-
15th September 2020, 08:21 AM
#761
Junior Member
Diamond Hubber
நடிகப் பேரரசர்,
ஏற்கெனவே சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் ராஜா படத்தின் வசூல் மர்மம் பற்றி கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் பதில் சொன்னதாக நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். விஷயம் என்னவென்றால் இவ்வளவு காட்சி ஹவுஸ்புல் ஆனால், இவ்வளவு தொகைதானே வரவேண்டும். ஆனால், கூடுதலாக இவ்வளவு தொகை எப்படி? என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு 11 சிறப்புக் காட்சிகள் கூடுதல் என்று கணக்கு காட்டியிருக்கிறார்களாம். சரிதான். ஏற்றுக் கொள்ள வேண்டிய கணக்குதான். ஆனால் வெறும் 50 நாள் கணக்கை அதுவும் தேவி பாரடைஸ் அரங்கில் மட்டும் காட்டி மொத்தமாக ரிக்*ஷாக்காரனை விட ராஜா திரைப்படம் அதிக வசூல் செய்த படம் என்று காட்ட முனைந்திருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?.. பார்ப்போம்.
நீங்கள் போட்ட போட்டில் அவர்களிடம் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது, ரிக்க்ஷாக்காரன் படத்துக்கு பிறகு 1972 ம் ஆண்டில் ஜனவரியில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினார்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படி டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தியதால்தான் தேவி பாரடைஸ் அரங்கில் 50 நாட்களில் ரிக்க்ஷாக்காரனைவிட ராஜா திரைப்படம் ஒரு சில ஆயிரங்கள் கூடுலாக வசூல் பெற்றுள்ளது என்ற உண்மையை அவர்களை அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். படிப்பவர்கள் நன்றாக கவனிக்கவும். தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வுதான் முதல் 50 நாட்களில் ராஜா படத்தின் ஓரளவு கூடுதல் வசூலுக்கு காரணம். இன்னொன்றையும் முக்கியமாக கவனியுங்கள். அப்படி கட்டணம் உயர்த்தப்பட்டும் கூட 50 நாட்களில் மட்டுமே ராஜா திரைப்படம் தேவி பாரடைஸ் அரங்கில் மட்டும் கூடுதல் வசூல் பெற்றுள்ளது. 75 மற்றும் 100 நாட்களில் ரிக்க்ஷாக்காரனை ராஜா-வால் நெருங்க முடியவில்லை. அப்படி நெருங்கியிருந்தால் சும்மா இருப்பார்களா? இதோ ஆதாரம் என்று குதிக்க மாட்டார்களா?
அதுவும் இந்த 50 நாள் வசூல் கூடுதல் கணக்கு வெறும் தேவி பாரடைஸ் தியேட்டரில் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக சென்னையில் ரிக்க்ஷாக்காரன் தேவி பாரடைஸ், ஸ்ரீகிருஷ்ணா, சரவணா தியேட்டர்களில் முதல் 50 நாளில் பெற்ற வசூலுக்கும் ஒட்டு மொத்தமாக சென்னையில் ராஜா திரைப்படம் தேவி பாரடைஸ், அகஸ்தியா, ராக்ஸி தியேட்டர்களில் முதல் 50 நாளில் பெற்ற வசூலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இரண்டு படங்களின் 50 நாள் விளம்பரத்தில் உள்ள தொகையை கூட்டிப்பார்த்தால் இந்த உண்மை தெரியும்.
இடமின்மையால் தொடர்ச்சி அடுத்த பதிவில் ............
-
15th September 2020 08:21 AM
# ADS
Circuit advertisement
-
15th September 2020, 03:26 PM
#762
Junior Member
Diamond Hubber
என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது
பொற்கால ஆட்சி வழங்கிய பொன்மனச் செம்மல் அவர்களை “இதயக்கனி” என்று போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இன்று, அவரின் பெருமைகள் பற்றியும், அவர் உருவாக்கிய தி.மு.க.வையும் அதன் சின்னமாகிய உதயசூரியனையும் பிரபலப்படுத்தும விதமாக நமது மக்கள் திலகம் அவர்கள் தனது திரைக் காவியங்கள் மூலமும். அரிசயல் நிகழ்வுகள் மூலமும் எப்படியெல்லாம் நினைவு கூர்ந்தார் என்பதை விளக்கும் பதிவு இது :
1. திரைக்காவியம் : நாம்
அண்ணா வாழ்கவே, குமரஅண்ணா வாழ்கவே!
2. திரைக்காவியம் : பெற்றால்தான் பிள்ளையா
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்
3. திரைக்காவியம் : நம் நாடு
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
4. திரைக்காவியம் : எங்கள் தங்கம்
சந்தனப் பெட்டியில் உறங்குகிறார் அண்ணா – சரித்திரப் புகழுடன் விளங்குகிறார்
5. திரைக்காவியம் : உரிமைக்குரல்
அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுவே
6. திரைக்காவியம் : நேற்று இன்று நாளை
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
7. திரைக்காவியம் : பல்லாண்டு வாழ்க
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
8. திரைக்காவியம் : பணம் படைத்தவன்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
9. திரைக்காவியம் : இதயவீணை
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
10. திரைக்காவியம் : நவரத்தினம்
உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்
11. திரைக்காவியம் : மீனவ நண்பன்
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
12. திரைக்காவியம் : நினைத்ததை முடிப்பவன்
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது
13. திரைக்காவியம் : கண்ணன் என் காதலன்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
14. திரைக்காவியம் : புதிய பூமி
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
இவைகள் தவிர --------
1. “விக்கிரமாதித்தன்” திரைக் காவியத்தில் தி.மு.க. வின் சின்னமான “உதய சூரியனை” தனது நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்வார்.
2. “சக்ரவர்த்தி திருமகள்” காவியத்தில் தந்து கதாபாத்திரத்தின் பெயருக்கு “உதய சூரியன்” என்று சூட்டி மகிழ்ந்தார்.
3. “நல்லவன் வாழ்வான்” திரைக் காவியத்தில் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற பாடல் காட்சியின் இடையே “உதய சூர்யன் எதிரில் இருக்கையில் உள்ளத் தாமரை மலராதோ, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்ட பொழுதும் புலராதோ என்ற வரிகள் ஒலிக்கும்.
4. “விவசாயி” திரைக் காவியத்தில்,
a) இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி, எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி என்ற பாடல் வரிகளில் இறுதியாக பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி என்று காட்சி வரும் போது, தி.மு.க. வின் கொடியை காண்பித்து மகிழ்வார்.
b) அதே பாடல் வரிகளில், பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி என்ற வார்த்தை வரும் பொழுது, பேரறிஞர் அண்ணா அவர்கள் திரு வுருவமும் காண்பிக்கப் படும்.
5. “எங்கள் தங்கம்” திரைக் காவியத்தில் “கேளம்மா கேளு, நான் காஞ்சி புரத்தாளு” என்று பதில் சொல்லி பரவசம் அடைவார்.
6. நரசிம்ம பல்லவர் கதையை விளக்கும் காவியத்துக்கு “காஞ்சித் தலைவன்” என்று பெயரிட்டு பேருவகை கொண்டார்.
7. “ரிக்ஷாக்காரன்” திரைக் காவியத்தில் இடம் பெற்ற “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என்ற பாடலில் அறிஞர் அண்ணாவின் புகைப்படம் அருகே நின்று கொண்டு பாடுவார்.
8. “தெய்வத்தாய்” திரைக் காவியத்தில் இடம் பெற்ற “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற பாடலையை, ‘அண்ணா” என்ற மூன்று எழுத்தையும், தி.மு.க. என்ற மூன்று எழுத்தையும் குறிக்கும் விதமாக பாடப் பட்டிருக்கும்.
9. “நான் ஆணையிட்டால்” திரைக்காவியத்தில், “பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே” பாடலின் இடையில் வரும் வரிகளாக “உதய சூரியனின் நல் வரவு” என்று ஒலிக்கும்.
10. “இதயக்கனி” திரைக் காவியத்தில், புரட்சித் தலைவரை ‘இதயக்கனி’ என்று அழைத்ததற்கான விளக்க உரையோடு அறிஞர் அண்ணா பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
11. “அன்பே வா” திரைக் காவியத்தில், “புதிய வானம் புதிய பூமி” என்ற பாடல் வரிகளின் இடையே சூரியனின் உதயத்தை காண்பித்து, “உதய சூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று பாடி உவகை அடைவார்.
12. “எங்க வீட்டு பிள்ளை” திரைக் காவியத்தில், “நான் ஆணையிட்டால்’ என்ற பாடலின் இடையே வரும் வரிகளாக, “என் தலைவன் உண்டு, அவன் கொள்கை உண்டு” என்று இடம் பெற்றிருக்கும்.
13. “என் அண்ணன்” திரைக் காவியத்தில், “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் காட்சியில் குதிரை வண்டி ஒட்டிக் கொண்டு வரும் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை வணங்குவது போல் காட்சி இடம் பெறும்.
14. “கணவன்” காவியத்தில், “அடி ஆத்தி ஆத்தி” என்ற பாடல் காட்சியின் நடுவில், “அன்பு வழி நடந்தவனோ நாட்டினை பிடித்தான்” என்ற வரி வரும் போழ்து, அறிஞர் அண்ணாவின் பொம்மை காண்பிக்கப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது 06-03-1968. இக்காவியம் குறுகிய இடைவெளியில் 15-8-1968ல் வெளியாகி, இந்த பாடலின் வரிகள் இடம் பெற்றது தனிச் சிறப்பு. இது கவனத்தில் கொள்ளத் தக்கதும் கூட.
15. “அன்னமிட்ட கை” திரைக் காவியத்தை, வெள்ளிக்கிழமையாக வரும் அண்ணா பிறந்த நாளன்று 1972ல் அதாவது 15-09-1972 அன்று வெளியிடச் செய்தார்.
16. “ஒரு தாய் மக்கள்” என்ற திரைக் காவியத்தின் “இங்கு நல்லாயிருக்கனும் எல்லோரும்’ என்ற பாடலின் இடையே வரும் வரிகளாக, கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு” என்று இடம் பெற்றிருக்கும்.
17. அறிஞர் அண்ணாவின் உருவம் பொதித்த கட்சிக் கொடியை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் வடிவமைத்து, அதனை “உலகம் சுற்றும் வாலிபன்” திரைக் காவியத்தில், காட்டி புளகாங்கிதம் அடைந்தார்.
அரசியல் என்று எடுத்துக் கொண்டால், தான் தோற்றுவித்த இயக்கத்துக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை வைத்து, கட்சியின் கோடியில் அவரின் உருவத்தை பதிக்கச் செய்து, கட்சிக் கொள்கைக்கு “அண்ணாயிசம்” என்று பெயர் வைத்து, தனது உரையை முடிக்கும் போழ்து “அண்ணா நாமம் வாழ்க” என்று கூறி, பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை மேம்படுத்துவார். அது மட்டுமல்லாமல், தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயலாற்றும் பொழுதும், இது “அண்ணாவின் அரசு” என்று கூறித்தான், பெருமிதம் கொள்வார்.
இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் ..... அண்ணாவின் பெருமைகளை புரட்சித் தலைவர் அவர்கள் பறை சாற்றியது பற்றி !
பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மைத் தம்பி, அருமைத் தம்பி, அன்புத் தம்பி, அவரின் இதயக் கனி நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான். .........
-
15th September 2020, 09:09 PM
#763
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/08/20அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கை விதையாக, உற்சாக ஊற்றாக, நிழல் தரும் மரமாக நெஞ்சமெல்லாம் இனிக்கிற நினைவுகளாக மக்கள்* திலகம் எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பூரித்து போகின்ற மனங்கள் பெருகி கொண்டே இருக்கிறார்கள் .
மும்பை தாராவி புலவர் ராமச்சந்திரன், திருச்சி மிளகு பாறை மஜீத் போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியை பற்றி* சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள் . அன்பே வா படத்தில் வரும் பாடலை கம் செப்டம்பர் பாடலுடன் ஒப்பிட்டு சொன்னீர்களே அது அபாரம் என்கிறார்கள் .அப்படி இன்னமும் அவரை ரசிக்கின்ற ரசிகர்களாக ,அவரை நேசிப்பவர்களாக, அவரை உள்ளத்தில் ஏந்தி கொள்பவர்களாக லட்சக்கணக்கான நபர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு சாட்சியாக பல்வேறு விஷயங்களை நாம் தெரிவித்து வருகிறோம்.* காரணம் எம்.ஜி.ஆர். என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல .ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு நம்பிக்கை நட்சத்திரம் .ஒரு காலத்தில் வளர்ச்சியடையாத சென்னையில் மாதம் ரூ.15/- க்கு வாடகை வீட்டில் குடியிருந்த ஒரு எளிய, சாதாரண, சாமான்ய மனிதர் தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தமிழகத்தையே ஆளும் முதல்வராக வரக்கூடிய வல்லமை பெற்றார் .வாய்ப்பை பெற்றார், மக்கள் அவருக்கு அப்படி ஒரு உன்னத வாய்ப்பை அளித்தார்கள் என்றால் அவர் என்னவிதமாக வாழ்ந்தார் ,எப்படி வாழ்ந்தார்.எப்படி மக்களின் உள்ளங்களை அறிந்து கொண்டார் என்பதெல்லாம் நமக்கு கிடைத்த பாடம் ,படிப்பினை, அவர் ஒரு பல்கலை கழகம் .அந்த பல்கலை கழகத்தில் உள்ள பாடங்களை சகாப்தம் நிகழ்ச்சியில் தொடர்ந்து பார்ப்போம் .
திருப்பதிசாமி என்கிற நடிகர் பெயர் இல்லாமல் எம்.ஜி.ஆர். படங்கள் இல்லை என்கிற காலம் உண்டு . அப்படி அவரது பெரும்பாலான படங்களில் , மன்னராகவோ, மந்திரியாகவோ,நீதிபதியாகவோ, காவல்காரராகவோ, மருத்துவராகவோ, இன்ஸ்பெக்டராகவோ, காவலராகவோ,,அடியாளாகவோ* வேடங்கள் ஏற்று நடித்தவர் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் .உற்ற நண்பனாகவும் இருந்தார் . எம்.ஜி.ஆர். நாடக குழுவில் உறுப்பினராக இருந்தவர் . எம்.ஜி.ஆர். சினிமாவில் பிரபலம் ஆகுவதற்கு முன்பே தொடர்பில் இருந்தவர் . எம்.ஜி.ஆரின் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் . திருப்பதிசாமிக்கு*ஐந்து குழந்தைகள் .அவர்களை படிக்க வைக்கவும் ,திருமணம் செய்து வைக்கவும் அனைத்து உதவிகளை எம்.ஜி.ஆர்.தான் செய்தார் . திருப்பதிசாமியின் குடும்பநலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அனைத்து விஷயங்களிலும்*எம்.ஜி.ஆர். பங்கேற்று* அவரது குடும்ப விளக்கை ஏற்றி வைத்தார் . இப்படி பலரது குடும்ப பொறுப்புகளை தானே வலியவந்து அவர்களது சுமைகளை ஏற்று சுமந்தவர் எம்.ஜி.ஆர். என்பது இந்த கால நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .
நடிகர் தங்கவேலு அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்திருப்பார் . அப்போது வேலை தேடி வந்த திரு.ரவீந்தர் ( இவர் ஒரு இஸ்லாமியர் .பின்னால் இவர் பெயரை ரவீந்தர் என எம்.ஜி.ஆர். மாற்றி வைக்கிறார் )தங்கவேலுவை தேடி வருகிறார் . தங்கவேலு ஒரு சிபாரிசு கடிதம்*எழுதி கொடுத்து அவரை எம்.ஜி.ஆரை சந்திக்க வைக்கிறார் . ரவீந்தர் எம்.ஜி.ஆரை சந்தித்ததும், உங்களுக்கு என்ன தெரியும், என்ன அனுபவம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். கேட்க, தான் எழுதிய நாடக கதையை காண்பிக்கிறார் .அப்போது உங்கள் பெயரை ரவீந்தர் என்று மாற்றி வைக்கிறேன் என்கிறார் . அந்த ரவீந்தர் எம்.ஜி.ஆர். குறித்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார் .கோடி மாலைகள் தாங்கிய எம்.ஜி.ஆர்.* தோள்கள்**என்ற சிறப்பான நூலையும் எழுதியுள்ளார் .பல காலம் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர் ரவீந்தர் . தன்னை நம்பி வந்தவர்களின் நலத்தில், வளர்ச்சியில்,முன்னேற்றத்தில்* மிகுந்த அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.என்பதற்கு பல சான்றுகள் கூறலாம் . அதனால்தான் நாடோடி மன்னன் படத்தில் அதற்கேற்றாற் போல ஒரு வசனம் இருக்கும் . என்னை நம்பாமல் கெட்டவர்கள்* பலருண்டு .நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை .அந்த வசனத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி,பலத்த கைதட்டல்கள்*அரங்குகளில் எதிரொலிக்கும் .
எம்.ஜி.ஆர். விழுப்புரம் பக்கம் செல்லும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்திலபெட்ரோல் பங்கில்**பெட்ரோல் போடுவதற்கு*காரை நிறுத்திவிட்டு ,அந்த ஆறாவது மர நிழலில் ஒரு மூதாட்டி வடை விற்கிறார் .அவரிடம் சென்று ரூ.200 /- கொடுத்து வாங்கி வாருங்கள் , மீதி பணம் திரும்ப வாங்க வேண்டாம் .எவ்வளவு வடைகள் தருகிறார்களோ* அதை மட்டும் வாங்கி வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் உதவியாளரிடம் . ஆனால் அந்த மூதாட்டியிடம் மீதி பணம் தருவதற்கு சில்லறை இல்லை . எம்.ஜி.ஆர். எப்போது இந்த பக்கம்* சென்றாலும் இதே போல வடைகள் வாங்கிவிட்டு மீதி பணம் வாங்க வேண்டாம் என்று சொல்கிறார் .இது தொடர்கதை ஆகிறது . இந்த மூதாட்டிக்கு சந்தேகம் . இவர்கள் யார் என்று தெரியவில்லை .மீதி பணம் வாங்காமல் செல்லுகிறார்கள் என்று அருகில் உள்ள நபர்கள், டிரைவர்களிடம் விசாரிக்கிறார் .ஆனால் முறையான, பதில், விடை கிடைக்கவில்லை .ஒருநாள் தட்டிலே வடைகள் வைத்துவிட்டு ஒரு ஓரமாக நின்று அந்த மூதாட்டி நோட்டமிட்டபடி இருந்துள்ளார் . அப்போது எம்.ஜி.ஆரின் கார் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் முன்பு நிற்பதையும் அவரின் உதவியாளர் தட்டில் பணம் வைத்துவிட்டு வடைகள் எடுத்து செல்வதையும் பார்த்துவிட்டு, பின்னாலேயே ஓடி வந்து எம்.ஜி.ஆரிடம்,ஐயா ,தர்மபிரபுவே, நீங்கள்தான் எனக்கு கணக்கில்லாமல் பணம் கொடுத்து ,இந்த ஏழையின்* வடைகள் வாங்குகிறீர்கள் என்பது எனக்கு இத்தனை நாட்கள் தெரியாமல் போனது .*நீங்க நல்லா இருக்கோணும் என்கிறார் .அதாவது உங்களுக்கு அன்பளிப்பாகவோ, நன்கொடையாகவோ பணம் கொடுத்தால் ,உங்கள் உழைப்பை மதிக்காதது போல் ஆகிவிடும் என்றுதான் பணம் கொடுத்து வாங்கினேன்,நீங்கள் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது* என்று கூறி மேலும் கொஞ்சம் பணம் கொடுத்தார் . வறியோர்கள், முதியோர்கள் ,ஆதரவற்றோர்களை காப்பாற்ற* இது போன்ற உதவிகள் அவ்வப்போது செய்து வந்தது மட்டுமில்லாமல், தான் முதல்வரானதும் ,முதியோர்,நல உதவி திட்டம் ஒன்றை அரசு சார்பில் தொடங்கி வைத்தார் .இந்த திட்டம் பற்றி 1958ல் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தில் அறிவிக்கும் பல திட்டங்களில் இதுவும் இடம் பெற்றிருக்கும் . என்பது குறிப்பிடத்தக்கது ..*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆடி வா ,ஆட பிறந்தவளே ஆடி வா - அரச கட்டளை*
2.தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை- நான் ஆணையிட்டால்*
3.எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - தேடிவந்த மாப்பிள்ளை*
4.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் -குடியிருந்த கோயில்*
5.எம்.ஜி.ஆர். -ராமதாஸ் உரையாடல் - ரிக்ஷாக்காரன்*
6.நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர்.*.*
-
16th September 2020, 09:22 AM
#764
Junior Member
Diamond Hubber
சொல்வதெல்லாம்
உண்மை .
______________________
மக்கள் திலகத்தின் படங்களில் 99 சதவீதம் மறு வெளியிட்டில் தான் பார்த்தேன் .
படம் பார்க்க பெற்றோரகளிடம் கடும் தவம் புரியவேண்டும் .
முருகன் திரையரங்கம் வீட்டின் அருகில் இருந்ததால் இத் திரையரங்கில் மட்டும் பெற்றோர்கள் கருணை கண் திறப்பர் .
பள்ளிக்கு செல்லும் பொழுது என் தலையாய கடமை முருகன் திரையரங்கில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களை பார்ப்பது .
அப்படி காணும் பொழுது கன்னித்தாய் படத்தின் ஸ்டில்ஸ் ஒட்டப் பட்டிருந்தது .
என் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .
சொன்னாலும் புரியாது
சினிமா பார்க்க போடும் திட்டங்கள் .
திட்டம் நிறைவேறியதால் படம் பார்க்க புறப்பட்டேன் .
டிக்கட் 56 பைசா என்னிடம் 65 பைசா இருந்தது என்னுள் ஒரு திமிர்.
சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கன்னித்தாய் படத்தின் போஸ்டர்களை பார்த்தவாறே பெருமிதத்துடன் நடந்தேன் .
சம்பரதாய தள்ளு முல்லுகளை அனபவித்து ஒரு வழியாக கன்னித்தாய் படத்தினை காண ஆயுத்தமானேன் .
படம் போட்டவுடன் விசில் சத்தம் அதிரந்தது .
ஆனால் படம் திரையிட்டது தனிப்பிறவி !
அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் முகத்தில் ஒருவருக்கும் கேள்வி குறிகளோ ? ஆச்சரியக்
குறிகளோ தென்படவில்லை !
மக்கள் திலகம் ஓர் அதிசயமே !
எங்களுக்கு தேவை அவர் முகம் மட்டுமே சொல்லாமல் விளக்கிய ரசிகர்கள் கூட்டம் !
நான் சொன்னதெல்லாம் உண்மை .......... Hd.,
-
16th September 2020, 09:24 AM
#765
Junior Member
Diamond Hubber
தலைசிறந்த மாமனிதரின் கொள்கைப்பற்று
********************
நான் எனக்கென்று எதையும் சேமித்து வைக்கும் எண்ணம் கொண்டவன் கிடையாது....
எதாவது தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் கிடையாது.
உழைக்கின்றேன்....
வறுமையில் வாடுபவர்களுக்கு அதன் மூலம் என் பணியை செய்கின்றேன்.
நான் மனிதர்களை மட்டும் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனாக
வாழ்கின்றேன்.
எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தால் அது என் தவறாகும்.
(புரட்சியார் விதைத்த அழமான கருத்தில் இருந்து..... 1972)
"தியாகத்தையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்த புரட்சித்தலைவரின் வழியில்".....யாம்.........ur
-
16th September 2020, 01:02 PM
#766
Junior Member
Diamond Hubber
"இதயக்கனி": வண்டு துளைத்தது என்று துரோகிகளால் தூக்கியெறியப்பட்ட கனி எதிரிகளின் ஊழல் கோட்டையை
தகர்த்து. ஊழல் பெருச்சாளிகளை
விரட்டி விட்டு மக்கள் ஆதரவு பெற்ற
நல்லாட்சியை அமைத்துக் கொடுத்தது. அரசியலில் மட்டுமல்ல கலைத்துறையிலும் 1975 ம் ஆண்டு திரையிட்ட அநேக படங்களை தூக்கியெறிந்து முதல் இடம் பெற்ற படம்தான் "இதயக்கனி".
எதிர் முகாமிலிருந்து வந்த ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் அவர்கள் "இதயக்கனி"யின் வெற்றி விழாவில் எம்ஜிஆரின் ஒவ்வொரு படமும்
மற்ற நடிகர்களின்
25 படங்களுக்கு சமம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டதை
திரைப்படத்துறையை சார்ந்த அனைவரும் வரவேற்றார்கள்.
அந்த தயாரிப்பாளரும் பல படங்கள் தயாரித்து கையில் உள்ள சில்லரையை இழந்து ஒரு படமாவது எம்ஜிஆரை வைத்து தயாரித்திருக்கலாமே என்ற ஏக்கத்தில் பேசியது, திருடனுக்கு தேள் கொட்டியது போல மாற்று அணி ரசிகர்கள் வாய் பேச முடியாமல் மெளனம் காத்தனர். இன்று அவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் சிவாஜி படத்தின் வசூலாக புலம்பி வருகின்றனர். இவர்களுக்கு யார் இந்த கற்பனை வசூலை தியேட்டர் பங்கு, விநியோகஸ்தர் பங்கு என பிரித்து கொடுக்கிறார்களா? தெரியவில்லை.
இதற்கான தொழிற்கூடத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
சிவாஜியால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களிடம் அவர்களை ஒப்படைத்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.அதிலும் ஒரு உளறுவாயன் சிவாஜி நடித்த படங்கள்தான் ஒரு ஆண்டில் 60 சதவீத வசூல் கொடுக்கிறதாம். மற்ற நடிகர்களின் எல்லா படங்களும் சேர்ந்தே 40 சதவீத வசூல்தான் கொடுக்கிதாம். இப்படி கீழ்ப்பாக்க கேஸ்கள் நிறைய அலைகிறது. 1975 ல் வெளியான மொத்த படங்கள் 59
என்கின்றன புள்ளி விபரங்கள். அதில் எம்ஜிஆர் நடித்த படங்கள் 4.
"நினைத்ததை முடிப்பவன்" "நாளைநமதே" "இதயக்கனி" "பல்லாண்டு வாழ்க" ஆகியவை. முக்தா சீனிவாசன் கூறிய படி "இதயக்கனி" மட்டுமே 25 படங்களின் வசூலுக்கு சமம் என்றால் மற்ற எம்ஜிஆர் படங்கள் எல்லாம் சேர்த்து சுமார் 80 சதவீதத்துக்கும் மேலே வசூல் செய்தால் மீதம் இருக்கின்ற 20 சதவீதத்தில் பாவம் கணேசனின் பங்கு என்ன? என்று முடிவு செய்ய முடியும். அதனால்தான் சிவாஜி படம் எடுப்பவர்கள் சீக்கிரம்
i p கொடுத்து விடுகிறார்கள் போலும்.
அப்படிதான் தற்போது "வெள்ளை ரோஜா" என்று புலம்பி வருகின்றனர்."வெள்ளை ரோஜா"வில் யார் நடித்தாலும் அது ஹிட் ஆகியிருக்கும். "போஸ்ட் மார்ட்டம்" என்ற சூப்பர் ஹிட் அடித்த
மலையாளப் படத்தின் ரீமேக்தான் "வெள்ளை ரோஜா" அது எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற படம்.
ஏதோ சிவாஜி நடித்ததில் ஹிட் ஆன மாதிரி ரீல் விடுகிறார்கள். அதிலும் அவர் மெயின் ரோல் கிடையாது.
சிவாஜியை போல் மிகையில்லாமல் அவரது மகன் பிரபு நடித்திருப்பார்.
அவர் பெரியப்பா, எம்ஜிஆரின் ரசிகர் அல்லவா? அவர்தான் கதாநாயகன், நாயகி அம்பிகா,ராதா.
இது போன்ற இளம் நாயகர்களின் தேரோட்டமாக வந்து "இதயக்கனி" டைரக்டர் a.ஜகந்நாதன் இயக்கத்தில்
வெளியான படம். படத்தின் வெற்றிக்கு சொந்தக்காரர் பிரபு அம்பிகா ஜோடி. இதில் குணசித்திர வேடத்தில் நடித்த சிவாஜி என்ன செய்தார் என்று தெரியவில்லை.
வேறு நல்ல நடிகர்களை கூட நடிக்க வைத்து படம் வெற்றியடைந்தால் தன்னால்தான் என்று சிவாஜி ரசிகர்கள் கூவுவது வழக்கமாகிவிட்டது. படம் தோல்வியடைந்தால் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
மகனாக இருந்தாலும் அதேகதிதான்.
இப்படி அடுத்தவர்கள் வெற்றியில் குளிர்காய்வது சிவாஜி ரசிகர்களுக்கு வாடிக்கை. அது பிரபுவின் வெற்றிதான் என்பதை
அடுத்தடுத்த படங்களில் நிரூபித்தார்.
அதுவும் "சின்னதம்பி"யின் வெற்றி சிவாஜியால் நினைத்துகூட பார்க்க
முடியாத ஒன்று. அதேபோல் சிவாஜியும் தனது அடுத்தடுத்த படுதோல்வி படங்கள் அவருக்கும் "வெள்ளை ரோஜா"வின் வெற்றிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபித்தார்.
"இரு மேதைகள்" "படிக்காத பண்ணையார்"
"எமனுக்கு எமன்""
(தயாரிப்பாளர்களுக்கு) "நாம் இருவர்" இன்னும் இது போல
பல படங்கள் தயாரிப்பாளர்களை பார்சல் பண்ணியதை மறக்க முடியுமா? . தோல்வி ஒன்றா! இரண்டா! எடுத்துச் சொல்ல..ஆதலால் தயவுசெய்து "வெள்ளை ரோஜா" வை விட்டு விடுங்கள். சிவாஜியின் அட்டகாசம் தாங்க முடியாமல் பிரபுவும் தகப்பருடன் சேர்ந்து நடிக்க மறுத்து விட்டார்.
இந்த பொய் வசூல் கணக்கை அப்போதே தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்தால் அவர்களில் நிறைய தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். பேப்பரில் எழுதிக் காட்டியதெல்லாம் வசூலாகுமா? ஆனால் அவர்கள் எழுதிக் காட்டி ஏமாற்றிய வசூல் கணக்குகளை தாண்டி புரட்சி தலைவரின் "இதயக்கனி" வசூல் ஈட்டிய ஆதாரங்கள் இதோ உங்களிடம்.
இதயக்கனி சென்னை நகர மொத்த வசூல் ரூ 19,87,875.39.
சத்யம். 105. ரூ 8,56,362.50
மகாராணி. 105. ..4,64,984.50
உமா. 105. 3,78,876.49
கமலா. 72. 2,87,651.90
. ........... ----------------------
387 19,87,875.39
----------------------
மதுரை. சிந்தாமணி 146. 5,52,218.33
கோவை சென்ட்ரல். 105. 4,96,451.55
வேலூர் கிருஷ்ணா. 100. 4,02,884.76
சேலம் அப்சரா. 107. 5,08,748.20
திருச்சி பேலஸ். 118. 3,87,790.35
ஈரோடு ராயல். 109. 2,85,329.54
நெல்லை சென்ட்ரல்100. 2,88,223.70
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர், நெல்லை ஆகிய எட்டு ஊர்களில் மட்டும் பெற்ற வசூல் ரூ 50 லட்சத்தை கடந்து இமாலய சாதனை படைத்தது. மேலும் 1975 ல் தமிழகத்தில்
50, 75, 100 நாட்கள் அதிக திரையரங்குகளில் ஓடி 5 மாத காலத்துக்குள் 46 திரையரங்குகளில் 1 கோடியே 10 லட்சம் வசூலாக பெற்று புதிய சாதனையை படைத்தது. சென்னையில் மிக குறுகிய காலத்தில் அதிக வசூல் பெற்ற காவியம் "இதயக்கனி.".........
-
16th September 2020, 01:19 PM
#767
Junior Member
Diamond Hubber
சில 'உதவாக்கரைகள்' சூரியனை பார்த்து ஏதோ குரைக்கிறது என சொல்வார்களே அது போன்று உளறி கொட்டுவதாக நண்பர் சொன்னார். நான் அவருக்கு சொன்னேன், பாவம் அவர்கள் ஆதங்கம், இயலாமை, முடியாமை, எந்த ஜென்மத்திலும் தீராத அபிலாஷைகள் அந்த நடிகர் குடும்ப உறுப்பினர்கள் கூட கவலைப்படாத சில ஆசைகளை நிறைவேற்ற கொஞ்சம் கூட திறமையோ வேறெதுவும் இல்லாமல் (ரெண்டும் கெட்டான்) ஆகவே இருந்து போய் சேர்ந்தாரே.. என்ற சொல்லொண்ணா துயரத்தில் புலம்புவது, வெம்புவது அவங்களுக்கு புதிதில்லை. அப்பப்ப பதில் வினைகள் ஆற்றுவதாக நினைத்து எப்போதும் முட்டாளாக, மூடர்களாக இருந்து வருவதில் நமக்கெங்கும் நஷ்டமில்லை, குறைவில்லை...அவ்வளவே...
-
16th September 2020, 06:05 PM
#768
Junior Member
Diamond Hubber
#கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே
1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...
பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...
அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...
அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..
அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...
அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...
'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...
அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...
வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...
இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் பல திருவிளையாடல் தான்............
-
16th September 2020, 08:51 PM
#769
Junior Member
Diamond Hubber
நினைத்ததை முடித்த நம் தலைவர் உடன் ஒரே அந்த படத்தில் நடித்தவர் சாரதா அவர்கள்.
துலாபாரம் படத்துக்கு அவர் நடிப்பில் வியந்து தேசிய விருது கொடுத்தது மைய அரசு.
மலையாளம் தெலுங்கு மற்ற பிற மொழி படங்களில் மிகவும் அவர் பிசி ஆக இருந்த நேரத்தில்" நினைத்ததை முடிப்பவன் " படத்தில் அவரை தலைவருக்கு தங்கை வேடத்தில் நடிக்க கோரிய போது.
வேண்டாம் நான் பல மொழி படங்களில் பிசி.
அவரோ அரசியல் மற்றும் சினிமாவில் பிசி...இருவர் தேதியும் ஒன்றாக செல்ல முடியாமல் படத்துக்கு ஆபத்து வரும்...என்று மறுக்க.
தலைவர் அவர் சொன்ன செய்தி அறிந்து முதலில் அவரே தேதிகளை நடிக்க கொடுக்கட்டும்.
அதே தேதியில் நான் சம்மதிக்கிறேன் என்று சொல்லுங்கள்...இந்த வேடத்துக்கு அவரே மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நான் சொல்லியதாக அவரிடம் சொல்லுங்கள் என்றவுடன்....
மறுப்பு தெரிவிக்க முடியாமல் அன்று உச்சத்தில் இருந்த ஊர்வசி சாரதா அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க..
இதுவரை அவர் கதாநாயகி ஆக கூட நடித்த படத்துக்கு கொடுக்க படாத உயர்வான தொகையை தலைவர் பேசி அவருக்கு வாங்கி கொடுக்க....
அசந்து வியந்து போனார் நடிகை சாரதா அவர்கள்..என்ன ஒரு தீர்க்கதரிசி அவர் என்று படம் வெற்றிக்கு பின் பல நாட்கள் புலம்பி தீர்க்கிறார் அவர்.
படம் தலைவர் எண்ணம் போல அருமையாக வந்து மாபெரும் வெற்றி அடைந்த வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தம்..
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் அன்று ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை.
ஏன்...இன்று வரை கூடவே.
அன்று ஊர்வசி சாரதா அவர்கள் நடிப்பை பார்த்து கண்ணீர் சிந்தாத தாய்மார்கள் தமிழகத்தில் இல்லை
அதுதான் தலைவரின் வெற்றி ரகசியம்..யாரை எந்த ரோலில் போட்டு உடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து.
நினைத்ததை முடித்தவர் அவர் புகழ் என்றும்...காப்போம்.
நன்றி..உங்களில் ஒருவன்...தொடரும்..
திரையில் மட்டும் அல்ல இந்த தமிழ் தரையில் கூட கணிக்க முடியாத தலைவர் அவர்..நன்றி..........
-
16th September 2020, 08:52 PM
#770
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (m.l..c.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016
24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்..........
Bookmarks