-
20th August 2011, 12:17 PM
#1131
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
எனக்குப் புரிந்து விட்டது.......
சார், உங்களுடைய மகாகவி காளிதாஸ் பற்றிய சுருக்கமான சிறப்பாய்வு அற்புதம். சபாஷ்!.... நானும் என் பங்கிற்கு கொஞ்சம் டைப் செய்ய ஆரம்பித்தவுடன் பவர் கட்...
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
20th August 2011 12:17 PM
# ADS
Circuit advertisement
-
20th August 2011, 12:21 PM
#1132
Senior Member
Devoted Hubber
-
20th August 2011, 01:15 PM
#1133
Senior Member
Diamond Hubber
அன்பு முரளி சார்,
'மகாகவி காளிதாஸ்' பற்றிய தங்களது குறை திரு.ராகவேந்திரன் சார் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் திருப்திக்காக இதோ என்னுடைய பங்கு....
'கல்லாய் வந்தவன் கடவுளம்மா....
அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா...
புல்லாய் முளைச்சவ சக்தியம்மா....
அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா..ஆ..ஆ..ஆ...'
கையில் அந்த ஊதுகுழலென்ன..
தலையில் உச்சிக் குடுமி என்ன.....
இரு கைகளிலும் வளையங்கள் என்ன...
கருப்பு நிற கட்-பனியன் என்ன...
கையில் பிடித்துள்ள கொம்பு என்ன...
அதில் அழகாய்த் தொங்கும் சிறு மூட்டை தான் என்ன....
ஆடுகள் மேய்க்கும் அழகென்ன ....
ஊதுகுழல் ஊதும் உதட்டசைவுதான் என்ன...
நடந்து வரும் நடையழகுதான் என்ன....
நடிப்புச் சுரங்கத்தை வாரிக் கொடுத்த பாரியே!
ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய்?...
இந்த நன்றி கெட்ட உலகம் வேண்டாமென்றா?...
(குறிப்பு : இந்தப் பாடலின் 1.09 நிமிடத்திலிருந்து 1.15 நிமிடம் வரை மிக உன்னிப்பாக அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.)
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 20th August 2011 at 01:24 PM.
-
20th August 2011, 01:20 PM
#1134
Senior Member
Devoted Hubber
Last edited by abkhlabhi; 20th August 2011 at 01:45 PM.
-
20th August 2011, 02:06 PM
#1135
Senior Member
Veteran Hubber
வாசுதேவன் சார்,
'மகாகவி காளிதாஸ்' பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
மார்கழி மாதம் அதிகாலையில் எங்கள் தெரு கோயிலில், வருடாவருடம் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒலிபரப்புவார்கள். மற்ற புராணப்பட பாடல்கள் இருக்கிறதோ இல்லையோ, மகாகவி காளிதாஸ் பாடல்கள் நிச்சயம் இருக்கும். அதனால் எங்கள் தெரு மக்களுக்கு இப்படப் பாடல்கள் மனப்பாடம்...
கல்லாய் வந்தவன்...
சென்று வா மகனே...
மலரும் வான் நிலவும்... (இரண்டு வெர்ஷன்)
காலத்தில் அழியாத காவியம் பல தந்த...
யார் தருவார் இந்த அரியாசனம்...
இப்படி, இந்தப்படத்தின் பாடல்களை எப்போது எங்கே கேட்டாலும் மார்கழி மாத அதிகாலைப்பொழுது என் நினைவுக்கு வரும்.
நாளை நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய 'என் மகன்' உதய தினம்.
மதுரை நியூசினிமாவில் 100-வது நாள் விளம்பரம் காண இப்போதே ஆவலாக இருக்கிறேன்.
-
20th August 2011, 03:23 PM
#1136
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
நாளை நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய 'என் மகன்' உதய தினம்.
மதுரை நியூசினிமாவில் 100-வது நாள் விளம்பரம் காண இப்போதே ஆவலாக இருக்கிறேன்.
வருகிறார்...
-
20th August 2011, 04:22 PM
#1137
Senior Member
Veteran Hubber
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் மகன்
[21.8.1974 - 21.8.2011] : 38வது ஜெயந்தி
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1974

100வது நாள் [கார்த்திகை தீபத்திருநாள்] : தினத்தந்தி : 28.11.1974

அன்புடன்,
பம்மலார்.
-
20th August 2011, 04:32 PM
#1138
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,
தங்களது உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
எதிர்ப்பை கண்ணியமான முறையில் பதிவு செய்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
20th August 2011, 04:33 PM
#1139
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,
"மகாகவி காளிதாஸ்" வீடியோக்களுக்கும், கண்ணோட்டங்களுக்கும் கனிவான நன்றிகள் !
Dear kumareshanprabhu Sir, Thank you very much !
அன்புடன்,
பம்மலார்.
-
20th August 2011, 07:30 PM
#1140
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார்,
'எள் என்னும் முன்னே எண்ணெயாக வந்து நிற்பவர்' என்பதனை வழக்கம்போல மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். "என் மகன்" ஆவணப்பதிவுகளுக்கு நன்றிகள் ஆயிரம். (வேறொரு திரியொன்றில் சிலரிடம் 1969-ல் வந்த ஒரு திரைப்படத்தின் 100-வது நாள் விளம்பரம் கேட்டிருந்தேன். மூன்று மாதங்களாகியும் சத்தத்தையே காணோம். மூன்று வருடங்களானாலும் வராது என்பது தெரிந்த விஷயம்தான்).
நண்பர் முரளி சீனிவாஸ் உள்ளிட்ட மதுரை ரசிகப்பெருமக்களுக்கு நன்றிகள் பல. (சென்னை தேவி பாரடைஸில் 80 நாட்களைக்கடந்த நிலையில், முக்தாவின் 'அன்பைத்தேடி' படத்துக்காக தூக்கப்பட்டது. முக்தாவுக்கு இதே வேலை. திரிசூலம் சென்னையில் மிகச்சுலபமாக 200 நாட்களைத்தாண்டுவதையும், தனது இமயம் படம் மூலமாகக் கெடுத்தார்).
Bookmarks