-
21st September 2020, 07:48 PM
#831
Junior Member
Diamond Hubber
தான் இறக்கும் சமயத்தில் எம் .ஜி .ஆர் .,அவர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி அனுப்புங்கள் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்லியதாக ஒரு பத்திரிகையில் படித்தேன்.....
நீங்கள் அவரை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் என்று
துங்கபத்ரா அணைக்கட்டு பகுதியில் இருந்து கே.என்.காடுமுத்து என்றவர் கேட்ட கேள்விக்கு தலைவர் சமநீதி என்ற இதழில் அவர் அளித்த பதில்.
ஆம் நெஞ்சம் பதறுகிறது...அவரை நான் கடைசியாக பார்த்தது நான் கால் முறிந்து சிகிட்சையில் மருத்துவமனையில் இருந்த போது என்கிறார் தலைவர்.
தலைவர்கள் நேரத்துக்கு ஏற்ப காலத்துக்கு வேண்டி உருவாகலாம்...ஆனால் உண்மை தலைவர்களே காலம் கடந்தும் மக்கள் சான்றோர்கள் நினைவில் இருப்பார்கள் என்பதற்கு...இந்த நிகழ்வே பெரும் சாட்சி ஆக அமைகிறது.
வாழ்க தலைவர் புகழ்.
வாழ்க பட்டுக்கோட்டையார் நினைவுகள்...நன்றி..........
-
21st September 2020 07:48 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2020, 07:52 PM
#832
Junior Member
Diamond Hubber
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர், தனது லண்டன் அனுபவங்களை அழகாக எடுத் துரைக்கின்றார்
லண்டன் கேள்வி-பதில்
கேள்வி : அமெரிக்கா செல்லவிருக்கும் நீங்கள் அங்கு அவதாவித்து தமிழகத்தில் மாறுதல் உண்டாக்க இருப்பவை எவையோ?
பதில் : மெக்ஸிக்கோ சென்று கரும்புச்சக்கையில் காகிதம் உற்பத்தி - அதுவும் பத்திரிகைகளுக்கான காகிதத்தயாரிப்பு - பற்றிய இலகுவான வழி முறைகளைக் கண்டறிந்து அதைத் தமிழக மக்கள் பயன்படும் படியாக வழி கோலுவேன். கூடவே அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியத்தில் மூன்று வார காலம் தங்கியிருந்து அங்கு காவல்துறை ஆற்றும் சேவையைக் கவனிப்பதுடன் , காவல்த்துறையினர் கண்ணிய மாகக் கடமையாற்றும் விதங்களையும் தெரிந்துகொள்வேன் . பின்னர் ஜப்பான் சென்று அங்கு குடிசைக் கைத்தொழில் வளர்ச்சிபற்றி நோடியாகவே காண்பதுடன் தமிழக மக்களும் அவ்விதம் செயல்படுத்தலைத் தொடங்க ஏற்ற நடவடிக் கைகளை எடுப்பேன். சிங்கப்பூர் சென்று இருநாட்கள் தங்கிவிட்டு, டிசம்பர் முதல்வாரத்தில் எனது பயணத்தைப் பூர்த்திசெய்வேன்.
கேள்வி : தமிழகத்தில் தர்மத்தின் ஆட்சி நிலவுவதாகப் பரவலாக எங்கும் பேசப்படும் அதே வேளையில் அண்மையில் நடைபெற்ற உறர்த்தாலைத் தொடர்ந்து கலைஞரின் வீடு சேதமுற்றதே?
பதில் : தீங்கு எங்கு நடந்தாலும் அது துடைப்பது தான் அரசின் வேலை . எனவே சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கட்சியாலும் விசாரணைக்குத் தப்ப மாட்டார்.
கேள்வி : அப்படியாயின் சக்காரியா கமிஷனில் குற்றம் சாட்டப்பட்ட எத்தனை யோபேர் இப்பொழுது அகில இந்திய அ.தி.மு.கவில் இருக்கின்றார்கனே.அவர்க எனைவரும் துய்மையடைந்துள்ளார்களா?
பதில் : அங்குதான் நீங்கள் தவறிழைக்கின்றீர்கள், குற்றம் நிருபிக்கப்படும் பொழுது அவர்களும் தண்டனைக்குத் தவறமாட்டார்கள், ஊழல்கள், வஞ்சங்கள் போன்றவற்றை விரட்டியடிப்பது தான் எமது இலட்சியம். நீதிதேவதையின் தண்டனை அவர்களை விட்டுவைக்கும் என்பதல்ல.
கேள்வி : தங்களது மந்திரிசபையில் சுதெலாக வழக்கறிஞர்களே காணப்பசென்றார்களே? ஏனோ?
பதில் : திறமைக்கு முதலிடம் கொடுப்போம். முன்பின் தெரியாத ஒன்றைப்பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வழக்காடக்கடிய அவர்கள் நாட்டுக்கு நன்மையான திட்டங்களைக்கூடச் செம்மையாக ஆராய்ந்து செயல்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று.
கேள்வி : தென்மா நில முதல்வர்கள் அண்மையில் ஒன்று கடினீர்களே? வெற்றியளித்ததா?
பதில் : இந்தித் திணரிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பதில் அனைவருமே ஏகோபித்த ஒற்றுமையான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். எனவே அது வெற்றியளித்தது. தவிர நதிப்பங்கீடு தொடர்பாகவும் அரிசிக்கான உத்தரவாத விவேயை நிர்ணயிப்பது பற்றியும் விரைவில் மீண்டும் கூடி தீர்மானமெடுப்போம்.
கேள்வி: மத்தியில் ஜனதா அரசை ஆதரிக்கும் அ.இ.அ.தி.மு. க . இடைத் தேர்தலில் இந்திராகாந்தியை ஆதரிக்கின்றதே?
பதில் : மத்தியில் எந்த ஆட்சி எனினும் நல்லவை செய்யும் பொழுது அதற்கு ஆதரவு கொடுக்கவும், தீமையை எதிர்க்கவும் அகில இந்தியா அ.தி.மு.க . தயங்காது - ஆனால் இந்திராகாந்தி கண்டிப்பாகப் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியவர் அதனால் ஆதியாரித்தோம்.
கேள்வி "இந்தியை முழு மாநிலங்களுக்கும் திணிப்பதை ஏற்க மறுக்கும் தங்களுக்கு, ஈழத்தில் பரவலாக சிங்களம் புகுத்தப்பவெதை வேற்க முடிகின்றதா?
பதில் " முதலாவதை எதிர்த்து நாம் போராடுகின்றோம், பின்னதை எதிர்த்து ஈழத்தவர்கள் போராடுகின்றார்கள், தவிர ஈழத்தவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தோ அல்லது நாம் சிங்களத் திணிப்பை எதிர்த்தோ சுக்குரலிடுவதில் பயனில்ல.
கேள்வி : பங்களாதேஷிடம் பிரிவினைப் போரின் போது இந்தியாவிலிருந்து உதவியது போல, தமிழ் ஈழப் போராட்டத்துக்குத் தமிழகத்தின் பணியென்ன?
பதில் : தமிழர் எங்கிருந்தாலும், அவதியுறும் பொழுது உதவுவதற்கு , தமிழர்கள் எங்கிருந்தாலும் தவறமாட்டார்கள். ஆனால் இலங்கை ஜனாதிபதி திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அண்மையில் சந்தித்தபோது இலங்கைத் தமிழரின் வளமானவாழ்வுக்குத் தான் வழிகோவியதாகத் தெரிவித்ததுடன் தமிழ் அமைச்சர்களே தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் பிரிவினைவாதிகளால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்றார்.
கேள்வி :இலங்கைச் சிந்தளவர் மத்தியிடம் தமிழர் மத்தியிடம் அமோக செல்வாக்குப் பெற்றுள்ள நீங்கள், பிரச்சனைகளுக்கு மத்தியஸ்தம் வகித்து தீர்வுகாண வழிசெய்ய முடியாதா?
பதில் : முதலாவது, வேறு நாடொன்றின் பிரச்சனை அது! அதில் எனக்கு வேலையில்லே! இரண்டாவது மத்தியஸ்தலம் எனப்பவெது இரு சாரருக்கும் பொதுவான நடுநிலை ஆனால் எங்கே ஒரு தரப்பினர் மத்தியஸ்தலம் வகிப்பவர் மற்றொருவர் எண்ணுகின்றாரோ , அப்பொழுதே சரியான தீர்ப்பும் கிடைக்குமென அவர் எதிர் பார்க்கமாட்டார். எனவே இந்த நிலையில் என்னால் செய்யக்கூடியது எதுவுமேயில்லை.
கேள்வி : அரசியல் பழுவிற்கும் சினிமா வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி?
பதில் : இரண்டுமே மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளவை .
கேள்வி : திரும்பியும் நடிக்கும் ஆர்வம் ..... ? சமயம் வரும்பொழுது நடிக்கத் தவறமாட்டேன்!
அண்ணா நாமம் வாழ்க! எனக்கூறியவாறே , அடுத்தவருடன் தனது அலுவல்களைத் தொடருகின்றார் முதல்வர்.........சை. பா.,
-
21st September 2020, 10:02 PM
#833
Junior Member
Diamond Hubber
"ஒளிவிளக்கு " காவியம் திரைப்படத்தில் மக்கள் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். அதற்கு தனிப் பதிவு எழுதலாம். டைட்டிலில் ப்ரீசிங் ஷாட் இந்த படத்தில்தான் முதலில் காட்டினார்கள். டைட்டிலில் ‘ஒளிவிளக்கு’ பெயர் போடும்போது மக்கள் திலகத்தின் ஸ்டைல் போஸ் ஒன்று போதும். தியேட்டரே இரண்டுபடும். ட்ரெஸ் Red & Red...(இவருக்கு மட்டுமே எந்த வண்ணமும் அப்படியே பொருந்தும்...இறைவன் ஆசிகளை பெற்ற மஹான்)...
ஒளிவிளக்கு திரைப்படம் வசூலைக் குவித்து 100 நாட்கள் கண்ட வெற்றிப்படம். என்றாலும் சென்னை பிராட்வே தியேட்டரில் 98 நாட்கள் ஓடி 2 நாட்களில் 100 நாள் கொண்டாட்டத்தை தவறவிட்டது. பிராட்வேயில் 14வது வார அதிகாரபூர்வ விளம்பரம் நம்மிடம் உள்ளது. வெளியிட்டும் இருக்கிறோம். 2 நாள் தானே யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று சென்னையிலும் 100 நாள் ஓடியது என்று நாம் சொன்னது இல்லை. மக்கள் திலகத்தின் படத்தை அதுவும் 100 வது படத்தை சென்னையில் 98 நாளில் எடுக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் ஓட்டமுடியாதா? ஒரு கவுரவத்துக்காக சென்னையில் 100 நாள் ஓடவைக்க மக்கள் திலகம் தரப்பில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வடசென்னையில் பிராட்வேயுடன் அகஸ்தியா தியேட்டரிலும் ஒளிவிளக்கு வெளியானது. சென்னையில் 100 நாள் ஓடாவிட்டாலும் மக்கள் திலகத்தின் படங்கள் தியேட்டர்களில் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடியவையே தவிர, மற்ற நடிகரின் படங்கள் போல சொந்தத் தியேட்டரில் ஓட்டி தங்களுக்கு தாங்களே ‘சாந்தி’ தேடியது இல்லை. குத்தகைத் தியேட்டர்களிலும் ஓட்டப்பட்டவை இல்லை. மொத்தமாக டிக்கெட்டை வாங்கி நாம் கிழித்துப் போடவும் மாட்டோம்.
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் 64 தியேட்டர்களில் வெளியாகி 63 தியேட்டர்களில் 50 நாள் கொண்டாடிய ஒரே தமிழ்படம் ஒளிவிளக்கு. இதற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. கடல் கடந்தும் ஒளிவிளக்கு சாதனை படைத்துள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரிலும் கொழும்பு ஜெயின்ஸ்தான் தியேட்டரிலும் முதல் வெளியீட்டில் 160 நாட்கள் ஓடி நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டிருக்கிறது. (முதல் வெளியீட்டில் 150வது நாள் விளம்பரம் பதிவிட்டுள்ளேன்) வெள்ளிவிழாவை தவறவிட்டாலும் அதற்கு ஈடு செய்வதுபோல இதுவரை வெளிநாட்டில் இன்றுவரை எந்த தமிழ்ப்படமும் செய்யாத மற்றொரு சாதனையை ஒளிவிளக்கு செய்துள்ளது.
அதே யாழ்ப்பாணம் ராஜாவில் 1979ம் ஆண்டு மீண்டும் ஒளிவிளக்கு வெளியாகி அப்போதும் 100 நாள் ஓடியிருக்கிறது. அதுவும் தினசரி 4 காட்சிகளாக. இது வெளிநாட்டில் எந்த தமிழ்ப்படமும் மறுவெளியீட்டில் செய்யாத தகர்க்க முடியாத சாதனை. 1979-ல் ஒளிவிளக்கு 100 நாள் ஓடியபோது அப்போது நண்பருடன் படத்தை பார்த்ததை வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர் என்பவரும் கூறியிருக்கிறார். மறுவெளியீட்டில் யாழ்ப்பாணம் ராஜாவில் ஒளிவிளக்கு 100 நாள் ஓடிய விளம்பரத்தையும் பதிவிடுகிறேன். அதுவும் சாதாரண ஓட்டம் இல்லை. 100 நாளில் 3 லட்சத்து 51, 403 ரூபாய் 75 காசுகள் வசூலாகி உள்ளது. 1979-ம் ஆண்டில் ஒரு மறுவெளியீட்டு படத்துக்கு இது பெரிய வசூல். அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் இந்தத் தொகை கூறப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளியான சிவாஜி கணேசனின் கவுரவம், பாட்டும் பரதமும், மன்னவன் வந்தானடி போன்ற படங்கள் முதல் வெளியீட்டிலேயே கூட இந்த அளவு வசூல் பெறவில்லை என்பது முக்கியமானது.
இலங்கை யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 1979-ல் மறுவெளியீட்டில் ஒளிவிளக்கு 100 நாள் கொண்டாடியதற்கான அதிகாரபூர்வ விளம்பரம். இந்த விளம்பரத்தில் 100 நாளில் மூன்றரை லட்சத்துக்கு மேல் வசூல் செய்த விவரம் அதிகாரபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிவிளக்கு விளம்பரத்துக்கு மேலே இன்னொரு அதிசயம். யாழ்ப்பாணம் ராணி தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக உலகம் சுற்றும் வாலிபன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில் மேலே பாருங்கள். 1979-ல் 5வது வாரமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் வாலிபன்.
இதில் ஒளிவிளக்கு விளம்பரத்துக்கு கீழே கவனியுங்கள். 100வது நாளன்று இன்று கடைசி நாள் என்று குறிப்பிட்டு அதற்கும் கீழே ‘நாளை முதல் கொடுத்து வைத்தவள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுவெளியீட்டில் ஒளிவிளக்கு அள்ளிக் கொடுத்ததால் அடுத்ததாக ஒளிவிளக்கு படம் முடிந்த அடுத்த நாளில் இருந்து மக்கள் திலகத்தின் கொடுத்து வைத்தவள் படத்தை யாழ்ப்பாணம் ராஜாவில் திரையிட்டுள்ளனர். இந்தப் பெருமை எல்லாம் எந்த நடிகரின் படத்துக்கு கிடைக்கும். வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகத்துக்கு ‘நிருத்ய சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தையும் வழங்கி இலங்கை மக்கள் மகிழ்ந்தனர். இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் சாதனைச் சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஒருவரே!......... Swamy...
-
22nd September 2020, 07:42 AM
#834
Junior Member
Diamond Hubber
1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ், இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் சொந்த நிறுவனமாகும். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வேறு யாரும் அல்ல. டி.ஆர்.ராஜகுமாரியின் உடன்பிறந்த தம்பி. பல வித்தியாசமான படங்களையும், வெற்றிப் படங்களையும் இயக்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையும் இணைத்து ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தை எடுத்தவர். எனவே அவருடைய கம்பெனியில் இருந்து வந்தவரை அதிக ஆவலுடன் வரவேற்றேன்.
வந்தவர், ‘அண்ணா.. இலங்கேஸ்வரன் என்னும் மனோகர் நடத்தும் நாடகத்தைப் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். அதில் நீங்கள் ராவணனாக நடிக்க வேண்டும். விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்; நான் போய் அண்ணாவிடம் சொல்லுகிறேன். பிறகு நீங்கள் அலுவலகத்திற்கு வந்து, மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொள்ளலாம்’ என்றார். (ராமண்ணாவை அண்ணா என்று தான் சொல்லுவார்கள்)
‘கூண்டுக்கிளி’ படத்தில் இருந்து ராமண்ணா சார் இயக்கிய பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். கண்டிப்பாக நடிக்கிறேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்றேன்.
‘என்ன உதவி செய்யவேண்டும்’ என்றார், வந்தவர்.
‘நான் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை பார்க்க வேண்டும், அவரோடு பேச வேண்டும்’ என்று கூறினேன்.
நான் சொன்னதைக் கேட்டவுடன் அவர் சிரித்துவிட்டார். ‘இது ஒரு பெரிய விஷயமே இல்லை; சீக்கிரம் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.
‘இலங்கேஸ்வரன்’ படப்பிடிப்பு நடக்கும் நாட்களிலெல்லாம், நான் அவரிடம் கேட்கும் கேள்வி ‘எப்பொழுது ராஜகுமாரி அம்மாவைப் பார்ப்பது?’ என்பது தான். படப்பிடிப்பின் கடைசிநாள் வந்தது.
‘இன்று அம்மாவைப் பார்க்கலாம்’ என்றார்.
எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஷூட்டிங் முடிந்து மேக்கப்பையெல்லாம் கலைத்து விட்டு, என்னுடைய காரில் எழும்பூரில் உள்ள ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் உட்காரச் சொன்னார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் மேல் தளத்திலிருந்து கீழே வருவதற்காக சுழல் மாடிப் படிக்கட்டுகள் இருந்தன.
ராஜகுமாரி அம்மா இப்பொழுது எப்படி இருப்பார்? என்கிற கற்பனையில் நான் ஆவலோடு உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்குள்ளாக ஒரு அம்மா மாடிப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கி வந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.
‘என்ன தம்பி, எப்படி இருக்கிறாய்?’ என்றார்.
நான் ‘நன்றாக இருக்கிறேன் அம்மா’ என்றேன்.
பதிலுக்கு நானும் நலம் விசாரித்தேன். ‘எனக்கென்ன தம்பி! என்னை ராமண்ணா தம்பி நன்றாகவே வைத்திருக்கிறது’ என்றார்.
நான் அன்று அவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வயது 63. என்னால் அவரை சிறிதுகூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கிராமத்தில் வேலை பார்க்கும் பள்ளி ஆசிரியை போல மிகவும் சாதாரணமாக இருந்தார். நான் அவரிடம் ஆசி வாங்கினேன்.
பிறகு ராஜகுமாரி அம்மா என்னிடம் பேசினார். ‘உன்னுடைய முதல் படத்தை நான் பார்த்தேன் தம்பி’ என்றார்.
‘அப்படியாம்மா?’ என்று கேட்டேன்.
‘நான் படத்தைப் பார்த்து விட்டு ராமண்ணா தம்பியிடம் “இந்த பையன் கணேசன் மாதிரி இருக்கிறான். நன்றாக நடிக்கிறான்” என்று சொன்னேன் தம்பி’ என்றார்.
கூண்டுக்கிளி படத்தில் சிவாஜி அண்ணனை நடிக்க வைத்த குடும்பத்தில் உள்ளவர்களின் வாயால் நான் பார்ப்பதற்கு சிவாஜி அண்ணன் மாதிரி இருக்கிறேன் என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
சாண்டோ சின்னப்பதேவர், குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தது, தயாரிப்பாளர் பூர்ண சுந்தர்ராவ், டி.ஆர்.ராமண்ணாவின் ஆரம்பகால படங்களின் செங்கல்பட்டு விநியோகத்தை வாங்க வந்தது போன்ற பழைய கால விஷயங்களையெல்லாம் என்னிடம் கூறினார்.
பிறகு என்னைப் பார்த்து, ‘ஏன் தம்பி, என்னைப் பார்க்க அவ்வளவு முயற்சி செய்தாய்? என் மீது ஏன் உனக்கு அவ்வளவு பிரியம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்றார்.
‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது, உங்களுடைய படங்களைப் பார்த்தவர்கள், உங்களை ஒருநாளாவது பார்த்துப் பேச வேண்டும் என்பதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் பார்க்க முடியாத உங்களை, நான் பார்த்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, உங்களை எளிதாகப் பார்த்துவிடலாம் என்று நம்பியிருந்தேன். நீங்கள் யாரையும் பார்ப்பதில்லை. எந்த விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. சமீபத்தில் ராமண்ணா சார் என்னை அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தபோது, உங்களைப் பார்க்க வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்தேன். அதனால் தான் உங்களைப் பார்க்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது’ என்றேன்.
சிற்றுண்டி கொடுத்தார்கள். அதை சாப்பிட்டு விட்டு விடைபெற்றேன்.
இந்த இனிப்பான செய்தியை, டி.ஆர்.ராஜகுமாரியின் உண்மையான ரசிகர்களிடம் சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, யாரிடம் முதலில் சொல்லுவது என்று யோசனை செய்தேன். அவர்களில் யாருமே அன்று உயிருடன் இல்லை. அதனால் நான் அடைந்த வெற்றியையும் மகிழ்ச்சியையும், நானே உள்ளூர கொண்டாடிக் கொண்டேன்.
சில ஆண்டுகள் கழித்து ராமண்ணா சார் வீட்டுத் திருமணம், விஜயா ஷேஷ மகாலில் நடைபெற்றது. நான் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை சந்தித்தேன். அப்போது அவருக்கு 73 வயது இருக்கும்.
சினிமா வாய்ப்பு அவரது வீடுதேடி வந்தது. ராஜாயீ என்பவர் டி.ஆர்.ராஜகுமாரி ஆனார். அவர் வாய்ப்பு தேடி எந்த படக் கம்பெனியும் ஏறி இறங்கவில்லை. நாடகங்களில் நடிக்கவில்லை. எந்தவித அவமானமும் எங்கும் அடையவில்லை. திருமணம் தான் அவரைத் தேடி வரவில்லை. ஆனால் செல்வமும், செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது.
ஏழு வயது மூத்தவரான எம்.ஜி.ஆர். கூட, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை மரியாதையின் காரணமாக அக்கா என்றுதான் கடைசி வரை அழைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருக்கும்பொழுது, 24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் ராஜகுமாரி அம்மா அவரைத் தொடர்பு கொண்டாலும் எம்.ஜி.ஆர். பேசுவார். அந்த அளவுக்கு செல்வாக்குடன் கடைசி வரை வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த சமயம், ஒரு நாள் இரவு 10 மணிக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்தார், டி.ஆர்.ராஜகுமாரி. அப்போது எம்.ஜி.ஆர். மாம்பலத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தார். அதனால் உதவியாளர் தான் போனை எடுத்தார். வழக்கம் போல் எம்.ஜி.ஆர். தான் போனை எடுப்பார் என்று எண்ணிய டி.ஆர்.ராஜகுமாரி, வேறு ஒருவரது குரல் ஒலித்ததும், ‘ராமச்சந்திரன் தம்பி இருக்கிறாரா?’ என்று கேட்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி ஒருவர் அழைப்பதைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த அந்த உதவியாளர், ‘நீங்கள் யாரம்மா?’ என்று கேட்க, ‘தம்பி இல்லையா?’ என்றிருக்கிறார் டி.ஆர்.ராஜகுமாரி.
அதற்கு உதவியாளர், ‘முதல்-அமைச்சர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவர் வந்ததும் சொல்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
‘அப்படியாப்பா? ராமச்சந்திரன் தம்பி வந்ததும், ராஜகுமாரி அக்கா போன் செய்ததாக மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறி போனை வைத்து விட்டார்.
எம்.ஜி.ஆர். இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்ததும், உதவியாளர் மூலம் டி.ஆர்.ராஜகுமாரி போன் செய்ததை அறிந்து, உடனடியாக அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
‘என்ன அக்கா! இந்த நேரத்தில் போன் செய்திருக்கிறீர்கள்? எதுவும் முக்கியமான விஷயமா? பிரச்சினையா?’ என்று கேட்டிருக்கிறார்.
‘தம்பி! நான் இப்பொழுது குடியிருக்கும் என்னுடைய வீட்டை, தம்பி ராமண்ணாவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு பெரிய தொகைக்கு அடமானம் வைத்திருந்தேன். அந்த தொகைக்கு சில மாதங்களாக சரியாக வட்டி கூட கட்ட முடியவில்லை. என்னுடைய வீடு என்னை விட்டு போய் விடும் போல் தெரிகிறது. பெரிதும் மனக்கவலையாக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவிற்கு வரவில்லை. அதனால் தான் தம்பி உனக்குப் போன் செய்தேன்’ என்று டி.ஆர்.ராஜகுமாரி வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதற்கு எம்.ஜி.ஆர். ‘அக்கா! அந்த வீடு எப்போதும் உங்களிடம் தான் இருக்கும். அதற்கு நான் பொறுப்பு. இப்போது நிம்மதியாகப் போய் தூங்குங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
மறுநாள் காலை 6 மணிக்கு பணம் கொடுத்தவருக்கு போன் செய்து, சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை 9 மணிக்கு ராமாபுரம் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வரமுடியுமா? வேறு எதுவும் உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறதா? அப்படி வருவதாக இருந்தால், டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானப் பத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர் தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களில் ஒருவர். அதிக செல்வாக்கு உள்ளவர். சமூக அங்கீகாரமும், ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்டவரான அவர், எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு ராமாபுரத்தில் இருந்தார். இருவரும் பேசியபடியே காலை உணவை சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர் புறப்படும் நேரத்தில் தொழிலதிபர், தன்னிடம் இருந்த பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., வாசல் வரை வந்து தொழிலதிபரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் பண விஷயம் பற்றி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்தத் தொழில் அதிபரின் பிரச்சினைகளும் தேவைகளும் எம்.ஜி.ஆருக்கு நன்றாகத் தெரியும்.
அன்று காலை தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியில் ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்று பத்திரத்தை அவருடைய கையாலேயே கொடுத்திருக்கிறார்.
மூன்று மாதங்கள் சென்றபின், அதே தொழிலதிபரை காலை உணவிற்காக மீண்டும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அவரும் வந்தார். முன்பு போல் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். இந்த முறை தொழிலதிபர் திரும்பிப் போகும் பொழுது, அவருடைய பிரச்சினைகளையும், தேவைகளையும், முழுமையாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எம்.ஜி.ஆர். தீர்த்து வைத்தார். அந்த உதவி, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானத் தொகையை விட பலமடங்கு லாபத்தை அந்த தொழிலதிபருக்கு கொடுத்தது.
இந்த விஷயத்தில் பயன் அடைந்தவர்கள், ராஜகுமாரி அம்மா மற்றும் தொழிலதிபர் மட்டுமல்ல.. எம்.ஜி.ஆர். அனுமதி அளித்து, தொழிலதிபருக்கு கொடுத்த திட்டத்தால் தமிழக மக்களும் தான்.
தன்னுடைய தம்பி ராமண்ணாவின் பிறப்பையும் இறப்பையும் பார்த்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. தம்பி பல திருமணங்கள் செய்யும்பொழுது, மறுப்பேதும் சொல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார். தான் திருமணம் முடிக்காமல் இருக்கும்பொழுது, தம்பி மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறானே என்று ஒருநாள்கூட ராஜகுமாரி அம்மா எண்ணியதில்லை. ராமண்ணாவின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும், அவருக்கு உதவியாக இருந்து கைதூக்கி விட்டவர் அவர்.
ராஜகுமாரி அம்மா 1922-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தஞ்சையில் பிறந்தார். 77 வயது வரை வாழ்ந்து, 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது வீட்டிற்குச் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.
*** - நடிகர் ராஜேஷ் , தினத்தந்தி இதழில் எழுதிய தொடரிலிருந்து.........
-
22nd September 2020, 12:02 PM
#835
Junior Member
Diamond Hubber
"கொடுத்து வைத்தவள்" எம்ஜிஆரின்
உன்னதமான இயற்கை நடிப்புக்கு எடுத்துக் காட்டாக அமைந்த படம்.
எம்ஜிஆருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற e v சரோஜாவின் ஆவலை பூர்த்தி செய்த படம். அவருடைய சகோதரன் ev ராஜன் தயாரிக்க ப.நீலகண்டன் இயக்க
"கொடுத்து வைத்தவள்" ராமண்ணாவின் மூன்றாவது மனைவியான சரோஜாவை கதாநாயகியாக வைத்து எடுத்த படம். L.விஜயலட்சுமி ஜோடியும் ரசிக்கும்படி அமைந்திருந்தாலும் பழகிய கண்கள் சரோஜாதேவியை
தேடுவது தவிர்க்க முடியாதது.
தங்கவேலு காமெடி ரசிக்கும்படி இல்லாதது படத்தில் ஒரு குறைபாடுதான். நாகேஷ் காமெடி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாகேஷின் ஆரம்ப கால காமெடி ரசிக்கும் படி இருந்தது.
1963 ல் சங்கிலித் தொடராக வெளிவந்த 2வது படம். பிப் 9 அன்று பல போட்டி தலைவர் படங்களுடன் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற்ற படம். படம் குடும்பப் படம்தான்
என்றாலும் தொய்வில்லாமல் அடுத்தடுத்து திருப்பங்களோடு இருக்கும் படி தலைவரின் ஆஸ்தான டைரக்டர் ப.நீலகண்டன் உருவாக்கி
கொடுத்தார்.
சீர்காழி கோவிந்தராஜன் எம்ஜிஆருக்கு "பாலாற்றில் தேனுறுது" பாடலை பாடி .இருப்பார்.
தலைவர் நினைவிழந்து நிற்கும் போது வரும் 'நீயும் நானும் ஒன்று' பாடலை சிறந்த முறையில்
இசையமைப்பு செய்து கொடுத்திருப்பார். 'என்னம்மா செளக்யமா'? டூயட் பாடல் படத்தின் உற்சாகமான நகர்வுக்கு ஏற்ப அமைந்திருக்கும். வழக்கம்போல தலைவரின் தத்துவப் பாடலாக வரும்
'நான் யார் தேரியுமா'? சிறப்பாக அமைந்திருந்தது.
'மின்னல் வரும் நேரத்திலே
மழை பொழியும்' பாடலில் அழுது வடிந்த சரோஜா அழகாக மகிழ்ச்சியாக தோன்றுவார். குடும்ப படத்தில் சோக காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் தலைவரது நடிப்பு திறமையால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வார் இயக்குநர். சென்னையில் காஸினோ மகாராணி புவனேஸ்வரியில் வெளியாகி. காஸினோ மகாராணியில் 77 நாட்களும் புவனேஸ்வரியில் 56 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்த படம்.
தமிழகத்தின் பல ஊர்களில் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம். தமிழகத்தில்
முன்னர் வந்த "பணத்தோட்டத்தை"யும் பின்னர் வந்த "தர்மம் தலை காக்கும்" படத்தையும் அரவணைத்து சென்றது. ஒரே நேரத்தில் தலைவரின் 3 படங்களும் 9 திரையரங்கில் ஓடியது மற்றுமொரு அதிசயம் என்றே சொல்லலாம். அது
தலைவரின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்..........ks.........
-
22nd September 2020, 07:28 PM
#836
Junior Member
Platinum Hubber
இலங்கையில்இருந்து* வெளியான உரிமைக்குரல்பத்திரிகை* செய்தி*
----------------------------------------------------------------------------------------------------------
கடைசி வார கதாநாயகனின் ஈழத்து ரசிகர்களுக்கு அரச திரைப்பட கூட்டுத்தாபனம் அளித்த பிச்சை . -- உத்தமன் வெள்ளி விழா*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
12/05/1978ல்* ஈழத்தில் திரையிடப்பட்ட உத்தமன்* வெள்ளிவிழா கொண்டாடிவிட்டதும் மார் தட்டுகிறார்கள் .* கணேசனின் விசில் குஞ்சுகள்*சாதனையாம் , அரிய பெரிய* சாதனையாம் .* வசூல் நாயகனாம் .* இப்படி கூறியும் பத்திரிகையில் எழுதினால் மட்டும் கணேசன் வசூல் நாயகனாகிவிட முடியுமா ?காலங்களில் அவள் வசந்தம், உத்தமன் , மதனமாளிகை , மன்மதலீலை,* பேரும் புகழும் இத்தனை படங்களும் ஒன்றுக்கொன்று ஒருவார , இருவார இடைவெளியில் திரையிடப்பட்டது .* ஆனால் இவற்றில் உத்தமன் படம் மட்டும் பிரபல நடிகரின் படம் என்பது குறிப்பிடத்தக்கது .உத்தமனை தவிர காலங்களில் அவள் வசந்தம் , பேரும் புகழும்* ஆகியவை நன்றாக இருந்தும் நன்கு ஓடவில்லை .* உத்தமன் படத்தில் கணேசன் செய்யும் அயோக்கிய செயலைவிட மன்மதலீலை படம் மக்களுக்கு நன்கு படிப்பினை தரக்கூடிய படமாக இருந்தும் குடும்பத்துடன் பார்க்க முடியாத ஆபாச படமென வி.சி.கணேசன் ரசிகர்களால் விமர்சனப்படுத்த பட்டு விட்டதால் அந்த படைத்தாலும் நன்கு ஓடமுடியாமல் போய்விட்டது .*
அரசு திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் வேறு படங்கள் கையிருப்பில் இல்லாமல் இருந்ததால் உத்தமனை மாற்றி திரையிட வேறு படங்களும் இல்லாததால் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணம் ராணி சினிமாவில்*27/10/1978 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த திருடாதே படம் திரையிடப்பட இருப்பதாக ராணி சினிமா வாசலில் தினமும் காவல்நின்று படம் தொடங்கிவிட்டாலும் வீடு செல்லாத ரசிகர்* ஒருவர் உட்பட பத்திரிகை வெளியிடும் ஒருவரும் இன்னுமொரு நண்பருமாக* யாழ் புகையிரத**நிலையத்தில் இருந்து*தபால் புகையிரதம் மூலம் கொழும்புக்கு அரச திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு* சென்று உத்தமனை மாற்ற வேண்டாம் . நாங்கள் வெள்ளி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து விட்டோம் . உத்தமனை மாற்றினாலும், திரையிடப்போவது பழைய படம்தானே . அதனால் வெள்ளிவிழா ஓடுவதற்கு கருணை காட்டுங்கள் என்று அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள் .* பின்பு சிலோன் எண்டெர்டெயின்ஸ் ஸ்தாபனத்திடம் ( தற்போது ராணி சினிமாவை நிர்வகித்தவரும் ) சென்று காலில் விழுந்ததால் திருடாதே படத்தை ஸ்ரீதர் அரங்கிற்கு மாற்றிவிட்டு , உத்தமனை வெள்ளி விழா* ஓட வாய்ப்பளித்தார்கள் .இப்படி கேவலமாக ஒரு படத்தை வெள்ளிவிழா ஒட்டிவிட்டால் மட்டும் போதுமா ? தங்கப்பதக்கம் , அவன்தான் மனிதன் போன்ற படங்களால் ஏன் இப்படி ஓட்ட முடியவில்லை . உத்தமனை விட , மேற்கண்ட இரு படங்களும் ஓரளவு நல்ல படங்கள்தானே .அப்படங்களை உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அல்லது மக்களுக்கு பிடிக்கவில்லையா ? உத்தமன் போல வேறு படங்கள் 6 அல்லது 7 மாதங்கள் திரையிடாமல்* இருந்திருந்தால் ,அவைகள் பொன்விழா , வைரவிழா என்று கொண்டாடி இருப்பீர்கள் அல்லவா? இது கேவலமில்லையா ? இப்படி எல்லாம் வெள்ளிவிழா கொண்டாடுவது என்றால் இப்படி வெள்ளிவிழா ஓட்ட வேண்டுமென்றால் எங்களது படங்கள் கூட வெள்ளிவிழா ஓட்ட முடிந்திருக்கும் .எங்களுக்கு அது தேவையில்லை . வி.சி.கணேசன் படங்களை போல சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டும் ஓடும் படங்கள் அல்ல எம்.ஜி.ஆரின் படங்கள் .என்பதை புரிந்து கொள்ளுங்கள் வி.சி.கணேசனின் பிள்ளைகளே, எடுபிடிகளே
-
22nd September 2020, 08:27 PM
#837
Junior Member
Platinum Hubber
யூ ட்யூப்*-தமிழ் சானல்*செய்திகள் -1947 முதல் 1978 வரை பாக்ஸ்*ஆபிஸ்*ஹிட்*முதலிடம்*பெற்ற திரைப்படங்களின் பட்டியல் -மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்*பெரும்பாலான வருடங்களில் முதலிடம்*பிடித்து சாதனை*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1947* * *-* ராஜகுமாரி*
1948 -* * * சந்திரலேகா*
1949 -* * * அபூர்வ சகோதரர்கள்*
1950* * -* * மருத நாட்டு இளவரசி*
1951* * - மர்மயோகி*
1952* *-* பராசக்தி*
1953* -* அவ்வையார்*
1954* *-* * மலைக்கள்ளன்*
1955* *-* * *மிஸ்ஸியம்மா*
1956* *-* * * *மதுரை வீரன்*
1957* * -* * * சக்கரவர்த்தி திருமகள்*
1958* * -* * * நாடோடி மன்னன்*
1959 -* * * * வீரபாண்டிய கட்டபொம்மன்*
1960* -* * * * பாக்தாத் திருடன்*
1961* -* * * *திருடாதே*
1962* -* * * *தாயை காத்த தனயன்*
1963* -* * * *பெரிய இடத்து பெண்*
1964* -* * * *பணக்கார குடும்பம்*
1965* *-* * * எங்க வீட்டு பிள்ளை*
1966* * -* * *அன்பே வா*
1967* * -* * * காவல்காரன்*
1968* *-* * * *குடியிருந்த கோயில்*
1969* -* * * * அடிமைப்பெண்*
1970* * -* * * *மாட்டுக்கார வேலன்*
1971* * -* * * *ரிக்ஷாக்காரன்*
1972* * -* * * *நல்ல நேரம்*
1973* * -* * * *உலகம் சுற்றும் வாலிபன்*
1974* * -* * * *உரிமைக்குரல்*
1975* * *-* * * *இதயக்கனி*
1976* *-* * * * *நீதிக்கு தலைவணங்கு*
1977* * -* * * * மீனவ நண்பன்*
1978* * - சிகப்பு ரோஜாக்கள்*
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd September 2020, 08:34 AM
#838
Junior Member
Diamond Hubber
#மொய் #விளக்கம்
1967 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு மக்கள்திலகம் சென்றிருந்தார். அப்பொழுது எல்லோரும் மொய்ப்பணம் எழுதும் போது 11, 21, 51, 101 என்று பக்கத்தில் ஒன்று கூட்டி எழுதுகிறார்கள்...
ஏன் தெரியுமா ? என்று கேட்டார்...
பல பேர் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும் யாரும் சரியான விளக்கத்தைக் கூறவில்லை...
இதனால் மக்கள்திலகமே தொடர்ந்தார்..
"10, 20, 50, 100 என்று எழுதும் போது கடைசியில் பூஜ்யம் வருகிறது. வாழப்போகும் தம்பதியினர் வாழ்க்கையும் பூஜ்யமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றைக் கூட்டிக்கொள்கிறோம்...
திருமணத்திற்கு முன் பூஜ்யமாக இருந்திருந்தால், திருமணம் ஆன பின் ஒன்று கூடி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஒன்று என்ற எண்ணைச் சேர்க்கிறோம்...
வாழ்க்கை என்பது முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்காகவே 11,21,51,101 என்று நாம் மொய்ப்பணம் எழுதுகிறோம்..." என்றார்.
சின்ன விஷயமாக இருந்தாலும்...அதை வாத்தியார் சொல்லும் போது...அடடா...! என்ன ஒரு இனிமை...
அந்த விஷயத்துக்கே தனி அந்தஸ்து வந்துடுதுல்ல...
#கலக்குற #வாத்தியாரே.........
-
23rd September 2020, 08:40 AM
#839
Junior Member
Diamond Hubber
அருமை சகோதரர்/ நண்பர் திரு லோகநாதன் அவர்கள் youtube. லிஸ்ட்டில் 1955 ம் வருடம் "குலேபகாவலி" என்பதே சரியான தகவல் ஆகும். மற்றும் 1978ம் ஆண்டு தியாகம் ஆக இருக்கலாம். விபரங்களை உறுதி செய்து Youtube நிர்வாகத்துக்கு நாம் சரியான தகவல்கள் அனுப்பலாம்.........
-
23rd September 2020, 08:46 AM
#840
Junior Member
Diamond Hubber
எங்கள்ஊரில் தீவிர சிவாஜி ரசிகர்,. காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இருந்தார்,சிவாஜி என்றால் அவருக்கு உயிர்,ஊர்வலம் போவார் ,கொடி பிடித்த கூட்டத்தை கூட்டி கோஷங்கள் இடுவார்,தேர்தல் காலத்தில் உணவையும் மறந்து பணிபுரிவார் அவர் தந்தையார் அவரை வளரத்த விதம் அப்படி ,ஏன் என்றால் அவர் தீவிர காமராஜர் பத்தர் திராவிடகட்சிகள் நாட்டுக்கு கேடு என எண்ணம் அவர் மனதில் அசைக்க முடியாத கருத்தாய் இருந்தது!, அவர் மகனோ படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார், அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.அவர் முன்னேறத்திற்கோ,வேலை வாங்கிதரவோ எவரும் முன் வரவில்லை, அவர் நல்லநேரம் சிபாரிசு இன்றி சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்தது... நாளடைவில் பல தரப்பட்ட மக்களோடு பழகும் போது எம். ஜி .ஆர்., ஆட்சியின் நல திட்டங்கள், ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதை உணர்ந்து எம் ஜி ஆரின் தீவிர தொண்டனாகவே மாறிவிட்டார். இப்பொ ழுதும் அவர் சிவாஜி ரசிகர்தான், ஆனால் எம் ஜி ஆரின் தொண்டன், நடிப்பு வாழ்க்கையாகாது என்பதை புரிந்து எம் ஜி ஆரின் கொள்கையாலும், குணத்தாலும் உணர்ந்து கொண்டவர்..........சாய்பாபா பாபு.........
Bookmarks