Page 153 of 199 FirstFirst ... 53103143151152153154155163 ... LastLast
Results 1,521 to 1,530 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1521
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 4

    "பூவா மரமும் பூத்ததே"



    நடிப்பு : நடிகர் திலகம், நடிகை ஜி.வரலக்ஷ்மி

    பின்னணிக் குரல்கள் : கானக்குயில் ஜிக்கி, பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

    இசை : திரை இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன்

    படைப்பு : கவி கா.மு.ஷெரீஃப்

    திரைக்காவியம் : நான் பெற்ற செல்வம்(1956)


    அன்புடன்,
    ராகவேந்திரன் & பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1522
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 5

    "உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே"



    நடிப்பு : நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி பத்மினி

    பின்னணிக் குரல்கள் : பாடகியர் திலகம் பி.சுசீலா, இசைத் தென்றல் ஏ.எம்.ராஜா

    இசை : திரை இசை மாமேதை டி.சலபதிராவ்

    படைப்பு : பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    திரைக்காவியம் : புனர்ஜென்மம்(1961)


    அன்புடன்,
    ராகவேந்திரன் & பம்மலார்.
    pammalar

  4. #1523
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    எத்தனை வசூலை அள்ளிக் குவிக்குது

    மதுரை 'சென்ட்ரல் சினிமா' [தினசரி 4 காட்சிகள்]

    சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"


    கலெக்ஷன் ரிப்போர்ட்

    1.4.2011 : வெள்ளி : ரூ.10,082/-

    2.4.2011 : சனி : ரூ.7,192/-

    3.4.2011 : ஞாயிறு : ரூ.10,961/- [மாலைக் காட்சி வரை]

    1.4.2011 முதல் இன்றைய [3.4.2011] மாலைக் காட்சி வரை "சிவகாமியின் செல்வன்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் ரூ.28,235/-.

    படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது; படமோ எத்தனை வசூலை வாரிக் குவிக்குது.

    2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இது போன்ற கலெக்ஷன் எல்லாம் சாதனைகளின் சிகரம்!

    அதனால் தானே கூறுகிறோம்,

    "சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே" என்று.


    பெருமிதத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1524
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    தங்களது பெருந்தன்மைக்கும் ஆதரவிற்கும் எனது நன்றி. தொடர்ந்து பாடல்களை பகிர்வோம்.
    சிவகாமியின் செல்வனும் அவர் புகழ் பாடும் ராஜாமணியின் செல்வனும் கொண்ட பெருமையையும் அருமையையும் மக்கள் மிகவும் தாமதமாக தெரிந்து கொள்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட தகவல் ஓர் சாட்சி. மதுரை மையத்தில் (Central) மக்கள் கண்டு களித்த சிவகாமியின் செல்வனை இந்த மையத்தில் (Hub) மக்கள் காண விரும்ப மாட்டார்களா என்ன. இதோ உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அன்பை வெளிப்படுத்தும் பாடல்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1525
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 6
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்


    திரைக்காவியம் - சாந்தி
    குரல்கள் - பாடகியர் திலகம் சுசீலா, மற்றும் விசில் எம்.எஸ்.ராஜு
    பாடல் - கவியரசர் கண்ணதாசன்
    நடிப்பு - நெஞ்சை அள்ளும் நடிகர் திலகம், தெவிட்டாத பேரழகி தேவிகா

    அன்புடன்
    பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1526
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Guys,

    Just watching Anbe Aaruyere, NT's very casual performance. One of the NT movie which does not attract me to watch fully.

    Swamy, Ragavendra, is it something NT wanted to do some lighter movie purposely or any other reason and what about box office collections?

    NT's facial expression and way of walking like innocent excellent.

    Cheers,
    Sathish
    Dear GoldStar Satish,

    Our NT's "Anbe Aaruyire" is a full length romantic comedy but not in the class of SABAASH MEENA or GALAATA KALYAANAM. It hit the silver screens on 27 Sept 1975 and ran upto 1 Nov 1975, for a small period of 36 days. On 2 Nov 1975 [Deepavali day], in most of the theatres - all over South & Chennai, it gave way to Dr.SIVA & VAIRA NENJAM. It did a below average business in the Box-Office.

    Apart from NT, MSV's music was the saving grace in the film. Particularly one song 'Malligai Mullai Pooppandhal' sung by Vani Jayaram attained evergreen status.

    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

  8. #1527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 3

    காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தால் மாணப் பெரிது. உதவி செய்வதை உடனே செய்ய வேண்டும் என்பதே இதன் சாராம்சமாக விளங்குகிறது. என்றும் ஒன்றே செய்யுங்கள், ஒன்றை நன்றே செய்யுங்கள், நன்றும் இன்றே செய்யுங்கள், நீங்கள் எதிலும் வெல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம். நல்லதை தள்ளிப் போட வேண்டாம் என்பதும் இதன் உட்கருத்து. அதனடிப்படையில் அமைந்த பாடல் நாளை என்ன நாளை, இன்று கூட நமது தான், வேளை என்ன வேளை, விழுந்தவர்க்கு வாழ்வை, வழங்க வாரும் தோழரே... என்று துவங்கும் இப்பாடலின் வரிகளை கவனியுங்கள். காலங்கடந்து நின்று இன்றைக்கும் பொருந்துகின்றன அல்லவா. குறிப்பாக இந்த வரிகள்.
    ஞானத்தோடு வாழுவோம்
    நிதானத்தோடு வாழுவோம்
    மாபெரும் தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்

    ஆஹா... என்ன வரிகள்

    இதோ அந்தப் பாடல்...


    திரைக் காவியம் - அவன் ஒரு சரித்திரம் 1977
    குரல் - டி.எம்.எஸ். அவர்கள் மற்றும் குழுவினர்
    நடிப்பு - நடிகர் திலகம், காஞ்சனா மற்றும் பலர்
    பாடல் - கவியரசர் கண்ணதாசன்
    இந்தப் படத்தில் நடிகர் திலகம் ஏற்றிருப்பது மாவட்ட ஆட்சியர் பாத்திரம் என்பது குறிப்பிடத் தக்கது.
    அன்புடன்
    பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 4th April 2011 at 03:27 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1528
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    Dear GoldStar Satish,

    Our NT's "Anbe Aaruyire" is a full length romantic comedy but not in the class of SABAASH MEENA or GALAATA KALYAANAM. It hit the silver screens on 27 Sept 1975 and ran upto 1 Nov 1975, for a small period of 36 days. On 2 Nov 1975 [Deepavali day], in most of the theatres - all over South & Chennai, it gave way to Dr.SIVA & VAIRA NENJAM. It did a below average business in the Box-Office.

    Apart from NT, MSV's music was the saving grace in the film. Particularly one song 'Malligai Mullai Pooppandhal' sung by Vani Jayaram attained evergreen status.

    Warm Wishes & Regards,
    Pammalar.

    Thanks Mr. Swamy.

    Is it possible to have photos of Sivakamin Selvan Sunday gala photos?

    Cheers,
    Sathish

  10. #1529
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 4

    தொகுப்பில் அடுத்தது ..

    சரணத்தின் இடையில் வரும் வரிகளை கவனியுங்கள் ..


    தம்பி ஒருவன் வெளியில் இருந்து காசை எண்ணுகிறான்
    நம்பி ஒருவன் சிறையில் இருந்து கம்பி எண்ணுகிறான்
    உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்குதடா
    அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
    வெளியில் நிக்குதடா ... அட
    என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
    என்னத்தைச் சொல்வேண்டா

    இந்த வரிகளை கவியரசர் எந்த யூகத்தில் 1962ல் எழுதியிருப்பார் ...

    பாடல் - யாரை எங்கே வைப்பது என்று
    படம் - பலே பாண்டியா
    குரல் - பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்
    இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி



    இதோ பாடலின் வரிகள்

    யாரை எங்கே வைப்பது என்று
    யாருக்கும் தெரியலே – அட
    அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
    பேதம் புரியலே .. பேதம் புரியலே

    பேரெடுத்து உண்மையை சொல்லி
    பிழைக்க முடியலே – இப்போ
    பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
    பேதம் புரியலே - யாரை

    நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
    அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
    நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியலே – இப்போ
    நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே .. அட
    என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
    என்னத்தைச் சொல்வேண்டா ...

    தம்பி ஒருவன் வெளியில் இருந்து காசை எண்ணுகிறான்
    நம்பி ஒருவன் சிறையில் இருந்து கம்பி எண்ணுகிறான்
    உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்குதடா
    அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
    வெளியில் நிக்குதடா ... அட
    என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
    என்னத்தைச் சொல்வேண்டா - யாரை

    மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
    மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா
    காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
    கதவை திறந்து பறவை பறந்து பாடி செல்லுமடா .... அட
    என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
    என்னத்தைச் சொல்வேண்டா - யாரை

    அன்புடன்
    பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1530
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஓஹோஹோ மனிதர்களே பாடல் வரிகள்...


    ஆஹஹா.... ஹம்மிங்

    பல்லவி

    ஓஹோஹோ மனிதர்களே
    ஓடுவதெங்கே சொல்லுங்கள்
    உண்மையை வாங்கி
    பொய்களை விற்று
    உருப்பட வாருங்கள் ..ஓஹோஹோ..

    சரணம் 1

    அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
    அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
    உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
    உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
    காலம் போனால் திரும்புவதில்லை
    காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை .... ஓஹோஹோ...

    சரணம் 2

    அடிப்படை இன்றி கட்டிய மாளிகை
    காத்துக்கு நிக்காது
    அழகாய் இருக்கும் காகித பழங்கள்
    சந்தையில் விக்காது
    விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை
    நிரந்தரம் ஆகாது
    விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல்
    வெளிச்சம் கிடைக்காது
    கண்ணை மூடும் பெருமைகளாலே
    தன்னை மறந்து வீரர்கள் போலே ...ஓஹோஹோ

    சரணம் 3

    ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
    உத்திரமாகாது
    உருவத்தில் சிறியது கடுகானாலும்
    காரம் போகாது
    பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு
    பாழ்பட்டுப் போகாது
    பாதையை விட்டு விலகிய கால்கள்
    ஊர்போய் சேராது
    காற்றைக் கையில் பிடித்தவனில்லை
    தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை ...ஓஹோஹோ
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •