Parthasarathy sir,
Just now I have finished all your analysis about various movies of NT, which are simply outstanding. You have analysed each and every movements of NT in various angles.
Excellent job. Please continue.
Parthasarathy sir,
Just now I have finished all your analysis about various movies of NT, which are simply outstanding. You have analysed each and every movements of NT in various angles.
Excellent job. Please continue.
Pammalar sir & Raghavendar sir,
You have started a new topic of analysing the songs of NT, with visual treat. Romantic songs are nice to watch and 'koLgaip pAdalkaL' are verymuch enjoyable 'kannukkum karuththukkum'.
Particularly that song from 'neengaL aththanai pErum uththamarthAnA sollungaL' from en magan.
wow... what outstanding lines by kaviyarasar which will coincide with any period any situation, especially for this election period.
ராகவேந்தர் சார், அசத்திட்டீங்க
அவன் ஒரு சரித்திரம் படத்தில் வரும் 'நாளை என்ன நாளை?. இன்று கூட நமதுதான்' என்ற பாடலைத்தான் சொல்கிறேன். இந்தப்பாடல்கள் எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மாட்டார்கள், அரசியல் கருத்துக்களை உள்ளடக்கியது என்று. (ஆனால் மற்றவர்களுடைய பாடல்கள் இதைவிட வெளிப்படையாக அரசியல் பேசக்கூடியதை எல்லாம் ஒளிபரப்புவார்கள்). எல்லா வகையிலும், எல்லா பக்கத்திலும் நடிகர்திலகத்துக்கு வஞ்சனை.
இவ்வரிகளை கவியரசர் எழுதிய காரணம், இதற்கு சற்றுமுன்னர்தான் இவரது போட்டியாளரான கவிஞர் வாலி எழுதி, நடிகர்திலகத்தின் போட்டியாளர் நடித்த 'நாளை நமதே' என்ற பாடல் வெளியாகியிருந்தது. அதற்குப்போட்டியாகவே நடிகர்திலகத்துக்காக கவியரசர் கண்ணதாசன் 'நாளை என்ன நாளை?. இன்று கூட நமதுதான்' என்று எழுதினார். (எல்லோருக்கும் நல்லவரான எம்.எஸ்.வி.தான் இரண்டு பாடல்களுக்குமே இசையமைத்தார்)
இந்த அருமையான பாடலை விருந்தாக அளித்தமைக்கு மிக்க நன்றி.
டியர் பம்மலார் மற்றும் ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டும் அற்புதமான பாடல்களைப் பதிவிட்டு அசத்த ஆரம்பித்து விட்டீர்கள்.
நாடகத் துறையிலிருந்து வந்த ஒரு கலைஞன், எப்படி திரைப்படம் என்கின்ற visual ஊடகத்திர்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டார் என்பதற்கு அவரின் அத்தனை பாடல்களுமே சாட்சி. உண்மையைச் சொல்லப் போனால், அவரது முதல் படத்திலேயே, தன்னை அவர் முழுவதுமாக மாற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். "கா... கா..." பாடல் - ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடுவதாய் இருந்தாலும், ஒரு moving உடல் மொழியில் செய்திருப்பார்; "தேசம், ஞானம், கல்வி" பாடல் கேட்கவே வேண்டாம்; "நெஞ்சு பொறுக்குதில்லையே", பொருமல் என்னும் உணர்வை, மிகவும் subtle -ஆக வெளிப்படுத்தியிருப்பார்; "புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு" பாடலில், அவரது நடையை அப்போதே ஆரம்பித்திருப்பார்.
அப்போது, எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எழுபதுகளின் ஆரம்பத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள, கமலா திரை அரங்கத்தில், ஞாயிறு காலை மட்டும் நண்பகல் காட்சி திரையிடுவார்கள். (காலை பத்து மணிக்குத் துவங்கி இரண்டு மணிக்குள் முடிந்து விடும்). இதில், எப்போதும், பழைய படங்களைத் தான் திரையிடுவார்கள். கமலாவில், முதல் படமாக, அன்னை வேளாங்கண்ணியும், இரண்டாவதாக, ஞான ஒளியும் திரையிடப்பட்டு, இரண்டுமே, பெரிய வெற்றி பெற்றன. குறிப்பாக, ஞான ஓளி, மிகப் பெரிய வெற்றி. அந்தக் காலத்தில், விருகம்பாக்கம் என்ற புறநகர் பகுதியில் - ஒரு மாதிரி கிராமம் என்றும் சொல்லலாம் (இன்று கதையே வேறு.) - எங்களைப் போன்ற அதுவும் நடிகர் திலகம் பக்தர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது கமலா திரை அரங்கத்தின் வரவு. ஏனென்றால், புதிய படங்கள், குறைந்தது நூறு நாட்கள் கழித்துதான் பெட்டி மாறி, புற நகருக்கு வரும். இல்லையென்றால், சாந்திக்கு செல்ல வேண்டும். ஞான ஒளிக்குப் பின், நிறைய புதிய படங்கள் - குறிப்பாக, டாக்டர் சிவா போன்ற படங்களை முதல் நாள் ஒப்பனிங் ஷோவே பார்த்து விட்டோம்! கமலா திரைஅரங்க உரிமையாளர் திரு வி.என். சிதம்பரம் வேறு நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். அன்பே ஆருயிரே, ரோஜாவின் ராஜா, கிரஹப்ரவேசம் உட்பட பல படங்கள் கமலாவிலும் வெளியானது.
அப்படி ஒருநாள், ஞாயிற்றுக்கிழமையன்று, நடிகர் திலகம் தன் விழிகளால் மொழி பேசி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தைப் பார்த்தேன். அதில் வனங்களில் சுற்றித் திரிந்து வளரும் "டார்ஜான்" பாத்திரத்தில் படத்தின் முற்பாதியில் நடித்திருப்பார். இடைவேளைக்கு மேல் தான், நடிகர் திலகம் பேச ஆரம்பிப்பார். அதுவும், ஒரு பாடலில் தான். "இக லோகமே இனிதாகுமே" என்று - பி. லீலா என்று நினைக்கிறேன். ஜமுனாவுக்கு பாடியிருப்பார். அந்தப் பாடலுக்கு முன் வரை, நடிகர் திலகம் பேசக்கூட மாட்டார். ஆனாலும், ஜமுனாவுக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டு, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பிப்பார். இந்தப் பாடல், ஆரம்பித்து, இரண்டாவது சரணம் என்று நினைவு. "வானவர் காணாத வன ராணியே" என்று ஆரம்பித்து, நடிகர் திலகம், திரு. டி.எம்.எஸ். அவர்களில் அற்புதமான குரல் வளத்தில், பாட ஆரம்பிக்கும் போது, திரை அரங்கம் அலறியது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கப்புறம், இன்று வரை இந்தப் படத்தையும், பாடலையும், பார்த்ததில்லை. இருப்பினும், அந்த நினைவு, என் மனதை விட்டு அகலவில்லை. Such was the impact NT created with that song among the audience, which is unparallelled even today!
The songs you are going to post, will surely, show to the entire world the way a Stage Artiste, adapted and evolved himself to Visual Media - started enjoying himself and made the entire people enjoy his performance throughout his career. It's a lesson to all budding Artistes forever, to see his performances and grow their careers.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 4th April 2011 at 12:03 PM.
poomaalaiyil Or malligai and muththukkaLo kaNgaL - been searching for a mp3 download link for both these songs full version. Been getting only multilated versions edited crudely by the uploader with tape-off-on noises audible.
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி...)
8. ஞான ஒளி (தொடர்ச்சி)
நடிகர் திலகம் சிறைக்குச் சென்ற பின் அடைக்கலம் பாதிரியாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து, அவரும் தான் மறைவதற்குள் மொரட்டுப்பயலைப் (அந்தோனி - நடிகர் திலகம்) பார்க்க விரும்புவதாக மேஜரை வற்புறுத்தி, அவரும் வேறு வழியின்றி அவரது மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, நடிகர் திலகத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருவார். அவரது அறையின் வாயிலுக்கு இருவரும் வந்தவுடன், நடிகர் திலகம் என்ன செய்வார் என்று தெரிந்து கொண்டு "பாதிரியாரிடம் போ.. ஆனால் தப்பிக்கக்கூடாது... தப்பிக்க நினைத்தால் ... என் ரிவால்வர் அதன் வேலையைச் செய்யும் ஜாக்கிரதை " என்று சைகையால் சொல்லி, அவரை அனுப்பியதும், ஒரு குழந்தைப் போல் ஓடி வரும்போதே, பார்க்கும் அனைவரையும், அந்தக் கட்டத்துக்குள் கூட்டிச் சென்று, தொண்டையை வலிக்கச் செய்து விடுவார். ஓடி வந்து,பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி சத்தமே கேட்காமல் அழும்போது கரையாத நெஞ்சமும் கரையும் (இப்போது
அழும் அழுகை சத்தமில்லாமல், முகத்தையும் பெரிதாகக் காட்டாமல், உடல் மொழியாலேயே வரவழைத்த அழுகை – இந்த அழுகை பார்க்கும் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்!) மொரட்டுப்பயலே, சொல்லு, இனிமே நான் மனுஷனா மாறுவேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுடா!" என்று சொல்லி நடிகர் திலகம், மேஜர் இருவரது கைகளையும் பற்றிக் கொண்டே உயிரை விடும் திரு. கோகுல்நாத் அவர்கள் இந்தப் படத்தின் முக்கியமான தூண்களில் ஒருவர் - நாடகத்திலும், இந்தப் பாத்திரத்தை இவர் தான் செய்தார். இவர், மேஜரெல்லாம் ஒரு காலத்தில், கே. பாலசந்தர் அவர்களின் ராகினி கிரியேஷன்ஸ் நாடக ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் தான். பின் அவரது படங்களிலும் தவறாமல் நடித்தார்கள்.)
பாதிரியார் இறந்தவுடன் நடந்தேறும் களேபரம் – நடிகர் திலகமும் மேஜரும் கண்ணை மூடி ஜபம் செய்ய – மேஜர் கண் விழிப்பதற்குள் நடிகர் திலகம் கண் விழித்து – தன் குறுக்கு மூளையால் யோசித்து – மேஜரின் ரிவால்வரில் இருக்கும் தோட்டாக்களை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு – “என்ன விடு நான் போகணும்” என்று கூறி வெகு இயல்பாக அப்பாவித்தனம் கலந்த முரட்டு தனத்துடன் தப்பிக்க முயன்று, கடைசியில் மேஜரை மெழுகுவர்த்தி ஹோல்டரால் மண்டையில் அடித்து விட்டு – மன்னிச்சிக்க லாரான்சே என்று சொல்லித் தப்பித்து – மனது கேட்காமல் – மறுபடியும் பாதிரியார் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு பாதிரியாரின் அங்கியில் வந்து மறுபடியும் மாட்டிக் கொண்டு தப்பித்து – கடைசியில் கடலில் குதித்துத் தப்பிக்கும் வரை - படம் போவது புல்லட் எக்ஸ்பிரஸ் வேகம்.
இடைவேளைக்குப் பின்னர், அதே பூண்டி கிராமத்துக்கு, பெரிய கோடீஸ்வர அருணாக வந்து கலக்கும்/கலங்கும் கட்டங்கள்!
பூண்டி கிராமத்துக்குத் திரும்பவும் கோடீஸ்வர அருணாக வரும்போது, காரில் அவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் சிகை அலங்காரம், மீசை மற்றும் அந்த கூலிங் கிளாஸ் – ஆரம்பமே பெரிய அமர்க்களத்துக்கு அச்சாரம்!
அமலோற்பவ மாதா கோவிலுக்குள் நுழைந்தவுடன், நேரே அங்கிருக்கும் அடைக்கலம் பாதிரியாரின் போட்டோவைப் பார்த்து மௌனமாகக் கலங்குவது; அங்குள்ள பள்ளி நிர்வாகிகள் (திரு. எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் மற்றும் திரு வீரராகவன்) அங்குள்ள குழந்தைகளை – குறிப்பாக ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்வது – அவரை அங்குள்ள ஆசிரியைகளுக்கு அறிமுகப் படுத்தும் போது, கடைசியாக, அவருடைய பெண் மேரியைப் பார்த்து முதலில் மேரி! என்று சொல்லி, உடனேயே, அவருக்கே உரிய பாணியில் மேரி மாதா என்று சமாளிப்பது; தன்னுடைய பெண் இப்போது எங்கு வசிக்கிறார் என்று மற்ற விவரங்களைப் பற்றி அறிய முற்படும்போது, போட்டோவில் உள்ள கண்ணாடியில், சர்ச்சுக்குள், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் (மேஜர்) நுழைவதைத் தன்னுடைய கூலிங் க்ளாஸ் மூலமாக ஸ்டைலாகப் பார்த்து விட்டு, மெல்ல அங்கிருந்து நகர்வது எல்லாம் பார்ப்பவரை நயமாக அந்த சூழலுக்குள் இட்டுச் செல்லும்.
