-
8th March 2011, 08:48 AM
#1281
Senior Member
Diamond Hubber
Finished reading, Saradha mdm. Fantastic review.
One question, does it mean that the song (Annan Oru Kovil endral) was composed and shot after they decided to retitle the film?
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
8th March 2011 08:48 AM
# ADS
Circuit advertisement
-
8th March 2011, 12:44 PM
#1282
Senior Member
Veteran Hubber

Originally Posted by
groucho070
Finished reading, Saradha mdm. Fantastic review.
One question, does it mean that the song (Annan Oru Kovil endral) was composed and shot after they decided to retitle the film?
Thank you Rakesh,
Yes, the title of the movie had been changed as 'Annan oru kOyil' in the very initial stage of production, because many cine personalities suggested that the name 'enga veetu thanga latchumi' looks like old movie, and many fans wrote to Sivaji Productions to change it to an attractive one. After the change only, kavignar wrote the song, starting with movie title.
-
8th March 2011, 12:47 PM
#1283
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி,
தங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. அண்னன் ஒரு கோயில் படம் பார்க்கச்சென்ற தங்கள் மலரும் நினைவுகள் சுவையாக இருந்தன. (நல்லவேளை, என் பெற்றோர்கள் அடிக்கக்கூடியவர்களாக இல்லை. மாறாக அவர்களே நடிகர்திலகத்தின் படங்களூக்கு என்னை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்).
டியர் ராகவேந்தர்,
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தங்கள் மறுமொழியில் குறிப்பிட்ட விஷயங்கள் மீண்டும் அந்தக்கால நினைவுகளுக்கு என்னை இட்டுச்சென்றன. நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.
ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.
பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.
Last edited by saradhaa_sn; 8th March 2011 at 12:50 PM.
-
8th March 2011, 01:02 PM
#1284
Senior Member
Diamond Hubber
Thanks for the info, mdm

Originally Posted by
saradhaa_sn
many fans wrote to Sivaji Productions to change it to an attractive one.
And they did. The power of internet is overrated. Appove snail mail-la prove pannittangga namma NT fans
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
8th March 2011, 05:13 PM
#1285
Senior Member
Veteran Hubber
'அண்ணன் ஒரு கோயில்' பட விமர்சனத்தில், சொல்ல மறந்த (ஆனால் என்றும் மனதில் மறவாத) அண்ணனின் பெர்பார்மென்ஸில் சில துளிகள்....
** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...
** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...
** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....
** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...
** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....
** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....
** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....
இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.
-
9th March 2011, 01:16 AM
#1286
சாரதா,
நேற்றே படித்து விட்டேன் உங்கள் பதிவை. பதில் மட்டும் இன்று பதியலாம் என்று நினைத்து வந்த போது உங்களிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு படத்தைப் பற்றி. உங்கள் பதிவு எப்போது சோடை போனது? ஆனால் நேற்று படித்த போது வழக்கம் போல் விலாவரியாக இல்லாமல் சுருக்கி எழுதியது போல் தோன்றியது. அந்த குறையை நிவர்த்தி செய்வது போல படத்தின் ஹைலைட்டான சில பல துளிகளை இன்று எழுதி விட்டீர்கள்.
நம்முடைய சொந்தப் படங்களைப் பொறுத்தவரை தொடர்ந்து படங்களை எடுக்கும் வழக்கம் கிடையாது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகே படங்களை தயாரிப்பார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. 70-ல் வியட்நாம் வீடு, பிறகு 74-ல் தங்கப்பதக்கம் அதற்கு பிறகு 77-ல் இந்த அண்ணன் ஒரு கோயில். கன்னடப்படத்தின் ரீமேக். [பின்னாளில் இந்த ஒரிஜினல் தோல்விப்படத்தை தான்தான் தன்னுடைய திரைக்கதை மூலமாக தமிழில் வெற்றிப்படமாக்கியதாக இயக்குனர் கே.விஜயன் ஒரு நகைச்சுவை பேட்டி அளித்திருந்தார்].அரசியல் காரணங்களாலும் ஒரு சில படங்களின் கதையும் திரைக்கதையும் சரியாக அமையாத காரணத்தினால் 75 -76 காலக்கட்டத்தில் ஒரு தேக்க நிலையை அடைந்த நடிகர் திலகம் அதன் பிறகு கதையமைப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்படி தேர்வு செய்த படம்தான் அண்ணன் ஒரு கோயில். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 1977 மே மாதம் வாக்கில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தமான் காதலி படத்தில் நடிக்கும்போது செல்வி சுஜாதாவாக இருந்தவர் இந்தப் படத்தில் திருமதி சுஜாதா ஜெயகராக மாறினார்.
"மூன்று வருடங்களுக்குப் பிறகு எடுக்கும் சொந்தப்படத்திற்கு எங்க வீட்டு தங்கலட்சுமி-னு பெயராம், விளங்கிடும்" என்று எங்கள் மதுரைக்கே உரித்தான கமண்ட்கள் ரசிகர்கள் மத்தியில் உலா வந்துக் கொண்டிருக்க, வருகிறது பெயர் மாற்றம். ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சாணிக் கிளைக்கே கொண்டுப் போய்விட்டது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற செய்தி அதை அதிகப்படுத்தியது. தீபத்திற்கு பிறகு வந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வகையில் அமையாததில் சற்றே சோர்ந்த ரசிகர்கள் இந்தப் படத்தின் வெற்றியில் உறுதியாக இருந்தனர்.
தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்தான் தமிழகத்தை அச்சுறுத்திய ஒரு கடும் புயல் திசை மாறி ஆந்திராவின் ஒங்கோலை தாக்கியது. ஆனால் தமிழகமும் அந்தப் புயலின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. தவிரவும் அதே நேரத்தில்தான், இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் 1977 அக்டோபர் 29,30 தேதிகளில்தான் தமிழக சுற்றுப் பிரயாணம் மேற்கொண்ட அன்னை இந்திரா அவர்களின் மீது மதுரையில் கொலை வெறி தாக்குதல் நடந்தது. அதன் காரணமாக அன்றைய எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட தமிழகத்தின் பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் அரேங்கேறின. தவிரவும் பல இடங்களில் மாணவர், தொழிலாளர் போராட்டங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். இப்படி இயற்கையாகவும் செயற்கையாகவும் எதிர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் படம் வெளியாகிறதே என்று ஒரு மனதுக்குள் ஒரு அச்சம் இருந்தது. அதை தவிர கிட்டத்தட்ட 6 படங்கள் வேறு போட்டியாக வெளியாகின. [ஆறு புஷ்பங்கள், சக்ரவர்த்தி, பெண்ணை சொல்லிக் குற்றமில்லை போன்றவை] ஆனால் அனைத்து சோதனைகளையும் கடந்து அண்ணன் ஒரு கோயில் மகத்தான வெற்றிப் பெற்றது.
நவம்பர் 10 அன்று தீபாவளி, ஒரு வியாழக்கிழமை நியூசினிமாவில் ரிலீஸ். ஒரு சில நண்பர்களால் ஓபனிங் ஷோவிற்கு வரமுடியாத சூழல் என்பதால் மாலைக் காட்சிக்கு சென்றோம். படத்தைப் பற்றிய ரிப்போர்ட் நன்றாக இருந்ததால் இன்னும் உற்சாகம் கூடி விட்டது. படமும் எங்களை ஏமாற்றவில்லை. நெகட்டிவில் காட்டப்பட்ட டைட்டில்கள் அமர்க்களம் என்றால் முதல் காட்சியில் அந்த ஓட்டத்தில் எங்களை கட்டிப் போட்ட நடிகர் திலகம் இறுதி வரை அப்படியே வைத்திருந்தார். வெகு நாட்களுக்கு பின் அப்படி ஒரு அலப்பறையோடு ஒரு புது படம் பார்த்தோம்.
இந்தப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் சில உண்டு. நிறைய காட்சிகள் வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இயல்பான வசனங்கள் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மருமக வேணும் என்று சொல்லும் ஆயாவிடம் விளக்கேற்ற தீப்பெட்டி போதும் என்று நடிகர் திலகம் சொல்ல அய்யோ அறுவை அறுவை என்று சுமித்ரா கேலி செய்ய ஒரு அழகான காட்சி அங்கு விரியும். அது போல காட்சிகளில் லாஜிக் இருக்கும். உறவினரான isr -ஐ மணந்துக் கொள்ள வற்புறுத்தப்படும் சுஜாதா அவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு இடைவேளையில் தப்பிப்பது, தங்கையை தேடி காரில் புயலென வரும் நடிகர் திலகம் ஒரு இடத்தில் சட்ரென்று ரிவர்ஸ் எடுத்து அங்கேயுள்ள கடையில் அந்த வழியாக சென்ற காரைப் பற்றி விசாரிப்பது,இப்படி நிறைய சொல்லலாம்.
படத்தில் சில பல காட்சிகளில் அன்னை இல்லத்திலே படப்பிடிப்பு நடத்தியிருப்பார்கள். மல்லிகை முல்லை பாடல், கடைசி காட்சி முதலியவை. சாரதா குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் யாருக்கும் தெரியாமல் தங்கையை பார்க்க வரும் காட்சியில் பின்னியிருப்பார் நடிகர் திலகம். அதுவும் அந்த வசனம் ஹைலைட். இறுதியில் இன்ன இன்ன மருந்துகள் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஜெய்கணேஷிடம் "ஒரு டாக்டரா என்னால இப்போ உனக்கு அட்வைஸ் பண்ண முடியாது. உன்கிட்டே ஒப்படைசிருக்கேன், நீ பாத்து என்ன செய்யணுமோ அதை செய்" என்று அண்ணனாக சொல்லிவிட்டு வெளியேறுவது வரை அவரின் தர்பார்தான். ஆறரை வருடங்களுக்கு பிறகு இணைந்தாலும் தேங்காய்க்கு இந்தப் படத்தில் நடிகர் திலகத்துடன் காம்பினேஷன் ஷாட்ஸ் கிடையாது.
பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்ட படம். மதுரையில் தீபாவளியன்று 5 காட்சிகளில் ஆரம்பித்த ஹவுஸ் புல் காட்சிகள் தொடர்ந்து 30 நாட்களுக்கு தொடர்ந்தது. ஆம் நியூசினிமாவில் வெளியான முதல் முப்பது நாட்களில் நடைபெற்ற 101 காட்சிகளும் ஹவுஸ்புல். இந்தப் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அந்தமான் காதலியாலும் இந்தப் படம் பாதிக்கப்படாமல் 100 நாட்கள் என்னும் வெற்றிக் கோட்டை கடந்தது. மதுரையில் அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி, தியாகம் என்று தொடர்ந்து மூன்று நூறு நாள் படங்கள் [அதிலும் தியாகம் வெள்ளி விழா படம்] அமைவதற்கு ஆரம்ப புள்ளியாகவும் அமைந்தது அண்ணன் ஒரு கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை.
மீண்டும் 1977-ற்கு அழைத்து சென்று அந்த இனிமையான நினைவுகளை அசை போட வாய்பளித்ததற்கு மிக்க நன்றி.
அன்புடன்
-
9th March 2011, 08:06 PM
#1287
Senior Member
Veteran Hubber
டியர் முரளி,
அண்ணன் ஒரு கோயில் பதிவைப் படித்ததும் (வழக்கம்போல) நிச்சயம் அது தொடர்பான வரலாற்றுப்பதிவோடு வருவீர்கள் என்று நினைத்தேன். அதுபோலவே வந்து அசத்திவிட்டீர்கள். வேண்டுமென்றே எனது பதிவைச்சுருக்கவில்லை. கதைச்சுருக்கமே சற்று நீண்டுவிட்டதாலும், அதுதொடர்பான மற்ற சில நிகழ்ச்சிகளை உட்படுத்த வேண்டியிருந்ததாலும், காட்சியமைப்புக்கள் பற்றிய விவரங்கள் சற்று குறைந்துவிட்டன. உங்கள் பதிவு அவற்றைப்போக்க வல்லதாக அமைந்துவிட்டது.
காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.
இயக்குனர் கே.விஜயனின் 'சிரிப்பு பேட்டி' படித்ததும் எனக்கும் சிரிப்பு வந்தது. என்.வி.ராமசாமியின் 'புது வெள்லம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.
பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).
சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).
நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.
ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.
-
9th March 2011, 09:30 PM
#1288
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களின் அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தினைப் பற்றிய பதிவு மற்றும் முரளி சார் அவர்களின் தொடர் பதிவுகளைக் காணும் புதிய ரசிகர்கள் உடனடியாக அப்படத்தைப் பார்க்க விழைவர் என்பது திண்ணம். அவர்களுக்காகவும் மற்ற ரசிகர் நண்பர்களுக்காகவும் அப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றத்தைக் காணும் வாய்ப்பு இதோ.



அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th March 2011, 03:51 AM
#1289
Senior Member
Seasoned Hubber
Saradha madam, you are rocking. I have watched this movie on re-release in Madurai Meenakshi theatre and one of my favourite movie. Thanks for AOK details.
Cheers,
Sathish
-
10th March 2011, 06:45 AM
#1290
Senior Member
Seasoned Hubber
திருச்சி மாநகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை வெகு விரைவில் திறக்கப் பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள ஒளிப்படத்தினை இங்கே காணலாம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks