டியர் ராகவேந்தர், பார்த்தசாரதி, பம்மலார், முரளி....
அவன்தான் மனிதன் பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமை. எல்லோரும் சொன்னதுபோல படம் முழுக்க அருமையான ஸ்டைலை பிரதிபலித்திருப்பார். முன்பு நான் குறிப்பிட்டது போல, ஜெயலலிதாவுக்காக தன்னை அலங்கரித்துக்கொள்ளும்போது, கண்ணாடியைப்பார்த்து, நெற்றியிலிருக்கும் ஒரு நரைமுடியைப் பிடுங்கும் அழகு, முரளி சொன்னதுபோல அந்த 'ஆகா' சொல்லும் ஸ்டைல் எல்லாமே கைதட்டலை அள்ளிக்கொண்டு போகும்.
சாரதி சொன்னது போல இப்படம் அவ்வளவாக அல்ல, சென்னையில் அறவே மறு வெளியீட்டுக்கு வரவில்லை. பல ரசிகர்கள் வீடியோ கேஸட்டிலும், குறுந்தகட்டிலுமே பார்த்துள்ளனர். சாரதி குறிப்பிட்டது போல, படம் ஓவர் சோகமானதுக்குக் காரணம் மேஜரின் ரோல். இயக்குனர் ஏ.சி.டி. அதைச்சற்று கண்ட்ரோல் பண்ணியிருக்க வேண்டும். குமுதம் பத்திரிகையின் விமர்சனத்தில், "சிவாஜி எட்டு கிலோவுக்கு துக்கப்பட்டால் மேஜர் பதினாறு கிலோவுக்கு அழுது தீர்க்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இப்படத்தில் எனக்குப்பிடித்த இன்னொரு விஷயம், படத்தின் துவக்கத்தில் பளிச்சென்று வந்து போகும் நடிகர்திலகம் - மஞ்சுளா ஜோடியின் நெஞ்சையள்ளும் காதல் காட்சிகள்.
நினைவலைகளை உசுப்பி விட்ட அனைவருக்கும் நன்றி.
Bookmarks