தன் பெண் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு வீகேயார் வீட்டிற்குச் சென்று, அவரது பேத்தி ஜெயகௌசல்யாவைப் பார்த்து, அவர்தான் தன் பேத்தி என்று அறிந்து மகிழ்ந்து, அவருடைய பெயர் என்ன என்று கேட்டு, தன்னுடைய மனைவியின் பெயரான ராணியையே அவருக்கும் வைத்திருக்கிறார்கள் என்றறிந்து மேலும் மகிழ்வது.
அவரது பெண் சாரதா வந்தவுடன், தான் தான் அவரது அப்பா அந்தோனி என்று அவரது இடது கையால் வலது தோளை முன் போல் தடவி சைகையால் சொல்லிப் புரிய வைக்கும் நேரம் பார்த்து, பின்னால் மேஜர் கழுகு மாதிரி வருவதை சாரதா மூலம் தெரிந்து கொண்டு, கனைத்து சமாளிப்பது; தொவில்லாமல் சுவாரஸ்யமாக நகுரும் கட்டங்கள்.
உடனேயே, மேஜருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அதே வேகத்துடன் தன் வீட்டிற்கு வந்து, வெறுப்பில் லாரன்ஸ் என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னவுடன், உடனே லாரன்ஸ் என்ற ஒரு வேலையாள் வந்து நிற்க, அவரை நீ யார் என்று வினவி, கோபத்தின் உச்சிக்குச் சென்று, செக்ரடரியைக் கூப்பிட்டு, இவருக்கு உடனே பணம் கொடுத்து செட்டில் பண்ணிடு. – நோ மோர் லாரன்ஸ் ஹியர்! என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த ஸ்டைல் – என்ன ஒரு ஆங்கில உச்சரிப்பு!
மேஜர் நடிகர் திலகத்தின் வீட்டிற்குச் சென்று அவரது கை ரேகையை எடுக்க முயல்வதும், அவரிடம் பிடி கொடுக்காமல் நடிகர் திலகம் நழுவுவதும்; அவரது இடது கண் தான் தெரியாதே (ஏனென்றால் அந்தோணியின் வலது கண் திரை போடப்பட்டிருக்கும்; ஆனால், அருணாகிய இவர் எப்படியும் இந்தப் பரீட்சையில் பெயிலாகி விடுவார் என்று மேஜர் தீர்மானிப்பார்); அதை மறைப்பதற்காகத்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று ஊகித்து, சட்டென்று நடிகர் திலகம் எதிர்பாராத வகையில் அவரது முகத்திலிருந்து கண்ணாடியைப் பிடுங்க, நடிகர் திலகம் ரொம்பக் கூலாக, வலது கண்ணை மூடிக் கொண்டே, இடது கண்ணால் அவரைப் பார்க்க, மேஜரோ, உங்கள் இடது கண் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்ல, அதற்கு, நடிகர் திலகம், இல்லையே, "you are wearing a black tie and the time now is seven ten" என்று அலாதியான ஸ்டைலில் அவரை மடக்குவது – எல்லாமே அற்புதம்.
மேஜர் அங்கிருந்து கிளம்பும் போது, வீட்டின் கதவிலக்கம் என்ன என்று கேட்க, நடிகர் திலகம் 1/99 என்று சொன்னவுடன், மேஜர், நக்கலாக, நான் 199-ன்னு நினைச்சேன் என்று சொல்லி விட்டு நகருவார். அவர் முன்பு கைதியாக இருந்தபோது, அவருடைய கைதி எண் 199, அதைத் தான் சாடையாகக் குத்திக்காட்டி அவரை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு மேஜர் அங்கிருந்து விலகியதும், கோபத்துடன், வேகமாக அவரது ரூமுக்குச் சென்று, மறுபடியும் அதே வேகத்துடன், படத்தின் முத்தாய்ப்பான பாடலான “தேவனே எண்ணிப்பாருங்கள்” பாடலைப் பாடுவது – வேக வேகமாய் நடந்து “தாய் மடியிலே மழலைகள் ஊமையோ; சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ; நோய் உடலிலா மனதிலா தேவனே; நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே” என்று முடிக்கும் போது இலேசாகக் காலை விரித்து இரண்டு கைகளையும் உயர்த்தும்போது அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடிக்கும்! இந்தப் பாடலில், மேகக் கூட்டங்கள் நகர்வது படமாக்கப் பட்டது பற்றி பலர் எழுதி விட்டனர் (ஒளிப்பதிவு மேதை பி.என். சுந்தரம் அவர்கள் கூட இதைப் பற்றி விரிவாக சிலாகித்துக் கூறியிருக்கிறார்). மிகச் சரியாக அந்த மேகக் கூட்டம் நகரும்போது எடுக்கப்பட்டதால், அந்தக் காட்சி மிக மிக இயற்கையாக இருக்கும். அந்தப் பாடலின் முடிவில், கொண்டு வா இல்லை கொண்டு போ என்று ஒவ்வொரு கையாக உயர்த்தி சொல்லி, உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் என்று இரண்டு கைகளையும் கூப்பி முடிக்கும் அழகு! ஒ!
தன்னுடைய பேத்தி ஜெய கௌசல்யா வேறொரு வாலிபனுடன் (மேஜரின் மகன்) நடந்து போவதைப் பார்த்து விட்டு, பின்னர், சாரதா அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஜெய கௌசல்யா சர்ச்சுக்குச் சென்று ஜெபம் செய்யும்போது, அங்கு அவருடைய செக்ரடரியிடம் பேசிக்கொண்டே வருபவர் (கார்டன் க்ளம்சியா இருக்கு, சரி பண்ணு…. என்ன ஒரு ஆங்கிலம்!) இவரைப் பார்த்து விட்டு, ஜெய கௌசல்யாவை நெருங்கி, அவருடன் சேர்ந்து பைபிள் படிப்பது போல், அவருக்கு புத்திமதி சொல்லி, கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அம்மா சொல்வதைக் கேள் என்று அவருக்கு தேறுதல் கூறி அனுப்பும் பாங்கு (இதைத் தான் அடிப்படையாக வைத்து, பின்னாளில், ரஜினி அவர்கள் தந்தை வேடம் ஏற்ற நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை மற்றும் படையப்பா போன்ற படங்களில், செய்திருப்பார்!).
இப்போதுதான் படத்தின் முக்கியமான காட்சி. மேஜர் அவருடைய மகனை சாரதா தங்கியிருக்கும், வீகேயார் வீட்டிற்குக் கூட்டி வந்து, அவருடைய மகள் ஜெய கௌசல்யாவிற்கு சம்பந்தம் பேச ஆரம்பித்து, அதற்கு, சாரதா மறுக்க, சரியாக அந்த நேரத்தில், நடிகர் திலகம் கைகளில் எப்போதும் அணியும் வெள்ளை நிற உரைகளை அணியாமல் அங்கு வந்து சேர, “ஆஹா! இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே இத்தனை நாள் ஏங்கிக்கிடந்தோம்” என்று மேஜர் நினைத்து, அவரைப் பார்க்க, “என்னை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. என்னையா மடக்கப் பார்க்கிறாய்” என்பது போல், ஒரு பார்வை – அதற்கேற்றாற்போல் ஒரு நடை. வந்து அமர்ந்து பேசி முடிந்தபின், எல்லோரும் வெள்ளித் தம்ப்ளரில் (பாலோ, தேநீரோ ஏதோ ஒன்று) பருகிக் கொண்டிருக்கும்போதே, மேஜர் நடிகர் திலகத்தைக் குறி வைத்து, அவருடைய கை ரேகை படிந்த வெள்ளித் தம்ப்ளரை அவருக்குத் தெரியாமல் எடுத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள; (இதை சாரதா பார்த்து அதிர்ச்சியடைந்து விடுவார்!) இதை நடிகர் திலகம் கவனிக்காதது போல்தான் முதலில் தெரியும். ஆனாலும், மேஜர் காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், கிளம்பும் போது, நடிகர் திலகம் “இன்ஸ்பெக்டர்!” என்று கூறி அவரை அழைத்து, அவர் அருகில் வந்தவுடன், சன்னமான குரலில், கௌரவமான நக்கல் தொனியில், “இன்ஸ்பெக்டர், மத்தவங்க செஞ்சா அது குற்றம். ஆனா, அதையே நீங்க செஞ்சா அது ஞாபக மறதி, இல்லையா?” என்று கேட்க, மேஜர் நடிகர் திலகத்தைப் பார்த்து “what do you mean?” என்று சீற, நடிகர் திலகம் தனக்கேயுரிய ஸ்டைலில் “I mean the silver tumbler” என்று கூறிக் கொண்டே, அவருடைய கைகளில் இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், மெல்லிய உறையைக் கழற்றி டீபாவில் வைக்கும் போது , திரை அரங்கமே கூரை பிய்ந்து கொள்ளும் அளவுக்கு அலறும். மேஜர் அசடு வழிந்து சிரிக்க, இவரோ, எப்படி, பார்த்தியா? என்ன ஒங்களால கட்ட முடியாது என்று சைகையால் சிரித்து முடிப்பார்.
ஞான ஒளி தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் பார்த்த சாரதி,
ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்குள்ளும் ஊறிக்கிடக்கும் ரசிப்பு வேட்கையினை மீண்டும் மீண்டும் கிளறி எழுப்பும் வண்ணம், தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. அதிலும் எண்ணிலடங்கா முறை நாம் பார்த்த படமாயிருந்தாலும் ஒவ்வொரு முறையிலும் புதிய பரிணாமத்தினை வெளிக்கொணரும் அவருடைய நடிப்பின் ரசிப்புத்தன்மை வேறு எந்த நடிகருக்கும் கிட்டாததாகும். குறிப்பாக தாங்கள் மேற்கூறிய ஞான ஒளி காட்சியினை படிக்கும் புதிய தலைமுறையினர், அதனை நேரில் காணும் போது மேலும் அதிகப் படியாக ஈர்க்கப் படுவர். அப்படி அனைவரும் அணுஅணுவாக ரசிக்கும் வண்ணம் இதோ நீங்கள் குறிப்பிட்ட காட்சி - I mean the Silver Tumbler.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 7
அடுத்த பாடல் தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் இடம் பெற்ற இகலோகமே இனிதாகுமே பாடல். குரல் டி.எம்.எஸ். மற்றும் பி.லீலா. பாடல் கு.மா.பாலசுப்ரமணியம். இசை டி.ஜி. லிங்கப்பா. ஆண்டு 1957.
இந்தப் பாடலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கண்டு மகிழ்ந்து அந்தக் கால நினைவுகளில் மூழ்குதற்கு வசதியாக, திரு பார்த்த சாரதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப் படுகிறது.
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Dear mr_karthik,
Thanks a lot !
டியர் பார்த்தசாரதி சார்,
பாராட்டுக்கு நன்றி ! தங்களது மலரும் நினைவுகளில் நறுமணம் கமழ்கிறது !
தாங்கள் குறிப்பிட்டது போல் டாக்டர் சிவா, கிரஹப்பிரவேசம், ரோஜாவின் ராஜா காவியங்கள் முதல் வெளியீட்டில் 'கமலா'விலும் திரையிடப்பட்டன. "அன்பே ஆருயிரே" மட்டும் முதல் வெளியீட்டில் தங்களது பகுதியில் 'ராம்' திரையரங்கில் வெளியானது. மேலும், சிங்காரச் சென்னையில் "அன்பே ஆருயிரே" முதல் வெளியீட்டில் வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, சயானி, ராம் என 4 திரையரங்குகளில் வெளியாயிற்று.
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 4th April 2011 at 10:04 PM.
pammalar
Bookmarks