-
1st February 2021, 10:18 AM
#1841
Junior Member
Diamond Hubber
திரை உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான துள்ளலான துடிப்புமிக்க கதாநாயகர் நம்முடைய புரட்சித்தலைவர் மட்டுமே. அன்றும்-இன்றும் இனிவரும் காலங்களில் வரப்போகிற இளைஞர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை சில நிமிடங்கள் அமர்ந்து பார்த்து விட்டாலே போதும் புரட்சித்தலைவரின் துள்ளலான நடிப்பை கண்டு அவர்களும் ரசிகர்களாகி விடுவார்கள் அப்படி ஒரு இயற்கையான நடிப்பு எந்த நடிகர்களுக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புரட்சித்தலைவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிக அற்புதமான பொக்கிஷங்களாகும் சினிமாவில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் அதில் முக்கிய பங்கு புரட்சித்தலைவரின் திரைப்படங்களுக்கு என்றுமே உண்டு இப்போதைய இளைஞர்களும் இனி வரப்போகின்ற இளைஞர்களும் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை கண்டு ரசித்தால் நேர்மையாக வாழவும் ஒழுக்கமாக வாழவும் முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை ... இன்றும் என்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ! புரட்சித்தலைவரின் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
1st February 2021 10:18 AM
# ADS
Circuit advertisement
-
1st February 2021, 10:20 AM
#1842
Junior Member
Diamond Hubber
உதய சூரியனாக வந்த எம் ஜி ஆர்
இருண்ட மேலாதிக்க சக்தியை மாற்றி வெளிச்சம் தந்த உதயசூரியன் எம்ஜி ஆர்
தி மு க வை அரியணை காண வைத்த உதயசூரியன் எம் ஜி ஆர்
அண்ணாவை முதல்வர் ஆக்கிய உதயசூரியன் எம் ஜி ஆர்
கருணாநிதியை முதல்வர் ஆக்கிய உதயசூரியன் எம் ஜி ஆர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என உரைத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றிய உதயசூரியன் எம் ஜி ஆர்
தமிழகம் பொற்க்காலம் காண தானே ஆண்டு ஒரு பொற்க்கால ஆட்சி தந்த உதயசூரியன் எம் ஜிஆர்
உதய சூரியன் எம்ஜி ஆர் இன்றி ஒரு தலைவரும் ஜெயிக்க முடியாது
உதயசூரியன் இன்றி ஒரு அணுவும் அசையாது
உதயசூரியன் எம் ஜி ஆர் இன்றி தமிழகத்தில் ஒரு அணுவும் அசையாது
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...gsn...
-
1st February 2021, 10:21 AM
#1843
Junior Member
Diamond Hubber
" மக்களிடம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு "
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜூன் 30 ம் நாள்,"தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எழுச்சியும்,மகிழ்ச்சியும் தந்த நாளாகப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என்பதில்
அய்யமில்லை.
அன்று சென்னையில் மாமாங்கமெனப்
புரண்டோடிய மக்களின் பெருங்கூட்டத்தையும், அவர்களது முகத்தில் சுடர்விட்ட நம்பிக்கை ஒளியையும் உள்ளத்தில்
பொங்கிப் பெருகிய பேரார்வத்தையும் கண்ட
போது ஏழை மக்களிடம் எம்.ஜி.ஆர் பெற்றுள்ள செல்வாக்கு எத்தகையது என்பது
இதுவரை புரியாதவர்களுக்கும் புரிந்திருக்கும்.
(முதல்வர் எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற 10 நாளில்
ஆனந்த விகடன் எழுதிய தலையங்கம்)
இதுபோன்ற புகழ்மிக்க தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.அவருக்கு இணை எவருமில்லை.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨.........vrh...
-
2nd February 2021, 07:50 AM
#1844
Junior Member
Diamond Hubber
தகவலுக்கு நன்றி: சென்னை பாபு. தொகுப்பு: சாமுவேல். ஜனவரி மாதம் பொன்மனச்செம்மல் காவியங்கள் தொலைக்காட்சிகளில் 118 தடவை ஒளிபரப்பாகி உள்ளன. முரசு, வசந்த், சித்திரம் தொலைக்காட்சிகளில் அதேநாளில் மறு ஒளிபரப்பு உண்டு. அந்த வகையில் கூடுதல் ஒளிபரப்பு 12 தடவை. எனவே 130 தடவை ஒளிபரப்பாகி உள்ளன. [118+12=130]
ஜனவரி மாதம் ஒளிபரப்பான 66 காவியங்கள் விபரம்: 1. நினைத்ததை முடிப்பவன் 2.சந்திரோதயம் 3.நீதிக்குத் தலைவணங்கு 4. உரிமைக்குரல் 5. இதயக்கனி 6. எங்க வீட்டுப் பிள்ளை 7. நல்ல நேரம் 8. கண்ணன் என் காதலன் 9. உழைக்கும் கரங்கள் 10. என் அண்ணன் 11. புதிய பூமி 12. நாளை நமதே 13. அன்பே வா 14. குடியிருந்த கோயில் 15. நவரத்தினம் 16. என் கடமை 17. எங்கள் தங்கம் 18. தாய் சொல்லைத் தட்டாதே 19. நீரும் நெருப்பும் 20. பல்லாண்டு வாழ்க 21. தேடி வந்த மாப்பிள்ளை 22. தெய்வத்தாய் 23. காவல்காரன் 24. கணவன் 25. ரிக்சாக்காரன் 26. நான் ஏன் பிறந்தேன் 27. பெற்றால்தான் பிள்ளையா 28. தொழிலாளி 29. தாயின் மடியில் 30. கொடுத்து வைத்தவள் 31. ஆனந்த ஜோதி 32. கலங்கரை விளக்கம் 33. பெரிய இடத்துப் பெண் 34. ரகசிய போலீஸ் 115. 35. காலத்தை வென்றவன் 36. பணம் படைத்தவன் 37. உலகம் சுற்றும் வாலிபன் 38. அடிமைப் பெண் 39. நாடோடி மன்னன் 40. தாயைக் காத்த தனயன் 41. மாட்டுக்கார வேலன் 42. நாடோடி 43. பறக்கும் பாவை 44. மதுரை வீரன் 45. ராமன் தேடிய சீதை 46. தேர்த் திருவிழா 47. கன்னித்தாய் 48. வேட்டைக்காரன் 49. சக்கரவர்த்தி திருமகள் 50. திருடாதே 51. தனிப்பிறவி 52. விவசாயி 53. அரசக்கட்டளை 54. நீதிக்குப் பின் பாசம் 55. தர்மம் தலைகாக்கும் 56. குடும்பத்தலைவன் 57. முகராசி 58. அபிமன்யு 59. ஒருதாய் மக்கள் 60. இதய வீணை 61. ஆயிரத்தில் ஒருவன் 62. சிரித்து வாழ வேண்டும் 63. பட்டிக்காட்டு பொன்னையா 64. குமரிக் கோட்டம் 65. படகோட்டி 66. பணத்தோட்டம்
ஜனவரி மாதம் 17 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய காவியங்கள் எண்ணிக்கை விபரம்: சன்லைப்-26, முரசு-7, ராஜ் 18+1( பறக்கும் பாவை கூடுதலாக ஒருநாள்), புதுயுகம்-7, மெகா24-7, பாலிமர்-10, வேந்தர்-3, மீனாட்சி-5+4( நல்லநேரம்,விவசாயி கூடுதலாக பிறிதொரு நாளிலும் வேட்டைக்காரன் கூடுதலாக இரண்டு நாட்கள்) பெப்பர்ஸ்-7, சித்திரம்-1, வெளிச்சம்-1+1( நல்லநேரம்), ஜெ மூவி-5, D திரை-2, ஜெயா-3, வசந்த்-5, மூன்-1, மெகா-2+2( படகோட்டி, குடியிருந்த கோயில் கூடுதலாக தலா 1 நாள்)
மீனாட்சி, D திரை ஆகியவை சென்னை உள்ளிட்ட சில ஏரியாவில் ஒளிபரப்பாகுபவை.
நல்லநேரம் 11 தடவையும் தாய்சொல்லைத் தட்டாதே 8 தடவையும் வேட்டைக்காரன் 5 தடவையும் அதிகபட்சமாக ஒளிபரப்பாகி உள்ளன..........Babu SML...
-
2nd February 2021, 07:51 AM
#1845
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர் எடுத்தவுடன்கதாநாயகனாக உயரவில்லை ...
எம் ஜி. ஆர் !
எத்தனையோ
அவமரியாதைகளையும்,
அவமானங்களையும்
தாண்டியே அவரது
வெற்றிப் பயணம்...
ஆரம்பமானது....
அன்றும், இன்றும்
கொண்டாடப்படும்
அவரின் ஆரம்ப கால
திரை வாழ்வினைப் பற்றிப்
பார்ப்போமா!......
➖➖ #லலிதா
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.
அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.
கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் அறிவர்.
அதேபோல், அமெரிக்க இயக்குனர் #எல்லீஸ் #டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.
எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு #புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.
அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய #டாக்கா #மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.
அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.
எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.
வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில் எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிக்கிறார்.
டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.
உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.
1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் பலித்து விடுகிறது.
அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.
உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.
எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.
“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.
“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.
நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.
தகவல்➖ இணையம்.........ksr...
-
2nd February 2021, 07:52 AM
#1846
Junior Member
Diamond Hubber
'கருணாநிதியின் மகன் நான்' என்ற டயலாக் எடுபடாமல் போகவே இப்ப புரட்சித்தலைவரை 'பெரியப்பா' என்கிறார் திரு.ஸ்டாலின்..
ஆக தனது தந்தையின் பெயரை சொன்னால் 'ஓட்டு விழாது' என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்திருக்கிறார்..
இன்றைக்கு, 'சீனி சக்கர சித்தப்பா, எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா' என்ற ஒரு உருட்டு...
நேற்று 'அண்ணாவுக்கு டீ வாங்கி கொடுத்தேன், பக்கோடா வாங்கி கொடுத்தேன்' என்ற ஒரு உருட்டு...
அஇஅதிமுகவினர் உங்களை போல், கிரிமினல் தனமாக, ஒரு போதும் எதிர்கட்சி தலைவர்களை வாடகைக்கு எடுத்து பிரச்சாரம் செய்யமாட்டார்கள்...spv...
தலைமுறை கடந்து, தலைவர்களையே நேரிலே சந்திக்காத தொண்டர்களே முதல்வராகும் இயக்கம் #அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம்...
எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலினை பார்த்து ஒரே ஒரு கேள்வி...
'நீங்கதான் பெரியாருக்கு பேனா வாங்கி கொடுத்தவராச்சே..
அண்ணாவுக்கு டீ வாங்கி கொடுத்தவராச்சே....
கருணாநிதிக்கு காப்பி போட்டு கொடுத்தவராச்சே....
எல்லா தலைவர்களிடமும் நெருக்கமா பழகி பால பாடம் கற்ற உங்களால அதிமுகவில் ஒரு எளிய தொண்டன் சரளமாக மேடையில் பேசுவதை போல் பேச முடிவதில்லையே ஏன்?
அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டன் முதல்வராகும் போது, உங்களால் முடிவதில்லை ஏன்?
உங்களுக்கு பெரியப்பாவாகவும், உங்கள் அப்பாவிற்கு பெரிய ஆப்பாகவும் விளங்கியவர் எங்கள் #புரட்சித்தலைவர் என்பதை மறந்துவிடாதீர்கள்..........sbb
-
2nd February 2021, 07:52 AM
#1847
Junior Member
Diamond Hubber
#இனி #உங்கள #பார்க்கமாட்டோம்
அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...
கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.
ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...
"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.
இது நித்தமும் தொடர...
ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.
மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....
ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...
அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்
நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.
"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...
பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...
"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....
இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...
வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்......bsm...
-
2nd February 2021, 07:55 AM
#1848
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
#மக்கள்_திலகம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #_காலை_வணக்கம்..
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்லும் பாடல்களை பாடியதோடு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதையே கடைபிடித்து வாழ்ந்து வந்தார். இதனால் தான் இன்றைக்கும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் அவர் அன்றைக்குப் பாடிய பாடல்கள் இன்றைக்கு வாழும் மக்களுக்கு ஒத்துப்போகிறது..
கவிஞர் கண்ணதாசன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு எழுதிய பாடல்களை ஒரு தொடராக பதிவிட்டு
இருந்தேன் அதில் பல பாடல்களை பற்றி
ஒரு ரசிகனாகப் பகிர்ந்து கொண்டேன்
அதே போல் புரட்சி தலைவர் தம் பாடல்களில் சிறுவர்களும், பெரியவர்களும் தவறான வழியில் செல்லாமல், அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல அவர் படங்களில் எத்தனையோ நன்னெறி பாடல்கள் உள்ளன இன்று அதை பற்றிய ஒரு சிறு கட்டுரை நண்பர்கள் பார்வைக்கு
பதிவிடுகிறேன்....
(சற்று நீண்ட பதிவு மன்னிக்கவும்)
எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அந்த படங்களில் நடித்து முடித்த உடனே, தங்கள் வேலை முடிந்தது என்று கிளம்பி விடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாக நடந்து வருவதுண்டு. சிகரெட், மது, மாது இம்மூன்றையும் தொடவே கூடாது என்று திரைப்படத்தில் நமக்கெல்லாம் புத்தராக வந்து அறிவுரை சொல்லிவிட்டு, பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் சதா சர்வகாலமும் மேற்சொன்ன அந்த மூன்று கெட்ட பழக்கங்களோடே குடும்பமும் நடத்தி வருவதுண்டு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ திரைப்படங்களில் என்ன கருத்துக்களை சொன்னாரோ, அதையே தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடித்து வந்தார். அதனால் மக்கள் திலகம் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் இன்னும் அவரை மறக்காமல் தங்கள் நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர்.
சின்னஞ்சிறிய வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே, எம்.ஜி.ஆர் தான் முதன் முறையாக நடித்த சமூக சீர்திருத்த படமான, திருடாதே படத்தில் இடம் பெற்ற
திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்துவிடாதே,
திறமை இருக்கு மறந்துவிடாதே
என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.
நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம்மை பயமுறத்துவதற்காகவே பேய் பிசாசு பற்றி பயமுறுத்தி வைப்பார்கள் பெரியவர்கள். ஆனால் பேய் பிசாசு எதுவும் கிடையாது என்று சொல்வதற்காகவே அரசிளங்குமரி திரைப்படத்தில் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்று தொடங்கும் பாடலில்
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே
என்று சிறுவயதிலேயே அவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் பாடியுள்ளார்.
அது மாதிரியே வருங்கால இந்தியா மாணவர்களை நம்பியே உள்ளது என்பதை சொல்லும் வகையில் நம் நாடு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
என்று பாடியுள்ளார்
மேலும், பெற்றால் தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.... இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்,
என்று நாட்டுக்கு தலைவனாவதற்கு என்னென்ன தகுதிகள் நமக்கு வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அதே போல், ஒரு மனிதன் தன்னுடைய கடமை, பொறுப்பை உணர்ந்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக திரிபவர்களுக்காகவே பணம் படைத்தவன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் வாழ்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
இந்த பாடலில் இடம்பெற்ற வரிகளைப் போலவே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மறைந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இந்த பூமி உள்ள வரை இன்னும் நம்மிடையே அவர் வாழ்ந்துகொண்டு இருப்பார் என்றால்,
அது மிகையாகாது... வெறும் பாடலை பாடியதோடு நிற்காமல், தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அதையோ கடைபிடித்து வந்தார் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை...
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
2nd February 2021, 07:56 AM
#1849
Junior Member
Diamond Hubber
நண்பர்களே! அதிசயம்,அற்புதமான நிகழ்வுகள் நடக்கிறது பாருங்கள்!!
எம்.ஜி.ஆர் கொடுத்த இரட்டை இலை கட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சியாக களம் காண்கிறார் ஸ்டாலின். அவர் தனது எதிர்க்கட்சி ஸ்தாபகர் எம்.ஜி.ஆர் படம் காட்டி அவர் தனக்கு நெருக்கம் என்று படம் காண்பித்து வோட்டு கேட்கிறார்.உலகத்தில் இந்தமாதிரி எதிர்க்கட்சி தலைவர் எனக்கு நெருக்கம் என்று வோட்டு வேட்டையாடும் விந்தையை யாரேனும் கேட்டதுண்டா? யாரேனும் கண்டதுண்டா ? இந்த விந்தையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் தான் மேலோங்கி இருக்கிறது.
அன்று தந்தை கலைஞர் 1984ல் செய்த அதே தகிடு தத்தம் வேலையை இன்று மகன் செய்கிறார்.அன்று 1984ல் கருணாநிதி என்ன சொன்னார்.?!நீங்கள் எனக்கு வோட்டு போடுங்கள்.எம்.ஜி.ஆர்., எனக்கு தோழர்.அவர் அமெரிக்காவில் இருந்து சுகம் பெற்று வந்தவுடன் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறேன் என்று.
அப்பாவும் பிள்ளையும் எம்.ஜி.ஆர் வோட்டு வங்கி அவர்களுக்கு வேண்டுமாம்.
ஆக நமது நண்பர்களே
தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது !!!...nssm.........
-
2nd February 2021, 07:56 AM
#1850
Junior Member
Diamond Hubber
உழைத்து பிழைக்கும் ஒருவன் காட்டில் மரம்வெட்டும் போது தன் இரும்புக்கோடாலியை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் தவறவிட்ட கதை அனைவரும் அறிவோம். ஒரு தேவதை வந்து தங்கக் கோடாலியை
எடுத்து வந்து இதோ கிடைத்து விட்டது என்று கூற இது உன்னுடையதா? என்று கேட்க, இல்லை என்று அவன் கூற அடுத்து வெள்ளி கோடாலி, மூன்றாவதாக இரும்பு கோடாலியை கொடுக்க, ஆம் இதுதான் என்னுடையது என்று அவன் பெற்றுக் கொள்ள அவனுடைய நேர்மையை பாராட்டி மூன்று கோடாலியையும் அவனுக்கு தேவதை பரிசாக அளித்து விட்டு சென்றது.
இதை கேள்விபட்ட பக்கத்து வீட்டில் உள்ள உலோபி தானும் துருப்பிடித்த இரும்பு கோடாலியை தூக்கிக் கொண்டு சீட்டியடித்துக் கொண்டு காட்டுக்கு கிளம்பி விட்டான். ஒரு மரத்தை கூட வெட்டவில்லை. அந்த துருப்பிடித்த இரும்புக் கோடாலியை எடுத்து நேரடியாகவே ஆற்றில் போட்டு விட்டு
தேவதைக்காக காத்திருந்தான். தேவதையும் வந்தது. தேவதையிடம் கோடாலி விழுந்த கதையை சொன்னான். உடனே தேவதை தங்கக் கோடாலியை காண்பித்து இது உன்னுடையதா, பார் என்றது. ஆமாம் இது என்னுடையதுதான் என்று சொல்லி விட்டு தேவதையை திரும்பி பார்க்காமலே தங்கக் கோடாலியை தூக்கிக் கொண்டு ஓடினான்.
ஆனால் கோடாலி உடனே அவனிடமிருந்து மறைந்து விட்டது. ஆனால் முதலாமவன் கொண்டு சென்ற தங்கக் கோடாலியால் நிலைத்த செல்வம் இன்று வரை உயிர்ப்போடு இருப்பதை நாமும் பார்க்கலாம். இதிலிருக்கிற உண்மை தத்துவத்தை உணரும் அளவுக்கு கைஸ்களுக்கு அறிவு பத்துமோ பத்தாதோ தெரியவில்லை. அதற்குபின் நிறைய உலோபிகளும் பேராசைகாரர்களும் முயற்சி செய்து பார்த்தும் இன்று வரை தங்கக் கோடாலி யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.
1952 லிருந்து நடிக்க ஆரம்பித்த அய்யனின் கைஸ்களுக்கு டிக்கெட் கிழிக்க பழகாததால் ஆரம்ப கால அய்யனின் படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை. "நாடோடி மன்னனி"ன் புழுதியை கிளப்பிய வெற்றிக்குப் பின்தான் அய்யனுக்கும் கைஸ்களுக்கும் டிக்கெட் கிழிக்கும் ஆர்வம் உண்டாயிற்று எனலாம். அய்யன் நடித்த முதல் 50 படங்களில் ஒரு 5 அல்லது 6 படங்கள்தான் ஓரளவு வெற்றி பெற்றது.
"தூக்கு தூக்கி", "மக்களை பெற்ற மகராசி" போன்ற 5,6 படங்களை தவிர "உத்தம புத்திரன்" உட்பட பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1959 ல் வெளியான "கட்டபொம்மனை" டிக்கெட் கிழித்து ஓட்டியதிலிருந்து கைஸ்கள் டிக்கெட் கிழிக்க பழகி விட்டனர். அது இன்றுவரை தொடர்கிறது. டிக்கெட் கிழித்த கரங்கள் இன்றுவரை ஓயவில்லை. 1954 ல் வெளியான "மலைக்கள்ளன்" மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. புரட்சிகரமான நடிப்போடு ஜனரஞ்சகமான நடிப்பையும் வெளிப்படுத்தி ஜனாதிபதியின் வெள்ளி பதக்கத்தையும் வெற்றி கொண்ட பெருமை புரட்சி நடிகரையே சாரும்.
1955 ல் வெளியான "குலேபகாவலி" அடுத்த பிளாக்பஸ்டர்.
அந்த படத்தின் மீதுள்ள ஆர்வம் இன்றுவரை சாதாரண மக்களுக்கு தொடர்கிறது. 1956 ல் வெளியான மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் என்றாலும் "மதுரைவீரன்" இன்று வரை கைஸ்களின் கனவில் 31 தியேட்டர்களும் வந்து மிரட்டுவது தொடர்கதையாக மாறி விட்டது.
1957 ல் "சக்கரவர்த்தி திருமகள்" அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஆனது.
1958 என்றாலே கைஸ்களுக்கு குளிர் ஜீரம் வந்து விடும் "நாடோடி மன்னனை" நினைத்து. "நாடோடி மன்னனி"ன் அபரிமிதமான வெற்றியை முறியடிக்க 7 ஆண்டுகள் ஆனது. அதுவும் மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" வந்துதான் முறியடித்தது. இப்படியிருக்க ஆட்டம் போடும் கைஸ்களின் ஆணவம் இன்னமும் குறைந்தபாடில்லை..........ksr.........
Bookmarks