-
12th August 2011, 12:17 PM
#951
Senior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
மன்னவன் வந்தானடி தோழி
பார்த்த ஞாபகம் இல்லையோ
................................................. இன்னும் எத்தனையோ அடுத்தடுத்து வருவதற்கு தயார் நிலையில் உள்ளன,
கீதோபதேசம் செய்தார் அந்த பார்த்தசாரதி !
சிவாஜியின் கீதங்களை உபதேசங்களாகத் தருகிறார் இந்த பார்த்தசாரதி !
Great Going Sir ! Keep it up !
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
உங்களுடைய அங்கீகாரமும் கனிவான பாராட்டுதல்களும் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கின்றன.
உங்களைப்போல் திரை கடலோடியும் நடிகர் திலக திரவியங்களை தேடி வந்து அனைவரின் முன் சமர்ப்பிப்பது மிகக் கடினம் என்பதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்டுரைகள் மூலமாக, நடிகர் திலகத்தை நினைவு கூர முயல்கிறேன். இது போன்ற தேடல்களில், தாங்களும், திரு. ராகவேந்தர் போன்ற பலரும் ராமர் என்றால், நான் அணிலாக சிலவற்றை செய்ய முயல்கிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
12th August 2011 12:17 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2011, 12:26 PM
#952
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய "கருடா சௌக்கியமா" படத்தின் ஆய்வுக் கட்டுரை அற்புதமாக இருந்தது. திரு. பம்மலார் அவர்களின் கூற்றை நான் வழி மொழிகிறேன். உங்களுடைய கட்டுரையைப் படித்தவுடன், உடனே, இந்தப் படத்தை, வெள்ளித்திரையில் மீண்டும் கொண்டு வர பலரும் முயல்வர். ஆளாளுக்கு casual ஆக்டிங் பற்றி எழுதிகிறார்களே, இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அவ்வளவு அருமையாக, அனாயாசமாக, இயல்பாக நடித்திருப்பார். அதிலும், முத்துக்கிருஷ்ணா! என்று அவர் தியாகராஜனைக் கூப்பிடும் விதம் அலாதியாக இருக்கும்!
என் நினைவுக்கெட்டியவரையில், 82-இல், நடிகர் திலகத்திற்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கிடைத்த பிறகு, வந்த முதல் படம் இது என்று நினைக்கிறேன். போஸ்டர்களில், சிவாஜி எம்.பி. என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
கருடா சௌக்கியமா திறனாய்வின் முதல் பகுதி முடிந்த மறு கணமே, தாங்கள் படத்தின் நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.
நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 12th August 2011 at 04:03 PM.
-
12th August 2011, 12:31 PM
#953
Senior Member
Veteran Hubber
One request / suggestion: many fans here have enormous knowledge, writing skills, analytical skills and descriptive skills about NT, the artist and his movies. But, when I look in popular online portals like wikipedia, the information about his movies are very limited. I used to frequently visit this thread to gather knowledge.
To take the reach of NT's greatness to next level or world stage, it would be of great help if people from here can contribute and maintain such pages which many outsiders frequently visit for information or knowledge update.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
12th August 2011, 01:36 PM
#954
Senior Member
Veteran Hubber
நிழலில் வைக்கப்பட்ட இயக்குனர்
நான் வாழவைப்பேன், சுமங்கலி ஆகிய படங்களின் விளம்பரங்களைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் / சந்தேகம் / ஐயம் தோன்றியது. அதாவது இயக்குனர் திரு டி.யோகானந்த் நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவை
காவேரி
வளர்பிறை
தங்கைக்காக
தாய்
கிரகப்பிரவேசம்
ஜெனரல் சக்கரவர்த்தி
ஜஸ்டிஸ் கோபிநாத்
நான் வாழ வைப்பேன்
எமனுக்கு எமன்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
சுமங்கலி
சரித்திர நாயகன்.... உள்பட பல படங்கள்
இவற்றில் ஜெனரல் சக்ரவர்த்தி, நான் வாழவைப்பேன், வா கண்ணா வா உள்பட பல படங்கள் 100 நாட்களைக்க்டந்து ஓடியுள்ளன.
இதுபோக ஆரம்ப காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.
இருந்தாலும் இவர் ஒரு கே.எஸ்.ஜி., ஒரு ஸ்ரீதர், ஒரு ஏ.பி.என். ஒரு கே.விஜயன், ஒரு ஏ.சி.டி., ஒரு சி.வி.ஆர். போன்று பிரபலமாகப் பேசப்படவில்லையே என்ன காரணம்?.
இவரது பெயரைக்குறிப்பிட்டு எந்த ஒரு செய்தியையும் எந்தப்பத்திரிகையும் எழுதியதில்லை. எந்த ஒரு விழாவிலும், எந்த ஒரு விருதும் கொடுத்து கௌரவிக்கப்படவில்லையே அது ஏன்". கடைசி வரையில் நிழலுக்குள்ளேயே வைக்கப்பட்டு விட்டாரே என்ன காரணம்?.
அனுபவசாலிகளான ராகவேந்தர் சார், முரளி சார் போன்றோர் விளக்க முடியுமா?.
-
12th August 2011, 02:00 PM
#955
Senior Member
Veteran Hubber
வாசுதேவன் சார்,
'கருடா சௌக்கியமா' படத்தின் திறனாய்வு முதற்பகுதி அருமை. போதிய இடைவெளி அளிக்கப்பட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம். என்ன செய்வது நம்ம ஆட்களுக்குத்தான் பொறுக்காதே.
முந்தைய ஆண்டு தீபாவளிக்கு வந்த 'கீழ்வானம் சிவக்கும்' ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆண்டில் (1982)-ல் மட்டும் ஒரே ஆண்டில் 12 படங்கள்.....!!!!. (உலக அளவில்கூட எந்த கதாநாயகனும் செய்திராத சாதனை). அவை
இட்லர் உமாநாத்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
கருடா சௌக்கியமா
சங்கிலி
வசந்தத்தில் ஓர் நாள்
தீர்ப்பு
தியாகி
துணை
பரீட்சைக்கு நேரமாச்சு
ஊரும் உறவும்
நெஞ்சங்கள்
ஜனவரி 26-ல் துவங்கி டிசம்பர் 10 வரையில் பதினொன்னறை மாதங்களில் 12 படங்கள். இது அல்லாமல் ஒரு தெலுங்குப்படம் வேறு)
உருப்படவா?.
-
12th August 2011, 02:06 PM
#956
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக,
தங்களுடைய நியாயமான கேள்விக்கு விடை .. அந்த மீடியாக்கள் தான் தர வேண்டும்.
ஆனால் அவர் நிழலுக்குள் இருந்து விட்டார் என்று கூற முடியாது. மக்களும் சில குறிப்பிட்ட இயக்குன்ர்கள், இதர கலைஞர்களைத் தவிர மற்றவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டாமல் இருப்பதும் ஒரு காரணம்.
தாங்கள் மேலே கூறியுள்ள பட்டியலைப் பார்த்தாலே தெரியும். சரித்திர நாயகன் திரைப்படத்தைத் தவிர மற்றவை அனைத்தும் சராசரி அல்லது அதற்கு மேல் வெற்றியைப் பெற்றுள்ளன. இதுவே அவரது திறமைக்கு சான்றாகும். சரித்திர நாயகன் மற்றும் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படங்களைப் பொருத்த வரையில் ஓவர்-ஆக்டிங் என்கிற ஒரு வார்த்தை இருக்குமானால் அதற்கு நிஜமான உதாரணமாக அந்தந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களைக் கூறலாம். இன்று வரை தன்னிகரில்லாத புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் சிறந்த திறமையினை சரியாக பயன் படுத்தாமல் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படத்தில் அவரது நடிப்பை கேலிக் கூத்தாக்கியதும், அதே ஊர்வசி பட்டத்தை மூன்று முறை வென்று இந்தியத் திரையுலகில் முடிசூடா ராணியாக நடிகையருள் விளங்கிய சாரதா அவர்களின் நடிப்பை கேலிக் கூத்தாக்கியதுமே இந்த இரு படங்களின் தோல்விக்கு முக்கியமான காரணங்களாகும்.
மற்ற படி யோகாநந்த் இயக்கிய படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் இன்று பெரும்பாலும் கூறப்படுகிற Method Acting, Subdued Acting, போன்ற வகை நடிப்பையெல்லாம் அவர் படத்தில் காணலாம். மிகச் சிறந்த உதாரணம், வளர் பிறை. வாய் பேச முடியாமல் சரோஜா தேவியுடன் அவர் உணர்வு பூர்வமாக உரையாடும் காட்சிகள், நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் பாடல் காட்சியில் அவருடைய அப்பாவித் தனமான தோற்றம், தன் ஊனம் தனக்கு பல சமயங்களில் கஷ்டங்களைத் தருகிறதே என்கிற மனப்பான்மையும் அதற்கு பாடலில் கிடைக்கும் ஆறுதலைக் கொண்டு உளமாறுவதும், மிகச் சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். அதே போல் அதே படத்தில் மௌனம் மௌனம் மௌனத்தினாலே வணங்குகிறேனய்யா, பாடலில் சரோஜா தேவியின் நடிப்பு மிகச் சிறந்திருக்கும். நடிகர் திலகத்தின் முதல் 10 இடங்களில் இடம் பெற வேண்டிய படம் வளர் பிறை.
தங்கைக்காக - ஒவ்வொரு காட்சியிலும் மிகச் சிறப்பான அடக்கமான அதே சமயம் ஆழமாகவும் தன் நடிப்பினைத் தந்திருப்பார் நடிகர் திலகம். குறிப்பாக தங்கையின் கணவரிடம் அடி வாங்கிக் கொண்டு பதிலுக்கு தன் கோபத்தைக் காட்டாமல் அடக்கிக் கொண்டு நடிக்கும் காட்சியில் பிய்த்து உதறியிருப்பார்.
காவேரி திரைப்படம் நடிகர் திலகத்திற்குள் இருக்கும் சிறந்த நாட்டியக் கலைஞரை உலகிற்கு எடுத்துக் கூறிய படம். காலைத் தூக்கி நின்றாடும் பாடலில் அமர்ந்த வாறே தன் கழுத்தைப் பலவாறாக அசைத்தும் முக பாவங்களைக் காட்டியும் பின் எழுந்து நின்று பரத நாட்டியம் ஆடும் போதும் மிகச் சிறந்த கலைஞர் என்று தன்னை நிலைநிறுத்திக் கொண்ட படம்.
கிரகப் பிரவேசம் படம் - கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஊருக்கு ஒரு பிள்ளை திரைப்படத்திலும் சரி, சுமங்கலி படத்திலும் சரி, இதே போல் அவர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த ஒவ்வொரு படமும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள். எமனுக்கு எமன் படமும் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.
வா கண்ணா வா தன் வயதான காலத்தில் பேரக் குழந்தையை இழந்து வாடும் பாடும் பாடல் காட்சியில் சிம்ப்ளி சூப்பர்ப்.. ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது என்கிற வரிகள் அந்தப் பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்தன.
ஜெனரல் சக்கரவர்த்தி - ஆஹா... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. டான்சேனியா மாநாட்டில் ராணுவ மிடுக்கோடு அதிகாரியாக பங்கேற்கும் காட்சியில் இவரல்லவோ ராணுவ அதிகாரி என்று மற்றவர்களை நினைக்கத் தூண்டும் கம்பீரம்.... மகளுடைய நிலைமையை மனைவி மறைத்து விட்டதைக் கண்டு பிடித்து மிகவும் சாமர்த்தியமாக அவர்களிடம் உண்மையை வரவழைப்பது... இந்தக் காட்சிகளெல்லாம் சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள்...
தாய்.... அப்பாவி கிராமத்து இளைஞனாகத் தோன்றி நாட்டுக்கு நல்லது செய்ய எண்ணும் இளைஞனைப் பற்றிய கதை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இயக்குநரை நடிகர் திலகம் எந்த அளவிற்கு மதித்திருந்தால் இப்படிப் பட்ட உன்னத படைப்புகள் நமக்கு கிடைத்திருக்கும் என்பது இதிலேயே தெரியும்.
யோகாநந்த் - நடிகர் திலகம் நட்பு மிகவும் ஆழமானது.
சமீபத்தில் வசந்த் தொலைக்காட்சியில் மகேந்திராவின் பார்வையில் நிகழ்ச்சியில் வியட்நாம் வீடு சுந்தரம் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல்
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இயக்குநருக்கு தகவல் வருகிறது. அவருடைய முகம் இருள்கிறது. சாலை விபத்தில் அவருடைய மகன் உயிர் துறக்கிறார். உடனே நடிகர் திலகம் அவரைப் போகச் சொல்கிறார். அவர் பாசத்தோடும் துக்கத்தோடும் பாய்ந்தோடும் காட்சி அனைவர் உள்ளத்தையும் பிழிகிறது. அந்த சம்பவம் நடிகர் திலகத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது.
பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படத்தின் கிளைமாக்ஸ், கடற்கரை சாலையில் ஓடும் பேருந்தில் ஆனந்த் ஏறுகிறான். ஆனால் தவறி விழுந்து விடுகிறான். உடனே பதைபதைத்து ஓடி வரும் பெற்றோர் அவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லக் கூட முடியாத அளவிற்கு பலத்த அடிபட்டு உயிர் துறக்கிறான்.
இந்தக் காட்சியில் நிஜ வாழ்க்கையில் யோகானந்த் அவர்கள் பட்ட துன்பத்தை, தன் தந்தை பாத்திரத்தில் கொண்டு வந்து உயிர் துறக்கும் காட்சிக்கு உயிரூட்டினார் நடிகர் திலகம்.
யோகாநந்த் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2011, 03:59 PM
#957
Senior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
சாரதி,
மன்னவன் வந்தானடி மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இரண்டு extreme ஆனால் extraordinary பாடல்களை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசிய விதம் பிரமாதம். பாடல் வரிகள், இசை, அரங்க அமைப்பு, பாடியவர், இயக்கியவர் மற்றும் நடித்தவர்கள் என்று பிரித்து பிரித்து நீங்கள் அலசியது சூப்பர்!
அன்புடன்
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
பாராட்டுக்கு நன்றி. தங்களது பாராட்டு என்னை மேலும் ஊக்குவிக்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
12th August 2011, 04:25 PM
#958
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இயக்குனர் திரு டி.யோகானந்த பற்றிய எனது ஐயங்களுக்கு விளக்கமாக விடையளித்ததற்கு மிக்க நன்றி. டி.யோகானந்த், சிறந்த இயக்குனர்கள் வரிசையில் வைத்துப்போற்றப்பட வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.
நானும் 'வளர்பிறை' படத்தைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல மிகவும் நல்ல படம். 'சலசலக்குத்து காத்து... சிலுசிலுக்குது கீத்து', 'பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு' போன்ற பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். அப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்க முயன்று கிடைக்காமல் போய், இறுதியில் 70களில், பொருட்காட்சியில் திரையிட்டபோதுதான் பார்த்தேன்.
அதேபோல அவரது இயக்கத்தில் 'தாய்' படமும் மிகவும் பிடித்த படம்.
அன்புள்ள சத்யா,
நடிகர்திலகத்தின் புகழ் இன்னும் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் செயல்வடிவம் பெறுமென நம்புவோம்.
-
12th August 2011, 04:28 PM
#959
Senior Member
Veteran Hubber
Thanks Karthik Sir! ulagin sirandha kalaignanin pugazh ulagam muzhuvadhum senRadaya vENdum enbadhu en aasai!
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
12th August 2011, 05:25 PM
#960
Senior Member
Diamond Hubber

Originally Posted by
kumareshanprabhu
Dear Joe Sir
any chance of Video clippings of the progarmme
I will try my best.Thanks.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Bookmarks