Results 1 to 10 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பழுதில் தொழில்புரிவான்

    நெடுஞ்செவி தானுடையோன் --கேட்க
    நேரிதல் லாதது நாணுடையோன்.
    கொடுமொழி காழென்பதே -- அன்றிக்
    கூறப் பிறமொழி யாதுடையான்?

    பழுதில் தொழில்புரிவான் ---முதுகு
    பளுவில் அழுந்தினும் நோவுரையான்
    கழுதை எனப்பழிப்பார் -- தொடர்பு
    காணாப் பொழுதிலும் பேரிழுப்பார்.

    காலக் கணக்கெடுப்பால் -- ஏதும்
    கட்டுகள் இல்லா கடுமுழைப்பால்,
    நீலக் கடலலைபோல் -- படும்
    நெட்டிடர் சொல்லாlல் தொடுத்திழைப்போம்.

    குட்டிச் சுவரருகில் -- அதைக்
    கொண்டு நிறுத்தும் அவர்புகல்வில்,
    எட்டி உதைப்பதுபோல் -- பல
    ஏளனச் சொற்கள் விதைப்பதுண்டே!


    அரியது சேவைஎன்றால் -- அதற்
    கழகிலை என்பதால் நோவொன்றுசொல்,
    உரியது ஒருவிலங்காய் -- அஃது
    ஒதுக்கம் அடைதல் வருமொழுங்கோ?


    அருஞ்சொற்கள்.

    நேரிதல்லாதது - நேரிது அல்லாதது : நேர்மை அல்லாதது.
    புகல்வு - புகலுதல். புகல்வில் = சொல்லுதலில். பேச்சில், நோவொன்றுசொல் = துன்பம் வந்து ஒன்றுகின்ற, அல்லது தொடர்புபடுகின்ற சொல். (நோ(வு) ஒன்றும் சொல்.)
    Last edited by bis_mala; 9th October 2011 at 06:35 PM. Reason: add commentary
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •