Page 150 of 199 FirstFirst ... 50100140148149150151152160 ... LastLast
Results 1,491 to 1,500 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1491
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Nadigar thilagam sivaji ganesan - part 8

    அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
    நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
    அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 30th March 2011 at 01:15 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1492
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    -- reserved --

    (அன்புச்சகோதரர் ராகவேந்தர் அவர்கள் எப்போது தனது துவக்கப்பதிவை இட்டாலும், அதற்கு முதல் வாழ்த்துச்சொல்பவள் நானாக இருக்க வேண்டும் என்பதற்காக).

  4. #1493
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    அன்புள்ள பார்த்தசாரதி,

    தங்கள் திரைப்பட ஆய்வுகள் ஒவ்வொன்றும், நடிகர்திலகத்தின் ரசிகர்களால் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சொல்லுமளவுக்கு நாளுக்கு நாள், படத்துக்குப்படம், காட்சிக்குக்காட்சி மெருகேறி வருகிறது. 'ஞான ஒளி'க்காவியத்தில், எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலேயே மலைப்பைத் தருகிறது. ஸ்ரீகாந்தும் சாரதாவும் தனித்திருக்கும் வேளையில் சாரதா பாடும் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடலின் இடையிசையின்போது, மழையில் நனைந்துகொண்டே நடிகர்திலகமும் மேஜரும் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்க, ஓரிடத்தில் நடிகர்திலகம் கால் வழுக்கி விழப்போகும் சமயம், மேஜர் கைகொடுத்துத் தூக்கிவிடும் காட்சி, பிற்பாடு வரப்போகும் ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கான அச்சாரம் என்பது படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் தெரியும்.

    (மெல்லிசை மன்னர் தந்த 'மணமேடை' பாடலை முறியடிக்க அதுபோன்ற இன்னொரு பாடல் இன்னும் வரவில்லை. காரணம், அப்பாடலின் மெட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் இசைக்கப்படும் ஒரு வித வித்தியாசமான மெட்டைத் தழுவியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான மெட்டு என்பதில் சந்தேகமில்லை).

    அதுபோல, நடிகர்திலகம் மற்றும் விஜயநிர்மலா டூயட்டான 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பையாலஜி என எல்லாமே கச்சிதம். வீட்டுக்கூரையின் மேல், வைக்கோல் குவியலில், ஏணியில், பிரம்புக்கூடையில் என்று எல்லா இடத்திலும் அருமையோ அருமை. நான் பலமுறை சொன்ன விஷயத்தை மீண்டும் சொல்கிறேன்... இந்த ஜோடி இன்னும் பல படங்களில் தொடர்ந்திருக்க வேண்டும்.

    டியர் மம்மலார்,

    நீங்கள் குறிப்பிட்ட சக்கரவர்த்திகளின் வரிசையில், நண்டு வளைக்குள் ஓடி ஒளிவது, பின்னர் மீண்டும் கிளைமாக்ஸில் நண்டு மீண்டும் வெளியே வருவது போன்ற இடங்களில் இயக்குனர் மாதவனும் தன் முத்திரைகளைப் பதித்திருந்தார்.

    (அவன்தான் மனிதன் மறு வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி)
    Last edited by saradhaa_sn; 30th March 2011 at 11:49 AM.

  5. #1494
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர்,

    நடிகர்திலகத்தின் புகழ்பாடும் இந்த திரித்தொடரின் முதல் நான்கு பாகங்களை சகோதரர் ஜோ அவர்களும், ஐந்தாம் பகுதியை சகோதரர் முரளி சீனிவாஸ் அவர்களும், ஆறாவது பகுதியை அன்புத்தம்பி பம்மலார் அவர்களும், ஏழாவது பகுதியை (உங்கள் அனைவரின் கட்டளைகளை ஏற்று) நானும் துவக்கி வைக்க...... எட்டாவது பகுதியை நீங்கள்தான் துவக்க வேண்டுமென்பது எப்போதோ முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை இந்த ஏழாம் பகுதியின் முதற்பக்கத்திலேயே நான் சொல்லியிருந்தேன்.

    தற்போது எங்கள் அனைவரின் அன்பு வேண்டுகோளையேற்று, எட்டாவது பகுதியை துவக்கி வைத்துள்ளீர்கள். அனைவரின் சார்பிலும் மிக்க நன்றிகள்.

    வெற்றிகரமாக நடைபோட்ட இந்த ஏழாவது பகுதியை அரிய தகவல் களஞ்சியமாய் எடுத்துச்சென்ற 'அத்தனை' அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

  6. #1495
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Hearty Congrats to all NT Fans for successful entering in to Part 8.

    Kamal in an recent interview :

    "I don't copy anybody whether it is acting or marketing. I have my own individualistic style. If I have doubts, I think of my guru and Dronacharya Sivaji Ganesan"

  7. #1496
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    டியர் ராகவேந்தர்,

    நடிகர்திலகத்தின் புகழ்பாடும் இந்த திரித்தொடரின் முதல் நான்கு பாகங்களை சகோதரர் ஜோ அவர்களும், ஐந்தாம் பகுதியை சகோதரர் முரளி சீனிவாஸ் அவர்களும், ஆறாவது பகுதியை அன்புத்தம்பி பம்மலார் அவர்களும், ஏழாவது பகுதியை (உங்கள் அனைவரின் கட்டளைகளை ஏற்று) நானும் துவக்கி வைக்க...... எட்டாவது பகுதியை நீங்கள்தான் துவக்க வேண்டுமென்பது எப்போதோ முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை இந்த ஏழாம் பகுதியின் முதற்பக்கத்திலேயே நான் சொல்லியிருந்தேன்.

    தற்போது எங்கள் அனைவரின் அன்பு வேண்டுகோளையேற்று, எட்டாவது பகுதியை துவக்கி வைத்துள்ளீர்கள். அனைவரின் சார்பிலும் மிக்க நன்றிகள்.

    வெற்றிகரமாக நடைபோட்ட இந்த ஏழாவது பகுதியை அரிய தகவல் களஞ்சியமாய் எடுத்துச்சென்ற 'அத்தனை' அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.
    டியர் ராகவேந்தர் அவர்களே,

    நடிகர் திலகத்திற்கென தனியான வலைத்தளத்தையே உருவாக்கி அவரின் புகழை மிகச் சிறப்பாக எல்லையில்லாத அர்ப்பணிப்பு உணர்வுடன் பரப்பி வரும் உங்களை, அவரது புகழை மேலும் சிறப்பாகப் பாடப் போகும் எட்டாவது திரியினை உடனே துவக்குமாறு வேண்டுகிறோம்.

    இந்தப் பொது நலத்தில் ஒரு சுய நலமும் கலந்திருக்கிறது. ஏனென்றால், நான் நேற்று துவக்கிய "ஞான ஒளி" படத்தைப் பற்றிய பதிவு பாதி கூட இன்னும் முடியவில்லை. மீதியைத் தொடர சந்தர்ப்பம் தருமாறு வேண்டுகிறேன். கூடவே, எப்படி இந்தப் புதுத் திரியில், நுழைந்து பதிவிட வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டுகிறேன்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  8. #1497
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    அன்புள்ள பார்த்தசாரதி,

    தங்கள் திரைப்பட ஆய்வுகள் ஒவ்வொன்றும், நடிகர்திலகத்தின் ரசிகர்களால் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சொல்லுமளவுக்கு நாளுக்கு நாள், படத்துக்குப்படம், காட்சிக்குக்காட்சி மெருகேறி வருகிறது. 'ஞான ஒளி'க்காவியத்தில், எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலேயே மலைப்பைத் தருகிறது. ஸ்ரீகாந்தும் சாரதாவும் தனித்திருக்கும் வேளையில் சாரதா பாடும் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடலின் இடையிசையின்போது, மழையில் நனைந்துகொண்டே நடிகர்திலகமும் மேஜரும் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்க, ஓரிடத்தில் நடிகர்திலகம் கால் வழுக்கி விழப்போகும் சமயம், மேஜர் கைகொடுத்துத் தூக்கிவிடும் காட்சி, பிற்பாடு வரப்போகும் ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கான அச்சாரம் என்பது படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் தெரியும்.

    (மெல்லிசை மன்னர் தந்த 'மணமேடை' பாடலை முறியடிக்க அதுபோன்ற இன்னொரு பாடல் இன்னும் வரவில்லை. காரணம், அப்பாடலின் மெட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் இசைக்கப்படும் ஒரு வித வித்தியாசமான மெட்டைத் தழுவியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான மெட்டு என்பதில் சந்தேகமில்லை).

    அதுபோல, நடிகர்திலகம் மற்றும் விஜயநிர்மலா டூயட்டான 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பையாலஜி என எல்லாமே கச்சிதம். வீட்டுக்கூரையின் மேல், வைக்கோல் குவியலில், ஏணியில், பிரம்புக்கூடையில் என்று எல்லா இடத்திலும் அருமையோ அருமை. நான் பலமுறை சொன்ன விஷயத்தை மீண்டும் சொல்கிறேன்... இந்த ஜோடி இன்னும் பல படங்களில் தொடர்ந்திருக்க வேண்டும்.

    டியர் மம்மலார்,

    நீங்கள் குறிப்பிட்ட சக்கரவர்த்திகளின் வரிசையில், நண்டு வளைக்குள் ஓடி ஒளிவது, பின்னர் மீண்டும் கிளைமாக்ஸில் நண்டு மீண்டும் வெளியே வருவது போன்ற இடங்களில் இயக்குனர் மாதவனும் தன் முத்திரைகளைப் பதித்திருந்தார்.

    (அவன்தான் மனிதன் மறு வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி)
    சாரதா மேடம் அவர்களுக்கு,

    என் பதிவிற்கு தாங்கள் அளித்த பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஞான ஒளி பாதிதான் முடிந்திருக்கிறது. மீதியை, நடிப்புலக மன்னர் மன்னனின் (ஒரு மாதிரி ரொம்ப புளகாங்கித மூடில் இருந்தால், நாங்கள் அவரை அப்படித் தான் அழைப்போம்!) எட்டாவது திரியில்தான் தொடர வேண்டும்.

    பொதுவாக, நான் நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பெரிய அளவில் எழுதத் தலைப்படுவதால், மற்ற விஷயங்களைப் பற்றி வேண்டுமென்றே அடக்கி வாசிக்க வேண்டியதாகி விடுகிறது. எதைப் பற்றி முக்கியமாக எழுதுகிறோமோ, அதன் வீரியம் குறைந்து விடும் என்பதால். (அதாவது, நடிகர் திலகத்தின் சொந்த வரிகளில் சொல்வதென்றால் "பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான் நான் வேண்டுமென்றே கண்ணன் பாத்திரத்தையும் ஏற்றேன். அதற்கு வேறொரு நடிகரைப் போட்டிருந்தால், அவரும் என்னுடன் போட்டி போட்டு நடிக்கத் தலைப்படுவார். அதனால், சொல்ல வந்த விஷயம் வீணாகி விடும். அதனால்தான் கண்ணன் பாத்திரத்தையும் நானே ஏற்று நடித்து, கொஞ்சம் அடக்கி வாசித்து, அந்த பாரிஸ்டர் பாத்திரத்தை நிற்க வைக்க வேண்டி வந்தது." என்று.

    இருந்தாலும், ஞான ஒளியைப் பொறுத்தவரை, நான் மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் (அதாவது அந்த காலத்திலேயே, தீம் ம்யூசிக் என்கிற சமாசாரத்தை அற்புதமாக இரு விதமாகப் பண்ணியிருந்ததைப் பற்றி. "மண மேடை மலர்களுடன் தீபம்" பாடல், மேற்கத்திய இசைக்கருவியான பியானோவைப் பெரும்பாலும் பயன்படுத்தி (பல்லவி அனுபல்லவிக்கு நடுவில், புல்லாங்குழலும் விளையாடுவது வேறு விஷயம்!) அத்தனை வாத்தியக் கருவிகளையும் சரியாகக் கையாண்டு பி. சுசீலா அவர்களால் அதியற்புதமாக உணர்வுபூர்வமாக பாடப்பட்ட, அற்புதமான பாடல். மெல்லிசை மாமன்னர் ஒருவர்தான் சூழலுக்கேற்றாற்போல் மற்ற இசையமைப்பாளர்களை விட மிக மிகத் திறமையாகவும் வெரைட்டியாகவும் இசையமைத்தவர். இந்த ஒரு சப்ஜெக்ட்டுக்கே நாம் பல பாடல்களை ஒதுக்க வேண்டி வரும். அதற்குண்டான திரியில் போய் அதில் என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  9. #1498
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
    நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
    அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1499
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
    நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
    அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
    ராகவேந்திரன்
    அன்புச் சகோதரர் திரு ராகவேந்தர் அவர்களே,

    நடிகர் திலகத்தின் புகழ் ஜெகமெங்கும் மேலும் மேலும் ஓங்கி ஒலித்துப் பரவ வகை செய்ய உங்களை இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம்.

    உங்களுடைய அனைவரது அர்ப்பணிப்பு, தீவிரம், மற்றும் அரிய தகவல்கள் அளிக்கும் பாங்கு, மற்றும் ரசிப்புத்தன்மை அளப்பரியது. இருப்பினும், நடிகர் திலகம் பற்றிய நினைவுகளையும், ஆய்வுகளையும் தொடர்ந்து என்னுடைய பார்வையில் பதிவிட முயல்கிறேன்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  11. #1500
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like

    Quote Originally Posted by parthasarathy View Post
    நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)


    8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி


    இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.


    வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.


    எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -

    முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)

    கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)

    பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)

    கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.

    இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.

    நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.

    ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.

    முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.

    இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.

    ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.

    இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.

    முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;

    ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;

    மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)

    தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;

    தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;

    வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.

    உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).

    இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);


    "ஞான ஒளி" தொடரும்,

    அன்புடன்,

    பார்த்தசாரதி
    Dear Mr. Parthasarathy,

    I welcome you to the NT thread. I am one of those countless devotees of NT, who contributed to this thread in a very miniscule manner way back. I am indeed happy that the thread is still going strong and best wishes for you all.

    You have listed many scenes from the magnum opus "Gnana Oli". One particular scene where NT simply excels in his performance is the "I mean that silver tumbler". The style with which he would remove the gloves from his hands is simply awesome. I am sure you will mention this scene also in your continuation of the review.
    Yours truly

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •