-
20th January 2021, 10:05 AM
#1761
Junior Member
Diamond Hubber
வரலாற்றால் எவரும் நெருங்கமுடியாத
வெற்றிக்குரியவர் எம்.ஜி.ஆர் :
1977,1980,1984 இந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் 189 இடங்களில் தன்னுடைய
வெற்றியை பரவலாக்கியவர் எம்.ஜி.ஆர்.
இந்த வெற்றி அனைத்தும் எம்.ஜி.ஆர் என்ற
தனி ஆளுமைக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி ஆகும்.இதை கணக்கிட்டால் 80% மேல் வெற்றி என்று கணக்கிடப்படுகிறது.
இப்படிப்பட்ட அரசியலின் அசுர பலம் புரியாதவர்கள் இன்னும் அரைவேக்காட்டுத்தனத்துடன் காழ்ப்புணர்ச்சி கொண்டு தமிழ்நாட்டில் பிதற்றி திரிகின்றனர்.அவர்களுக்கு நாங்கள் கூறுககிறோம் "எந்த முதல்வர் ஆளும்போது
அனைத்து கிராமங்களிலும் தன்னிறைவு பெற்றதுடன் அவர்களின் அத்தியாவசிய தேவைகளில் எந்த விலையேற்றமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தார்களோ"அவரை விட சிறந்த முதல்வர் எவரும் இல்லை.அந்தவகையில்
இன்றும் மக்கள் கூறும் வார்த்தை எம்.ஜி.ஆர் ஆண்டபோது மக்கள் நிம்மதியாக இருந்தோம் என்று இன்றும் கூறுகின்றனர்.தன் குடிமக்கள் நிம்மதியாக வாழ வகை செய்பவரே சிறந்த மன்னர்.இவர் மன்னாதி மன்னர் என்று இன்றும் புகழப்படுகிறார்..........Rnjt
-
20th January 2021 10:05 AM
# ADS
Circuit advertisement
-
20th January 2021, 10:06 AM
#1762
Junior Member
Diamond Hubber
எங்கள் M.G.R நாத்திகவாத்தியல்ல. என்றும் நாத்தீகவாதம் பேசியவர் அல்ல.
கடவுள்களை இழிவுபடுத்திப் பேசியவர் அல்ல. மற்ற மதக் கடவுள்களை பழித்து பேசியவர் அல்ல.
"ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்" என்றும்,
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி" என்றும்,
"கடவுள் என்னும் முதலாளி" என்றும்,
"கடவுள் ஏன் கல் ஆனான்" என்றும்,
"கடவுள் இருக்கின்றார் அது உன் கண்களுக்கு தெரிகிறதா" என்றும்,
"கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும்" என்றும்",
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்" என்றும்,
"கரை மேல் பிறக்க வைத்தான்" என்றும்,
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காக கொடுத்தான்" என்றெல்லாம் தன் படப்பாடல்கள் மூலம் தனது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்.
முருக பெருமானாக ஒரு பாடலில் பாடி நடித்தும், வேறு ஒன்றில் சிவபெருமானாக ருத்ர தாண்டவம் ஆடியும்,
காஞ்சி மஹாபெரியவர், கிருபானந்த வாரியார் போன்ற மகான்களுடன் ஆழமான, ஆத்மார்த்தமான நட்பிலும் இருந்தவர்.
அல்லா, புத்தர், இயேசு பற்றியெல்லாம் தன் பாடல்களில் பெருமையாக பாடியவர்.
அவர் பெரியாரை மதித்தார் என்றாலும், அவரது எந்த கொள்கைகளையும் பேசி, பாடி, பாராட்டியது இல்லை. புத்தர் ஏசு காந்தி, விவேகாந்தர், சுபாஷ் சந்திர போஸ், திருவள்ளுவர், அண்ணா மற்றும் முருகக் கடவுள் படங்கள் தன் வீட்டில் அலுவலகத்தில் மாட்டி இருப்பது போல காட்சி அமைக்க தெரிந்தவருக்கு "பெரியார்" படம் இருப்பது போல் எந்த காட்சியும் அவர் அமைக்கவில்லை. பெரியாரின் எந்த கொள்கைகளையும், செயல்களையும் M.G.R அவர்கள் ஏற்று கொண்டதில்லை.
பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்து சீர்திருத்தங்களை ஏற்று சட்டமாக்கினார். அவரை மதித்து ஈரோட்டை பெரியார் மாவட்டம் ஆக்கினார் என்பதை தவிர, அவரது நாத்திகத்தை M.G.R ஏற்று கொண்டவரல்ல.
இதயவீணை படத்தில் காவி உடையணிந்து "திருநிறை செல்வி" என்று பாடி நடித்தவர். இன்னும் பல படங்களில் காவியணிந்து நடித்தவர்.
தாய் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றிருக்கிறார். வாள் கொடுத்திருக்கிறார்.
திருப்பதி, மதுரை, மருதமலை கோவில்களுக்கு சென்றவர்.
அவர் வெளியில் நாத்திகம் பேசி விட்டு திருட்டுத்தனமாக கோயிலுக்கு போகவில்லை.
M.G.R அவர்கள் தனது நம்பிக்கையை மீறிய எந்த விஷயத்தையும் படங்களில் காட்சிகளில், டயலாக்களில், பாடல்களில் வெளிப்படுத்தியதில்லை அது நடிப்பாக இருந்தாலும். அது M.G.R ரசிகர்களுக்கு பக்தர்கள் எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து எங்களுக்கு யாரும் பாடம் சொல்லி தர வேண்டியது இல்லை....Shen Babu
-
20th January 2021, 10:06 AM
#1763
Junior Member
Diamond Hubber
"இதயக்கனி" வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் : 04.01.1976.
1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ – லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்..........Baabaa
-
20th January 2021, 10:07 AM
#1764
Junior Member
Diamond Hubber
SWEET MEMORIES....
#அன்பே_வா
#மக்கள்_திலகத்தின்_பிறந்தநாள்_சிறப்புப்பதிவு.. !!!
ஐம்பத்து ஐந்து வருடங்கள் ((14-01-1966...பொங்கலன்று வெளியானது)) கடந்தும் மக்கள் மனதில இளமையாய் நிற்கிறது "அன்பே வா".
ஏழைப்பங்காளன், புரட்சி வீரன், மக்கள் தலைவன் இந்த வேடங்களுக்குத்தான் மக்கள் திலகம் நன்றாக பொருந்துவார் என்ற 60 களின் நிலமையை அப்படியே மாற்றி, மக்கள் திலகத்தால் "சாக்லட் ஹீரோ" போன்ற வேடங்களிலும் பட்டையை கிளப்ப முடியும் என்று நிரூபித்தபடம்.படத்தில் இடம் பெற்ற அத்துணை நடிகர்களுக்கும் இப்படம் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை கொடுத்த படம்..
அசோகன் அவர்களை கொடூரமான-நையாண்டி செய்யும் வில்லன் வேடத்தில் பல படங்களில் பார்த்து ரசித்திருப்போம். இந்த படத்தில் ஒரு விமானப்படை அதிகாரியாக, மிக மென்மையான-காதலை தன் நண்பனுக்காக தியாகம் செய்கின்ற பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.
மக்கள் திலகத்தின் நடன திறமையை அப்படியே வெளிக்கொணர்ந்த படம்." புலியைப்பார் நடையிலே" பாட்டு ஒன்று போதுமே...!!!
இந்தப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கண்டிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இந்த படத்தின் பாடல்களை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அதெப்படி மெல்லிசை மன்னர் வெளிநாட்டில்-வெளி மாநிலங்களில் எடுக்கப்படும் படங்களுக்கென்று தனித்தனியாக இசையை கொடுக்கிறாரோ...!!! அற்புதம்...!!!
அன்பே வா படத்தின் புகழ்-மக்கள் திலகத்தின் புகழைப்போலவே என்றென்றும் நிலைத்திருக்கும்..........Sr.Bu...
-
20th January 2021, 10:08 AM
#1765
Junior Member
Diamond Hubber
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."...bsm...
-
20th January 2021, 10:11 AM
#1766
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் பக்தர்களே புனிதமானவர்கள் ! .கொள்கையின் படி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்!!!
1958ல் "நாடோடி மன்னன்" படத்திலிருந்து 1978 "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரை எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் இன்றைய காலம் பக்தர்களாகவும் வாழ்ந்து கொள்கை கோமான்களாகவும் விளங்குகின்றனர்.புரட்சிதலைவர் எப்படி கொள்கையில் இருந்து பிறழாமல் வாழ்ந்தாரோ அதே மாதிரி அவரது பக்தர்கள் இன்று வரை கொள்கைக். கோமான்களாக வாழ்ந்து வருகின்றனர்.பாருங்கள் ஒரு உச்ச நடிகர் வாழும் காலத்தில் அவர் ஆட்சியில் ஏறி சிஸ்டம் சரி பண்ணனும் என்று அறை கூவல் விடுத்தார்.உடன் தேர்தலில் வென்று அமர வேண்டும் என்றார்.யாரை நம்பி ? அவரது ரசிகர்களை களத்தில் இறக்கி.
பின்னர் நோ கட்சி என்றார்.இன்று அவரது ரசிக சீமானிகள் கொள்கை பற்றுடயவர்களா? கொள்கையாவது மண்ணாவது .உடன் தி.மு.வில் ஐக்கியமாகிறார்கள்.சிலர் அ.தி.மு.கவில் இணைகிறார்கள்.சிஸ்டம் சரியில்லை.திராவிட கட்சிகளை அப்பறப்படுத்துவோம் என்றாரே. அவரது குஞ்சுகள் எப்படி திராவிட கட்சிகளில் இணைகிறார்கள்.? ரஜினிக்கு கொள்கை உண்டு என்றால் அவர் ரசிகர்கள் ஒரு வாரத்தில் தடம் புரள்கிறார்களே .அப்படி என்றால் உச்சநடிகர் ரசிகர்களெல்லாம் வியாபாரி என்றல்லவா பெயர் எடுக்கிறார்கள்.கட்சி மாறுகிறார்களே என்று அச்சப்பட்டு உடன் உச்ச நடிகர் எந்த கடசியிலும் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டுள்ளார்.அப்படி என்றால் உங்களது கொள்கை தான் என்ன ?
தமிழ்நாட்டு மக்களை உச்ச நடிகர் என்ன கிள்ளுக்கீரையாக நினைக்கிறாரா?
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் எம்.ஜி.ஆருக்கு இணை அவரே தான்.அதே மாதிரி அவரது பக்தர்களை வெல்லவும் யாருமில்லை ! .எம்.ஜி.ஆர் பக்தர்கள் இன்றும் கொள்கை கோமான்களே !! அவர்கள் புனிதர்களே !!!...ssm...
-
20th January 2021, 10:12 AM
#1767
Junior Member
Diamond Hubber
"அன்பே வா". ..படத்துக்கு எம்ஜிஆர் 3.25 லட்சம் சம்பளம் வாங்கினார் என்றும் உயர்ந்த மனிதன் படத்துக்கு கனேசனுக்கு ஏவி எம் மெய்யப்பச் செட்டியார் 1.5 லச்சத்துக்கு மேல் சம்பளம் குடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்றும் 2 படத்துக்கும் வசனம் எழுதின ஆரூர்தாஸ் சொல்லிருக்கார். ஏவி எம் சரவணணும் அன்பே வா க்கு எம்ஜிஆருக்கு 3.25 லட்சம் சம்பளம் கொடுத்தோம் என்று சொல்லிருக்கார். எம்ஜிஆர் வாங்கின சம்பளம் கடைசி வரைக்கும் கணேசன் vc வாங்கவில்லை. கண்ணதாசன் பாதி நேரம் போதையில் இருப்பார். குடிச்சா போதை ஏறலைன்னு பெத்தடின் ஊசிக்கு அடிமையாகிவிட்டார். இதை அவரே எழுதினார். தனக்கு பல பெண்களோடு தொடர்பு உண்டு என்றும் அவரே ஒப்புக்கொண்டார். போதையில் அந்த நேரத்தில் மனசில் தோன்றுவதை எழுதுவார். ஆனாலும் ஒரு விசயத்தை அவர் மறைச்சிட்டார். மெட்ராசில் கவிதா ஓட்டல்னு நடத்தி வந்தார். அது ஒரு விபச்சார விடுதி. வேண்டியவங்களுக்கு அங்க வெச்சு பெண்கள சப்ளை செய்வார். வாலிக்கு இதே மாதிரி பாராட்டி ஒரு பெண்ணோட இருக்க வெச்சாராம். இதை ஆனந்த விகடனில் ஒரு 7 .. 8 வருசம் முன்னாடி நினைவு நாடாக்கள் என்ற தொடரில் வாலியே எழுதினார். இப்படிப்பட்ட மாமாப் பயல்தான் கண்ணதாசன். நம்பாளு மேலே எனக்கு சமயத்தில கோபம் வரும். தன்ன திட்டினவன், திட்டாதவன், வேண்டியவன், வேண்டாதவன் எல்லாருக்கும் உதவி பண்ணுவார். பதவி குடுப்பார். அது அவர் பெரிய குணம். ஆனா நமக்கு பொறுக்கவில்லை. 1980/ வருசம் தேர்தல்ல அண்ணா நகர்ல எச்.வி.ஹண்டே கிட்ட தோத்துப்போன தீயசக்தியை பாவம் ஜெயிச்சுட்டு போகட்டும்னு விட்டார். அப்புறம் 800 சொச்சம் ஓட்டுல தீயசக்தி கேவலமா ஜெயிச்சதா அறிவிச்சாங்க.... Rajarajan...
-
20th January 2021, 10:13 AM
#1768
Junior Member
Diamond Hubber
#எம்ஜிஆர் #இன் #தமிழ்நதி #மக்கள் #சங்கம்!!!
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவதரித்த இந்நன்னாளில், அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களுக்காக தோன்றியிருக்கும் ஒரு சங்கம்...
எம்ஜிஆர் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிசெய்ய துடிப்புடன் செயல்படுத்த இருக்கும் ஒரு சங்கம்...
எந்தவித சுயலாபநோக்கின்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கம்...
அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சியை மக்களோடு மக்களாக நின்று, தோள்கொடுத்து மீண்டும் அந்த நல்லாட்சியை நிறுவ முனைப்புடன் இருக்கும் ஒரு சங்கம்...
எம்ஜிஆர் இன் தமிழ்நதி மக்கள் சங்கம்!!!
புரட்சித்தலைவரின் புகழ் போல தழைத்தோங்க எல்லாம் வல்ல நம் குலதெய்வம் பொன்மனச்செம்மல் அருளாசி புரிவாராக!!!
அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் நல்லாதரவை சிரமேற்கொண்டு வரவேற்கிறோம்!!!
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க!!!...bsm
-
21st January 2021, 08:06 AM
#1769
Junior Member
Diamond Hubber
#மக்கள்_திலகத்தின்_திரை_பயணத்தில்...!!!
#குமரிக்கோட்டம்..
தன் பெண் குமரியை ((ஜெயலலிதா)), தன்னுடைய நண்பன் முத்தையா (முத்தையா) வின் மகனான கோபால் (மக்கள் திலகம்) க்கு மணமுடித்து தருவதாக வாக்களிக்கிறார் சோமு (வி.கே.ராமசாமி) . இந்த திருமண உடன்படிக்கை செய்யப்படும்போது சோமு, முத்தையா இருவருமே பரம ஏழைகள். முத்தையா, சோமுவுக்கு தன் ஏழ்மையையும் பொருட்படுத்தாது பல உதவிகளை செய்கிறார்.
ஆனால் தன் தாய் வழி வந்த ஏராளமான செல்வத்தினால் செல்வந்தர் ஆகிறார் சோமு. முத்தையாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதோடு மட்டுமின்றி,தன் நண்பன், முத்தையா-கோபாலை இழிவு படுத்துகிறார் சோமு.
இதை ஒரு சவாலாக ஏற்று குமரியின் கோட்டத்தில் நுழைந்து குமரியை மணக்கிறார் கோபால்.
சிறப்பான குடும்பக்கதையானது மக்கள் திலகத்தின் பங்களிப்பாலும், மெல்லிசை மன்னரின் இன்னமும் ரசிக்கப்படும் இனிய பாடல்களாலும் வெற்றிப்படமானது.
#நாம்_ஒருவரை_ஒருவர்
#எங்கே_அவள்_என்றே_மனம்
#என்னம்மா_ராணி_பொன்னான_மேனி
தகவல் & புகைப்படம்:
https://en.m.wikipedia.org/wiki/Kumari_Kottam...Str.bu
-
21st January 2021, 08:06 AM
#1770
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திறன் மிகு உத்தி படத்தின் பாடலை காட்சிகளை வசனத்தை படத்துக்கும் தனக்கும் அரசியல் கொள்கைக்கும் பொருந்தி வருமாறு அமைப்பது தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திறன்மிகு தொடர்பியல் உத்தி ஆகும். இதை ஆங்கிலத்தில் Effective communication technique என்போம்.தன்னிடமிருந்த திரைப்படம் என்ற வலிமை மிகுந்த தொடர்பியல் சாதனத்தை 100 சதவீதம் ஆற்றலுடன் பயன்படுத்தி சிறுவர் முதல் பெரியவர் வரை தன் பக்கம் ஈர்த்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் !
இப்பதிவு... வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல் வரிசை 3 லிருந்து )
என் அன்புத் தலைவா தங்களின் புகழ் பல யுகங்களை கடந்தும் நிலைத்திருக்கும் வாத்தியாரே. நம் தங்கத் தலைவர் புரட்சித்தலைவரின் 104 வது பிறந்த நாள் இன்று 17.01.2021 அற்புதமான நன்னாளில் என் நெஞ்சம் நிறைந்து வணங்குகிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...Sar.Swamin.........
Bookmarks