-
31st January 2008, 07:55 PM
#21
Moderator
Diamond Hubber
Thanks for the info LATHA
-
31st January 2008 07:55 PM
# ADS
Circuit advertisement
-
31st January 2008, 08:06 PM
#22
Senior Member
Seasoned Hubber
who is Chandra Lakshmanan in kOlangal???
Sarva dharman parithyajya mamekam sharanam vraja, aham thva sarvapapebhyo mokshayishyami ma suchaha
-
1st February 2008, 08:53 PM
#23
Moderator
Diamond Hubber
Originally Posted by
Arthi
who is Chandra Lakshmanan in kOlangal???
Ganka
check here
http://mychandu.wordpress.com/2007/1...jay-tv-serial/
-
2nd February 2008, 01:04 PM
#24
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
aanaa
nandri
Sarva dharman parithyajya mamekam sharanam vraja, aham thva sarvapapebhyo mokshayishyami ma suchaha
-
6th February 2008, 07:45 PM
#25
Moderator
Diamond Hubber
ஐம்பதாவது பகுதியை கடந்து வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது சந்தனக்காடு தொடர். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் இத்தொடர் சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை ஒப்பனையில்லாமல் வெளிப் படுத்தி வருகிறது. படத்தின் இயக் குனர் வ.கவுதமனை தமிழ்திரையுல கத்தின் முக்கிய இயக்குனர்களும், தமிÖறிஞர்களும், தமிழ் ஆய்வா ளர்களும் பாராட்டி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் பிரான்ஸ், மலே சியா, இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அயல் நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னைக்கே வந்து கவுதமனை பாராட்டியதோடுஇத் தொடரை தடை செய்ய சொல்லி தான் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார். எதிர்கால சந்ததிகளான சின்னக்குழந்தைகள் என் வீட்டுக்காரரின் மேல் இருந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வது போல் இந்த தொடர் அமைந்திருக்கிறது. உள்ளது உள்ளபடி அப்படியே எடுத்திருக்கிறீர்கள். என் பகுதியும் என் குழந்தைகள் பகுதியும் வர எனக்கு முழு சம்மதம் என்று தெரிவித்து இருக்கிறார் முத்துலட்சுமி.
சந்தனக்காடு தொடர் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக டைரக்டர் கௌதமன் கூறினார். "சந்தனக்காடு தொடருக்காக அவர் கஷ்டப்பட்டு உழைத்துப் கொண்டிருக்கிறார். இதன் பயனாக கவுதமனுக்கு 2 சினிமா படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தனக்காடு தொடரில் வீரப்பன் வேடத்தில் கராத்தே ராசா, முத்துலட்சுமி வேடத்தில் தீபிகா (இவர் 10ம்வகுப்பு மாணவி) அர்ச்சுனன் வேடத்தில் வ.லெனின், வால்டர் தேவாரம் வேடத்தில் அழகு நடித்துள்ளனர்.
-
6th February 2008, 07:46 PM
#26
Moderator
Diamond Hubber
ஜெயா டிவியின் அடுத்த புத்தம் புதிய நிகழ்ச்சி கடிச்சா தங்கம். தினமும் இரவு 8.30 மணிக்கு
ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பாஸ்கி தொகுத்து வழங்குகிறார்.
இது நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாகும். இதில் நேயர்கள் கலந்து கொண்டு கடி ஜோக் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த கடி ஜோக் சொல்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியின் இடைஇடையே நகைச் சுவை காட்சிகள் காட்டப்படும். தினமும் சிரித்துக் கொண்டே தங்கம்
வெல்லலாம்.
-
8th February 2008, 06:54 AM
#27
Moderator
Diamond Hubber
Bhuvana 's Interview
- as maayaa in Anjali , Nandhini in Suryavamsam
நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது புரிகிறதா புவனா சொல்றது...!
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது. கலை ஆர்வத்தை ஆண்டவன் கொடுத்த கிப்ட்டாக நினைக்கிறேன் என்று சொல்லும் புவனா, மேடை கச்சேரியிலும், சீரியல்களிலும் திறமை காட்டி கொண்டிருக்கிறார்.
தேன்மொழியாள், சூர்யவம்சம், அலைபாயுதே சீரியல்களில் நடித்து வரும் புவனா, சரிகா என்ற பெயரில் இசைக் குழுவையும் நடத்தி வருகிறார்.
புவனாவின் பேட்டி:
* கலைத்துறையை தவிர வேறு வேலைக்கு போக முடியாது என்று உறுதியாக இருந்தீர்களாமே?
எனக்கு இசையின் மீது தான் நாட்டம் இருந்தது. மனசுக்கு பிடிச்ச விஷயத்தில் நாட்டம் செலுத்தினால்தானே சாதித்க முடியும். பிடிக்காத விஷயத்தில் எப்படி சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் உள்ள என்னால ஆபீஸ்ல போய் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உட்கார முடியாது. அதனால தான் வேறு வேலைக்கு போக வேண்டாம்ன்னு உறுதியா இருந்துட்டேன்.
* நினைச்ச மாதிரி இடத்தை பிடித்து விட்டீர்களா?
இசையின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது ஆண்டவன் கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன். நடிப்பு, பாட்டு, நடனம் மற்றவங்களை சந்தோஷப்படுத்த ஆண்டவன் நமக்கு கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன்.மேடையில பாடிட்டிருந்தப்ப கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி என்னை பார்த்தார். சீரியலில் நடிக்கிறியான்னு கேட்டார். "அஞ்சலி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் "சூர்யவம்சம், தேன்மொழியாள், அலைபாயுதே' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்.
* சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?
"அஞ்சலி'யில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிச்சேன். அனுதாபம் பெறும் கேரக்டர். அடுத்து வில்லியாக நடித்து அசத்தணும்ன்னு ஆசை இருக்கு.
* கச்சேரிகளில் பாடிய உங்களுக்கு சினிமா வாய்ப்பு?
அண்ணாமலை மன்றத்தில் கச்சேரியில பாடிட்டிருந்தப்ப தியாகராஜன் என்பவர் என்னை பார்த்திருக்கிறார். என்னை பற்றி மலேசியா வாசுதேவனிடம் சொல்ல, அவரிடமிருந்து அழைப்பு வந்தது. போய் பார்த்தேன். அவரது "உலவும் தென்றல்' "ரீ மிக்ஸ்' ஆல்பத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அவரது குழுவில் நிறைய பாடியிருக்கிறேன். நல்ல மனிதர். இசையில் நுணுங்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இசையில் அவர் எனக்கு "காட் பாதர்'ன்னு சொல்வேன். மேடையில் நான் பாடியதை பார்த்த மோகன் என்பவர் எனக்கு போன் செய்து இசையமைப்பாளர் தேவா சாரை போய் பாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னார். நான் போய் பார்த்தேன். அவரோட இசையமைப்பில் பாஞ்சாலங்குறிச்சி உட்பட பல படங்களில் பாடியிருக்கிறேன். அவரது மேடைகச்சேரிகளிலும் நான் பாடியிருக்கிறேன்.
* காதல் திருமணம் செய்து கொண்டீர்களே; குடும்பம் எப்படி இருக்கிறது?
மேடையில் பாடும்போது என்னோட சேர்ந்து பாடிய வெங்கடேஷும் நானும் லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டோம். இருவருமே இசை துறையில இருந்ததால குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்க முடியலை. இதனால, யாருக்கு நல்லா வாய்ப்பு அமையுதோ அவுங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிடுவோம். அடுத்தவங்க வேறு தொழில் செய்யலாம்ன்னு முடிவு செஞ்சோம். எனக்கு பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைச்சதால நான் கலைத்துறைக்கு வந்து விட்டேன்.அவர் கடிகார கடை நடத்தி வருகிறார். என்னோட முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்பதால் வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு.
* முன்னேற வழி கேட்டால்...?
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்தால் முடியாதது இல்லைன்னு நினைச்சு முயற்சிக்கணும். உடனே சக்ஸஸ் கிடைக்கலாம், இரண்டு வருடம் கழிச்சும் சக்ஸஸ் கிடைக்கலாம். ஏன் 10 வருஷங்கள் கழிச்சுக்கூட சக்ஸஸ் கிடைக்கலாம். பொறுத்திருந்து நல்ல தருணம் வரும் போது அந்த வழியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
* கலைத் துறை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிரச்னை எளிதாக ஏற்பட்டு விடுகிறதே?
செய்யற வேலையை விட்டுட்டு சம்பந்தமில்லாத வேலையில இறங்கினா சிக்கல் வராம என்ன செய்யும். தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தா பிரச்னை எப்படி வரும். வேகமான உலகத்தில் எல்லாத்திலும் பெண்கள் உஷாராக இருக்கணும். நாம சரியா நடந்துக்கிட்டா பிரச்னை நம்மை எப்படி நெருங்கும், என்று ஆர்வமாக சொன்னார் புவனா.
-
8th February 2008, 06:57 AM
#28
Moderator
Diamond Hubber
Priyanka
almost in all movies she is there
her interview
சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வரும் "தவம்' சீரியலில் ஷூட்டிங்'கில் பிரியங்காவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""அப்பா அம்மாவை பத்திரமா பாதுகாக்கணும், அவுங்களோட வயசான காலத்தில நாம காட்டும் பாசம், பரிவு அவுங்களை சந்தோஷப்படுத்தணும். முதியோர் இல்லத்தில விட்டுட்டு அவுங் களை அன்புக்கு ஏங்க வைக்கக் கூடாது,'' என்று உருக்கமாக சொன்னார். பிரியங்காவின் பேட்டி:
* சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்து "டிவி'பக்கம் வந்துட்டீங்களே?
நடிக்கணும்ன்னு வந்துட்டு, சினிமாவில் நடிக்க ஆசையில் லாம இருக்குமா. "காதல் கிறுக் கன், துõள், மருதமலை, அலை' ன்னு பல படங்கள்ல நடிச்சிட் டேன். சினிமாவுல நடிக்க காத்திருந்து நாட்களை வேஸ்ட் செய்ய வேண்டியிருந் தது. "டிவி' பக்கம் வந்ததால ஒவ்வொரு நாளும் பிரயோசனமானதாக இருக்கு. மாதத் தில் 20 நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். "டிவி'ப் பக்கம் வந்ததால சினிமாவுக்கு நான் ஒன்றும் "குட்பை' சொல்லிடலை. நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.
* காமெடி சீனில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பேசப் பட்டதே?
எனக்கு காமெடி சீன்ல நடிக்க ஆசையிருக்கு. "மருதமலை' படத்தில வடிவேலுவுடன் நடிச்சேன். சாதாரணமான சீனை வடிவேலுவிடம் கொடுத்தாலே போதும், மனுஷர் அட்டகாசமா காமெடி செஞ்சு அசத்திடுவார். சீன்'ல அவரோட ஈடுபாடு,எதார்த்த ரீயாக்ஷன்ல இருக்கிற காமெடி கலக்கல் மிரட்டும். சென்டிமென்ட் சீன்'ல நடிக்கிறதைவிட காமெடி சீன்'ல நடிப்பது சிரமம். இருந்தாலும் சென்ட்டிமென்ட் சீனைவிட காமெடி சீனுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கு. காமெடி சீன்'ல நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சா வெளுத்து வாங்கிடுவேன்.
* சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடிப்பது பற்றி?
வில்லி கேரக்டரில் விரும்பி நடிக்கிறேன்னு சொல்றதைவிட இந்த கேரக்டரில் நல்லா செய்வேன்னு நினைச்சு டைரக்டர்கள் கொடுக்கிறாங்க. ஸ்டோரிக்கு ஹீரோ, ஹீரோயின் முக்கியமானவங்களா இருந்தா லும், டேர்னிங் பாயிண்ட்'டா வில்லி கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. நடிக்க வந்த பிறகு இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டிருக்கலாமா, எந்தக் கேரக்டரிலும் நான் நடிப்பேன். பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப ஏ.வி.எம்.. நிறுவனத்திற்காக "ஸ்டில்' சாரதியுடன் ஒரு சந்திப்புக்கு காம்பியரிங் செய்ய வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் சித்தி, அண்ணாமலை, அஞ்சலி'ன்னு நிறைய வாய்ப்பு வந்தது. அரசி, தீரன் சின்னமலை, தவம், ரேகா ஐ.பி.எஸ்., நடிச்சிட்டிருக்கேன்.
* நடிகைகளை கிளாமராக நடிக்க வைக்க நினைக்கும் இயக்குனர்கள் பற்றி?
படத்தின் கதையை சொல்லும் போதே இயக்குனர்கள் சீன்களை சொல்லிடுவாங்க. அதில் கிளாமராக நடிக்க வேண்டிய சீன் இருந்தாலும் சொல்லிடுவாங்க. எதுவும் சொல்லாம ஷூட்டிங் ஸ்பாட்'டில் போய் டைரக் டர் சீன் சொல்லி கிளாமரா நடிக்கணும்ன்னு சொல்லும்போதுதான் பிரச்னை வந்துடுது. சீன் பற்றி முன்பே பேசிட்டா ஷூட்டிங்' போகும் போது பிரச்னை இருக்காது. கிளாமராக நடிப்பது பற்றியும் பிரச்னை வராது.
* தவிர்க்க வேண்டிய விஷயம் என்று ஏதும் மனதில்?
""அப்பா, அம்மாவைவிட கண்கண்ட தெய்வம் இல்லைன்னு தான் சொல்வேன். அவுங்க வயசான காலத்தில அவுங்களை இடைஞ்சலா நினைக்கக்கூடாது. எவ்வளவு வேலை இருந்தாலும் அவுங்களை கவனிச்சிக் கிடறதுக்கும் நேரம் ஒதுக்கணும். வசதி வாய்ப்பிருந்தும் பல பேர் பெற்றோர் களை முதியோர் இல்லத் தில கொண்டு போய் விடறாங்க. அவுங்க அங்கு அன்புக்கு ஏங்கி தவிக்கிறாங்க, நம்மலை எப்படியெல்லாம் பாது காத்து வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கணும். அம்மா, அப்பாவை கடைசி வரை சந்தோஷமா காப்பாத்தணும். குழந் தைங்க நம்மளை நல்லபடியா பாத்துக்கிடுதுன்னு அவுங்க சந்தோஷப்பட்டாத்தான் நாம நல்லாயிருப்போம்,'' என்று உருக்கமாக சொன்ன பிரியங்காவை அவரது அம்மா மொபைல் போனில் அழைக்க பறந்தார்.
-
12th February 2008, 08:20 AM
#29
Senior Member
Seasoned Hubber
Bhuvana (THENMOZHIYAL, SURYA VAMSAM, ALAIPAYUTHE)
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக்கூடாது. கலை ஆர்வத்தை ஆண்டவன் கொடுத்த கிப்ட்டாக நினைக்கிறேன் என்று சொல்லும் புவனா, மேடை கச்சேரியிலும், சீரியல்களிலும் திறமை காட்டி கொண்டிருக்கிறார்.
தேன்மொழியாள், சூர்யவம்சம், அலைபாயுதே சீரியல்களில் நடித்து வரும் புவனா, சரிகா என்ற பெயரில் இசைக் குழுவையும் நடத்தி வருகிறார்.
புவனாவின் பேட்டி:
* கலைத்துறையை தவிர வேறு வேலைக்கு போக முடியாது என்று உறுதியாக இருந்தீர்களாமே?
எனக்கு இசையின் மீது தான் நாட்டம் இருந்தது. மனசுக்கு பிடிச்ச விஷயத்தில் நாட்டம் செலுத்தினால்தானே சாதித்க முடியும். பிடிக்காத விஷயத்தில் எப்படி சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் உள்ள என்னால ஆபீஸ்ல போய் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உட்கார முடியாது. அதனால தான் வேறு வேலைக்கு போக வேண்டாம்ன்னு உறுதியா இருந்துட்டேன்.
* நினைச்ச மாதிரி இடத்தை பிடித்து விட்டீர்களா?
இசையின் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது ஆண்டவன் கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன். நடிப்பு, பாட்டு, நடனம் மற்றவங்களை சந்தோஷப்படுத்த ஆண்டவன் நமக்கு கொடுத்த "கிப்ட்'ன்னு சொல்வேன்.மேடையில பாடிட்டிருந்தப்ப கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி என்னை பார்த்தார். சீரியலில் நடிக்கிறியான்னு கேட்டார். "அஞ்சலி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் "சூர்யவம்சம், தேன்மொழியாள், அலைபாயுதே' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன்.
* சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?
"அஞ்சலி'யில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிச்சேன். அனுதாபம் பெறும் கேரக்டர். அடுத்து வில்லியாக நடித்து அசத்தணும்ன்னு ஆசை இருக்கு.
* கச்சேரிகளில் பாடிய உங்களுக்கு சினிமா வாய்ப்பு?
அண்ணாமலை மன்றத்தில் கச்சேரியில பாடிட்டிருந்தப்ப தியாகராஜன் என்பவர் என்னை பார்த்திருக்கிறார். என்னை பற்றி மலேசியா வாசுதேவனிடம் சொல்ல, அவரிடமிருந்து அழைப்பு வந்தது. போய் பார்த்தேன். அவரது "உலவும் தென்றல்' "ரீ மிக்ஸ்' ஆல்பத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அவரது குழுவில் நிறைய பாடியிருக்கிறேன். நல்ல மனிதர். இசையில் நுணுங்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். இசையில் அவர் எனக்கு "காட் பாதர்'ன்னு சொல்வேன். மேடையில் நான் பாடியதை பார்த்த மோகன் என்பவர் எனக்கு போன் செய்து இசையமைப்பாளர் தேவா சாரை போய் பாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னார். நான் போய் பார்த்தேன். அவரோட இசையமைப்பில் பாஞ்சாலங்குறிச்சி உட்பட பல படங்களில் பாடியிருக்கிறேன். அவரது மேடைகச்சேரிகளிலும் நான் பாடியிருக்கிறேன்.
* காதல் திருமணம் செய்து கொண்டீர்களே; குடும்பம் எப்படி இருக்கிறது?
மேடையில் பாடும்போது என்னோட சேர்ந்து பாடிய வெங்கடேஷும் நானும் லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டோம். இருவருமே இசை துறையில இருந்ததால குடும்பத்தை கவனிக்க நேரம் ஒதுக்க முடியலை. இதனால, யாருக்கு நல்லா வாய்ப்பு அமையுதோ அவுங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிடுவோம். அடுத்தவங்க வேறு தொழில் செய்யலாம்ன்னு முடிவு செஞ்சோம். எனக்கு பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைச்சதால நான் கலைத்துறைக்கு வந்து விட்டேன்.அவர் கடிகார கடை நடத்தி வருகிறார். என்னோட முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்பதால் வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு.
* முன்னேற வழி கேட்டால்...?
எந்த துறைக்கு நாம போகணும்ன்னு விரும்புறோமோ அதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தணும். நினைச்சது உடனே நடந்திடும்ன்னு நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்தால் முடியாதது இல்லைன்னு நினைச்சு முயற்சிக்கணும். உடனே சக்ஸஸ் கிடைக்கலாம், இரண்டு வருடம் கழிச்சும் சக்ஸஸ் கிடைக்கலாம். ஏன் 10 வருஷங்கள் கழிச்சுக்கூட சக்ஸஸ் கிடைக்கலாம். பொறுத்திருந்து நல்ல தருணம் வரும் போது அந்த வழியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
* கலைத் துறை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பிரச்னை எளிதாக ஏற்பட்டு விடுகிறதே?
செய்யற வேலையை விட்டுட்டு சம்பந்தமில்லாத வேலையில இறங்கினா சிக்கல் வராம என்ன செய்யும். தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தா பிரச்னை எப்படி வரும். வேகமான உலகத்தில் எல்லாத்திலும் பெண்கள் உஷாராக இருக்கணும். நாம சரியா நடந்துக்கிட்டா பிரச்னை நம்மை எப்படி நெருங்கும், என்று ஆர்வமாக சொன்னார் புவனா.
-
12th February 2008, 12:00 PM
#30
Senior Member
Seasoned Hubber
venkat nisha
‘‘விளையாட்டாகத்தான் எங்கள் காதல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் திகட்டத் திகட்டக் காதலித்தோம். கல்யாணமும் செய்து கொண்டோம்.
இதோ கடவுளின் பரிசாய் எங்கள் குழந்தை மாயா. அதே காதல், அதே ஜாலியோடு வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. கலகலவெனப் பேசுகிறார்கள் விஜய் டி.வி.யில் நடந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய நிஷா வெங்கட் இருவரும். (வெங்கட் வேறு யாருமில்லை... பிரபல பியூட்டிஷியன் மைதிலியின் மகன்)
‘‘எங்களுடைய காதல் கதையை என்னன்னு சொல்றது?’’ என்று இருவருமே அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்கள்.
‘‘நிஷா, நீ சொல்லுமா’’ என்று வெங்கட்டும், ‘‘இல்ல... இல்ல, நீங்களே சொல்லுங்க’’ என்று நிஷாவும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டார்கள்.
கடைசியில் தங்களுக்குள்ளாகவே ‘இங்க்கி, பிங்க்கி, பாங்க்கி’ போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் வெங்கட் சொல்வதாக முடிவானது.
‘‘நிஷா அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். நானும் அதே காலேஜில் தான் படித்தேன். (நிஷா எனக்கு ஜூனியர்) காலேஜில் படிக்கும் ஒவ்வொரு பையனும் அந்த வயதில் ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாச்சே.... எனக்கும், ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டும் என்று முடிவெடுத்து, நிஷாவிடம் ஃபிரெண்டானேன். ஆனால் போகப் போக நிஷாவின் நல்ல குணங்கள் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டன. குறிப்பாக ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகும் நிஷாவின் குணம் சம்திங் நைஸ். கொஞ்சம் கொஞ்சமாக நிஷாவின் மேல் எனக்கு மரியாதை கலந்த அன்பு வந்து விட்டது’’ இதற்கிடையில் தெரிந்த நண்பர் மூலமாக சி.ஜே. பாஸ்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாமலை’ தொடரில் சுப்பு என்கிற கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இது மட்டுமே வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருக்காதே’’ என்று வெங்கட் சொல்ல நிஷா இடைமறித்தார்.
காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோமே தவிர, அந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக நாங்கள் செட்டிலாகவில்லை. வெங்கட்டும் பெரிதாய் எதுவும் சாதனைகள் செய்யாத காலகட்டம் அது. விளையாட்டாய் காதலிக்கும் போது, வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாய் அக்கறை இல்லை. ஆனால், கல்யாணம், குடும்பம் என்று வந்தால் பணம் வேண்டுமே... அதனால் இருவரும் வேலைக்குப் போக முடிவெடுத்தோம். நான் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். வெங்கட்டும் அவருடைய அம்மா நடத்தி வரும் பார்லரைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். இருவருமே எங்கள் காதலை வீட்டில் சொல்ல முடிவெடுத்தோம். ஆனால் என்னுடைய மாமியாருக்கோ (வெங்கட்டின் அம்மா) தனக்கு வரப்போகும் மருமகள் தன்னுடைய பியூட்டி பார்லரைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு பியூட்டி நாலெட்ஜ் இருக்க வேண்டும்’’ என்று நினைத்தார்.
ஆரம்பத்தில் எனக்கு பியூட்டி ஃபீல்டைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. ஆனால் வெங்கட்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்காகவே என் மாமியாரின் பார்லரிலேயே பியூட்டிஷியன் கோர்ஸைப் பிராக்டிக்கலாகக் கற்றுக் கொண்டேன்’’ என்று நிஷா சொல்ல,
‘‘உங்களுக்கு ஒன்று தெரியுமாங்க, நாங்க அந்த சமயத்தில் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்ததே சேர்ந்து படிக்கிறதுக்குத்தாங்க’’ என்று வெங்கட் சொன்னவுடன் நமக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. ‘‘ஆமாங்க... ஸ்கின் பியூட்டி, ஹேர் டிரெஸ்ஸிங் சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் படிப்பதற்காக டெல்லி வரை செல்ல முடிவெடுத்தோம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் சென்றால், நிஷா அங்கே தனியாகத் தங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் கல்யாணம் செய்து கொண்டு வீட்டில் ஹனிமூன் என்று சொல்லி விட்டு டெல்லிக்குப் படிக்கச் சென்றோம். கோர்ஸை நல்லபடியாக முடித்து ஊருக்குத் திரும்பி, நானும் நிஷாவும் பிஸினஸை நல்லபடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தவிர, தற்போது வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஆனந்தம்’ உட்பட பல சீரியல்களில் நான் பிஸி...’’ என்றவர்,
என் மனைவி மீது நான் அதிக அளவு காதல் கொண்டது அவளின் பிரசவத்திற்குப் பிறகுதான். காரணம் குழந்தை பிறந்தவுடன் பிரெயினில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிஷா கோமாவுக்குச் சென்று விட்டாள். ‘‘என் நிஷா இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன் என்று நினைத்து நினைத்துத் தவித்தேன். என் உயிரே என்னை விட்டுப் போகப் போவது போல் ஒரு உணர்வு. அவள் கோமாவிலிருந்து, கண் விழித்த அந்தக் கணத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது’’ என்று அதுவரை ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த வெங்கட், நெகிழ்ந்து போய்ப் பேசினார்.
‘‘நான் வெங்கட் கூட ‘ஜோடி நம்பர் 1’ல் ஆடினதுக்கு ஒரு காரணம் இருக்கு. எனக்கு டெலிவரியான சமயத்துல கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தேன் இல்லியா? அப்போ உடம்பு எடை கூடி, மனதளவிலும் ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தேன். அந்த சமயத்துல தான் ‘ஜோடி நம்பர் 1’ வாய்ப்பு வந்தது. வெங்கட் ஒரு நல்ல டான்ஸர்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் எனக்கோ டான்ஸ் ஆடத் தெரியாது. நம்மால வெங்கட் ஜெயிக்க முடியாமப் போயிடுமோன்னு போட்டியில கலந்துக்க ரொம்பவே பயந்தேன். ஆனால் வெங்கட்தான் ‘நிஷா உனக்கு ஒரு அவுட்லெட் வேணும். நாலு பேரைப் பார்த்து பேசிப் பழக இது ஒரு நல்ல சான்ஸ். அதனால நாம தோத்தாலும் பரவாயில்லை... நீயும் என்னோட கண்டிப்பா ஆடணும்னு சொன்னாரு’ அவருக்காகத்தான், ஆட ஆரம்பிச்சேன். ஸ்டெப்_பை_ஸ்டெப்பா ஃபைனல்ஸ் வரைக்கும் வந்தோம். இந்தப் போட்டியில நாங்க ‘செவர்லெட்’ காரை ஜெயிச்சதை விட, என் கணவர் என் மேல் எவ்வளவு அக்கறை வச்சிருக்காருங்கிறதுதான் என்னை ரொம்பவே சந்தோஷப்பட வைத்து விட்டது’’ என்கிற நிஷா ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்குப் பிறகு ரொம்பவே பிஸி. தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தும் பியூட்டி கோர்ஸ்கள், டான்ஸ் ப்ரோகிராம்கள் என்று பம்பரமாகச் சுழல்கிறார் நிஷா.
எனக்கும் நிஷாவுக்குமான காதல் வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும்தான் இருக்கிறது. ஆனால் அதை நாங்கள் இருவருமே பெரிதுபடுத்துவதில்லை. ஒரேயொரு விஷயத்தில்தான் எனக்கு நிஷாவின் மேல் பயங்கரமாகக் கோபம் வரும் என்றவர், ‘‘நிஷா எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவெடுக்க ரொம்பவே தயங்குவாள். அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி... உதாரணத்திற்கு, ஹோட்டலுக்குச் செல்லலாம் என்று இரண்டு பேரும் முடிவெடுத்தால், பரபரவென்று கிளம்புவாளே தவிர எந்த ஹோட்டலுக்குப் போகலாம்? எந்த டிஷ் சாப்பிடலாம் என்று கேட்டால், நீங்களே சொல்லுங்கள் என்று சொல்வாளே தவிர, தனக்கு எது பிடிக்கும் என்ன வேண்டும் என்று கேட்கவே மாட்டாள். ஒவ்வொருவருக்குமென்று தனித் தனியாக விறுப்பு வெறுப்புகள் இருக்கிறது. நிஷாவுக்கு எத்தனையோ முறை இதைச் சொல்லிவிட்டேன்... கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்’’ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார் வெங்கட்.
‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. அது என்னமோ தெரியலை கல்யாணத்துக்கப்புறம் எனக்குன்னு எதையும் யோசிக்கத் தோணலை நான் வேற, வெங்கட் வேறயா என்ன?’ நிஷா இயல்பாகச் சொன்னபோது, அவர்களுக்கிடையே இருந்த காதலின் ஆழம் புரிந்தது.
காதல் தான் எங்களுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்தது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘‘காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், ஆரம்பத்தில் சந்தோஷமாக இருக்கும். போகப் போக பிரச்னைகள் அதிகமாகி விடும்’’ என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.
‘‘சரியான புரிதல் இருந்தால் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் மரியாதையும், நம்பிக்கையும் வையுங்கள். எங்கள் காதல் நாங்கள் வாழ்க்கையில் ஜெயிக்கத் தேவையான சக்தியைக் கொடுத்திருக்கிறது. இதோ இந்த சக்தியோடு பியூட்டி சம்பந்தமான அகாடமி ஒன்றை ஆரம்பிக்க நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்து வருகிறோம்! நடத்தியும் காட்டுவோம்’’ நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார்கள் வெங்கட்டும் நிஷாவும்.
Bookmarks