-
17th September 2020, 08:02 PM
#781
Junior Member
Diamond Hubber
"புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;"
1962 க்குப் பிறகு புரட்சித்தலைவரின் சினிமா வெற்றி, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. தர்மம் தலை காக்கும், பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப் பின்பாசம், காஞ்சித் தலைவன், வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ஆணையிட்டால், நாடோடி, தனிப்பிறவி, தாயிக்குத் தலைமகன் போன்ற படங்கள் சூப்பர் ரூப்பா வெற்றி அடைந்தன.
இந்த படங்களின் காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் எல்லாம் தி.மு.க வெற்றிக்கு புரட்சித்தலைவர் மட்டும்தான் காரணம் என்பதை உறுதியாகவே நம்பினார்கள். அதனால்தான் அன்றைய நிலையில் கலைஞார் கருணாநிதியும் ஒரு கவிதை எழுதி எம்.ஜி.ஆரைப் பாரட்டினார்.
இதுதான் கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவரை வெளிப்டையாகப் பாரட்டி எழுதிய கவிதை.
கருணாநிதி – எம்.ஜி.ஆர்.
‘வென்றாரும் வெல்லாரும்
இல்லாத வகையில் ஒளிவீசம் தலைவா..
குன்றனைப் புகழ்கொண்ட குணக்குன்றே ‚
முடியரசர்க்கில்லாத செல்வாக்கொல்லாம்
முழுமையுடன் விளக்கம் முழுமதியே‚
தென்னாடும் தென்னவரும் உள்ள வரை
மன்னா உன் திருநாமம் துலங்க வேண்டும்.
உன்னாலே உயர் வடைந்த என் போன்றோர்’’
உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும்‚”
இந்தத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக எம்.ஜி.ஆர் வெற்றி அடைந்தார். எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்த பேரறிஞர் அண்ணா, அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து கௌரவப்படுத்தினார்.
புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;
யாருமே எதிர்பாராத வகையில் 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்தார். தற்காலிக முதல்வாரன நாவலர் நெடுஞ்செழியன், நிரந்தர முதல்வர் பொறுப்புக்கு வருவார் என்று கட்சினரும் மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் புரட்சித்தலைவரிடம் சரண் அடைந்தர் கருணாநிதி. தன்னை முதல்வராக தேர்ந்தெடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். புரட்சித்தலைவரும் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். காட்சிகள் மாறின. தன்னை நம்பிவந்த கருணாநிதிக்காக, தி.மு.க. எம்.எல்.ஏக்களை அழைத்துப் பேசினார் புரட்சித்தலைவர். அனைவரையும் தன் வசம் இழுத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் அமரச்செய்து அழகு பார்த்தார்.
மீண்டும் 1971 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. பேரறிஞர் அண்ணா இல்லாத நிலையில் தி.மு.க வெற்றிக்காக புரட்சித்தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் விளைவாக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது.
அப்போது தி.மு.க வின் பொருளாளராக இருந்த புரட்சித்தலைவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் விரும்பினார்கள். எம்.ஜி.ஆர் பதவியில் இருந்தால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும், தவறுகள் நடக்காது என்று தலைவர்கள் நம்பினார்கள். அனால் இந்தக் கோரிக்கையை தட்டிக்கழிக்க திட்டம் தீட்டினார் கருணாநிதி. தனக்கு விருப்பம் இருப்பது போலவும், ஆனால் சட்ட விதிப்படி, அமைச்சராக இருப்பவர் திரைபடங்களில் நடிக்கக்கூடாது என்று இல்லாத ஒரு தடையை இருப்பதாகச் சொல்லிப் போலியாக நடித்தார். பேரறிஞர் அண்ணா அமைச்சருக்கு இணையான பதவியை புரட்சித்தலைவருக்குக் கொடுத்தபோது, நடிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை‚ ஆனால். கருணாநிதியோ அப்படியொரு விதி இருப்பதாகச் சொல்லி முதலைக் கண்ணீர் வடித்தார்.
ஊழலை அம்பலப்படுத்தினார்;
பெரும்பாலான தலைவர்கள் புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், பதவி விவாதத்திற்கு உள்ளாவதை புரட்சித்தலைவர் கொஞ்சமும் விரும்பவில்லை. அதனால் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டென்று நிராகரித்து, தன்னுடைய ஆளுமைத் திறனைக் காட்டினார். அப்போது புரட்சித்தலைவருக்கு, உண்மையிலே சினிமாதான் முதல் விருப்பமாக இருந்தது பதவியை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை என்பதுதான் உண்மை‚
பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோருடன்… எம்.ஜி.ஆர்.
1971ஆம் தேர்தலுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சி ஆட்சி இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தார். புரட்சித்தலைவருடைய புகழையும் செல்வாக்கையும் குறைக்க நினைத்தார். தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என நினைத்தார். அதனால், அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், அனுசரித்து ஆட்சி நடத்தத் தொடங்கினார். தங்களைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற நிலையில், தி.மு.க. ஆட்சியில், ஊழல் கரை புரண்டு ஓடியது‚
இதனைக் கண்டு ஆவேசமான பெருந்தலைவர் காமராஜர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். ஆனால் கருணாநிதியோ எதிர்க்கட்சிகளின் அறைகூவல்களை காதில் வங்கவே இல்லை‚
அடுத்த கட்டமாக, தன்னுடைய அரசியல் வாரிசாக மு.க. முத்துவை நுழைப்பதில் முழுமூச்சாக இறங்கினார். முதலில் மு.க.முத்துவை புரட்சிதலைவருக்குப் போட்டியாக சினிமாவில் கொண்டுவந்தார். புரட்சித்தலைவர் போலவே, அவதாரம் புரட்சித்தலைவர் போலவே நடித்த முத்துவின் பெயரில் தி.மு.க.வில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எம்.ஜி.ஆர் பெயரில் ரசிகர் மன்றங்கள்
தொடங்குவதற்கு அனுமதி மறுக்கபட்டு, முத்துவின் பெயரில் மன்றங்கள் ஆரம்பிக்கும்படி கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவுகள் பறந்தன.
மதுரையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதைக் கண்டு புரட்சித்தலைவரின் ரசிகர்கள் அதிர்ந்து நின்றார்கள். எம்.ஜி.ஆர் மன்றங்களை முத்து மன்றமாக மாற்றுவதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஏராளமான ஊர்களில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் முத்து ரசிகர் மன்றமாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டன. இதைக் கண்டு தமிழகமெங்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
நான் அப்போது தீவிர எம்;.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றத்துக்கு நாங்கள் உருவாக்கிய தாமரைக் கொடி அப்போது திமுகாவில் பெருத்த சலசலப்பை எற்படுத்தியிருந்தது. எம்.ஜி.ஆர் மன்றங்களுக்கு ஏற்படும் சோதனைகளைக் கண்டு எங்கள் மனம் பொறுக்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற எதிர்காலம் குறித்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர் மன்றத்தின் அடையாளச் சின்னமாக நாங்கள் ஏற்றியிருக்கும் தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் பெற முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று புரசத்சித்தலைவரை மன்றாடிக் கேட்டுக்கொண்டோம். புரட்சித்தலைவரும் ஒப்புக்கொண்டார்.
1972ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்று எம்.ஜி.ஆர். மன்றங்களின் சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியா திருமண மண்டபத்தில் (அதுதான் இப்போது அ.தி.மு.க.வின் தலைமையகம்) ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் புரட்சித்தலைவர் ஆட்சிக்கு எதிராகப் பேச வாய்ப்பு இருக்கிறது என்பதை முதல்வர் கருணாநிதி அறிந்துகொண்டார். உடனே அதனை தடுக்கும் முயற்சியாக, சில தலைவர்களை சமாதானம் பேசுவதற்காக புரட்சித்தலைவரிடம் அனுப்பி வைத்தார். கட்சியிலும் ஆட்சியிலும் இனிமேல் எந்தத் தவறுகளும் நடக்காது, தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என்று உத்திரவாதம் கொடுத்தார். முதல்வரின் உத்தரவாதத்தை புரட்சித்தலைவர் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டார். அதுதான் எம்.ஜி.ஆரின் குணம்.
அதனால் அன்றைய கூட்டத்தில் புரட்சித்தலைவர், “ திமுகதான் நமது ஒரே அமைப்பு தி.மு.க. கொடிதான் நம்முடைய கொடி தனித்த வேறு அடையாளம் எதுவும் நமக்குத் தேவை இல்லை. தாய்க் கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால் நான் தாய்க் கழகம்தான் வேண்டும் என்பேன். தாய் தன் குழந்தையை விட்டுத்தரமாட்டாள்” என்றார்.
புரடசித்தலைவரின் பிரகடனத்தைக் கலைஞர் கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காவே காத்திருந்தது போன்று, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அவசரம் அவசரமாக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாக 1972, அக்டோபர் 10 ஆம் தேதி தி.மு.க.வில் இருந்து புரட்சிதலைவரை நீக்கினார். அப்பபோது, ‘அண்ணா ஒப்படைத்து விட்டுச் சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால் வேறு வழியின்றி கனியை எறிய வேண்டியதானது” என்று விளக்கம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.
புரட்சித்தலைவர் கட்சியல் இருந்து வெளியேற்றப்பட்டதும், தமிழகமே ஸ்தம்பித்து நின்றது‚ ‘எம்.ஜி.ஆர் வாழ்க, கருணாநிதி ஒழிக” என்று வாசகம் எழுதப்பட்ட வாகனங்கள் மட்டும் ஓடின. எம்.ஜி.ஆர். செய்தி தாங்கிவந்த நாளிதழ்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. யாருடைய தலைமையும் இல்லாமல் தமிழகத்தில் தன்னெழுச்சிப் புரட்சி ஏற்பட்டது. அ.தி.மு.க. உதயமானது.
பிரமிக்கவைத்த வெற்றி;
கட்சி தொட்ங்கிய ஆறு மாதத்திலேயே தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக புரிய வைக்கும நிகழ்வு நடந்தது. திண்டுக்கல்லில் 1973 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். அப்போது ஆளும் கட்சி சார்பில் புரட்சித்தலைவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கபட்டன.
புரட்சிதலைவருக்கு இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் சின்னம் – உதயசூரியன் என்று தான் மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இரட்டை இலை எடுபடாது என்று தி.மு.க.வினர் கணக்குப் போட்டனர். அதேபோன்று தி.மு.க. பிளவுபட்டதால், இந்தத் தேர்தலில் கமாராஜர் தலைமையிலான காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியாகின.
திண்டுகல் இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில் ஏழாவது இடத்தில் இரட்டை இலையும், எட்டாவது இடத்தில் உதயசூரியனும் இடம் பிடித்தன. அந்தத் தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மாயத்தேவர் லட்சக்காணகான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், அ.தி.மு.கவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி, சொற்ப ஓட்டுகளில்தான் டெபாசிட் தொகையை தக்க வைத்தது.
புதிய சின்னம், கட்சிப் பிளவு, காங்கிரஸ் வெற்றி என சொல்லப்பட்ட அத்தனை கணிப்புகளையும் புரட்சித்தலைவர் செல்வாக்கு அடித்து நொறுக்கியது. இந்த திண்டுக்கல் தொகுதி மட்டுமின்றி, இதுவரை தி.மு.க.பெற்றுவந்த அனைத்து வெற்றிகளுக்கும் புரட்சித்தலைவர்தான் மூலகாரணம் என்பது நிரூபணமானது‚
திரையிலும் வெற்றி;
தி.மு.க.வில் இருந்து வெளியேறி முழு நேர அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர் மாறியதும், அவரது சினிமா வெற்றி முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால், தனக்கு எப்போதும், எதிலும் தோல்வி இல்லை என்று புரட்சித்தலைவர் நிரூபித்துக் காட்டினார்.
கட்சியில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேறிய பிறகு வெளியான முதல் படமான இதயவீணையும், அடுத்த படமான உலகம் சுற்றும் வாலிபனும் ஏராளமான இடைஞ்சல்களை சந்தித்தன. இந்தப் படங்கள் வெளிவரவே முடியாது என்ற அளவுக்கு தொந்தரவகள் இருந்தன. ஆனால், அத்தனை சவால்களையும் தாண்டி வெளியான இந்தப் படங்கள் சாதனை வெற்றி பெற்றன.
இதனையடுத்து, வெளியான உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டுவாழக், நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும்கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று கடைசிப் படம் வரையில் வெற்றிபெற்றார்
இன்றைய அ.தி.மு.க ஆட்சி மட்டுமல்ல, எதிர் காலங்களிலும் தொடர்ந்து அமைய இருக்கும் அ.தி.மு.க வின் ஆட்சிகளுக்கும் ஆணி வேராகப் புரட்சித்தலைவர் என்றென்றும் இருபார். இந்தப் பூவுலகில் கடைசி மனிதன் இருக்கும்வரை புரட்சித்தலைவரின் புகழ் நீடுழி நிலைத்து நிற்கும்..........mgn.,
-
17th September 2020 08:02 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2020, 08:04 PM
#782
Junior Member
Diamond Hubber
ஒருதவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடாதவர் நம் தலைவர்..அதுக்கு என்ன என்கிறீர்களா பதிவை தொடருங்கள்.
ஆரம்ப காலங்களில் ஜிவாஜி படங்களை எடுத்து பின் தலைவர் உடன் இணைந்து பல வெற்றிகளை குவித்தவர் சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி அவர்கள்...
குடியிருந்த கோவில் படம் முடிந்து திரை விநியோகஸ்தர்கள் பார்த்து வியந்து வியாபாரங்கள் முடிந்து படம் வெளிவரும் நேரம்.
தலைவரின் 96 வது படம்..வந்த தேதி 15.3.68...இல்...படப்பெட்டிகளை வாங்க விநியோகம் செய்வோர் சரவணா பிலிம்ஸ் அலுவலகம் வர அங்கே இருந்த மேலாளர் ஆளுக்கு 5000 பணம் அதிகம் தந்தால் மட்டுமே பட பெட்டியை உங்களுக்கு கொடுக்க சொல்லி தயாரிப்பாளர் முடிவு என்று சொல்ல.
இது என்ன பேசி முடிவான தொகை விட அதிகம் இது அவர் தலைவரை தேடி ஓட அவர் வேலுமணி அவர்களை தொடர்பு கொள்ள அவர் வெளியூரில் இருந்த படியால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்.
தலைவர் சரி அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து படத்தை வெளியிடுங்கள் ...நஷ்டம் வந்தால் நான் பொறுப்பு என்று சொல்லி படம் வெளிவந்தது.
சூப்பர் ஹிட் ஆனது படம்.....வெளியூரில் இருந்து திரும்பிய வேலுமணி அவர்கள் படத்தின் வெற்றியை குறித்து தலைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்ப போதிய மகிழ்ச்சி இல்லை தலைவர் தரப்பில்.
பேசிய வார்த்தைகள் மாறி விட்டதால் தலைவருக்கு வருத்தம்.
