-
7th September 2020, 01:56 PM
#661
Junior Member
Diamond Hubber
தலைவரை நாடி வந்த பந்துலுவுக்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடித்தந்த படம்தான் "தேடி வந்த மாப்பிள்ளை".
1970 ம் ஆண்டு ஆக 29 ல் வெளியான வெற்றிப் படம்தான் "தேடி வந்த மாப்பிள்ளை". அந்த ஆண்டு வெளியான நான்காவது படம். முதல் படமான "மாட்டுக்கார வேலன்" வெள்ளி விழாப் படம். 2வது படமான "என் அண்ணன்" 100 ஓடி வெற்றி பெற்ற படம்.
அடுத்து வந்த கருப்பு வெள்ளை படமான "தலைவன்" சுமாரான வெற்றி. நான்காவது வந்த படம்தான் "தே.வ.மாப்பிள்ளை". இதுவும் சராசரிக்கு மேல் வெற்றியை பதிவு செய்ய தவறவில்லை. படத்தின் சிறப்பே r k சண்முகத்தின் வசனம்.
எல்லாம் எதுகை மோனையில் எழுதி அசத்தியிருப்பார். தோட்டா-பேட்டா
பேட்டா-டாட்டா என்று ஒவ்வொரு வசனத்திலும் எதுகை மோனையில் காமெடியை தூவியிருப்பார்.
சோலைமலை பெயரையே ஏசி பண்ணியிருக்கான் என்ற வசனங்கள் அருமை. "ஆயிரத்தில் ஒருவனு"க்கு பிறகு இந்த படத்தின் வசனத்தில் மீண்டும் பளிச்சிடுகிறார்
மிகவும் பிரபலமான 'வெற்றி மீது வெற்றி வந்து' பாடலே ஆரம்ப காட்சியின் வேகத்தை முடுக்கி விடுகிறது . அதன் பின் சென்னை சென்ற பிறகு ஒவ்வொரு காட்சியும் மின்னல் வேகத்தில் நகரும். 'மாணிக்க தேரில்' பாடல் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.
சோவின் காமெடி ரசிக்கும்படி இருக்கும். ஜஸ்டினுடன் ஒரு சண்டை காட்சி மிகவும் நேர்த்தியாக படமாக்கப் பட்டிருக்கும்.
அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்த இந்தப் படம் பெரு வெற்றி பெற வேண்டிய ஒரு படம். ஆனால் காரணம் புரியவில்லை ஏன் அந்த வெற்றியை தவற விட்டதென்று.
அந்த நேரத்தில் சென்னை பாரகனில் வெளியான தலைவர் படங்கள் "நாடோடி மன்னனு"
க்கு பிறகு 100 நாள் வெற்றியை பெறவில்லை. பாரகனில் தலைவர் படம் வெளிவருகிறது என்றாலே நம்ம ரசிகர்கள் சோர்ந்து
விடுவார்கள். அதன்பிறகு
பல தலைவர் படங்கள்
வெளியானாலும் எதுவும் 100 நாட்கள் ஓடவில்லை. அதேபோல் மதுரை தங்கத்தில் "நாடோடி மன்னனு"க்கு பிறகு தலைவருக்கு
மிகப் பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை.
தங்கத்தில் ஏதாவது ஒரு வெற்றிப் படம் வெளியாகியிருந்தால் அவ்வளவுதான் வசூலில் மிக பெரிய ரிக்கார்டு உருவாகியிருக்கும்.
இருப்பினும் தலைவரின் சாதாரண வெற்றிப் படங்களே பிரமிக்கத் தக்க வசூலை கொடுக்க தவறவில்லை.
தங்கத்தில் 69 நாட்கள் ஓடி சுமார் 2,17,000 ஐ வசூலாக பெற்று சாதனை படைத்தது.
சென்னை பாரகனில் 61 நாட்களில் 198365.00 வசூலாக பெற்றது. சென்னை பாரகன் அகஸ்தியா சரவணா வில் 61 நாட்களும் திருச்சி 84 சேலம் 71 கோவை 68 நாட்களும் ஓடியது. ஈரோட்டில் 64, நெல்லை 53 நாகர்கோவில் 50 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. மொத்தம் 22 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது. 100 நாட்கள் ஓட்டப்பட்ட பல சிவாஜி படங்களின் 50 நாட்களை காட்டிலும் கூடுதல் அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது.
சென்னையில் முதல் வெளியீட்டிலே சுமார் 7 லட்சத்தை வசூலாக பெற்றது. முதல் வெளியீட்டிலேயே சுமார் 4 மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி அதிரடி நிகழ்த்தியது. ஒரு படத்தின் சாதனை என்பது ஏதாவது ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டினால் போதும் என்பது சிவாஜி ரசிகர்களின் நினைப்பு. ஆனால் திரையிடும் தியேட்டர்களில் பெருவாரியான திரையரங்கத்தில் 50 நாட்கள் ஓடினால்தான் படத்துக்கு வெற்றி என்பது விநியோகஸ்தர்களின் கணிப்பு.
தலைவர் படத்தை பொருத்தவரை அடுத்த தலைவர் படம் வரும்வரை எத்தனை படங்கள் வந்தாலும் வசூலில் அசைக்க முடியாது. ஆனால் அடுத்த தலைவர் படம் வந்து விட்டால் ரசிகர்கள் புது படத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதில் சிக்கி கொண்ட இரண்டு படங்கள் பத்மினி பிக்சர்ஸ் கலர் படங்களான "ரகசிய போலீஸ் 115" மற்றொன்று "தேடி வந்த மாப்பிள்ளை".
"ரகசிய போலீஸை" பொறுத்தவரை
"தேர்த்திருவிழா" சுமாரான படம் என்பதால் பிரச்னை இல்லை.அடுத்து வந்த "குடியிருந்த கோயில்" மெகா பிளாக்பஸ்டர் படம்.
ஆயினும் "குடியிருந்த கோயிலை" தாண்டி ஒரு சில ஊர்களில்100 நாட்கள் ஓடியது. வசூலில் "குடியிருந்த கோயிலி"ன் வசூலில் 80 சதவீதத்துக்கு மேலே வசூலை குவித்தது. அதேபோலதான்
"தேடி வந்த மாப்பிள்ளை"யும். முதல் 40 நாட்கள் வரை அசைக்க முடியாத
வசூலை பெற்ற படம்.
அடுத்து வந்த "எங்கள் தங்க"த்தால் 100 நாட்களை
எட்ட முடியாமல் போனாலும் நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது எனலாம். பரீட்சையில் ஒரு பாடத்தில் வெற்றி பெற்றால் பாஸாக முடியாது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்ச மார்க்கை பெற வேண்டும் என்பதை அறியாதவர்களா? சிவாஜி ரசிகர்கள்.
எங்கோ ஒரு இடத்தில் முக்கி முனகி 100 நாளை ஓட்டி விட்டு வெற்றி வெற்றி என்று கதறுவதை பார்த்தால் நமக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா உலகத்துக்கே சிரிப்புத்தான் வருகிறது..........
-
7th September 2020 01:56 PM
# ADS
Circuit advertisement
-
7th September 2020, 03:22 PM
#662
Junior Member
Diamond Hubber
சென்னை: "அதென்ன, அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருக்குமே எம்ஜிஆர்தான் கிடைத்தாரா?" என்கிறது ஒரு தரப்பு.. "ஏன், அவர் ரசிகர்கள் நாங்கள் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாதா" என்று கேட்கிறது இன்னொரு தரப்பு!
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை விஜய் பட போஸ்டர்களில் எம்ஜிஆர் தென்படுகிறார்.. விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்ததையே மக்கள் ஜீரணித்து கொண்டார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்துள்ளனர்.
இன்னும் அரசியலுக்கு விஜய் வரவில்லை.. ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.. அதை மறுப்பதற்கில்லை.. ஆனால், "எம்ஜிஆரின் மறுஉருவமே" என்று சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? விஜயகாந்த் செய்யாததையா விஜய் செய்துவிட்டார்? என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது.
"2021-ல் தமிழகம் தலையேற்க வாங்க தலைவா!" என்றுகூட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இப்படித்தான் முக அழகிரியையும் போஸ்டர் அடித்து கொண்டு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸையும் கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இருக்கிற ஒரு தமிழ்நாட்டுக்கு எத்தனை பேர்தான் தலைமை ஏற்க முடியும்? இதெல்லாம் ரசிகர்களின் உச்சக்கட்ட அன்பும், அபரிமிதமான பாசமும், ஆதரவாளர்களின் எல்லையற்ற நம்பிக்கையும் என்றே கூட நாம் வைத்து கொள்வோம்!!
ஆனால், எம்ஜிஆரை இவர்கள் இழுத்து கொண்டு வருகிறார்கள்? விஜய்யை விஜய்யாகவே காட்ட வேண்டியதுதானே? அதென்ன எம்ஜிஆரை டார்கெட் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது என்பது அதிமுக தரப்பின் முணுமுணுப்பாக உள்ளது.. இதற்குதான் அமைச்சர் ஜெயக்குமார் "மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது, செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது" என்று சுடச்சுட ஒரு பஞ்ச் சொல்லி உள்ளார்.
இதுபோலவே கமல்ஹாசனும் "நாளை நமதே" என்ற ஒருவார்த்தையை மய்யத்தில் சொல்கிறார்.. நாளை நமதே படத்தில் சிறுவனாக கமலும் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகவும் கமல் அளவுகடந்த வருத்தம் அடைந்துள்ளார்.. இந்த ஆதங்கம் இருக்கவே செய்யும்.. எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அது முடியாமல் போனால் ஆற்றாமைதான்... ஒப்புக் கொள்வோம்.. அதற்காக இவ்வளவு காலம் நாளை நமதே என்ற வார்த்தையை தன் சினிமா டைட்டில்களிலும், படங்களிலும், பயன்படுத்தாதவர், இப்போது திடீரென நாளை நமதே என்று பிரச்சாரத்துக்கு கிளம்ப போகிறார் என்றால், இதை அரசியலின் ஆதாயமாகத்தானே பார்க்க தோன்றுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆனால் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கும், ஆட்சிக் கட்டிலில் அமலரத் துடிக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக எம்ஜிஆர் மட்டுமே ரோல் மாடலாக இருக்க முடியும். காரணம் அவர்தான் திரையுலகில் இருந்த கையோடு அரசியலில் புகுந்து அதே வேகத்தில் மக்கள் மனதையும் கவர்ந்து ஆட்சியைக் கைப்பிடித்த முதல் நடிகர். பின்னால் இதே பாணியில் ஆட்சியைப் பிடித்த என்டிஆருக்கே கூட எம்ஜிஆர்தான் ரோல் மாடல்.. அப்படி இருக்க நம்ம ஊர் நடிகர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
"சினிமாவில் நடித்து, மக்கள் மனசில் இடம் பிடிச்சிட்டால் ஆட்சியிலும் உட்கார்ந்துடலாம் என்பதற்கு, உலகத்துக்கே 'வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர்தான்.. அதனால் அவரோட ரசிகர்களான நாங்கள், அவரது ரூட்ல போறதுல என்ன தப்பு?" என்று கேட்கிறார்கள் பிற கட்சி தொண்டர்களும் பிற நடிகர்களின் ரசிகர்களும்! அதுவும் நியாயமானதுதான்.
"வர்றேன்.. வந்துருவேன்.. வந்தே தீருவேன்" என்று பல காலமாக சொல்லிக் கொண்டே இருக்கும் ரஜினிகாந்த் முதல் வந்துட்டேன் மாற்றம் தராமல் போக மாட்டேன் என்று கூறி வரும் கமல் வரை அனைவருக்குமே எம்ஜிஆர் ஆகும் ஆசைதான் இருக்கிறது. இவர்கள் என்றில்லை எந்த சினிமாக் கலைஞராக இருந்தாலும் கூட எம்ஜிஆராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். காரணம் எம்ஜிஆர் சென்ற உயரம், பெற்ற வெற்றி!
அவரை போலவே திரையுலகிலும் மக்கள் மனதிலும் வெல்ல வேண்டும் என்பதே அனைத்து சினிமாக்காரர்களின் கனவாகும்... விஜயகாந்த் அப்படித்தான் நினைத்தார் வந்தார் ஓரளவு வெல்லவும் செய்தார். தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூட சொல்ல வைத்தார்.. ஆனால், அவரது விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாகவும்தான் கருப்பு எம்ஜிஆர் என்ற வார்த்தை விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர, பொதுமக்கள் யாருமே விஜயகாந்தை அப்படி அழைத்ததே இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர்தான்.. கருப்பு, சிவப்பு, பச்சை எம்ஜிஆர்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
அவர் மட்டுமல்ல, அவருக்கு பிறகு வந்த எத்தனையோ பேர் எம்ஜிஆர் பெயரை அரசியல், சினிமாவில் பயன்படுத்தி கொள்ளதான் செய்தனர்.. ஆனால் எம்ஜிஆருக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தது ஒரே ஒருவர்தான். அவர் ஜெயலலிதா மட்டுமே. எனவே அடுத்த எம்ஜிஆர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறு எந்த சக்தியாலும் அதை தீர்மானிக்க முடியாது.. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்களின் செல்வாக்கே கூட அதை தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம்.. அப்படி இருந்திருந்தால் ரஜினிக்கு இருந்த செல்வாக்குக்கு இன்னேரம் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு அவர் முதல்வராகியிருக்க மாட்டாரா என்ன.. ஆனால் மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று ரஜினியே சொல்லியும் கூட அது சுத்தமாக வராமல் இருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியமானது!
இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.. இறுதிவரை அரசியலிலும் சரி, ஆட்சியிலும் சரி, தன் உறவினர்கள் யாரையும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட அனுமதிக்காதவர் எம்ஜிஆர்.. அதனால்தான் எம்ஜிஆரின் செல்வாக்கு இன்று வரை அப்படியே உள்ளது. அவரை மிகப் பெரிய இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால் அவரைப் பின்பற்றத் துடிப்போரில் 99 சதவீதம் பேர் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை மக்கள் கண் கூடாக கண்டு வருவதால்தான் எம்ஜிஆர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் ஓரம் கட்டி வைத்துள்ளனர்.
எம்ஜிஆர் படங்களையே எடுத்து கொண்டாலும், அவரது கேரக்டர்களை பார்த்தாலும் சரி, எம்ஜிஆர் நல்லவர்.. தண்ணி அடிக்க மாட்டார்.. சிகரெட் பிடிக்க மாட்டார்.. தன் மனைவியையோ, காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. ஏழைகளை பாதுகாப்பார்.. நாளைய எம்ஜிஆர் என்று சொல்லி போஸ்டர் ஒட்டுபவர்கள் தங்கள் ஆதர்ச தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விஜயகாந்த்
இவரைப் பற்றி தெரிந்து கொள்க
விஜயகாந்த்
அரசியல் வாழ்க்கைநிகர மதிப்புதொடர்பு
அதுமட்டுமல்ல, எம்ஜிஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள், அவரது கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ பின்பற்ற தயாராக இருக்கிறார்களா என்பதையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை அப்படி அறிவிக்கும் சூழல் வரும்வரை, யார் வேண்டுமானாலும் தன்னை எம்ஜிஆராக நினைத்து கனவு காணட்டும்.. ஏனென்றால், கனவு காணும் எல்லாருக்குமே உரிமை உண்டு.. கலாமே கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே.. கனவு காண்பதில் தவறே இல்லை..........
-
7th September 2020, 07:31 PM
#663
Junior Member
Diamond Hubber
காவிய தலைவன்--
-----------------------------------
எம்.ஜி.ஆருக்கு இரு புறங்களிலும்--
கண்ணதாசன்--வாலி என கவி இருவர் இருந்தாலும்-
கண்ணதாசன் வரைந்தவை சற்று ஓங்கியே இருக்கும்!
எம்.ஜி.ஆர்ப் பற்றிக் கவிஞர் வரைந்துள்ள இக்கவிதை கொஞ்சம் அபூர்வமானது!
படித்துப் பரவசப்பட மட்டுமன்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகும்!
எம்.ஜி.ஆரைத் தமிழர் இல்லை என்றால்??
கவிதையின் கடைசியில் நச் சென்று நவின்றிருக்கிறார் நற்றமிழியின் நாயகன்!
படித்துத் தான் பாருங்களேன்--
கல்லூரிப் படியேறிக்
கல்லாத போதினிலும்
சொல்லும் மொழியெல்லாம்
சுவையான செந்தமிழாய்
வெல்லும் படி சொல்லும்
வீரனை நாம் பெற்றுள்ளோம்!
மன்னர் இவரொரு நாள்
மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான்
அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில்பேசு எனக்
கேட்டார்கள் தோழரெலாம்--
ஓரளவும் பேசேன் நான்--
உயிர்படைத்த நாள்முதலாய்
உண்ணும் உணவும் உலவுகின்ற வீதிகளும்
எண்ணும் பொருளும்
ஏற்றதொரு தொழில் நலமும்
செந்தமிழால் வந்த
திரு வென்றே பெற்றவன் நான்
அந்தமொழி இன்றி
அடுத்த மொழி பேசுவதோ?
என்று பதிலுரைத்தார்
இவர் பெருமை யார்க்கு வரும்?
பொன்மனத்துச் செல்வர்
புரட்சித் தலைவரிவர்
தமிழரிலை என்றால்
தமிழுக்கேக் களங்கம் வரும்!!!.........
-
7th September 2020, 07:33 PM
#664
Junior Member
Diamond Hubber
தலைவர் பொது கூட்டம் என்றாலே பொங்கு கடல் என கூட்டம் தானே திரளும்.....
கோவை மேற்கு தொகுதியில் நடந்த தொகுதி பிரச்சாரம்....திறந்த வேனில் நின்று கொண்டே தலைவர் சூறாவளி பிரச்சாரம்..
எங்கு வாகனம் நின்றாலும் அங்கே மக்கள் வெள்ளம்... அப்போது ஒரு தொண்டர் தன் குழந்தையை கையில் தூக்கி கொண்டு கடும் கூட்டத்தில் முண்டி அடித்து முன்னேற துடிக்க...
தலைவர் அவர் குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று அவருக்கு விருப்பம்... எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் ஒரு அளவுக்கு மேல் முன்னேறி செல்ல முடியவில்லை..
திடீர் என்று யாரும் எதிர்பாராவண்ணம் அந்த குழந்தையை தூக்கி புரட்சிதலைவர் நோக்கி வீசி விடுகிறார்.
மொத்த கூட்டமும் உறைந்து போய் நிற்க குழந்தை பறந்து தலைவர் அருகில் வர ஒரு லாவகம் ஆக அந்த குழந்தையை தாவி இரு கைகளால் பிடித்து விடுகிறார் தலைவர்.
சற்று நேரம் அமைதி..அந்த தொண்டனை கை காட்டி அழைக்க மொத்த கூட்டமும் வழி விட என்ன இப்படி செய்து விட்டாய் குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த அன்னைக்கு என்ன பதில் சொல்வாய் என்று கேட்க.
ஐயா நீங்க பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்படி செய்து விட்டேன் என்று சொல்ல தலைவர் சகஜம் ஆகி இனி இப்படி கூடாது என்று சொல்லி பெயரை மைக்கில் சொல்லி ஜிப்பாவில் இருந்து பணம் கட்டு எடுத்து குழந்தை அப்பா கையில் கொடுத்து குழந்தைக்கு முத்தம் ஒன்றை கொடுக்க.
அப்போது எழுந்த விசில் சத்தம் அடங்க பல நிமிடங்கள் ஆயின.
அதுதான் தலைவர் தன்னை சுற்றி நடப்பதை நன்கு அறிவார்...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்... உங்களில் ஒருவன்...
மறுநாள் காலையில் அனைத்து நாள் இதழ்களில் இந்த சம்பவமே முக்கிய செய்தியாக வந்தது..........
-
8th September 2020, 08:17 AM
#665
Junior Member
Diamond Hubber
#பாசப்பிணைப்பு
22.05.73 ல் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்த திண்டுக்கல் பாராளுமன்றத்தேர்தல்...
பிரச்சாரத்துக்குச் சென்ற புரட்சித்தலைவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தது கயவர் கூட்டம்...#தலைவருக்குத் #ரிஸ்க் #எடுக்கிறது #தான் #ரஸ்க் #சாப்பிடுற #மாதிரியாச்சே. அதனால் தொண்டர்கள் "போகவேண்டாம்" என்று வற்புறுத்தியும் தன் உயிரைத் துச்சமாக எண்ணிக் கிளம்பிவிட்டார்...
இருப்பினும் சமயோசிதமாக ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் தான் செல்லும் வழியையும், வாகனத்தையும் மாற்றி மாற்றிப் பயணம் செய்தார். இப்படி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்ததால்
கயவர்கள் ஏமாந்தனர்...
இப்படியே நள்ளிரவாகிவிட்டதால் விடியற்காலையில் பயணத்தைத் தொடரலாம் என்று தனது வேனை அடரந்த புதருக்குள் நிறுத்தச் சொல்லி நடுக்காட்டில், உடனிருப்பவர்களுடன் அப்படியே பாய் விரித்துப் படுத்துவிட்டார்...
அதிகாலை ஐந்து மணியளவில் ஒரு மூதாட்டி இரு அலுமினியச்சட்டியுடன் தன் கால்மாட்டுக்கருகில் இருப்பதைக் கண்டு திகைத்தார். எப்படி தன் இருப்பிடமிருந்து வந்தார் ? ஏன் வந்தார்? என்று அவர் மனதினில் கேள்விகள் !!!
"தாயே ! உங்களுக்கு என்ன வேண்டும்? என கேட்ட எம்ஜிஆரிடம்,
"எனக்கு ஒன்றும் வேண்டாம். இதுல சோறு இருக்கு. உனக்குப் புடிச்ச வெடக்கோழிக் குழம்பு இருக்கு. சாப்பிடு மகராசா ! என்றார் அந்த மூதாட்டி.
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்த மூதாட்டியை அப்படியே வாரி அணைத்த எம்ஜிஆர் ..." தாயே ...! இங்கே நானிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? என்று கேட்டார்.... அதற்கு அந்த மூதாட்டி... "ராசா ! என் பேரன் தான் நீ இங்கு தங்கியிருக்கும் விஷயத்தை இட்டறைப்பாதையில் நின்னு பாத்துட்டு வந்து பயந்து போய் என்னிடம் சொன்னான்! அதான் உனக்கு சோறாக்கிக் கொண்டாந்தேன் "
நீ எதுக்கு ராசா பதுங்கியிருக்கணும் ? #உன்ன #தொட்டுமீள #இந்த #உலகத்துல #எவன் #பொறந்திருக்கான்? ஏன்ய்யா...#எங்காச்சும் #நெருப்பைக் #கரையான் #அரிச்ச #அதிசயம் #உண்டாய்யா ? #உன் #நிழலை #நெருங்கக்கூட #எவனுக்கு #தைரியம் #இருக்கு ? என்று மூதாட்டி ஆவேசமாகப் பேச கண்கலங்கிவிட்டார் எம்ஜிஆர். அந்த சாப்பாட்டை காலையில் சாப்பிடுவதற்காக அப்படியே பாத்திரங்களை வேனில் ஏற்றிவிட்டார்.
பிறகு அந்த மூதாட்டியின் விலாசத்தை வாங்கிக்கொண்டார்.... "நீ இந்தப் பக்கம் எப்ப வந்தாலும் ஒரு குரல் கொடுத்தாப் போதும் ஓடியாந்துருவேன் " என்ற மூதாட்டியை வணங்கிப்புறப்பட்டார் எம்ஜிஆர்.
திண்டுக்கல்லில் பிரச்சாரம் முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர் காரை நிறுத்தச் சொல்லி விறுவிறுவென நடந்தார். உடனிருந்தவர்கள் திகைத்தனர்.
நேராக அந்த மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற எம்ஜிஆர், திண்ணையில் குளிரில் வாடிக்கொண்டிருந்த. அந்த மூதாட்டியின் உடலில் தான் மதியம் வாங்கிய கம்பளிப்போர்வையை போர்த்தினார்.
அந்த மூதாட்டியைத் தட்டியெழுப்பி ஆயிரம் ரூபாயை சாதாரணமாகக் கொடுக்கவில்லை... அன்பால் திணித்தார். மூதாட்டியினால் பேசமுடியாமல் கண்கள் பனித்தது.
கண்ணீர் மல்க விடைபெற்றார் புரட்சித்தலைவர்.
#இப்பேர்ப்பட்ட #பாசப்பிணைப்பு #என்னும் #சந்தனம் #மணத்தது...
#அன்று ............
-
8th September 2020, 08:18 AM
#666
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் தொடர் வெளியீடான நான்காவது வண்ணப்படம் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் வழங்கும் "என் அண்ணன்" திரைப்படம் ஆகும்.
என் அண்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் 46 ஊர்களில் 58 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை தமிழக சினிமாவில் பெறுகிறது.
திரையிடப்பட்ட 46 திரையரங்குகளிலும் முதன்முறையாக எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை தமிழகத்தில் என் அண்ணன் 48 அரங்கில் 50 நாட்கள் ஆகும்.
முதன்முதலில் பெற்று சரித்திரம் படைத்தது.
மதுரை ஏரியாவில் முதன்முறையாக 8 ஊர்களிலும் 50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த முதல் திரைப்படம் என்ற பெருமையை என் அண்ணன் பெறுகிறது.
வேலூர் கடலூர் புதுச்சேரி இப்பகுதியில் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்ட பெருமைக்குரிய காவியம்
என் அண்ணன் திரைப்படம் ஆகும்.
இரண்டாம் வெளியீட்டில் 8 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி மொத்தம் 56 திரையரங்கில் என் அண்ணன் திரைப்படம் 50 நாளை கொண்டாடி மகிழ்ந்தது.
முதல் ஆறு மாதத்தில் இக்காவியம் 60 லட்சத்தை வசூலாக பெற்று சரித்திரம் படைத்தது.
இந்திய வரலாற்றில் தமிழகத்தில் 108 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை என் அண்ணன் திரைப்படம் பெறுகிறது ...
சேலம் அலங்கார்.
15 திரையரங்குகளில் 10 வாரங்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை படைத்த இரண்டாவது காவியம். சென்னை, மதுரை, திருச்சி, சேலம் தொடர்ந்து வெளியாண நான்காவது படம் 100 நாள் என்ற பெருமையை பெறுகிறது என் அண்ணன் காவியம்.
சென்னை மிட்லண்ட் திரையரங்கில் புதுமைப்பித்தன் ஆயிரத்தில் ஒருவன் அடிமைப்பெண் திரைப்படத்திற்குப் பின் நான்காவதாக 100 நாட்களை கண்ட காவியம் என் அண்ணன் ஆகும்..........
-
8th September 2020, 08:19 AM
#667
Junior Member
Diamond Hubber
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் அண்ணன் திரைக்காவியம் 100 நாளில் மூன்று லட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்து புதிய வெற்றியைப் படைத்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த என் அண்ணன் திரைக்காவியம் அன்று முதல் இன்று வரை வெள்ளித்திரையில் தொடர் பவனி வந்து சாதனையை பதித்தது சிறப்பானதாகும்.
ஒரே ஆண்டில் அதாவது 1969 மே மாதத்தில் வெளியான அடிமைப்பெண் காவியம் முதல் தொடர்ந்து நம்நாடு , மாட்டுக்கார வேலன் 1970 - மே மாதம் வந்த என் அண்ணன் திரைப்படம் வரை நான்கு திரைப்படங்கள் பதித்த சாதனையை இதுவரை திரைப்பட உலகில் ஒரே ஆண்டிற்குள் பதித்த வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது என்பது மகத்தானதாகும்.
நான்கு திரைக்காவியங்கள் சிறப்புகள் சில.---...
அடிமைப்பெண்
16 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது. மாட்டுக்காரவேலன்
14 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது.
நம் நாடு
9 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது.
என் அண்ணன்
4 திரையரங்கில்
100 நாட்கள் ஒடி ..... மொத்தம் 43 திரைகளில் நூறு நாட்கள் ஓடி சரித்திரம் படைத்துள்ளது .
அடுத்து நான்கு திரை காவியங்களும் சென்னை மதுரை திருச்சி சேலம் 100 நாட்களை வெற்றி கொண்டுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாகும்.
நான்கு காவியங்களும் 50 க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளுக்கு மேல் 50 நாளை கடந்து வெற்றியை பதித்துள்ளது.என்பது மிகப்பெரிய சாதனையாகும்
நான்கு திரைப்படங்களும் சென்னையில் ஓடி முடிய கிட்டத்தட்ட 45 லட்சத்திற்கு மேல் வசூலை கொடுத்து சாதனையாகும்.
அதிகபட்சமாக மாட்டுக்கார வேலன் சென்னை, மதுரை வெள்ளி விழா ஆகும்.
அடிமைப்பெண் மதுரையில் வெள்ளிவிழா...
நம்நாடு மதுரையில்133 நாட்களும்,
என் அண்ணன் சேலத்தில் 112 நாட்களும் ஒடியது.
இப்படி அடுக்கடுக்கான சாதனையில்...
4 காவியங்கள் மகத்தான வெற்றி ஆகும்.
அடுத்து...
தொடர் வெற்றி...
3 வண்ணப்படங்கள் வரலாறு...
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக்க்ஷாக்காரன்
சாதனை பற்றி...............
-
8th September 2020, 08:21 AM
#668
Junior Member
Diamond Hubber
சென்னை மாநகரில் தொடர் வெளியீட்டில் இப்படியும் ஒரு மகத்தான சாதனையா.......*
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி.....
தொடர்ந்து வெளியான பட வரிசையில்........
சென்னை நகர வரலாற்றில் தொடர்ந்து வெளியான இதயவீணை,**
உலகம் சுற்றும் வாலிபன்* இரண்டும் சேர்ந்து அளித்த தொகை 34 லட்சத்தை கடந்தது....
*
1974 - நேற்று இன்று நாளை உரிமைக்குரல்*
சிரித்து வாழவேண்டும்*
3 திரைப்படங்களின் வசூல்*
33 லட்சத்தை கடந்தது.
1975 - நினைத்ததை முடிப்பவன்*
நாளை நமதே, இதயக்கனி பல்லாண்டு வாழ்க*
நான்கு திரைப்படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் சென்னை நகரில் வசூலில்* அதிக தொகையான* 56 லட்சத்தை பெற்றது.*
அடுத்து*
1976 - மூன்று திரைப்படங்களான நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள்*
ஊருக்கு உழைப்பவன்*
3 திரைப்படங்களின் வசூல்*
35 லட்சத்தை கடந்தது.
1977 - நவரத்தினம்*
இன்று போல் என்றும் வாழ்க*
மீனவ நண்பன்*
மூன்று திரைப்படங்களும்*
40 லட்சத்திற்கும் மேல் வசூலைக் கொடுத்து அசுர சாதனை புரிந்தது.
1978 ல் மக்கள் திலகத்தின் கடைசி திரைப்படமான*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் வெறும் 8 வாரங்களில் மட்டும் 12 லட்சத்தை நெருங்கியது.*
வசூலில் இப்படி எந்த நடிகர் திரைப்படமும் தொடர்ந்து இவ்வளவு பெரிய தொகையை தொடர்ந்து வசூலிக்கவில்லை என்பது தென்னிந்திய சினிமா சரித்திரத்தில் முக்கிய சாதனையாகும்.
இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளை வசூலில் தக்கவைத்த தொடர் கதாநாயகன் தனிப்பெரும் கதாநாயகன்*
மக்கள் திலகம் தவிர வேறு எவரும் தென்னிந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல இந்திய சினிமா வரலாற்றில் தனி ஒரு நகரில் இப்படி ஒரு வெற்றியைப் அளித்ததாக வரலாறு இல்லை.
தொடர்ந்து வெளியான 14 திரைப்படங்கள் இப்படிப்பட்ட சாதனையை உருவாக்கி உள்ளது என்றால் அது மக்கள் திலகம் ஒருவருக்கே உருவான சாதனையாக போற்றப்படுகிறது.
தொடர்ந்து வெளியான பத்து வண்ணப்படங்கள் படுதோல்வி அடைந்த நடிகர்கள் மத்தியில்*
14 படங்கள் தொடர் வெற்றியில்**
முதல் வெளியீட்டில் மட்டும் சென்னை நகரில் பதித்தது...... மக்கள் திலகத்தின் வரலாறு மட்டுமே சாதனையாக இன்றும் போற்றப்படுகிறது.
தொடரும்..............
-
8th September 2020, 08:22 AM
#669
Junior Member
Diamond Hubber
"இதயவீணை" காவியம் 10 லட்சத்திற்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது*.
வசூல் : 10,12,765.80
உலகம் சுற்றும் வாலிபன் அதுவரை இல்லாத சாதனையில்*
3 திரையரங்கில் ஓடி 23 லட்சத்தை கடந்தது.
வசூல் : 23,40,064.61.*
*
நேற்று இன்று நாளை சாதாரண திரையரங்குகளில் திரையிடப்பட்டு 10 லட்சத்திற்கு மேல் வசூல் : 10,65,105.45
உரிமைக்குரல் திரைக்காவியம் சாதாரண திரையரங்குகளில வெளியிடப்பட்டு
வசூல் : 11,95,891.32
சிரித்து வாழவேண்டும் திரைக்காவியம் 100 நாட்கள் ஓடாமலேயே
வசூல் : 10,55,974.05.
நினைத்ததை முடிப்பவன்*
12 வாரத்தில் சாதனை.
வசூல் : 12,87,490.51
நாளை நமதே திரைக்காவியம்*
9 வாரத்தில் மட்டும்.. வசூல் : 8,82,734.79
இதயக்கனி..... சரித்திரம் படைத்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பின் அதிக. சாதனை.
வசூல் : 19,87,651.90
பல்லாண்டு வாழ்க
100 நாட்களில் படைத்த
வசூல் : 14,53,287.36.
நீதிக்குத் தலைவணங்கு மிகப்பெரிய சாதனை..
வசூல் : 13,10,697.30
உழைக்கும் கரங்கள் திரைப்படம்*
12 வாரத்தில் பெற்ற
வசூல் : 12,42,050.33
ஊருக்கு உழைப்பவன் 50 நாளில் கொடுத்த
வசூல் : 9,13,395.88
நவரத்தினம்
நகரில் 50 நாளில்....
வசூல் : 9,06,378.00
இன்று போல் என்றும் வாழ்க.
வசூல் : 15,29,371.65
மீனவ நண்பன்
வசூல் : 17,76,518.45
மதுரையை மீட்ட சுந்தரப்
பாண்டியன் 58 நாள்
வசூல் : 11,56,560.52...
இப்படி தொடர் காவியங்களை வெளியீட்டு சரித்திரம் படைத்த வசூல்களை தந்த ஒரே திலகமாக...
மக்களின் மாணிக்க திலகமாக திகழ்ந்தவர்...
திரைப்படவுலகின் பேரரசர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே...
இப்படி எல்லாம் சாதனையை படைக்க முடியும் என நீருபித்து காண்பித்தவர்...
இது தவிர மிகப்பெரிய நகாரங்களில் படைத்த இக்காவியங்களின் வசூல் புள்ளி விபரங்கள் மலைபோல் குவிந்துள்ளது....
இன்றைய டிக்கட் விலையில் பார்த்தால்...
சிகரம் போல் மலைப்பாக இருக்கும்..
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை எந்த நடிகர் படத்துடனும் 1977 வரை நாம் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.
மேலும்...
பல நகர சாதனைகள் தொடரும்....
இது தான் வெற்றி...
இது தான் வசூல்......
இது தான் புள்ளி விபரங்கள்.......
இவை தான் உண்மையின் ஆதாரங்கள்.....
பெயருக்கு ஏதாவது ஒரு படத்தை வசூல் என தம்பட்டம் கொள்ளாது...
தொடர் வெற்றி தான் ஒரு கதாநாயகனின் நிரந்தர வெற்றியாகும்...
மேலே குறைந்த நாளில் அதிக வசூலை பெற்ற காவியங்கள்...
மக்கள் திலகத்தின்
அரும்பெரும் காவியமாகும்.....
தொடரும் வெற்றிகள்.............
.
-
8th September 2020, 12:32 PM
#670
Junior Member
Diamond Hubber
இதே முரளி ஸ்ரீனிவாஸ் மையம் திரியில் சென்னையில் ராஜா 3 தியேட்டரில் 100 நாள் ஓடியது என்று தவறான தகவல் பதிவிட்டார்.2 தியேட்டரில் தான் ராஜா திரைப்படம் 100 நாள் ஓடியது. விளம்பர ஆதாரமும் உள்ளது. அதை எல்லாரும் சுட்டிக்காட்டியும் தவறு தெரிந்துவிட்டதால் ஒரு மரியாதைக்கோ, குற்ற உணர்ச்சியாலோ அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. தகவல்களை சரிபார்க்காமல் அடித்துவிடுபவர் முரளி ஸ்ரீனிவாஸ் என்பதற்கு சாட்சியாக மையம் திரியில் இன்னமும் ராஜா திரைப்படம் சென்னையில் 3 தியேட்டரில் 100 நாள் ஓடியது என்ற தவறான தகவல் இடம் பெற்றுள்ளது. அவர் சொன்ன தவறை நம்பி எத்தனை பேர் வீண் வாதம் செய்கிறார்களோ தெரியவில்லை. பாவம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.....
Bookmarks