தீபாவளி வெளியீடுகள் ஒரே நாளில் (பல வருடங்களில்) பல படங்கள் ரிலீஸாயிருந்த போதிலும், கொஞ்சம் கூட சளைக்காமல் அசத்தோ அசத்து என்று அசத்துகிறீர்கள். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை தெரியப்படுத்த வேண்டியவனாக இருக்கிறேன்.
நமது நடிகர்திலகம் திரியைப்பற்றி எனக்குத்தெரிந்த பல நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்கள் எல்லோரும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இத்திரியைப் பார்த்து ரசித்து வருகின்றனர். அதிலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீங்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் அளித்து வரும் ஆவணப்பதிவுகள் அவர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. அவர்கள் நமது திரியில் தங்களுக்கு அவர்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரியப்படுத்த விரும்புகின்றனர். அவர்களில் பலர் இதில் பதிவிடுவதற்காக ரிஜிஸ்ட்டர் செய்து விட்டு அனுமத்திக்க்காகக் காத்திருப்பவர்கள். இருந்த போதிலும் தற்போது Yahoo மூலமாகவும் Hotmail மூலமாகவும் எனக்குத் தனிப்பட்ட முறையில் மெயில் எழுதி தங்களின் நன்றியை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றனர். அவர்களின் மெயிலில் இருந்து சாம்பிளுக்கு ஒன்று இங்கே....
//
Dear Karthikeyan,
As per your guidance I am watching Nadigar Thilagam Shivaji sir’s forum for recent years. Especially for the past one year the site is going in a very special way, with the tremendous efforts by Mr. Pammal Swaminathan, alias Pammalar.
His painful efforts of Record Collection and presenting in the forum is somewhat great, for which just THANKS is a very ordinary word. Producing evidences for the non-parallel records of Shivaji sir is not an ordinary thing.
Being thiru Raghavendran , another pillar of this forum, is close to Shivaji sir’s family and to Mr. Y.G.Mahendran, kindly insist them to arrange for a special award for Mr. Pammalar during the next celebration of Shivaji sir’s birthday.
Kindly publish my request in the open forum.
Thanks & Regards
K.Rengaraj, Salem.
//
நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் மெயிலை இங்கே பதித்து விட்டேன். அவர் நமது திரியை தொடர்ந்து படித்து வருபவராதலால், உங்கள் பதிலை திரியிலேயே பதிக்கலாம். அவர் படித்து மகிழ்ச்சியடைவார்.
ராகவேந்தர் சார், நண்பர் ரெங்கராஜ் உடைய வேண்டுகோளை நீங்களும் கன்ஸிடர் பண்ணுங்க.
நம் அன்பு பம்மலாருடைய அளவிடற்கரிய உழைப்பிற்கு சரியான அங்கீகாரம் அளித்து பெருமைப் படுத்தி விட்டீர்கள். தங்களுடைய நண்பர்கள் நமது திரியைப் படித்தும், பார்த்தும் ஆனந்தம் அடைவதற்கு உறுதுணையாய் நின்ற தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இரவு பகல் என்றும் பாராமல், பகல் முழுதும் அலுவலகத்தில் பணி புரிந்துவிட்டு, மீதம் இருக்கும் நேரங்களில் நமது திரிக்காக நம் பம்மலார் அவர்கள் தன்னலம் கருதாது உழைக்கும் உண்மையான உழைப்பும், அவர் நடிகர் திலகத்தின் மேல் வைத்துள்ள அபரிமிதமான அன்பும், பக்தியும் நிச்சயம் போற்றுதலுக்குரியவை. ஒவ்வொரு ஆவணங்களையும் தேடிப்பிடிக்க அவர் பட்டிருக்கும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணித்தரமான உண்மையை நிலைநிறுத்தக் கூடிய ஆவணங்கள். அப்பேர்ப்பட்ட அருஞ்சேவை புரியும் பம்மலார் அவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும் என்ற உங்கள் நண்பர்களது எண்ணமே நம் அனைவரின் எண்ணமாகும். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய இந்த அற்புத சேவைக்கு நான் பெருமையுடன் தலை வணங்குகிறேன்.
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவின் மூலம் நடிகர் திலகத்தின் புகழைப் பரப்புவதில் இங்கிருக்கும் யாருக்கும் தாங்கள் சற்றும் சளைத்தவரல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. தங்கள் மூலம் பலர் இங்கு உறுப்பினராகக் காத்திருப்பதின் மூலம் எந்த அளவிற்குத் தாங்கள் இத்திரியில் உளமார ஈடுபட்டுள்ளீர்கள் என்பதும் புலனாகிறது. ஒவ்வொருவரும் இங்கு தனித்தனியே பல்வேறு வகையில் விருதுக்கும் புகழுக்கும் தகுதி பெற்றவராவீர்கள். தாங்கள் கூறியது போல் பம்மலார் நிச்சயம் சிறப்பான முறையில் கௌரவிக்கப் பட வேண்டியவரே. அதில் எள்ளளவிற்கும் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. அது நடக்க வேண்டிய நேரத்தில், நடக்க வேண்டிய முறையில் நடிகர் திலகத்தின் அருளால் ஈடேறும் என்று நம்புவோம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
03.11.2011 அன்று 48வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியம் முரடன் முத்து
தாமரைப்பூ குளத்திலே
குரல்கள் - டி.எம்.எஸ், சுசீலா
பாடல் - கண்ணதாசன்
இசை - டி.ஜி.லிங்கப்பா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை - கருத்தாழமிக்க பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
03.11.2011 அன்று 48வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் 100 வது வெற்றிக் காவியம்
நவராத்திரி
தெருக்கூத்து வடிவை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு அன்றே அதை எடுத்துரைத்த காட்சி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
தங்களின் பதிவுக்கு முதற்கண் எனது மனப்பூர்வமான நன்றிகள் !
தாங்கள், நமது நடிகர் திலகம் திரியை, தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி பார்க்கச் சொல்லும் செயல், உண்மையிலேயே பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது. இதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள் !
தங்களது நண்பர்கள் இந்த எளியேனுக்கு வழங்கும் பாராட்டுதல்களுக்கு, அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் ! அவர்கள் அனைவரும் நமது திரிக்கு பதிவாளர்களாகும் பட்சத்தில் நமது திரி அவர்களது பதிவுகளால் மென்மேலும் களைகட்டி ஜொலிஜொலிக்கப்போவது உறுதி. அந்த நன்னாளை விரைவில் எதிர்பார்ப்போம்.
நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் எத்தனையோ அன்புளளங்கள் எவ்வளவோ விதமான சேவைகளை தொண்டுள்ளத்தோடு இப்புவியெங்கும் செய்து வருகின்றனர். அதில் இந்த எளியேனும் ஒரு சிறுபணியை தற்பொழுது இணையத்தில் நமது திரியின் வாயிலாக செய்து வருவது என் வாழ்வின் பாக்கியம். தாங்கள் மற்றும் நமது சகோதரர் திரு.ரெங்கராஜ் அவர்கள் அளித்த உச்சமான பாராட்டுதல்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன். தாங்கள் என்மேல் வைத்துள்ள அபரிமிதமான அன்பிற்கு தலைவணங்குகிறன். நன்றி !
டியர் சேலம் கே.ரெங்கராஜ் சார்,
தாங்கள் தங்களின் இதயத்தின் அடித்தளத்திலிருந்தும் உயர்ந்த உள்ளத்திலிருந்தும் வழங்கியிருக்கும் உச்சமான பாராட்டு மடலுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் ! தங்களது எல்லையில்லா அன்பிற்கு இந்த எளியேனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள் !
தாங்கள் நமது திரியில் பதிவாளராக வரும் நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன். தங்களுக்கு மீண்டும் எனது இதயங்கனிந்த நன்றிகள் !
ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ் பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Bookmarks