-
17th June 2006, 06:46 PM
#21
Senior Member
Platinum Hubber
þó¾ ¬§Åºõ, ¯½÷ §Å¸õ þýÛõ ¿¢¨È þ¨Ç»÷¸Ç¢¼õ §¾¡ýȢŢð¼¡ø ¿¡ðÊüÌ ¿¢îºÂÁ¡ö ¦À¡ü¸¡Äó¾¡ý!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
17th June 2006 06:46 PM
# ADS
Circuit advertisement
-
18th June 2006, 11:54 AM
#22
Senior Member
Veteran Hubber
அம்மையாரே,
நீங்களாவது சொல்லுங்கள்:என் எழுத்து நடை வேறு யாருடையதைப் போலாவது இருக்கிறதா?
-
18th June 2006, 04:23 PM
#23
Senior Member
Diamond Hubber
venki naan thamizha adihammaa padichadhu illa, so unnga writing yaara maadhiriyum irukkira maadhiri thonala!
-
18th June 2006, 05:20 PM
#24
Senior Member
Platinum Hubber
þø¨Ä§Â! ¾É¢ò¾ý¨Á§Â¡Î, ¸ñ½¢Âò§¾¡Î, ¯ò§Å¸ò§¾¡Î ¦ºÆ¢ôÀ¡¸ þÕ츢ÈÐ! Keep it up!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
18th June 2006, 06:49 PM
#25
Moderator
Diamond Hubber
Originally Posted by
VENKIRAJA
எல்லோரும் பாராட்டுவது ஒருசேர பயத்தையும் தைரியத்தையும் மூக்குத்துவாரத்தைப்போல,கொணர்கிறது.
தொடரட்டும்
முத்து எடுக்க வேண்டுமென்றால் மூச்சுப் பிடித்துத்தானாக வேண்டும்
-
19th June 2006, 12:19 PM
#26
Senior Member
Diamond Hubber
venki romba azhaga ezhudira, keep going
-
22nd June 2006, 05:10 PM
#27
Senior Member
Veteran Hubber
அத்தியாயம் #2.
'நான்' எனும் சொல் தற்போது மிகவும் மெலிந்துவிட்டது.கண்டவனெல்லாம்,தன்னை ஏதோ மிகப்பெரிய சாதனையாளன் என எண்ணிக்கொண்டு பேசுவது ஒரு புதுவித நாகரீகமாகிவிட்டது.ஆனால்,மிகப்பெரிய திறமைசாசிகளும்,புத்திசாலிகளோ அடக்கத்தோடு தங்களை குறிப்பிடுகிறார்கள்:அதனாலொ என்னவோ அடக்கமோம்புபவர்களை உயர்ந்தோரென எண்ணுவதே நன்மை எனப்படுகிறது-இது இந்த சிதடன் கற்றுக்கொண்டது,காயலான் கடைகளில்!.எனது விநோதமான பழக்கங்களில் ஒன்று பழைய பேப்பர் கடைகளுக்கு சென்று புத்தகங்கள் படிப்பது.அவற்றினாலாய பயன் நிறைய உணர முடிவது.ஒரு பொங்கல் தீபாவளிக்கு முன்னைய இதழ்களினை புரட்டுகையில் சினிமாக்காரர்களது குட்டு வெளிப்படுகிறது!உதாரணம்:ஆதி.விஜய்யின் இப்படத்தினைப்பற்றி ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு தொடரில் அவர் ஆஹா ஓஹோ என குறிப்பிட்டார்.மேலும் கதை(!) தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் புதிய முடிச்சுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.ஆனால் படத்தை டி.வி.டி யில் கூட காண சகிக்கவில்லை.ஒருவேளை தற்போது அவர் மனந்திருந்தியிருக்கலாம்,நாம் எது செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்ற எண்ணத்திலினின்று.இவரை குற்றம் சொன்னதை யாரும் தப்பர்த்தம் செய்து கொள்ளத்தேவையில்லை.ஒரு உதாரணம்,அவ்வளவே.சாரு நிவேதிதா என்றொரு எழுத்தாளரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தான் ஏதோ மிகப்பெரிய எழுத்தாளர் என்ற எண்ணத்தோடு அவர் கொடுத்த பேட்டியை படித்தேன்.உண்மையில் none are perfect.அவர் சாடும் போது திருந்தவேண்டும் என்ற எண்ணமெலாம் "வரமாட்டேன்" என்கிறது.சில அநாகரீகமான சொற்கள் என் அடித்தொண்டையில் சிக்கிக்கிடக்கின்றன.தனது எண்ணத்தை பகிர்ந்துகொள்ளவும் இன்புற செய்யவும் தான் இலக்கியம்.ஏன் வள்ளுவர் செய்யவில்லையா என்ற் அவர் 'வள்ளும்' போது அவர் மீது பரிதாபம் தான் வருகிறது.தமிழில் படிப்பிலக்கியம் எப்போதுமில்லாத வறட்சியை கொண்டுள்ள்தாகவும்,உரைநடையை அசோகமித்திரன் தவிர யாரும் எழுதுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.அசோகமித்திரன் சாலச்சிறந்த எழுத்தாள்ர் என்பதில் ஐயமிலை,எனினும் அவர்தவிர யாரும் சரியாக எழுதவில்லை என்பதற்கு இவருக்கு என்ன அருகதை?மேலும் மிக சொற்பச்சிலர் நல்ல கவிகளை எழுதுவதாகவும் குறிப்பிடுகிறார்.மேலும் இவரைப்போல சாடுவதற்கும் எழுதுவதற்கும் இன்னொருவர் பிறக்கவேண்டும்,அதனால் இவரை மேன்மேலும் அனைவரும் வாசகஞ்செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதியிருந்தார்.ஆனால் இவர் அத்தகுதியினைப்பெறவில்லை.
இது ஒத்து நிறைய பேர் தங்களின் தகுதியை தலைக்கேற்றிக்கொண்டு தேவையின்றி அவர்களது கொஞ்ச நஞ்ச திறனையும் வீணடித்துவிடுகின்றனர்.இன்னும் சிலர் ரொம்ப மோசம்.அவர்கள் பற்றி வேண்டாம்.அடுத்து வார இதழ்களில் என்னை பாதித்த தொடர்களை பற்றி சொல்கிறேன்
"தங்களை இப்படிக்
கிறுக்குத்தனமாக கிறுக்கிய
யாரைப்பற்றிச்
சொற்கள் முறையிடுகின்றன?
ஒவ்வொரு சொல்லும்
காகித ஆடை அணிந்திருக்கிறது."
(ஃகாலிப்,தமிழில்:கவிக்கோ அப்துல் இரகுமான்)
-
22nd June 2006, 05:15 PM
#28
Senior Member
Diamond Hubber
venki
-
22nd June 2006, 06:14 PM
#29
Senior Member
Veteran Hubber
நான் முதலில் படித்த தொடர் கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய "கி.மு-கி.பி",'மனிதனுக்குள் ஒரு மிருகம்'.மிகவும் arouse செய்த தொடர்கள் அவை.இரண்டாம் தொடரினால் இன்ஸ்பயர் ஆகி ஒரு திரைப்படத்திற்கான கதையை ஒரு வருஷம் முழுக்க கட்டம் கட்டி எழுதி வைத்திருக்கையில் தான் இந்த மையம் சிக்குண்டது.அதற்குள் மதன் எழுதிய தொடர்கள்,புத்தகங்கள் அத்தனையையும் படித்து முடித்தேன்.அதற்கப்புறம் தான் தெரிய வந்தது அவை எல்லாமே இணையத்திலிருந்து copy/paste செய்யப்பெற்றவையென!பரவாயில்லை என சுயசாந்தி செய்துகொண்டு சுஜாதாவை படித்தேன்.எழுத்தாளர்களை "படித்தேன்" என்பது அவர்களது எழுத்துக்கள் அவர்களது உள்மனத்தை படிப்பதாய் இருக்கின்றன என்பதால்.சுஜாதாவின் அனாசாய நடையும்,விசாலமான அறிவும் ஆச்சர்யப்படுத்தின.அவரது சிறுசிறு கதைகள்,திரைக்கதை எழுதுவது எப்படி,ஹைக்கூ,கற்றதும் பெற்றதும்,என அனைத்தும் ஒருவிதப் புதுமையும்,அழகுணர்ச்சியையும் அதிமுக்கியமாக சுருக்கத்தையும் ஒருங்கே வெளிக்கொணர்கின்றன.அவரது உவமைகள் அபாரமானவை.எல்லாவற்றையும் விட அவர் உபதேசிப்பதில்லை,அசர வைக்கிறார்.கணேஷ்-வசந்த் பத்திரப்படைப்பு உலகத்தரம் வாய்ந்தது.அவரது வசனங்கள்(பாய்ஸ் தவிர)பிறரை விட நன்றாகவே இருந்தன.இன்றுகூட குமுதத்தில் ஒரு தொடரை அவர் ஆரம்பித்திருக்கிறார்:தூண்டில் கதைகள்.அப்புறம் தமிழருவி மணியன்,எஸ்.ராமகிருஷ்ணன் ஒரே நேரத்தில் எழுதிய இரு தொடர்கள்.முறையே ஊருக்கு நல்லது சொல்வேன்,கதாவிலசம்.இரண்டும் தலைசிறந்த தொடர்கள்.இலக்கியச்செறிவும்,பொருட்செறிவும் ஆங்காங்கே ரோஜா இதழ் தூவியதைப்போல்.அட,சென்றமுறை கவிதை தரவில்லையா?இதோ வருகிறது போனஸாகவே:
காவியம்:
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.
(பிரமிள்)
இதனால் பறவையைப்போல பறந்து கொண்டே இருக்கும் எழுத்தாளனையும்,தினந்தினம் இத்தகு கவிப்பட்சிகள் இரைதேடுவதில் கஷ்டப்படுவதும்,அற்ப ஆயுசிலேயே மரித்துவிடுவதுமுஎன இருக்கிறார்கள் என கவிதையின் பொருளை இடத்திற்கேறவாறு மாற்றிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
சில தொடர்கள் விட்டுப்போய்விட்டன:கவிக்கொ அப்துல் ரகுமானின் 'இது சிறகுகளின் நேரம்' போல.இந்நூல் எனக்கு எத்துணை அகவையானாலும் பிடித்த பத்து நூல்களிலொன்றாய் விளங்குவது.அட்டகசமான கவிட்டுரைகளின் தொகுப்பு இது,பொங்குதமிழில்.ஞானி என்பவரின் தொடர்கள் ரொம்ப complicated ஆனவை.ஆனால் அவர் என்னைப்பொறுத்தவரை மிகக்கூர்மையான சமகால விமர்சகர்,knowledgable.கேள்விபதில் பக்கங்கள் அனைத்து வெகுஜன பத்திரிக்கைகளிலும் இன்றியமையாதவை.அவற்றில் அரசு பதில்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.நையாண்டியின் உச்சம்.பாக்கியராஜின் கேள்வி பதில்களும் தனித்தன்மையினால் ஜொலிக்கின்றன.சினிமாக்காரர்கள் அவ்வப்போது தொடர்கள் எழுதுவார்கள்.அவற்றில் சேரனின் டூரிங் டாக்கீஸ் 'மிக நன்று' என்ற யோக்கியதாபத்திரத்திற்கு தகுதியானது.தெருவாசகம்(யுகபாரதி),வந்த நாள் முதல்(செழியன்),வாரந்தோறும் வாலி,கிருஷ்ண விஜயம்(வாலி),கடவுள் வந்திருந்தார்(பா.விஜய்),'அ'ண்ணா 'ஆ'வண்ணா(நா.முத்துக்குமார்),கொஞ்சம் தேனீர் நிறைய வானம்(வைரமுத்து) ஆகியவை சிறந்த கவித்தொகுதிகள்.தீராநதி எனும் பத்திரிக்கையில் இடம்பெறும் அ.முத்துலிங்கம் பக்கம் எனும் செப்பனிடப்பட்ட மலர்தூவிய சாலை பொற்றத்தக்கது.இலங்கைத்தமிழில் காலச்சுவடு.மத்திய அமைச்சர் எழுதிய ஸ்கூப் மறந்துவிட்டது.பாலகுமாரன் சற்று முன்னர் இயற்றிய தொடரொன்று சிநேகிதியில் வெளிவந்தது.பெயர் தவிர அனைத்தும் நினைவுக்கு வருகிறது!மந்திரச்சொல் என்ற தொடர் அமர்க்களமாக வந்துகொண்டிருக்கிறது, எஸ்.கே.முருகனுடையது. வெற்றியாளர்களின் சரித்திரத்தை ஒரே பக்கத்தில் தெளிவாக சொல்கிறார்.டாலர் தேசம் -பா.இராகவனது எழுத்துகள் அமெரிக்காவை அக்குவேறு ஆணிவேறாக கிழிக்கின்றன.கடைசியாக 'தேசாந்திரி' (எஸ்.ராமகிருஷ்ணன்)எனும் தொடரை விகடனிலும் 'மாயவலை'(பா.இராகவன்)எனும் தொடர்களை படித்து வருகிறேன்.ராகவனுடைய மாயவலை தீவிரவாதத்தைப்பற்றியும் தேசாந்திரி அவருடைய சுயசரிதையின் மூன்றாம் பாகமாகவும் திகழ்கின்றன.
"பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத்துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி டேப் ரிக்கார்டர்,கம்ப்யுட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டிருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை."
(முகுந்த் நடராஜன்)
இது ராமகிருஷ்ணன் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை.
சுஜாதாவின் சில்வியா பரவாயில்லை.தொடர்களின் வெற்றியை நிர்ணயிப்பதில் ஓவியங்களுக்கு முக்கியப்பங்கு.மேலும் நான் வரையாவிட்டாலும் வேடிக்கை பார்ப்பதில் வல்லவன்.(எழுத்தும் அப்படித்தான்)எனவே,ஓவியங்கள் அடுத்து.
-
22nd June 2006, 06:24 PM
#30
Senior Member
Diamond Hubber
Bookmarks