-
1st December 2011, 12:18 AM
#1311
Junior Member
Senior Hubber
NADIGAR THILAGAM'S CARRIER AND THE WAY HE HAS ATTRACTED BIG MASS WITHOUT ANY OTHER INFLUENCE IS TOTALL DFFERENT FROM OTHERS. NT FULLY GAINED FOLLOWERS INFLENCED B THE GREAT ACTING TALENT WHICH HAS LATER CONVERTED AS FOLLOWERS WHO ARE PREPRED TO SACRIFICE ANY THNG ABD EVERTHING.
TRUE THAT MGR AND DMK GROWN LIKE MADE FOR EACH OTHER, WHICH WAS PROVED LATER. IAM NOT COMING TO POLITCS.
ONE MORE THING BROTHER SHUNMUGAM WAS MORE THAN RMV IN DONG BUSINESS AND SAFEGARDING THE INTERST OF SIVAJI AND HIS FAML WCHICH ALL OF US KNOW VERWELL. HE HAS SUCCEEDDED TILL HIS LFETIME.
AFTER his demise no proper person to gude NT IN RIGHTWA, MY OBSERVATIONS.
NOT ALL THE MOVIES COMMERCIALL SUCCESS FOR BOTH OF THEM, ONLY PERCENTAGE DIFFERS.
-
1st December 2011 12:18 AM
# ADS
Circuit advertisement
-
1st December 2011, 07:25 AM
#1312
Senior Member
Seasoned Hubber
Today, 1st December being World Aids Day, a short film on Aids Awareness with message from Nadigar Thilagam Sivaji Ganesan, Kamal Hassan and Prabhu.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st December 2011, 11:06 AM
#1313
Senior Member
Devoted Hubber
B&W padangalil athuvum lates 60s and early 70s il vanda padangalil-UM,KK and TM esp. kathal katchikal arumaiya irukkum
-
1st December 2011, 11:36 AM
#1314
Senior Member
Diamond Hubber
-
1st December 2011, 11:46 AM
#1315
Senior Member
Diamond Hubber
-
1st December 2011, 11:46 AM
#1316
Senior Member
Veteran Hubber
Anbu Vasudevan sir,
(My Tamil converter is not working for few days, so recent posts are in English)
Thanks for publishing the article by Story & Dialogue writer Thiru. Aroordass, which in some places are not acceptable.
Once Director Muktha Srinivasan told in an interview that, when some producers jumped to the other side, many producers stood with NT such as Muktha, K.S.G., Balaji and gave many successful movies.
What Aroordass told (not even a single producer jumped from MGR side to NT’s side) cannot be accepted…..
1) He mentioned about P.S.Veerappa as after Alayamani and Andavan Kattalai he gone to MGR and produced Anandha Jyothi. True, but after that he came back and produced ‘Iru Dhuruvam’ with NT in 1970 when MGR was in DMK party and active in cine field.(Iru Dhuruvam was released on Pongal 1971, ran more than 50 days and met an average success).
2) Jeyaar Movies, PKV Sankaran & Arumugam, after producing ‘Puthiya Boomi’ in 1968, came to NT’s side and produced Enga Mama (1970), Gnana Oli (1972) and Mannavan Vandhaanadi (1975) and met success in all the three.
3) Every one know about TR Ramanna, who produced many films with MGR like Kulebghavali, Paasam, Periya Idathu Penn, Panakkara Kudumbam, Panam Padaiththavan, Parakkum Paavai etc., during early 60s, the jumped to Jaishankar (Nee), Ravichandran (Kumarippen, Naan, Mondrezuthu) and finally came to Nadigar Thilagam and produced Thanga Surangam, Sorkam and EnnaippOl Oruvan. (No need to forget that he is holder of the recorded land mark ‘Koondu Kili’)
4) Jayanthi Films thiru Kanagasabai, who was the producer of succeeded Maattukkra Velan and flopped Raman Thediya Seethai, came back to NT and produced Sivakamiyin Selvan, the remake of super hit Aradhana (hindi). Sivakamiyin Selavan ran more than 60 days in many centre and give normal profit to distributors.
5) AVM, after their Anbe Vaa, produced Uyarndha Manidhan with NT, infact both of them were hits.
6) Vijaya Vahini, after their Nam Nadu (1969), produced Vana Rani (1974) with NT.
7) The interesting thing is, even Sathya Movies produced a film ‘Puthiya Vaanam’ with NT, in later years.
Being a senior personality in cine field, thiru Aroordass should know and study all these things before he write something in his book.
-
1st December 2011, 01:36 PM
#1317
Senior Member
Devoted Hubber
திரு வாசுதேவன் சார்,
கடலூரில் நடிகர்திலத்தின் படப்பிடிப்பை பற்றிய தங்களின் கடல் போன்ற நீண்ட கட்டுரையை படித்து மனம் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கிறது,தங்களுக்கு கடலளவு நன்றிகள்.
திரு பம்மல் சார்,
தாங்கள் 2000 பதிவை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.தங்களின் 20000 ம் பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
திரு பார்த்தசாரதி சார்,
அந்த நாள் ஞாபகம் பாடல் ஆய்வு கட்டுரை அருமை,வாழ்த்துக்கள்.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
1st December 2011, 02:37 PM
#1318
Senior Member
Senior Hubber

Originally Posted by
HARISH2619
திரு பார்த்தசாரதி சார்,
அந்த நாள் ஞாபகம் பாடல் ஆய்வு கட்டுரை அருமை,வாழ்த்துக்கள்.
அன்புள்ள திரு. ஹரீஷ் அவர்களே,
தங்களுடைய பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
1st December 2011, 02:50 PM
#1319
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
9. "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை"; படம்:- சிவந்த மண் (1969); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி; இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- ஸ்ரீதர்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் காஞ்சனா.
மறுபடியும் நடிகர் திலகம் இடம் பெறும் பாடல்களில், அவர் பாடுவதாக வராது போனாலும், அவரது தன்னிகரற்ற உடல் மொழியால், அனைவரின் கவனத்தையும், தன் மீதும் நிலை நிறுத்திய பாடல்.
படத்தின் நாயகன் பாரத் (நடிகர் திலகம்), தாய் நாட்டை மாற்றானிடம் விற்று விடத் துடிக்கும் சர்வாதிகார திவானிடமிருந்து (எம்.என்.நம்பியார்), தாய் நாட்டைக் காப்பாற்ற, அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து, அதற்காக வகுக்கும் பல திட்டங்களில் ஒன்றாக, அவனை ஒரு மேல் நாட்டு நடனக் காட்சிக்காக வரவழைத்து, அவனைக் கொல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பாடல்.
இந்தப் பாடலுக்குப் பல சிறப்புகள் உண்டு. இருப்பினும், முதன்மையானது - பாடல் முழுவதும் நிறைந்திருக்கும் அந்தப் பரபரப்பு மற்றும் சஸ்பென்ஸ். இத்தனைக்கும், பாடல் துவங்குவதற்கு முன்னர், நாயகன் நடிகர் திலகத்தை எம்.என். நம்பியாரிடம் அறிமுகப்படுத்தும்போது, நம்பியார் அவரது வலது கரத்திலுள்ள தழும்பைப் பார்த்து விடுவார். ஏற்கனவே ஒரு முறை இருவருக்கும் நடந்த சண்டையின் போது, நடிகர் திலகத்தின் கரத்திலுள்ள தழும்பைப் பார்த்திருப்பார். அதை வைத்து, அங்கு வந்திருப்பது விடுதலைக்காக தலை மறைவாக இருந்து, தன்னுடன் போர் புரியத் திட்டமிட்டிருக்கும் கும்பலின் தலைவன் பாரத் - அதாவது நடிகர் திலகம் தான் என்று தெரிந்து கொள்வார். மேலும், பாடல் துவங்கும்போது, நடிகர் திலகத்தின் கையிலுள்ள துப்பாக்கியையும் பார்த்து விடுவார். உடனே, தன்னுடைய கைத்துப்பாக்கியையும் எடுத்து மறைவாக வைத்துக் கொள்வார். ஆக, எதற்காக அந்த நடனத்தை ஆரம்பிக்கின்றார்களோ, அந்தத் திட்டம் துவக்கத்திலேயே தெரிந்து விடும். அந்த சஸ்பென்ஸ் முதலிலேயே உடைந்தும், அந்தப் பாடல் முழுவதும், கொஞ்சம் கூட தொய்வு ஏற்படா வண்ணம் எடுத்திருப்பார் இயக்குனர் ஸ்ரீதர். அதனால், இந்தப் பாடலின் ஆணிவேரான ஸ்ரீதரே இந்தப் பாடலின் முதல் நாயகன்.
இரண்டாவது, அரங்க வடிவமைப்பு. பங்களிப்பு - ஸ்ரீதரின் ஆஸ்தான கலை இயக்குனர் கங்கா. என்ன ஒரு கற்பனை வளம். எகிப்து நாட்டையே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அந்த பிரமிடுகளும், பிரமிக்க வைக்கக் கூடிய மற்ற அரங்குகளும், சுழலும் தட்டும்! பாடல் துவங்கும் போதே, களை கட்டத் துவங்கி விடும்.
மூன்றாவது, பாடல் வரிகள். மறுபடியும், ஒரு சூழ்நிலை அதற்கேற்றாற்போல் பார்க்கும் ஒவ்வொருவரையும், அந்தச் சூழலுடன் இணைத்துக் கொண்டுவிடும் வரிகள். சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல், தட்டித் தட்டி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள் - துடித்து எழுந்ததே, கொதித்து சிவந்ததே, கதை முடிக்க நினைத்ததே என்னும் போது, உடனே, அந்த வரிகளை சரியாக நம்பியார் புரிந்து கொள்வார். இப்படி பாடல் முழுவதும், சூழலுக்கேற்ற வரிகள். இனி ஒருவன்தான் பிறக்க வேண்டும் கவியரசுக்கு இணையாக - அது குதிரைக் கொம்புதான்!
இப்போது பாடியவர். எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் வாழ்க்கையில், அவருக்கு மிகப் பெரிய புகழ் சம்பாதித்துக் கொடுத்த பாடல். அதிலும், குறிப்பாக, அஹ்... அஹ்... அஹ்... என்று விம்முவது அற்புதம். இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தில், ஆஷா போன்ஸ்லேயால் இந்த விம்மலை சரியாக செய்ய முடியாமல் போக, ஈஸ்வரி அவர்கள் அவருக்கு உதவி செய்ததாகக் கூறுவர். இருப்பினும், அவரால் ஈஸ்வரி அளவுக்குப் பாட முடியாமல் போனது. கதாநாயகியின் அந்தக் கொலை வெறித் திட்டம் அவரது நடனத்திலும், முக பாவங்களிலும் எந்த அளவுக்குப் பிரதிபலித்ததோ, அதற்கு ஈடாக அவருக்குப் பாடிய ஈஸ்வரியின் குரலும் சவால் விட்டது.
அடுத்தது இசை. இந்தப் பாடல் வந்த புதிதில், நிறைய இசைக்கருவிகளை உபயோகித்து இசையமைக்கப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்று மெல்லிசை மன்னர் கூறியிருந்தார். இந்தப் பாடலில், நாயகனின் கொலை வெறித் திட்டம், நடனங்களில் தெறிக்கும் நளினம் மற்றும் பாவங்கள், பாடல் நெடுகிலும் தேவைப் படுகின்ற பரபரப்பு மற்றும் சஸ்பென்ஸ் மற்றும் அந்த பிரம்மாண்ட அரங்கத்துக்கேற்ற மிக பிரம்மாண்டமான இசை - அத்தனையும், தெறிக்க வேண்டும்; பார்ப்பவரைப் பற்றி தொற்றிக்கொள்ள வேண்டும். அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இப்போது, நடிப்பு. காஞ்சனா மேலே கூறியபடி, அத்தனை உணர்வுகளையும், காட்டியிருப்பார். இந்தப் பாடலில், அவர், கொலை வெறித்தனத்தையும் காட்டியாக வேண்டும்; சாட்டையால் அடி வாங்கும் போது வேறு விதமான பாவனையையும் காட்ட வேண்டும். அதாவது, பார்ப்பவர்களை, இது வெறும் பாட்டு தான் அதற்கு என்னுடைய நடனம் ஒரு நடிப்பு தான் என்றும் சொல்லியாக வேண்டும். அதே சமயம் அவருடைய மனதிலிருக்கும் கொலை வெறித்தனத்தையும் தன்னை அறியாமல் வெளிப்படுத்த வேண்டும். மிக அருமையாக இதை பேலன்ஸ் செய்திருப்பார். நம்பியார் இந்தப் பாடலுக்கு மேலும் சுவை சேர்த்திருப்பார். துவக்கத்திலேயே, அவர் இந்த நடனம், தன்னைக் கொல்ல வந்ததன் திட்டம் என்று அறிந்து கொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும், குறிப்பாக "கதை முடிக்க நினைத்ததே" என்ற வரிகள் பாடப் படும் போதெல்லாம், ஒரு மாதிரி முகம் முழுக்க வேர்த்து விறுவிறுத்து, அட்டகாசமாக, "உனக்கு நான் ஒன்றும் இளைத்தவன் இல்லை, என்னிடமும் துப்பாக்கி இருக்கிறது" என்றும் பாவனையால் கூறிக்கொண்டிருக்கும் விதம் அட்டகாசமாக இருக்கும்.
கடைசியில், நடிகர் திலகம். இதில், அவருடைய ஒப்பனையும், ஆடை அலங்காரமும் மட்டுமே, அவரை நூறு சதவிகிதம் வெற்றியடைய வைத்து விடும். அந்த அளவுக்கு ஒரு கன கச்சிதமான பொருத்தம். இதற்கு மேல், அவருடைய உடல் மொழி வேறு. முகத்தில் ஒரு வித இறுக்கம், வாயில் எதையோ வைத்து மென்று கொண்டே தன்னுடைய திட்டத்தில் குறியாக இருக்கும் கவனம். Focussed attention with single minded devotion and concentration. இது ஏற்கனவே குறிப்பிட்டது தான். மேடையில் உள்ள இரண்டு தட்டுக்களில் வெளிப் பக்கம் இருக்கும் தட்டில் நடப்பார். இதில் விசேஷம் என்னவென்றால், அந்தத் தட்டு எந்தப் பக்கம் சுழலுகிறதோ, அதற்கு எதிர்ப்புறம் வேகமாகவும், லாகவமாகவும் நடப்பார். இத்தனைக்கும், அந்தத் தட்டின் அகலம் வேறு குறைவு. இந்த ஒரு நடைக்கே இந்தப் பாடல் இன்றளவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்தப் பாடலில், நடிகர் திலகத்தின் பாத்திரத்துக்கு தேவைப்படுகின்ற மேற்கூறிய உடல் மொழிகள் அல்லாமல் அசாத்திய வேகமும் (quick reflex and swiftness) தேவைப்படுகிறது. அதுவும் நடிகர் திலகத்திடம் நூறு சதவிகிதம் வெளிப்படும். இந்தப் பாடலும், நடிகர் திலகம் பாடாமல் வெறுமனே உடல் மொழியை வைத்துக் கொண்டே பார்க்கும் எல்லோருடைய கவனத்தையும் தன் மீதும் தக்க வைத்துக் கொண்ட பாடல்.
சென்ற வருடம் விஜய் டிவியில் இடம்பெற்ற ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடைசி ஆறு பாடகர்களில் ஒருவரான நித்யஸ்ரீ இந்தப் பாடலை - அதுவும் அந்த விம்மலை நுணுக்கமாகப் பாடி எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்றார். அன்றிலிருந்து இன்று வரை எங்கெல்லாம் இந்த இளம் பாடகி பாடுகிறாரோ, அவரை இந்தப் பாடலைத் தவறாமல் பாடும்படி மக்கள் கேட்கின்றனர். அதற்கு ஆவன செய்தது இந்தப் பாடலின் சிறப்பு தான்.
இந்தப் பாடலும், இன்றளவும் அனைத்து மக்களாலும், இன்றைய தலை முறையினராலும் விரும்பி ரசிக்கப் படுகின்றது. அதனால் தான், இந்தப் பாடலும், இந்தக் கட்டுரையில் இடம் பெறுகிறது.
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 1st December 2011 at 02:56 PM.
-
1st December 2011, 05:54 PM
#1320
Senior Member
Diamond Hubber
அன்புமிக்க கார்த்திக் சார்,
தங்கள் உண்மையான கருத்துக்களுக்கு நன்றி. திரு ஆரூர்தாஸ் அவர்களின் சில கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக்கூடியவை அல்ல என்று ஆணித்தரமாக அற்புதமாக ஆதரங்களோடு நிரூபித்துள்ளமைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். பல உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றிகள் சார். ஏ.பி.நாகராஜன்,ஸ்ரீதர்,பந்துலு போன்ற, நடிகர் திலகத்தை வைத்தே பெரும்பான்மையான ஹிட் படங்களைக் கொடுத்த, மிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்கள் எதிர் அணி சென்றதால் அது பரபரப்பாயிற்று. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பாலாஜி, முக்தா ஸ்ரீனிவாசன் போன்றோர் தலைவரை விட்டு இறுதிவரை செல்லவில்லை. கே.எஸ். ஜி கூட 1985-இல் 'படிக்காத பண்ணையார்' தந்தார். உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களையும்,நன்றிகளையும் மீண்டும் ஒருமுறை கூறக் கடமைப்பட்டவன் ஆகிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks