.
Quote Originally Posted by bis_mala
பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
பறையர்க்கு காவியம் பாடிய கவி-ராயர் யார்.? நந்தனாரா.?

நந்தனாரின் சுய-வாக்காய் சைவத்-திருமுறைப் பாக்கள் உள்ளனவா.? அவற்றை இங்கு எடுத்துக்காட்ட வேண்டுகிறேன்.அன்பரே.!

.திருப்பாணாழ்வார் தனது ஞான-வாக்காய் பாடியருளிய பாசுரங்களே "அமலனாதிப்பிரான்"எனப்படும்... தமிழ்-மறை பிரிவு 10 பாசுரங்கள் இதோ.



திருப்பாணாழ்வார் பாடிய "அமலன் ஆதிப்பிரான்" பதிகம் .


927
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், திருக்
கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (1)

928
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

929.
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (3)

930
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,திருவயிற்று-
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

931
பாரமாய பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே. (5)

932
துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் *அடியேனை உய்யக்கொண்டதே. (6)

933
கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

934
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே. (8)

935.
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே. (9)

936
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே. (10)



இதே போல நந்தனாரின் பாடல்கள் யாவை எனத் தெரிவிப்பீரா அன்பரே. நன்றி.

.அன்புடன் ... சுதாமா

.