-
1st June 2011, 02:28 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
saradhaa_sn
'ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
சாரதா மேடம்,
நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலாக தெரியவில்லை 'ஆயிரத்தில் ஒருவன்' படம் சமீப காலமாக மறு வெளியீடுகளின் போதுதான் நன்றாக போகிறதே தவிர, முதல் வெளியீட்டின்போது அப்படி ஒன்றும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது எல்லோர் மத்தியிலும் நிலவும் கருத்து. அதற்க்கு ஏற்றார்போல, அப்படம் முதல் வெளியீட்டில் 100 நாட்களைக் கடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
1965 ம் ஆண்டில் எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டு பிள்ளை' மட்டும்தான் வெற்றிப்படம். அதை விட்டால் அடுத்த ஆண்டில் 'அன்பே வா' படம்தான் வெற்றியடைந்தது.
-
1st June 2011 02:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks