-
27th January 2011, 11:01 AM
#1091
Senior Member
Devoted Hubber
PADMA AWARDS
Padma awards and National awards are become jokes nowadays. Whoever support the Central / State Govts. got these Padma awards. Of course some exception. Not only MSV, the Comedy Legend Nagesh not got any Padma awards, Like him, Kannada Actor, K.S.Aswath and others who really deserve not yet recognized. Those who are Money and political influence got these awards – they not at all really deserved. THERE ARE SO MANY UNSUNG PEOPLES IN INDIA NOT AT ALL RECOGNISED BY THE GOVT.
Few years back, Vivek got Padma awards. On what basis he got this award? Bharathi Raja got because of his support to Cauvery problem. Mere supporting he got award. When Deva Gowda was PM, Rajkumar got Dada Sahab Palke Award. ANR got this year Padma Vibhushan award because his son Nagarjuna supported Congress in AP during last year election. Saif got best film actor award because of her mother. Why step motherly treatment for those really deserved for awards ? Nadigar Thilagam was always at the receiving end in regard to awards.
One of the Social worker from Karnataka (B’lore) got Padma Award this year. I personally know her. She got this award purely not because of her Social work and because of her money and political connection. She is the DIL of 1st CM of Karnataka and good contect with political leaders. Mr.Dinakaran, who wrote Veerapan – The Prize Money, mentioned about her way of social work. She is not doing social work not from her own pocket but from other funds received from foreign and SO CALLED SOCIAL CLUBS. (Rotary/Lions, etc.,). We can meet President/PM but not her. She never allowed anyone to stand in front of her house. Her security guard stopped peoples and will not allow any one inside her house also. She preaches one and follows just opposite. I myself witness this. This is one of the example how influence people got awards from Govt.
-
27th January 2011 11:01 AM
# ADS
Circuit advertisement
-
27th January 2011, 03:15 PM
#1092
Dear Shardha madam
I totally agree with you on the injustice done to Mellisai Mamannar MSV.Shame on TN & Central Govt.
Hence forth he should reject these cheap awards.
Shiv
-
28th January 2011, 11:26 AM
#1093
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar

Originally Posted by
saradhaa_sn
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் 'பத்ம' விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் "வழக்கம்போல" விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.
எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஸ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.
நம் கேள்வி, 'அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?' என்பது அல்ல, 'இவருக்கு ஏன் தடுக்கிறாய்?' என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.
மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.
ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.
சகோதரி சாரதா,
நடிப்புலகில் நமது நடிகர் திலகம் புரிந்திருக்கும் ஈடு இணையற்ற சாதனைகளைப் போல் இசையுலகில் நமது மெல்லிசை மாமன்னர் புரிந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறந்த நடிகரான சிவாஜிக்கு இந்திய அரசின் சிறந்த நடிகர் விருது இறுதி வரை வழங்கப்படவே இல்லை. ஆறுதலாக பத்மஸ்ரீ(1966), பத்மபூஷன்(1984) விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் வருமா வருமா என்று ஒவ்வொரு வருடமும் எதிர்பார்த்து இனி வரவே வராது என்று நாம் விரக்தியடைந்திருந்த நிலையில் 1997-ல் (1996-ம் ஆண்டுக்கான) "தாதா சாகேப் பால்கே விருது" நமது நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சிறந்த நடிகர் விருது கடைசி வரை அவருக்கு வழங்கப்படாமலே போனது அவரை நேசிக்கும் நம்மைப் போன்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் அழிக்க முடியாத பெருங்குறைதான். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவை ஆண்டவர்கள் கணிசமான தவறுகளையும் இழைத்திருக்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்தத் தவறுகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருப்பது சிவாஜி அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது வழங்காததும் தான். பாரதத்திலே பிறந்து, பாரதத்திற்காக உண்மையான தொண்டாற்றியவருக்கு - தனது அபரிமிதமான கலைத்திறனால் பாரதத்தின் பெருமையை பாரெங்கும் பறைசாற்றியவருக்கு - "பாரத்"தும் கிடைக்கவில்லை, "பாரத ரத்னா"வும் இல்லை. உண்மையான தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிற விஷயம் இது.
[ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் விருது(1960), அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கௌரவ மேயர்(1962), மாவீரன் நெப்போலியன் உருவாக்கிய விருதான பிரான்ஸ் நாட்டின் மிக மிக உயர்ந்த செவாலியே விருது(1995) முதலிய உலகப்பெரும் விருதுகளை பெற்றவர் நமது நடிகர் திலகம் என்பது உலகறிந்த விஷயம்].
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ், இந்திய அரசின் எந்தவொரு அங்கீகாரமும் பெறாமல் 2009-ல் அமரரானார். இந்தியன் மேலும் ஒரு முறை தலைகுனிந்தான். தற்பொழுது 2011 தொடக்கத்திலும், மெல்லிசைச் சக்கரவர்த்திக்கு 'பத்ம' விருது வரும் என எதிர்பார்த்து வழக்கம் போல் [தாங்கள் மிகச் சரியாக எழுதியது போல்] 'பத்ம' நாமம் பெற்றிருக்கும் நிலையில், இந்தியன் மீண்டும் கூனித் தலை குனிகிறான். ஒன்றே ஒன்று மட்டும் புரியாத புதிராக உள்ளது. இசையுலக பிரம்மனாக அவர் இசையமைத்த படைப்புகளையெல்லாம் பாடிய பெரும்பாலானோருக்கு பெரும்விருதுகள் வழங்கப்பட்டு விட்டன. படைப்பாளிக்கு மட்டும் ஏன் இன்னும் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இந்த ஆண்டிலேயே "தாதா சாகேப் பால்கே விருது" வழங்கியாவது பாரத மணித்திருநாடு, இசையுலக மாமணிக்கு இழைத்த கொடுந்தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளட்டும்.
வருத்தத்துடன்,
பம்மலார்.
Exactly Right
-
29th January 2011, 04:40 PM
#1094
Senior Member
Veteran Hubber
மிக்க நன்றி சந்திரசேகரன் சார் !
அன்புடன்,
பம்மலார்.
-
29th January 2011, 08:39 PM
#1095
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 173
கே: இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற ஜனாதிபதியின் பட்டம் சிவாஜி கணேசனுக்கு எப்போது கிடைக்கும்? (கே.பி.என்.அப்தாலிப், பினாங், மலேசியா)
ப: முதல் வருடமே அவருக்கு இது தரப்பட்டிருக்க வேண்டும்.
(ஆதாரம் : பொம்மை, ஜூன் 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
29th January 2011, 08:56 PM
#1096
Senior Member
Veteran Hubber
புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை" திரைக்காவியம், கடந்த வெள்ளி(21.1.2011), சனி(22.1.2011), ஞாயிறு(23.1.2011) ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் மாம்பழத்து மாநகரின் 'அலங்கார்' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இத்தகவலை அளித்த ரசிக அன்பு நெஞ்சம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நயமிகு நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
29th January 2011, 11:20 PM
#1097
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 174
கே: செவாலியே சிவாஜிக்கு விருது வழங்கும் தகுதி இந்தியாவுக்கு உண்டா...? (ஏ.ராமசுவாமி, கர்நாடகா)
ப: நல்லாவே கேட்டீங்கய்யா...ஒரு கேள்வி !
(ஆதாரம் : பொம்மை, அக்டோபர் 1996)
(1996-ம் ஆண்டும் வழக்கம் போல் "பால்கே" விருது கை நழுவிப் போன நிலையில் ஒரு வாசக-ரசிகரின் குமுறல் இது. அந்த ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களுக்கு "பால்கே" விருது வழங்கப்பட்டது. ஆயினும் இந்தக் கேள்வி அவரது மாநிலத்திலிருந்தே வந்திருப்பதை கவனிக்கவும். பின்னர் 1997-ல் "பால்கே" நடிகர் திலகத்தை வந்தடைந்தது.)
[சகோதரி சாரதா, மெல்லிசைச் சக்கரவர்த்திக்கு இதுவரை எந்தவொரு பெரிய விருதும் வழங்காத இந்தியாவைக் குறித்தும் எனக்கு இதே போலத்தான் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.]
வருத்தத்துடன்,
பம்மலார்.
-
30th January 2011, 09:00 PM
#1098
Senior Member
Veteran Hubber
Real Vasool "RAJA"
ஆரவாரம் ! மகிழ்ச்சி !! சந்தோஷம் !!! ஆம்,
மதுரை சென்ட்ரல் சினிமாவில், 21.1.2011 வெள்ளி முதல் 27.1.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில், தினசரி 4 காட்சிகளில், வசூல் சக்கரவர்த்தியின் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு].
பழைய பட வரலாற்றில், பண்டிகை-விடுமுறை வாரம் என சிறப்பான காரணம் எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண வாரத்தில், இத்தனை வசூல் என்பது விண்ணை முட்டும் சாதனை. இக்காவியத்தை வெளியிட்டவர் ரூ.50,000/- வந்தாலே பரம திருப்தி என்றாராம். இப்பொழுது அவருக்கு பரிபூரண திருப்தி.
புதன்(26.1.2011) மற்றும் வியாழன்(27.1.2011) வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)
26.1.2011 : புதன் : ரூ.7,500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு)
27.1.2011 : வியாழன் : ரூ.6,500/- (ரூபாய் ஆறாயிரத்து ஐநூறு)
ஒரு வார (21.1.2011 - 27.1.2011) மொத்த வசூல் (சற்றேறக்குறைய) : ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு]
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
வசூல் விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
1st February 2011, 06:04 PM
#1099
Senior Member
Seasoned Hubber
Dear Pammalar
Thank you for bringing the info on the collection particulars of Raja, courtesy A.N. Kuppusamy. Considering such a low rates of admission, it definitely is a great going for NT, after 9+ years of his demise. It shows his impact on the Fans.
Dear Murali Sir,
Belated but sincere Birth Day wishes to you.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st February 2011, 06:30 PM
#1100
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Dear Murali Sir,
Belated but sincere Birth Day wishes to you.
Raghavendran
அன்புள்ள முரளியண்ணாவுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தங்கள் சீரிய சேவையில் நடிகர்திலகத்தின் புகழும் பெருமையும் சாதனைகளும் உலகமெலாம் பரவிட, உங்களுக்கு நீண்ட ஆயுளைத்தர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Bookmarks