தன்னிலை விளக்கம் கொடுக்க முயற்சித்த அவருக்கு தலைவர் தரப்பில் போதிய வரவேற்பு இல்லை.
அடுத்த படம் அவர் எடுத்தார் நம்ம வீட்டு தெய்வம் என்ற பெயரில் முத்துராமன் அவர்கள் மற்றும் கே ஆர் விஜயா அவர்கள் நடிப்பில் ..படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற...
அடுத்த படம் அன்னை அபிராமி என்று அவர் தயாரிப்பில் வர படம் பெரும் தோல்வி அடைய...
அதல பாதாளம் நோக்கி பயணம் பயணம் ஆரம்பம் அவருக்கு..
மீண்டும் ஜிவாஜி அவர்களிடம் போக முடியாது....தலைவர் இடமும் சின்ன வருத்தம்...
சோர்ந்த மனநிலையில் அவர் தவிக்க அவரின் நண்பர் எழுத்தாளர் மா.லட்சுமணன் உங்கள் இந்த பள்ளத்தை சரி செய்ய அவரால் மட்டுமே முடியும் உங்கள் சார்பில் நான் போய் அவரிடம் பேசுகிறேன் என்று வர.
சந்தர்ப்பம் சூழ்நிலை ஒரு மனிதரை தடம் மாற வைக்கிறது என்று அவர் ஆரம்பிக்க.
தலைவர் எந்த சந்தர்ப்பத்திலும் தடம் மாறதவரே சிறந்த மனிதர் என்று சொல்ல.
முடிவில் ஜி.என்.வீ...அவர்கள் நிலை குறித்து தலைவரிடம் அவர் எடுத்து சொல்ல..
கடைசியாக அவர் எடுத்த படத்துக்கு கே.ஆர்.விஜயா அவர்களின் கணவர் வேலாயுதம் தான் பண பொறுப்பு என்று சொல்ல..
தலைவர் அவரிடமே விசாரிக்க....அதுவே உண்மை என்று தெரிந்த உடன்...என் படத்துக்கு பேசிய தொகையை விட கடைசி நேரத்தில் அதிகம் பணம் வாங்கினால் அது என் மீது இருந்த நம்பிக்கையை வீண் செய்வது போல அல்லவா..
சரி நாளை காலை கற்பகம் அரங்குக்கு அவரை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அதன் படி.
தலைவர் தவறுகளை மறந்து தன் 96 வது படத்துக்கு பின் 4 வருடங்கள் கழித்து 116 ஆவது தலைவர் படம் ஆக மீண்டும் அந்த ஜி.என் வேலுமணி அவர்கள் உடன் இணைந்து வெளி வந்த படம்தான்.
நான் ஏன் பிறந்தேன்.
படம் வெளிவந்த தேதி
09.06.1972...படத்தில் தன் கணவர் எடுத்து தோல்வி அடைந்த அவருக்கு ஆக கே.ஆர் விஜயா அவர்கள் நடிப்பில் இணைய 100 நாட்கள் தாண்டி ஓடிய வெற்றி குடும்ப படம் அது..
அவர்தான் பொன்மன செம்மல் எம்ஜிஆர் அவர்கள்...நன்றி.
வாழ்க அவர் புகழ்..........
தொடரும்...உங்களில் ஒருவன்..........
-
17th September 2020, 09:07 PM
#783
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 01/099/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கால தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்.அப்படி என்ன செய்து தி.மு.க.விற்கு சாதித்துவிட்டார் என்று கேள்வி எழுப்புகின்றனர் . அந்த கால தி.மு.க.வினர்*இப்படி கேள்வி கேட்கமாட்டார்கள்.ஏனென்றால் எம்.ஜி.ஆருடன் கட்சியில் அவர்கள் பயணித்தவர்கள். கண்கூடாக பார்த்தவர்கள் .பலனை அனுபவித்தவர்கள் .அவரை கட்சியில் இருந்து நீக்கியபின் விளைவையும் கண்டு நொந்து போனவர்கள் . எம்.ஜி.ஆர். தி.மு.க.விற்கு அப்படி என்ன செய்து விடவில்லை என்றுதான் கேட்கவேண்டும் .தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் பெயரை சூட்டி**,1957ல் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்தார்அந்த படத்தில் ஒரு வசனம் நாளைய போட்டியில் உதயசூரியன் என்ன ஒரு உதவாக்கரை போட்டியிட்டாலே ஜெயித்துவிடுவான் . . 1962ல் விக்கிரமாதித்தன் படத்தில் உதயசூரியன் சின்னத்தை தன் நெற்றியில் திலகமாக இட்டு நடித்தார் .புதிய பூமி படத்தில் தன்னுடைய பெயரை கதிரவன் என வைத்துக் கொண்டார் .பல படங்களில் தன் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் நாமத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகைகளில் அவரை பற்றி வசனங்கள், பாடல்கள், அவரது பெயரின் பின் பாதியான துரை என்கிற வேடத்தில் நடித்தார் . தி.மு.க.வில் இருக்கும்போது, உதயசூரியன் சின்னம் பிரபலம் ஆகும் வகையில் வசனங்கள் .உதாரணம் : குடை பிடிச்சா சூரியன் மறையாது - சந்திரோதயம் .* நீ அஸ்தமிக்கும் சூரியன் .அஸ்தமிக்கும் சூரியன் அடுத்த நாளே உதயமாகும் - ஆயிரத்தில் ஒருவன் .* உதயசூரியன் எதிரில் இருக்கையில் உள்ள தாமரை மலராதோ, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்ட பொழுதும் புலராதோ -பாடல் -நல்லவன் வாழ்வான் . சூரியன் உதிச்சதுங்க இங்கே காரிருள் மறைஞ்சதுங்க ,சரித்திரம் மாறுதுங்க ,இனிமே சரியா போகுமுங்க -பாடல் -நம்நாடு .புதிய சூரியனின் பார்வையிலே ,உலகம் விழித்து கொண்ட வேளையிலே -அன்பே வா . தாமரை அவளிருக்க ,இங்கே சூரியன் நானிருக்க ,ஒய் சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் தூது சொல்லமாட்டாயோ - படகோட்டி*இப்படி பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்உதயசூரியன் சின்னத்தை தன் சட்டையில் பல படங்களில் அணிந்தபடி நடித்தார் . பல படங்களில் கருப்பு,சிவப்பு வண்ணத்தில் உடைகள் அணிந்து கட்சிக்கு விளம்பரம் தேடி தந்தார் .*.உதயசூரியன் உதயமாகும் பல காட்சிகள் திரைப்படங்களிலே காணலாம் .தி.மு.க.வின் தேர்தலநிலை அறிக்கை தயாராவதற்கு* முன்பே நாடோடி மன்னன் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து*தான் அறிவிக்கும் தி.மு.க.வின் கொள்கை திட்டங்களான குடிசை மாற்று வாரியம், முதியோர் ஒய்வு ஊதிய திட்டம் விவசாயிகள் நலத்திட்டம் , மாணவர்கள் உதவித்தொகை திட்டம் ,நகர்ப்புறஅபிவிருத்தி* திட்டம், கல்விநிதி திட்டம் , பெண்களுக்கு பாதுகாப்பு திட்டம்,குடும்ப நல* திட்டம்* இப்படி பல்வேறு திட்டங்களை மலைக்கள்ளன் படத்தில் இருந்து நாடோடி மன்னன் வரையில் வசனங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் .மலைக்கள்ளன் படத்தில் தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் , கருத்தாக பல தொழில் பயிலுவோம், ஊரில் கஞ்சிக்கில்லையென்ற சொல்லினை** போக்குவோம்*ஆளுக்கொரு வீடு கட்டுவோம்,அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம் என்று பாடியுள்ளார் .நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவல்லாம் செய்வோம் என்பதை வசனங்கள், பாடல்கள் மூலம் தானே* அறிவித்து வரும் காலத்தில் அதை செய்து காட்டுவோம் என்றார் .அதனாலேயே 1967ல் நடைபெற்ற தி.மு.க மாநாடு அண்ணா தலைமையிலும் ,அதற்கு பின்னால் ஒரு மாநாட்டை எம்.ஜி.ஆர். தலைமையிலும் நடைபெற்றது என்பது வரலாற்று சிறப்பு பெற்ற நிகழ்வு .
நடிகன் குரல் பத்திரிகையில் எம்.ஜி.ஆரை நிருபர்கள் பேட்டி எடுத்த விஷயங்கள் வெளியாகி இருந்தது . அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டன .அதற்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாக பதிலளித்தார் . நீங்கள் ஏன் சொந்த படம் எடுத்தீர்கள்* என்னுடைய சொந்தப்படம் என்பது ,சொந்த கதை, சொந்த கற்பனை, என்னுடைய சொந்த ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் எனது சொந்த திறமையை வடிவமைத்து காட்ட வேண்டும் . அதை மக்கள் பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதற்காக நான் எடுத்த ரிஸ்க் . அந்த ரிஸ்க்கை, அந்த கடினமான பணியை வேறு ஒருவரின் காசில், செலவில் செய்து பரீட்சித்து பார்க்க விரும்பவில்லை.அதனால்தான் . நான் என் சொந்த செலவில் முயற்சித்து* .வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது ..உங்களுக்கு அரசியல் தெரியாது என்று நடிகர் சிவாஜி கணேசன் கருத்து தெரிவித்திருக்கிறாரே நீங்கள் ஏன் அவரை கடுமையாக சாடவில்லை என்பதற்கு எனக்கு அதுபற்றி சரியான தகவல் வரவில்லை என்று தட்டி கழிக்கிறார் . இப்படி யார் எந்த எதிரிகள் சாடினாலும் ,அவர் எப்போதும் வேண்டாத வம்புக்கு, வேண்டாத விஷயத்துக்கும் ஒரு போதும்* தீனி கொடுத்தவர் அல்ல . எப்போதும் மற்ற மனிதர்களின் மாண்பை, பண்பை, கருத்துக்களை மதித்தவர் .
பேரறிஞர் அண்ணா*கூறியது போல தம்பி சிவாஜி*கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார் .அவர் ஒவ்வொரு இடத்திலும் அதற்கேற்றது போல சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து வந்துள்ளார்* *நடிகன் குரல்*பத்திரிகை சார்பில்*பேட்டி அளிக்கும்போது அவர் நடிகர் சங்க*தலைவராகத்தான்*பதிலளிக்கிறார் .அங்கு வந்து எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதன் செயல்பாடு இல்லை .தமிழக முதல்வராக இருக்கும்போது முதல்வராகத்தான் செயல்படுகிறார் .கட்சியின்*தலைவராக*இருக்கும்போது கட்சி சார்பில் பொறுப்பாக நடந்து கொள்கிறார் .கட்சி தலைவராக இருக்கும்போது ஜெயலலிதா பேரவை தொடங்கப்பட்டபோது ஜெயலலிதாவை பக்கத்தில் அமர்த்தி கொண்டு ,இந்த பேரவையை யார் தொடங்கினார்கள் ,எப்படி தொடங்கினார்கள்.அவர்கள் மீது நடவடிக்கை கட்சி*ரீதியில் எடுக்கப்படும் , தனி நபர் துதி பாடல் நமது*கட்சியில் இருக்க கூடாது*என்று கூறி ,ஜெயலலிதா முன்னிலையில் அவர்கள்மீது*நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் . கட்சியை*வழி நடத்துபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக எம்.ஜி.ஆர். நடந்துகொண்டார் .*
அதே போல எம்.ஜி.ஆர். முதல்வராகவும், கட்சி*தலைவராகவும் இருந்த*நிலையில்*சேலம்*ஆத்தூர்*பகுதியில்*கட்சி பணியில் இருந்த ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விடுகிறார் .* அடுத்த சில நாட்களில் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன்,அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் அமர்ந்து*உணவருந்துகிறார் .அதை கண்ட*அமைச்சர் ,எம்.ஜி.ஆரிடம் கேள்வி*கேட்டபோது ,அவர் கட்சியின் உறுப்பினராக இங்கு வரவில்லை*,கட்சி பணிகளை, தன் கடமைகளை முறையாக நிறைவேற்றாததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்* ஆனால் இப்போது இவர் என் உடன்பிறவா தம்பி ,என் உறவு .ராமச்சந்திரன் என்கிற தனி மனிதனாக*அவரை*உபசரிக்கிறேன்*என்றாராம் .இப்படி நாம் வைக்கிற இடத்தில வைக்கவேண்டிய பாத்திரத்தை சரியாக*வைக்க* வேண்டும் என்பதில்*ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் , ஒவ்வொரு காலத்திலும் சரியாக இருக்கிறார் என்பதால்தான்*அவரது வரலாறு இந்த பதிவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது .
அரசியல் சூழ்நிலைகளில் எம்.ஜி.ஆரை பின்பற்றி ரஜினிகாந்த் வருகிறார் என்று சொல்லப்படுகிறது .அல்லது எம்.ஜி. ஆரோடு ரஜினிகாந்தை ஒப்பீடு செய்வது சரியா*தவறா என்று கேள்வி எழுப்பப்படுகிறது .எம்.ஜி.ஆரை ஒரு போதும் யாருடனும் ஒப்பீடு செய்வதற்கில்லை* ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்**அந்த மன்னாதி மன்னன் . ஆனாலும்கூட அவர் தடம் பதித்த சினிமாவும் சரி, அரசியலும் சரி ,அந்த வழியில் வந்த எல்லோரையும் எல்லோரும் ஒப்பிட்டுத்தான்* பார்ப்பார்கள். அதை தவறு என்று சொல்லிவிட முடியாது .எப்படி ஒரு மிகப்பெரிய ஆலமரம் இருக்கிறதோ, அந்த ஆலமரம்தான்* ஒரு ஊரின் வழிகாட்டியாகவும், திசை காட்டியாகவும் உள்ளது* அப்படி திரையிலிருந்தும் அரசியலில் இருந்தும் உதித்த ஆலமரம்தான் இமயம் போன்ற எம்.ஜி.ஆர் . அவரை ஒப்பிடாமல், திரும்பி பார்க்காமல் யாரும் அரசியலில்*எதுவும் செய்துவிட முடியாது இந்த தமிழக அரசியலில் என்பதற்காகத்தான்*பலரும் வந்து ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார்கள் .பேசுகிறார்கள்.ஊடகங்களில் அதை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . அதை தவறு என்று சொல்லிவிட முடியாது .
இமயம் என்றைக்கும் இமயம்தான் . ஆனால் அதன் சாயல் பலருக்கும் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்* எம்.ஜி.ஆர் அவர்களை சிலர் கேட்டிருக்கிறார்கள் ஏன் நீங்கள் தர்மேந்திரா போல, திலீப்குமார் போல, ராஜேஷ் கன்னா போல நடிக்க முயலவில்லை என்று .* அதற்கு எம்.ஜி.ஆர். பதில் சொன்னது என்னவென்றால் நான் ஏன் அவர்களை போல் நடிக்க வேண்டும் , ஆட வேண்டும், வாழ வேண்டும் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதனுக்கு தனி பாணி இருக்கிறது .தனி முத்திரை இருக்கிறது அதன்படிதான் நான் செய்வேன் என்று தனக்கென* உள்ள பாணியை வைத்துக் கொண்டு திரையுலகில்* எம்.ஜி.ஆர். நின்றார், வென்றார், ஜெயித்தார்*. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்,சமீபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பது குறித்தும்*எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தில் திரு.ஏ.சி.சண்முகம் முன்னிலையில் பேசிய போது எம்.ஜி.ஆரின் அரசியல் தந்திரம், திறமை, வெற்றிகள் ,காய் நகர்த்துவது மற்றும் சினிமாவில் சிகரத்தை தொட்டது திரையுலகில் அவர் கடைபிடித்த வெற்றிகரமான பார்முலா ,வசூல் சக்கரவர்த்தி என்று வானளாவ புகழ்ந்து பாராட்டியுள்ளார் .அப்படி ஒரு* சிகரம் தொட்டஅசைக்க முடியாத** இமயம் போன்றவர் எம்.ஜி.ஆர்.*
ரஜினிகாந்த் பேசியது : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசுவதில் பங்குபெறுவதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் .அடிப்படையில் நான் சிவாஜி கணேசனின் ரசிகன். நான் சென்னைக்கு வந்த பிறகு சினிமாவிற்குள் நுழைந்த பிறகு, மக்கள் திலகம் ,பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி கேள்வி பட்ட பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறை படித்து, அவரது படங்களை ரசித்து பார்த்து ,வாழ்க்கையில் அவருடைய பெரிய ரசிகன் ஆகிவிட்டேன் .* அவருடைய பெரிய விசிறி, வெறியனும் ஆகிவிட்டேன்.இப்போ சொல்றேன்.அவருடைய சாதனைகள் என்னவென்றால் 1950களில்* ஒரு பெரிய ஆக்க்ஷன்* ஹீரோவாக இருந்தார் .மலைக்கள்ளன் ,அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன் போன்ற இமாலய வெற்றிகள் கொடுத்திருந்தார் .1952ல் ஒரு சாதாரண நடிகராக வந்த நடிகர் சிவாஜி கணேசன் ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் .அதனால் பெரிய பட தயாரிப்பாளர்கள் சிவாஜி கணேசனை வைத்து படமெடுக்க படை எடுத்தார்கள் .அப்போது தன் திறமைகளை வெளிப்படுத்த , மக்களுக்கு சினிமாவில் தான் யார் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர். சொந்தப்படம் எடுக்க தீர்மானித்தார் .* அந்த படத்திற்கு பெரும் பொருட்செலவு, காலவிரயம், தாமதம் ஆனதால் எம்.ஜி.ஆர். கதை இத்துடன் முடிந்தது என்று திரையுலகில் அவருக்கு வேண்டாதவர்கள் பிதற்றினார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து ,தானே அதை இயக்கி வெற்றிகரமாக வெளியிட்டார் .தன்னை பற்றியும் ,படத்தை பற்றியும் விமர்சித்தவர்களுக்கு இந்த படம் வெற்றியடைந்தால் நான் மன்னன் இல்லாவிட்டால் நான் நாடோடி என்றார் .ஆனால சாதாரண வெற்றி அல்ல .பிரம்மாண்ட வெற்றி பெற்றார்படம் இதிகாசம் படைத்தது .இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள் . .விமர்சகர்கள் வாயை அடைத்தார். வசூல் சக்கரவர்த்தி என புகழ் பெற்றார் . சிறந்த படம், சிறந்த இயக்குனர் பரிசுகள் கிடைத்தன .**அந்த சூழ்நிலையில் படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வந்தாரென்றால்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களுக்க ு வியர்வை வரும் .அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை கொடுத்திருந்தார் .* அப்படியொரு வரலாறு, சாதனை, சரித்திரம் படைத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அந்த காலத்தில் அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனுக்குத்தான் போட்டி .ஆனால் அவரைவிட பெரிய மார்க்கெட்டை பிடித்து, பெரிய சம்பளத்தை பார்த்து , அவரைவிட மிக பெரிய படங்களை மக்களுக்கு அளித்து சாதனை, சரித்திரம், வரலாறு படைத்து, திரையுலகில் இமயம் போல் நின்றார் இல்லையா .அவர்தான் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்தபாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். நாகேஷ் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*
2.எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்* இந்த நாட்டிலே -மலைக்கள்ளன்*
3.எம்.ஜி.ஆர்.-நம்பியார் உரையாடல் -ஆயிரத்தில் ஒருவன்*
4.எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
5.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*
6.ரஞ்சித் -சுந்தரம் -எம்.ஜி.ஆர். உரையாடல் -நினைத்ததை முடிப்பவன்*
**
-
18th September 2020, 11:55 AM
#784
Junior Member
Diamond Hubber
மதுரையில்
கணேசனின் மூன்று படங்கள் பெற்ற வசூலை ....குறைந்த நாளில் துவம்சம் செய்த காவியங்கள்...
உரிமைக்குரல் 129 நாள் வசூல் :5,61,924.00
உ.சு.வாலிபன் 139 நாள்
வசூல் : 5,62,195.10
பட்டணம்மா
182 நாள் வசூல்
5,61,495.20
வறண்ட மாளிகை
200 நாள் வசூல்
5,30,536.15
தகரபதக்கம்
134 நாள் : 5,42,902.00
மதுரையில்..
1977 வரை கணேசனின் படங்களை ஒட்டுமொத்தமாக
முறியடிக்கபட்டது...
கணேசனின் போலி பொய் கூட்டம்...
மதுரையில் முக்காடிட்டுள்ளது...
சென்னை தெய்வமகன்
3 அரங்கில் 100 நாள் ஒட்டி மட்டமான தெய் (திருட்டு) மகன் வசூல்
சாந்தி,கிரவுன்,புவணே
300 நாள் : 8,71,870
கேவலமான வசூல்...
1966 ல்
பெ.தான் பிள்ளையா
வசூல் : 9,04,385.40
(ஸ்டார் 100, மகாராணி100, நூர்ஜகான் 84, உமா 80)
மக்கள் திலகத்தின்
நல்லநேரம்
வள்ளுவர் 50 நாள்
வசூல் : 84,518.04
வ.மாளிகை
50 நாள் அதே வள்ளுவர் அரங்கில் வசூல் :66,049.37.மேலே பழனி நகர் ஆகும்.
[ஈரோடு நகர் மலரில்
1956 ல் அலிபாபா திரைப்படம் 100 நாள் ஒடியுள்ளது என தகவல்..
.
சென்னை நகரில்
திரையிட்ட
நல்லநேரம்
4 அரங்கில் (சாதாரண அரங்கில் டிக்கட் கட்டணம் குறைந்த அரங்கில் திரையிட்டு) 100 நாள் ஒடி முடிய பெற்ற வசூல் : 12,67,127.60
கணேசனின் ராஜா (கூஜா) படம்
தேவிபாரடைஸ்
என்ற பெரிய அரங்கில் திரையீட்டு 99 நாள் (2காட்சி) மற்றும்
அகஸ்தியா, ராக்ஸி
ஒடி முடிய பெற்ற வசூல்
12,53,559.81 ஆகும்.
தேவிபாரடைஸ் 140 காட்சி வரை டிக்கட் கிழித்து அரங்கு நிறைந்த போர்ட் வைக்கப்பட்டு...
99.2 நாளில் காலாவதியான கூஜா வசூல் போலியானது....
பட்டணம்மா
சாந்தி 146
கிரவுன் 111
புவனேஸ்வரி 104 ஒடி
13 லட்சத்தை தாண்டாத மட்டமான வசூல்...
அடுத்து...
வறண்ட மாளிகை
சாந்தி 175 நாள்
கிரவுன் 140 நாள்
புவனேஸ்வரி 140 நாள்
ஒடி முடிய பெற்ற வசூல்
16 லட்சத்திற்கும் குறைவாகும்...
(நாள் : 455 நாள்)
நகரில் ரிக்க்ஷாக்காரன்
குறைந்த நாளில்...
அதாவது
தேவிபாரடைஸ் 142
கிருஷ்ணா 142
சரவணா 104
வசூல் : 16,84,958.32
(நாள்..388 நாள்)
கணேசனின்
மற்ற படங்களின் வசூலை பந்தாடிய
விபரம்...
ஞான ஒளியை விட
நான் ஏன் பிறந்தேன் வசூல் அதிகம்...
தருதலைப்புதல்வன் படத்தைவிட
ராமன் தேடிய வசூல் அதிகம்.
தர்மம் எங்கே என கேட்ட திருடன் படத்தை விட
அன்னமிட்டகை வசூலில் சூப்பர்.
நீதி படத்தை விட இதயவீணை பெற்ற வசூல் அதிகம்.
இதில் என்னட உங்க வசூல்....
சென்னையில்
நல்லநேரம்
ஒடி முடிய வசூல்
16 லட்சத்தை கடந்தது.
இதயவீணை
ஒடி முடிய 13 லட்சத்தை கடந்தது.
நான் ஏன் பிறந்தேன்
ஒடி முடிய 10 லட்சத்தை கடந்தது...
ராமன் தேடிய சீதை
ஒடி முடிய 9 லட்சத்தை கடந்தது..
சங்கே முழங்கு, அன்னமிட்டகை தலா
8 லட்சத்தை கடந்து...
மொத்தம் 6 காவியங்கள்...
சென்னை முழுவதும் திரையிட்டு ...
வசூல் 65 லட்சத்தை கடந்தது...
ஆனால் கணேசனின்
படங்கள் முதல் வெளியீட்டிற்கு பின் பெரிய அளவில் திரையீடு இல்லை...
இது தவிர தமிழகமெங்கும்
மாபெரும் சாதனையில் 6 படங்கள் திகழ்ந்தது.
ஆனால் கணேசனுக்கு
வறண்ட மாளிகை மட்டும் தான் குறிப்பிட்ட ஊரில் வசூல் ஆகும்.
மொத்தத்தில்
1972 ல் அதிக வசூல்
அதிக திரையரங்கு சாதனை...
அதிக நாட்கள் 50,75 எல்லாம் மக்கள் திலகத்திற்கு மட்டுமே.. ராஜூ..........
-
18th September 2020, 11:55 AM
#785
Junior Member
Diamond Hubber
அதே வருடத்தில்*
தாய்க்குப்பின் தாரம் தாரம் காவியம் வெளியாகி தமிழகமெங்கும் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கியது.*
சமூக திரைப்படத்தின் வரலாறாக திகழ்ந்தது.* எங்கும் ஒரு புரட்சியை...... மிகப்பெரிய வெற்றியை, வசூலை கொடுத்தது
என்று சொல்லலாம்.
அலிபாபாவும் 40 திருடர்களும்
************************************
சென்னை சித்ரா 92 நாள்
சென்னை பிரபாத் 92 நாள்
சென்னை சரஸ்வதி 92.நாள்
மயிலாடுதுறை 92 நாள்
தஞ்சை 92 நாள்
திண்டுக்கல் 92 நாள்
விருதுநகர் 92 நாள்
குடந்தை 92 நாள்
நெல்லை 86 நாள்
வேலூர் 84 நாள்
காஞ்சிபுரம் 92 நாள்
கரூர் 84 நாள்
100 நாளை கடந்த ஊர்கள்
*********************************
சேலம் 154 நாள்
திருச்சி 147 நாள்
மதுரை 141 நாள்
கோவை 126 நாள்
ஈரோடு 100 நாள்
இலங்கை (2) அரங்கு*
100 நாள்...
பெங்களுர் 105 நாள்
கோவில்பட்டி 78 நாள்
கடலூர் 77 நாள்
சிதம்பரம் 77 நாள்
திருப்பூர் 75 நாள்
மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் 50 நாட்களை கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம்
புரட்சி நடிகரின்...
பிரமாண்டமான வண்ணப்படைப்பு
அலிபாபாவும் 40 திருடர்களும்
திரைப்படமாகும்.
மக்கள் திலகத்தின் சரித்திர திரைப்படங்கள் ஆரம்ப காலத்தில் மாபெரும் வெற்றிகளை படைத்துள்ளது.*
அந்த வரிசையில் பார்த்தால் ராஜகுமாரி திரைப்படத்திற்குப் பின் மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் படைத்துள்ளது.*
1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் பல இடங்களில்
100 நாட்களை வெற்றிக்கண்டு*
பல ஊர்களில் 12 வாரங்களை கடந்து சரித்திரம் படைத்துள்ளது. இப்படி மகத்தான வெற்றியை தந்த*
மலைக்கள்ளன் காவியத்திற்கு பின் .....
1955 ல் குலேபகாவலி திரைக்காவியம் மிகப்பெரிய வரலாற்று சாதனையையும்*
அதிக திரையரங்குகளில்*
100 நாட்களையும்...பல அரங்கில்*
12 வாரங்களை கடந்தும் ஓடி வெற்றியை படைத்தது.
1956 ம் ஆண்டு பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் திரைப்பட உலகின் சகாப்தம் நாயகனாக திகழ்ந்தார். ஒரே ஆண்டில் வெளியான மூன்று திரைப்படங்கள் கோலாகலமான வெற்றியை படைத்த முதல் காவிய நாயகனாக புரட்சி நடிகர்*
எம். ஜி ஆர் வலம் வந்தார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் திரைக்காவியம்......*
12 .01 .1956 ஆம் ஆண்டு வெளியானது. மதுரைவீரன் திரைக்காவியம் 13 .04.1956 ஆம் ஆண்டு வெளியானது.
பல இடங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் மதுரை வீரன் திரைப்படத்தின் வெெளியீட்டிற்காக 92 நாட்களில் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள்*
ஓட வேண்டிய அலிபாபாவும் 40 திருடர்களும் காவியம் ஏழு ஊர்களில் மட்டும் 100 நாட்கள் ஓடியது. மதுரைவீரன் வரவில்லை என்றால் அலிபாபா திரைக்காவியம் கண்டிப்பாக*
20 திரையரங்கில் 100 நாட்களை கடந்து இருக்கும்.
அதன் பின் வெளியான மதுரைவிரன் திரைக்காவியம்*
40 திரையரங்குகளில் தமிழகத்தில் திரையிடப்பட்டு 33 திரையரங்கில் 100 நாட்களை வெற்றி கொண்ட திரைப்படமாக தென்னக சினிமாவில் சாதனை படைத்தது.
[15/09, 9:59 pm] Raju BS: 65 ஆண்டு கால சரித்திரத்தில்
இக்காவியத்தின் வரலாற்று வெளியீடுகள்....
கடல் போன்றவையாகும்....
1931 முதல் 1960 வரை வெளியான
திரைப்படங்களில்..
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
பாக்தாத் திருடன்
திரைக்காவியங்கள்*
2019 வரை வெள்ளித்திரையில்
பல ஊர்களில் வெளியாகி*
உலக சரித்திரம் படைத்துள்ளது.
உலகதிரையின் அதிசயமாகும்.
நிலைத்து நிற்கும் சின்னங்களாகும்.......
வாழ்க!* 60 ஆண்டுகளை கடந்த
வரலாற்று பெரும் காவியங்களை தந்த...... சகாவரம் பெற்ற வெள்ளித்திரையின் ஒரே ஒப்பற்ற
நிழற்ப்பட கதாநாயகன்
மக்கள் திலகத்தின் புகழ்!
1960 வரை வந்த மற்ற நடிகர்களின் படங்கள் மறைந்து போனதப்பா....
நிலைத்து நின்று புகழ் கண்டோதோ மக்கள் திலகத்தின்
காலத்தால் அழியாத காவியங்களப்பா....
இனியும் நிலை பெற்று நிற்கும் திரைப்படங்கள் என்றால் அது பொன்மனச் செம்மலின் தரம் குறையாத காவியங்களப்பா....
தொடரும்...UR.........
-
18th September 2020, 11:57 AM
#786
Junior Member
Diamond Hubber
திருடன் ரசிகனுங்க
என்றுமே உண்மை பேசிய வரலாறு கடந்த 60 வருடங்களாக கிடையாது...
சொன்னதை சொல்லியும்...
போட்ட பதிவையே போட்டு...போட்டு.....
சத்தியத்தின் கழுத்தை நெறிக்கும் கயவர்கள்...
அதனால் தான் தலைவர்....
ஒரு தாய் மக்கள் திரைப்படத்தில்...
சொல்லும் கருத்து இது!
" சத்தியத்தின் கழுத்தை நெறிப்பவர்களை...
சத்தியமாக விடமாட்டேன் என்பார்"
மற்றொன்று....
கணேசனின் எச்சிலை கூட்டம்...
சென்னை
சாந்தியை வைத்தே
பொய் வசூலை விதைப்பானுங்க...
100 க்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளி திரையரங்கில் ஒட்டப்பட்ட ரகசியம் தாண்டவமாடும் பொழுது..
சாந்தி...
கிரவுன்...
புவனேஸ்வரியின்...
கோல்மால் ..கணக்கு
1977 க்குப் பின்னும் தொடர்ந்துள்ளது போலும்..
உ. சு. வாலிபன்
இதயக்கனி
மீனவ நண்பன்
வசூலை விட..
கணேசனின் படம் தான் அதிகம் என ஊளையிடும் கூட்டத்தின் கனவு இன்னும் பொய் பதிவு மூலம்..... மய்யம் முகநூலில் தொடர்ந்த வண்ணமுள்ளது...
திரையுலகில் ஆண்டுகள் 43 யை கடந்த மக்கள் திலகம்...
மறைந்து 33 ஆகியும்
கணேசன் ரசிகனின் பொய் பித்தலாட்ட வேலை வெறிபிடித்த பைத்தியங்கள் போல்
வலம் வருகிறது...
இந்த பைத்தியங்களை கீழ்பாக்கம் கொண்டு தான் சேர்க்க வேண்டும்!
தமிழகம் முழுவதும் வெளியீட்டு வெற்றி கண்டால் தான் அந்த படம் மகத்தான வெற்றி! மாபெரும் வெற்றி! இமாலய வெற்றி என சொல்ல வேண்டும்..
அதை விட்டு...
2,3 தியேட்டரில் வெற்றி என தம்பட்டம் அடித்தால்...அது தயாரிப்பளாருக்கு
தோல்வியை தான் கொடுக்கும்...
ராஜா
தோல்வி......
நீதீ
மட்டமான தோல்வி......
ஞானஒளி
மரணஅடி........
தர்மம் எங்கே படுகேவலமான
தோல்வி........
தவப்புதல்வன்
பலத்த அடி.........
பட்டணம்மா
மதுரை...சேலம் மட்டும்
தப்பியது...
வ.மாளிகை....
ரி.காரன் பெற்ற வசூலில் பாதி கூட வராத தோல்வி...
இந்த லட்சனத்தில்
6 படம் 100 நாளாம்....
40 தியோட்டரில்..
ஒரு படம் 2 ஊரில் வசூல்!
இன்னொரு படம்
40 ல் 1மட்டும் வசூல்!
மற்றொரு படம்
வசூல் இல்லாது
100 தேய்தது...
இப்படி எல்லாம் ஒரு கேவலமான வெற்றி க்கு பெயர் தான்..
ஹீரோ 72 என்ற பொருளா?
அல்லது...
எங்களால் பொய்யை விலைக்கு வாங்கி மெய் ஆக்குவது தான் கணேசனாரின் படங்களில் நீங்கள் செய்யும் தொழிலா....
கணேசனின் பொய்யர்கள் குறைந்து விட்டனர்... இன்னும் 4,5,கணேசனின் போலி ரசிகர்கள் ஏதோ புலம்பி திரிகின்றனர்...
அவர்களின் நகைசுவை பதிவை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. இன்னும் எத்தனை நாள் இவர்களின் பதிவோ....
திருந்தாத ஜென்மங்கள்
வாழும் பைத்தியங்கள் ஆகும்...
உ.ரா..
-
18th September 2020, 12:01 PM
#787
Junior Member
Diamond Hubber
"நல்லவன் வாழ்வான்"... - மக்கள்திலகம் நடித்து 1961 -ம் வருடம் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கதை. இயக்குனர் நீலகண்டன் அவர்களின் சொந்த முதல் தயாரிப்பு... இந்த திரைப்படத்துக்கு டைட்டில் எவ்வளவு பொருத்தமாகவும் , மிக ஆழ்ந்த அர்த்தங்களுடன் அமைந்துள்ளது ? மக்கள்திலகம்-mr .ராதா -வில்லன் -ஆக திறம்பட நடித்த படம். தேர்தல் வெற்றி-தோல்வி என திரைகதை நுணுக்கமாக கையாளப்பட்ட காட்சிகளை கொண்டிருந்தது ...இன்றைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படமாகும்..
இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப்பலனை நாம் உணர முடியும்.
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறு மணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் இதயதெய்வம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் நமது இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்...........
-
18th September 2020, 12:02 PM
#788
Junior Member
Diamond Hubber
#பொன்மனச்செம்மல்புகழ்ஓங்குக!!!!!!
#பதவியிலும்_பணிவு...#நம்_தலைவர்
ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சி யோடு வாங்கிசெல்கின்றனர். இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்கமுடியமுடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!
மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!
குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!
திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...அவரை தடுத்து நம் செம்மல் கூறியதாவது : "நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...
திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா அவர்களுக்கு ப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???.........
-
18th September 2020, 12:04 PM
#789
Junior Member
Diamond Hubber
நடிகன் குரல் பத்திரிகையில் வாசகர் கேள்விக்கு நம் தலைவர் அளித்த பதில்..........
புரட்சியார் ரசிகன் என்பவர் 15.04.1973 அன்று கேட்ட கேள்வி.
உங்களை மட்டும் இல்லாது உங்கள் குடும்ப பெண்கள் அதுபோல சில தனிப்பட்ட நல்லவர்களின் வீட்டு பெண்கள் பற்றியும் தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருகிறதே நாத்திகம் என்னும் பத்திரிகை.?
தலைவர் பதில்.
அவர்கள் தங்கள் கடந்த கால சொந்த வாழ்க்கையை எண்ணி பார்த்து கொண்டு இருப்பார்கள் என்றால் உங்களுக்கு இந்த கேள்வி என்னிடம் கேட்கும் வாய்ப்பு வந்து இருக்காது...
நான் இது பற்றி பதில் கேட்டு ஒரு ரூபாய் 60 காசுகள் செலவில் அவர்களுக்கு ஒரு பதிவு தபால் அனுப்பி இருந்தேன்..
இதை பெற்று கொள்ள மனம் இல்லை என்ற குறிப்பு எழுத பட்டு அந்த தபால் என் கைகளுக்கு திரும்ப வந்து விட்டது..
ஒருவேளை தபாலில் குண்டுக்கு பதில் குண்டு இருக்குமோ என்று பயந்து விட்டார்கள் போல.
என்று பதில் சொல்லி இருக்கிறார் பொன்மனம்.....
தரம் கெட்டவர்கள் இடம் இருந்து வேறு நல்ல செய்திகளா வரும்?!...........
-
18th September 2020, 12:11 PM
#790
Junior Member
Diamond Hubber
திமுக ஆதரவு நண்பர் ஒருவர்
"கலைஞர(மு.கருணாநிதி) இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே...
நன்றாக கதறவும்.."
என என் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
நானும் பதிலுக்கு கலைஞரை, நான் தினம் காய்ச்சிக் காய்ச்சிக் கழுவிக் கழுவி ஊற்றுவதற்கு, சில காரணங்களைக் கூறியிருந்தேன். அவருக்குத் திருப்தி இல்லை போலும்.
"வேற...?"
எனக்கேட்டிருந்தார்.
ஒரு புத்தகமே போடலாம்.
ஆனால் சுருக்கமாக ஒரு பதிவாவது போட்டுவிடலாம் என எண்ணி இந்தப் பதிவை மற்ற நண்பர்களுக்கும் முன் வைக்கிறேன்.
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
1. முதல் துரோகம் சொல்லின் செல்வரின் நிர்வாகத்திறமையைப் பார்த்து அவருக்குப் பின்னால் ஒரு தலைவர் கூட்டமே நிற்பதைப்பார்த்து இந்த மனிதர்தான் தனக்குக்கட்சியில் உள்ள பெரிய தடை என திராவிட நாடு கோரிக்கையில் அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டைப்பயன் படுத்திக்கொண்டு அவரை செயற்குழுக் கூட்டத்தில் மதுரை முத்து போன்ற ரௌடிகளை வைத்து சட்டையைப்பிடித்துச் செருப்பாலடிக்க வைத்துக் கட்சியை விட்டு வெளியேறச் செய்து சம்பத் கவியரசர் பழ நெடுமாறன் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேற வைத்தார். தலைமைப் பதவிக்கு எப்போதாவது வர நினைத்தால் தனக்கிருந்த ஒரே இடைஞ்சல் EVK சம்பத் தான்.
தனது சுயநலத்துக்காக முதல் கட்சி உடைப்பு.
2.எம்ஜியாருடன் கைகோத்துக்கொண்டு நெடுஞ்செழியனைச் செல்லாக்காசாக்கிப் பதவி நாற்காலியைப் பிடித்தது.
ஆரம்பகாலத்தில் கட்சியில் ஐம்பெரும்தலைவர்கள் என திமுகவில் அறியப்பட்டவர்கள் அண்ணா, EVK சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன். ஒரிஜினல் Big five லிஸ்ட்லயே இல்லாதவர் திரு மு க அவர்கள்.
3. எந்த எம்ஜியாரி.ன் ஆதரவால் பதவிக்கு வந்தாரோ அதே எம்.ஜி.ஆர்.
"மாநாட்டுக்கு வசூல் பண்ணின காசையெல்லாம் என்ன பண்ணினய்யா?"
ன்னு கணக்குக் கேட்டவுடன் அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றி கழகத்தை பலவீனப்படுத்தி அடுத்த தேர்தலிலேயே கழகத்தைத் தோல்வி முகம் காணக் காரணமாயிருந்தவர் இதே மகானுபாவன்தான்..
இரண்டாம் முறை கட்சியை உடைத்தது இன்னொருவர் தனக்குப்போட்டியாக வந்து விடக் கூடாதென்று.
4.வைகோ வளர்ந்து வரும் வேகத்தைப்பார்த்து மகனுக்குப் போட்டியாக வந்து விடக்கூடாதேயென்று கொலைமுயற்சிக்குற்றம் சாட்டிக் கட்சியை விட்டு வைகோவை வெளியேற்றிக் கழகத்தில் இன்னொரு பிளவை உண்டு பண்ணி அதுவரை ஜாய்ன்ட் ஸ்டாக் கம்ப்பெனியாக திமுக என்று இருந்த கட்சியை The MK (திமுக) Private Limited என, பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றியது.
மூன்றாம் முறை கட்சியை உடைத்தது பொதுச் சொத்தைக் குடும்பத் சொத்தாக்க.
5.பியூன்கள் குமாஸ்தாக்கள் அதிகாரிகள் மட்டத்தில் 5 ரூபாய் 50 ரூபாய் 100 ரூபாய்களில் இருந்த லஞ்சத்தை லட்சக்கணக்கில் உயர்த்தி லஞ்சத்துக்குப் ப்ரோமோஷன் கொடுத்தது. அவை கடைசியாகப் பல கோடிகளில் போய் நின்றது.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு விலை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை என ஊழலை வாழ்க்கை நெறியாக்கியது.
6. சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அவர்களை சந்தோஷப்படுத்த இந்து மத ஆச்சார அனுஷ்டானங்களையும், ஆச்சார்யர்களையும், இந்து மதக் கடவுள்களையும் நையாண்டி பண்ணியது, அவமானப்படுத்தியது.
7. தமிழகத்தில் இன்று நிலவும் கலாச்சாரச் சீரழிவுக்கு, சீர்கேட்டுக்கு
அடிக்கல் மட்டும் நாட்டவில்லை கட்டடமே எழுப்பினார்.
அந்தக்கட்சியின் தலைவர்களில் மாவட்டம் வட்டம் உட்பட சின்ன வீடு இல்லாத ஒரு தலைவர் உண்டா இன்றைய தலைவரைத்தவிர? இருந்தால் அவருக்கு ஒரு கோவிலே எழுப்பிவிடலாம்.
8. எந்த இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலகட்டத்தில் தனது கட்சிக்காரர்களையே உள்ளே தூக்கி வைத்து நொங்கு நொங்கென்று நொங்கினாரோ அவருடனேயே
"அரசியலில் யாரும் எந்தக்கட்சியும் நிரந்தர நண்பனுமில்லை நிரந்தப் பகைவனுக்குமில்லை."
என தனது மானங்கெட்ட பல(ப)வட்டரைத் தனத்துக்கு ஒரு சமாதானம் சொல்லிக் கழகத்தின் தன்மானத்தைக் காற்றில் பறக்க விட்டது.
9. கலைஞர் பலதார மணச் சட்டத்தின் படி குற்றவாளி. தயாளு அம்மாள் கோர்ட்டுக்குப் போகாததால் ஜெயிலுக்குப்போகாமல் தப்பினார்.
இது போதுமா இன்னும் வேண்டுமா?
சட்டத்தால் தண்டிக்க முடியாததால் கொலைகாரன், கொலைகாரன் இல்லை என்று அர்த்தமல்ல. சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவனுக்குத் தரப்பட்டிருக்கிட்டது.
சட்டம் போட்ட பிச்சை அவனுக்குக் கிடைத்த உயிர்ப்பிச்சை.
அதேபோல திருடன் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை என்பதால்
அவன் மாசறு பொன்னாகி விடமாட்டான்..
நீங்களே சொல்லுங்கள் நான் என்னுடைய தினசரிக்கடமையாக கலைஞர் பெருமானைக் காய்ச்சிக் காய்ச்சிக் கழுவிக் கழுவி ஊற்றுவது சரியா இல்லையா என்று.
மிக்கநன்றி
Kothai Nachiar.........
Bookmarks