-
15th November 2011, 12:23 AM
#1041
Senior Member
Seasoned Hubber
Dear Prabhu,
It's indeed Annaiyin Aanai. NT has narrated this scene to be inspired from James Cagney, whom he regards high. In fact I posted a message here but unfortunately it was not there due to hacking problems. You can watch NT's interview in the DVD recently released.

Dear Moderators,
Thank you for restoring the hub intact in a very short time. In fact one or two postings of mine were also removed in this period.
With regards
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th November 2011 12:23 AM
# ADS
Circuit advertisement
-
15th November 2011, 12:25 AM
#1042
Junior Member
Senior Hubber

Originally Posted by
KCSHEKAR
சாரதா மேடம், தங்களின் சிவந்த மண் நினைவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் தற்போது படித்தபோதும் சுவையாகவே இருக்கிறது. நன்றி.
SARADA madam's review 100 percent correct and true. sridhar wanted to give this movie TECHINALLY A CLASS APART From OTHER
movies and he HAS ACHIEVED IT also. somehow it has not reached comman public to the extent it was expected to. my feelings.
regarding fixing mekala theatre in purasawalkam, the theatre management wanted to screen this movie very much in their theatre and requested chitralaya specically and true it was first NT movie accepted by the theares and hence the banner NAMNADU was not accepted -screened in saravan theatres. my vague rememberence. mr raghavendran pl clrify.
I also feel i know madam's uncle wo used to visit shanthi in the evevenigs.
-
15th November 2011, 07:24 AM
#1043
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் உயரிய பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
15th November 2011, 07:30 AM
#1044
Senior Member
Diamond Hubber
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
'சிவந்த மண்' திரைக்காவியத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதோ அதேபோல் தங்களுடைய சிவந்த மண் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. மறுபதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
15th November 2011, 08:06 AM
#1045
Senior Member
Diamond Hubber
-
15th November 2011, 09:11 AM
#1046
Senior Member
Diamond Hubber
-
15th November 2011, 10:33 AM
#1047
Senior Member
Diamond Hubber
'பரீட்சைக்கு நேரமாச்சு' (14-11-1982)30-ஆவது ஆண்டுத் தொடக்கம்.

மிக அரிய நிழற்படம்.(ஷூட்டிங் ஸ்பாட்)'வியட்நாம் வீடு' சுந்தரம், 'முக்தா' ஸ்ரீனிவாசன் மற்றும் 'புலியூர்' சரோஜா ஆகியோருடன் நடிகர் திலகம்

அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 15th November 2011 at 05:05 PM.
-
15th November 2011, 10:47 AM
#1048
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன்,
மன நிறைந்த பாராட்டுக்கு நன்றி.
சிந்தையைக்கவர்ந்த 'சிவந்த மண்', அதிகம் பேசப்படாத 'அன்பைத்தேடி', நடிகர்திலகத்தின் கடைசிக்கால காவியங்களில் ஒன்றான 'பாரம்பரியம்', உள்ளம் கவர்ந்த 'கள்வனின் காதலி', உணர்ச்சிமிக்க 'லட்சுமி கல்யாணம்' படக்காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளன.
அனைவரையும் கவரும் 'அன்னை இல்லம்' படக்காட்சிகள் மிகவும் அருமை. குறிப்பாக மூன்றாவது படமாக இடம்பெற்றிருக்கும் "என்னுடைய" தேவிகாவின் குளோசப் ஷாட் சூப்பரோ சூப்பர். என்ன ஒரு போஸ். இப்படத்தில் இடம்பெற்ற 'மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்' பாடல் என்னுடைய ஆல்டைம் பேவரைட். நாள்முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. தேவிகாவுக்கு நாட்டியம் தெரியாது. டான்ஸ் மாஸ்ட்டர் அவ்வப்போது சொல்லிக்கொடுக்கும் சின்ன சின்ன அசைவுகளை வைத்து ஒப்பேற்றுபவர்தான். ஆனால் இப்பாடலில், 'சேவல் குரலே கூவாதே' என்ற வரிகளின்போது ஒரு போஸ் கொடுப்பார் பாருங்க, அற்புதம். (நம்முடைய முரளியண்ணாவுக்கும் பிடித்த போஸ் அது).
எத்தனை ஆயிரம் பேர் பத்மினி, பத்மினி என்று சொன்னாலும் என்னுடைய கணிப்பில், 'நம்முடைய' நடிகர்திலகத்துக்கு பொருத்தமான ஜோடி 'என்னுடைய' தேவிகா மட்டுமே. கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி, அனாடமி, சைக்காலஜி என எத்தனை உண்டோ அத்தனையும் பொருந்திய ஒரே ஜோடி.
-
15th November 2011, 10:52 AM
#1049
Senior Member
Veteran Hubber
டியர் பம்மலார்,
காலத்தால் அழியாத காவியமான 'கப்பலோட்டிய தமிழன்' படத்தின் விமர்சனங்களின் தொகுப்பும், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்திலகத்தின் அனுபவங்களின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷங்கள். படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து அளித்த நினைவலைகளிலும் கூட அன்றைய சம்பவங்களை துல்லியமாக நினைவு கூர்ந்துள்ளார்.
ஒரு விமர்சனத்தில் கூறியுள்ளபடி, ஜெமினி - சாவித்திரி காதல் காட்சிகள் தேவைக்கதிகமாகவே திணிக்கப்பட்டுள்ளதால், முக்கிய பாத்திரங்களான வாஞ்சிநாதன் போன்ற பாத்திரங்கள் சுருக்கப்பட்டு விட்டன. (கட்டபொம்மனிலும் ஜெமினி - பத்மினி காட்சிகள் அளவுக்கதிகமாகவே இருக்கும்).
அரிய ஆவணங்களைத்தேடித் தந்தமைக்கு மிக்க நன்றி.
Last edited by saradhaa_sn; 15th November 2011 at 11:05 AM.
-
15th November 2011, 11:49 AM
#1050
Senior Member
Diamond Hubber
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
உங்களின் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கு நன்றிகள் பல.
"என்னுடைய" தேவிகா என்று தாங்கள் உரிமையோடு குறிப்பிட்டிருப்பதிலிருந்து தாங்கள் எந்த அளவிற்கு தேவிகா அவர்களின் ரசிகை என்று பரிபூரணமாக உணர முடிகிறது. தாங்கள் குறிப்பிட்டிருந்த "அந்த சேவல் குரலே கூவாதே" வரியில் தேவிகா அவர்களின் அற்புத போஸ் தங்களுக்காக இதோ. அதே போல தங்களது ஆல்டைம் பேவரைட் பாடலான "மடிமீது தலை வைத்து" பாடலை விரைவில் தர முயற்சிக்கிறேன். நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks