-
8th October 2011, 07:47 PM
#11
Senior Member
Seasoned Hubber
பழுதில் தொழில்புரிவான்
நெடுஞ்செவி தானுடையோன் --கேட்க
நேரிதல் லாதது நாணுடையோன்.
கொடுமொழி காழென்பதே -- அன்றிக்
கூறப் பிறமொழி யாதுடையான்?
பழுதில் தொழில்புரிவான் ---முதுகு
பளுவில் அழுந்தினும் நோவுரையான்
கழுதை எனப்பழிப்பார் -- தொடர்பு
காணாப் பொழுதிலும் பேரிழுப்பார்.
காலக் கணக்கெடுப்பால் -- ஏதும்
கட்டுகள் இல்லா கடுமுழைப்பால்,
நீலக் கடலலைபோல் -- படும்
நெட்டிடர் சொல்லாlல் தொடுத்திழைப்போம்.
குட்டிச் சுவரருகில் -- அதைக்
கொண்டு நிறுத்தும் அவர்புகல்வில்,
எட்டி உதைப்பதுபோல் -- பல
ஏளனச் சொற்கள் விதைப்பதுண்டே!
அரியது சேவைஎன்றால் -- அதற்
கழகிலை என்பதால் நோவொன்றுசொல்,
உரியது ஒருவிலங்காய் -- அஃது
ஒதுக்கம் அடைதல் வருமொழுங்கோ?
அருஞ்சொற்கள்.
நேரிதல்லாதது - நேரிது அல்லாதது : நேர்மை அல்லாதது.
புகல்வு - புகலுதல். புகல்வில் = சொல்லுதலில். பேச்சில், நோவொன்றுசொல் = துன்பம் வந்து ஒன்றுகின்ற, அல்லது தொடர்புபடுகின்ற சொல். (நோ(வு) ஒன்றும் சொல்.)
Last edited by bis_mala; 9th October 2011 at 06:35 PM.
Reason: add commentary
B.I. Sivamaalaa (Ms)
-
8th October 2011 07:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks