில் ஒருவன்*
6.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா - ஆயிரத்தில் ஒருவன்*
7.ஹலோ ஹலோ சுகமா -தாமிரம் தலை காக்கும்*
8.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*
9.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*
10.சித்திர சோலைகள்,- நான் ஏன் பிறந்தேன்*
11.கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*
-
16th July 2020, 09:36 PM
#308
Junior Member
Diamond Hubber
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..
57 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.
இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...
1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..
2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)
3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)
4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)
5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)
6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)
7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)
8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )
9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)
10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.
11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.
12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..
13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..
14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.
15...பரமபிதா.
16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..
17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..
18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.
19...பாகன் மகள்..
20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.
22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.
23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.
24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.
25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.
27...புரட்சி பித்தன்.
28....வேலுத்தேவன்..
29...ஏசுநாதர்..
30....மண்ணில் தெரியுது வானம்.
31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.
32..உன்னை விட மாட்டேன்.
33...எல்லை காவலன்.
35...கேப்டன் ராஜு.
36....தியாகத்தின் வெற்றி..
37...இதுதான் பதில்.
38.....வேலு தம்பி...
39.. ஊரே என் உறவு.
40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..
41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...
43...இன்ப நிலா.
44.. வாழ்வே வா..
45...காணிக்கை.
46....அண்ணா பிறந்தநாடு.
47....அண்ணா நீ என் தெய்வம்..
48...நல்லதை நாடு கேட்கும்..
49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.
50....மரகத சிலை.
51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..
52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..
53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..
54....உங்களுக்காக நான்...
55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.
56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..
57.....இமயத்தின் உச்சியிலே..
வாழ்க எம்ஜிஆர் புகழ்.
நன்றி..உங்களில் ஒருவன்.......தொடரும்.
பின் குறிப்பு.
வெளிவராத படங்களில் ஸ்டில்கள்... நாளை வெளியிடப்படும்............
-
16th July 2020, 09:38 PM
#309
Junior Member
Diamond Hubber
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
ஆஹா...
தலைவன் என்றால் இவரல்லவா??
புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பூமியிலிருந்து வானத்துக்கு விடைபெற்று முப்பது வருடங்கள் ஆகியும் இன்றும் .....
"ஜவ்வாது மலை" வாழ் மகாஜனங்களைப் பொறுத்தவரை அவர்தான் ஒரே ஹூரோ...
வணங்குகிறேன்
சரித்திரம் படைத்த
சகாப்த நாயகனை!!!
அன்றும்
இன்றும்
என்றும்
ஒரே புரட்சித்தலைவர்!!!
அவர் ஒரு சித்தர் !
கலையுலக சித்தர்!!
தான் செய்யப் போவதையும்
வாழப் போவதையம்
முன்கூட்டியே பாடலாக முன்மொழிந்த
கலை ஞானி!!!!
"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்""
சொல்கிறார்களே!!!!
சொல்கிறோமே!!!
"டைம்ஸ் ஆஃப் இந்தியா"வின் பதிவில் இருந்து ஜவ்வாதுமலையில் வாழும் மக்களுக்கு இன்றும் ஒரே ஹூரோ புரட்சித்தலைவர்தான் என்ற செய்தியை படித்து....
மீண்டும் ஒரு முறை...
என் மானசீக குருவை வியந்து வணங்குகிறேன்!!!
வாழ்க்கைக்கான மானசீக குரு! "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பதிவிற்கு நன்றி.........
-
16th July 2020, 09:39 PM
#310
Junior Member
Diamond Hubber
#ஆல் #இன் #ஆல்
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார்.
இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை.
உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். #அவரது #பாதிப்பு #இல்லாத #ஹீரோ #தமிழ்சினிமாவில் #இல்லை. #ஏன் #சிவாஜி #கூட #அவரது #பாணியில் #நடிக்க #முயன்றிருக்கிறார்.
நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “#சரிதான்! #நாட்டில் #பணக்காரர்களே #இருக்கக்கூடாது #போலிருக்கிறது” என்பார்... அதற்கு #எம்ஜிஆரின் #பதில் : “#இல்லை #ஏழைகளே #இருக்கக்கூடாது”.........
Bookmarks