-
1st June 2011, 05:11 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
SoftSword
enakku oru doubt... aaramba kaalatthula onnaa kootthadichu oor sutthi thirinjappo ellaam 'vaanga..ponga'naa pesiruppaanga ivanga?
இதே சிங்கப்பூரில் விடியவிடிய ரகசியமாக ஊர்சுற்றிவிட்டு அடுத்தநாள் படப்பிடிப்பு இடைவேளைகளில் ஒருவர் தோள் மீது மாறிமாறி தூங்கின காலத்தில் எல்லாம், அதுவும் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும்போது நிச்சயம் வாடாபோடா தான் இருந்திருக்கும். அப்போது இருவருமே யூத் இல்லையா! ஆனால் விவிஐபி ஆகிவிட்ட பின், பொது இடங்களில் ஒருமையில் பேச இருவருமே விரும்ப வாய்ப்பில்லை.
அதுபோக, கமலின் முன்னாள் நண்பர், கேன்சரால் இறந்த, ராஜன் என்பவர் அப்படியே ரஜினி போலவே துறுதுறுவென இருந்ததாகவும், ரஜினி சாயலில் இருந்ததாகவும் கமலே சொல்லியிருக்கிறார். அவரை கமல் தன் அண்ணனாக பாவித்தார். அந்த ராஜன் மறைவுக்குப்பின் ரஜினியை அண்ணனாகப் பார்ப்பதாகவும் சொன்னார். எனவே அவர் அந்த வகையில், இருவரும் தனிமையில் பேசும்போதும், கமல் ரஜினியை வாங்க போங்க என்றே விளிக்கக்கூடும். ரஜினியும் கமல் மேல் வைத்திருக்கும் மரியாதை காரணமாக(வயதினால் அல்ல) தனிமையில் கூட வாங்கபோங்க தான் சொல்வார் என தோன்றுகிறது.
இவர்கள் நட்பு ரகசியமாகவே இருப்பதால் அந்த நட்பின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது. அதே சமயம் ஜூவியின் கதை கட்டுரை கற்பனைத்திறன் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது
அவர்கள் சொன்னதுபோல் சந்திப்பு நடந்திருக்காவிட்டாலும் அவர்களின் நட்பு மீது சந்தேகப்பட எதுவுமில்லை.
-
1st June 2011 05:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks