-
15th July 2006, 05:16 PM
#61
Senior Member
Diamond Hubber

Originally Posted by
VENKIRAJA
இப்பகுதியை நான் தொடர்ந்து புதுபிப்பது வாசகர்களின் உந்துதலாலேயே.நேற்று 1775-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1820-ஆக உயர்ந்துள்ளது,நிச்சயமாக இதற்கு நான் ஏற்றவனா என புலப்படவில்லை.
அப்புறம் சக்திப்பிரபா அம்மையாரே,உங்களை அண்ணியென்றழைக்கலாமா?எனக்கு அண்ணியில்லை,ஏனென்றால் அண்ணன் இல்லை.வசி அக்கா,உங்களது ஏகோபித்த வரவேற்பு தான் மையத்தில் என்னை தங்கவைத்தது,இல்லையெனின் நான் தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டேன் தெரியுமா?
நாளை காமராசர் பிறந்தநாளாம்,முழுநாள் பள்ளியாம்,பரவாயில்லை வணங்குவோம்.
venki kanna,
NANDRI...........unkitta talent irukku, so......naan unna varaverkkaamal irundu irundaalum, unakku kandippa vera yaaravadhu varaverppu koduttu iruppaanga
btw enn peyar vasavi.........thamizha ezhudum podhu va illa vaa varum
keep going
Anbe Sivam

-
15th July 2006 05:16 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2006, 06:52 PM
#62
Senior Member
Veteran Hubber
-
16th July 2006, 12:52 PM
#63
Senior Member
Veteran Hubber
அத்தியாயம் # 6.
வேஷதாரி.
நேற்று நான் அனுப்பிய மின்னஞ்சல் பலரை துன்புறுத்திவிட்டது.மன்னிக்கவும்-பவளமணி அம்மையும்,பிறரும்.அற்புதமான பேட்டி ஒன்றினை நேற்று பார்க்க நேர்ந்தது:விஜய் தொலைக்காட்சியில்.பாண்டியராஜன் அவர்களது சொற்கள் இன்றைய மேற்கோளாக,
"கல்லை ஆயிரம் அடி அடித்தால் தான் அம்மி,பத்தாயிரம் அடி அடித்தால் தான் பிள்ளையார்,இருபதாயிரம் அடி அடித்தால் தான் முருகர்,ஐம்பதாயிரம் அடி அடித்தால் தான் பெருமாள்,ஆதனால அடி நிறைய வாங்க வாங்க தான் நாம் உயர்றோம்"
என்ன அற்புதமான உருவகம்!இங்கு பாதசாரி வேஷதாரி ஆகிறான்.
தேடுகிறோம் தேடுகிறோம்,ஆகப்படவில்லை,ஒரு பொன்னிறப்புடவை,எனக்குத்தான்!ஆண்டுவிழாவொன்றிற் கு காஸ்டியூம் தேடிய அந்தப்புறப்பாடு தான் எனக்கு நினைவிலிருக்கும் மிகத்தொன்மைவாய்ந்த வரலாற்றுப்பயணம்.குள்ளமாக இருந்தமையால் முன்வரிசையில் ஏசுபிரான் துதிபாட மேரியன் பள்ளி நிர்வாகத்தால் ஆணையிடப்பட்டிருந்தேன்.துரதிர்ஷ்டவசமாக விழாவில் நான் முற்றிய நெற்பயிராய் தலைகுனிந்து தூங்கிவிட(ஸ்கிரீனை போட்டுவிட்டு கால்மணியாகியிருந்த ஆறு மணி மாலையாதலால்)கையிலிருந்த மெழுகுவர்த்தி உருகி கரத்தில் கசிந்தபின் துயில்கலைந்தேன்.அதற்குள் பாடல் முடிந்துவிட்டது.அப்புறம் நான் தொடங்கித்தொலைய....வெகுநாள் கழித்து மீண்டும் ஓர் அழைப்பு.அதனால் விளைந்த பயன் என் தந்தை இன்றுவரை என்னை கிண்டல் செய்துகொண்டிருப்பது தான்.பாத்திரம் ஒன்றுமில்லை,ஒரு கணவனாக நான் கண்ணாடி பார்த்து ஷேவிங் செய்துகொண்டு இருக்க சற்றே நிறங்குன்றிய ஒருத்தி அருகில் ஈஷிக்கொண்டு காப்பியாத்துவதாக.அவளைப்போல கருப்பான(கருப்புக்கு என்ன ஸ்பெல்லிங் என்று இன்னும் தெளிந்தபாடில்லை:ரு-வா,றுவா?) ஒருத்திதான் உனக்கு வாய்க்கப்போகிறாள் என்று இன்றும் அவர் என்னை கிண்டலடிப்பதுண்டு!பள்ளி மாறினேன்,விலாசம் மாறினேன்.அந்தப்பள்ளியிலும் ஒரு ஆண்டுவிழா,எல்லா ஆண்டுகளிலும் பிறந்தநாள் வருவதைப்போல.அதற்காக பாதசாரிக்கவில்லை,பாதசிராய்த்தேன்!
அந்த நாடகத்தில் கடைசி ஒத்திகை முடிய இருட்டிவிட்டதால் பொறுப்பாளர் ஒருவரே என்னை இல் சேர்ப்பதாக உறுதிமொழிந்தார்.வழியில் சிறு விபத்தாகி காலில் முழநீள கட்டு.அடுத்த நாள் நாடகம்.போர்வீரனாக வீரவெற்றித்தழும்புகளுடன் போர்புரிய செருக்களம் அடைந்தேன்.அந்நாடகத்தில் காட்டுத்தீவிரவாதியை சந்தித்து பேட்டி காணும் நிருபராக வேடம்.அட,அதுக்குள்ள என்ன அற்புதமா மேக்-அப் போட்டிருக்காங்கப்பா!",என்று பார்வையாளர்கள் நான் கீழிறங்கியவுடன் பாராட்டிய கணம் வலியைமீறி சிரித்தேன்.இப்போது நான் படிக்கும் களத்தில் ரொம்ப பாரம்பரிய நாடகங்களை போடுவது வழக்கம்.சென்ற ஆண்டு மகாபாரதம் போட்டோம்,ஆக்கம் பள்ளி ஆசிரியக்குழு.ஒப்பனை மிகவும் எடைகூடி அந்தக்கிரீடமும்,விக்கும் சேர்த்து இந்த பிதாமக பீஷ்மனை,பிதாமக விக்ரமாக ஆக்கிவிட்டது.தலை பின்புறம் சாய்த்துவிட்டது.மேடையில் அது வேட கம்பீரத்தைக்கூடிக்காட்ட,அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள் தெரியுமா?அதற்கு இரு தெவசங்கள் முன் போட்டது ஒக்க புரட்சி நாடகம்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் சாடி ஓர் நையாண்டி நாடகம்.மாபெரும் வெற்றிபெற்ற நாடகம் அது.அதனின்று சில துளிகள் உங்களுக்காக
(விளம்பரங்கள்)
சொர்க்கம் பேக்கரி:
நூறு ரூபாய்க்கு திண்பண்டங்கள் வாங்குவோர்க்கு பாடை இலவசம்,
இருநூறு ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு சங்கு,தாரை,தப்பட்டை இலவசம்:
KARLO MARNA MUTHTHI MEIN!(RELIANCE டியூனில் பாடவும்)
நா நரம்புகளை இழுக்க வைக்கும் சுவை!
************************************************** ***அப்பா அப்பா இனிமே நாம பணக்காரங்களாகிடலாம்
எப்படிம்மா?
இன்னைக்கு ஸ்கூல்ல எங்களுக்கு பைசாவையெல்லாம் எப்படி ரூபாயா மத்துறதுன்னு சொல்லிக்கொடுத்தாங்களே!
:கவனமாக முதலீடு செய்யுங்கள்,இன்றைய சேமிப்பு,நாளைய வாழ்வு!ஆகவே தேர்ந்தெடுங்கள் கோவிந்தா பைனாண்ஸ்.
************************************************** ***
நேற்று காமராஜர் பிர(ற)ந்தநாளையொட்டி(அவ்வப்போது நான் கான்வண்ட் மாணவன் என்று நிரூபிக்க வேண்டாமா?) முழுநாள் காயவிட்டார்கள்.காலை வழிபாட்டில் காமராஜரைப்பற்றி ஒரு உரையாடலை பேசினேன்.வகுப்புக்கொரு தலைப்பு என தலா ஒரு தீம் தந்து அதைப்பற்றி ஏதேனும் செய்யப்பணிப்பார்கள்.அதற்காக நிறைய பாதசாரிக்கச்சொல்வார்கள்.மகிழ்ச்சியாக ஊர்சுற்றுவோம்.அந்த தீம் ஒர்க்கில்(கருத்தொழுகல்) ஆகமவிதியாக ஒரு தமிழ் ஒரு ஆங்கில நாடகம் இடம்பெறும்,அதன் பயனாக பல கிளாஸ்களை கட் அடித்துவிட்டு வாகனசாரிப்போம்.இன்னும் இவ்வருட தீம் ஒர்க்கோ,ஆண்டுவிழாவோ அறிவிப்பு வரவில்லை,வந்தால் சொல்கிறேன்.முடிபுவாக "ஒரு சினிமாப்படம் தன் வரலாறு கூறுதல்"என்ற தலைப்பில் கட்டுரையியற்ற சொன்னார்கள்.வாசகர்கள் முயற்சிக்கலாமே,என் படைப்பை அடுத்த அஞ்சலில் பறக்க விடுகிறேன்,தொழில்நுட்பச்சிறகுகளில்.
-
16th July 2006, 03:07 PM
#64
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
16th July 2006, 06:36 PM
#65
Senior Member
Veteran Hubber
மிக்க நன்றி.
பகைச்சுவை இல்லாத நகைச்சுவை!
-
18th July 2006, 04:10 PM
#66
Senior Member
Diamond Hubber
Anbe Sivam

-
19th July 2006, 08:21 PM
#67
Senior Member
Veteran Hubber
இடைச்செருகல் # 3.
வாரமொன்றிற்கு ஏறத்தாழ இருநூறு கிளிக்குகள் பாதசாரியின் மேல் பதிவது மகிழ்ச்சி.
யாராவது எழுதுங்களேன் என்று விடுத்திருந்த தலைப்பு அநாதையாகிவிட்டதால் நான் முதல் ஆளாக தருகிறேன் என் படைப்பினை,முடிந்தவர்களும் சமர்ப்பிக்கலாம்.
ஒரு திரைப்படம் தன் வரலாறு கூறுதல்.
பிறந்த வீடு நான் பூப்படைவதற்குள் நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது.என் காலி பிலிம்சுருள் மனங்களில் நிறைய பதித்திருக்கிறது.மூளையின் இடத்தில் வெற்றோட்டைகள் நிறைந்திருக்கின்றன.இப்போதுதான் என் தந்தை(தயாரிப்பாளர்)என் புகுந்த வீட்டு வரவேற்புக்கு வந்துபோயிருந்தார்(டி.விக்கு விற்றுவிட்டு)ஆனாலும் இந்த புகுந்த வீடு ஏற்கனவே பழக்கமானதுதான்.ட்ரெய்லர்,விளம்பரம் ஆகிய விஷேஷங்களுக்கு வந்து போயிருக்கிறேனல்லவா.இப்போது தான் மாமியாருக்கு பக்கவாதம் வந்திருக்கிறது,பாவம்(வி.சி.டி).ஆனால் அன்று ஒட்டாக பழகிய நாத்தனார் விளம்பரங்கள் தான் மக்கர் செய்கிறார்கள்.நானும் கணவனும்(பிரைம் டைம்) அந்நியோன்யமாக இருக்கும் போது நடுவில் புகுகிறார்கள்.இன்னும் ஓரகத்திகளைப்பற்றி புரியவில்லை,ஆனால் யமகாதகிகள் தானாம்(தொடர்கள்).நான் இன்னும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்,எனக்கென்று சொத்துண்டா(ராயல்டி),சுகமுண்டா(விளம்பரமின்மை).இப்போ து நாங்கள் பண்டிகை வீட்டில் வசிக்கிறோம் சன் டிவி பதவியில்.நண்பர்கள் ராஜ்,விஜய்,ஜெயா என்று இருக்கிறார்கள்.தூரத்து உறவு ஒன்றும் உண்டு:தூர்தர்ஷன் பொதிகை.என் கணவர் மெல்ல சனிக்கு தாவி அப்புறம் ஞாயிறுக்கு முன்னேறி,அப்புறம் கே டிவிக்கு பிரமோஷனான பின் சூப்பர் ஹிட் இரவுக்காட்சி பதவியில் இருப்பார்.கடைசி காலத்தில் கிளாசிக் மேட்னியில் நிம்மதி காணலாம் என்று இருக்கிறோம்.இப்போது எங்கள் இனத்திலும் குளோனிங் வரத்தொடங்கியுள்ளது(ரீமேக்).அப்புறம் சில உறவினர்கள் டேஜா,உதயா என்றும் இருக்கிறார்கள்.(டப்பிங்)என்றும் எங்களால் பயனடைய எங்களை படைப்பவர்கள்(இயக்குனர்) ஆசி புரியவேண்டும்,அப்புறம் வாழ வழி செய்யும் நீங்களும் தான்!
-
19th July 2006, 10:28 PM
#68
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
20th July 2006, 02:21 PM
#69
Senior Member
Diamond Hubber
Anbe Sivam

-
20th July 2006, 09:32 PM
#70
Senior Member
Veteran Hubber
நீங்கள் யாரும் எழுதமாட்டீர்களோ?
Bookmarks