Page 134 of 404 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #1331
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    உலக எய்ட்ஸ் தினமான இன்று [டிசம்பர் 1], எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்பட வீடியோவை பதிவிட்டது ஒரு சிறந்த timely gesture !

    இதுவரை நான் பார்த்திராத "எல்லாம் உனக்காக" காவியப் பாடலான 'மலரும் கொடியும் பெண்னென்பார்' பாடலை youtube இணையதளத்தில் தரவேற்றிய TFMLover அவர்களுக்கும், அதனை இங்கே இடுகை செய்த தங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    பாரம்பரியம்

    [13.11.1993 - 13.11.2011] : 19வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    முதல் வெளியீட்டு விளம்பரம்


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #1333
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    'பட்டத்து ராணி' பாடல் பற்றிய தங்களின் ஆய்வு குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதியற்புதம் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1334
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    பரிட்சைக்கு நேரமாச்சு & ஊரும் உறவும்

    [14.11.1982 - 14.11.2011] : 30வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    முதல் வெளியீட்டு விளம்பரம்



    காவிய விமர்சனம் : தேவி : 1982


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1335
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தங்கள் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்.

    கோடீஸ்வரன், கள்வனின் காதலி, அன்பைத் தேடி விளம்பரங்களின் அணிவகுப்பு அருமை. (கோடீஸ்வரன் விளம்பரம் கோலாகலம்).

    பரிட்சைக்கு நேரமாச்சு & ஊரும் உறவும் மற்றும் பாரம்பரியம் பதிவுகள் பரவசப் படுத்துகின்றன.

    'ஊரும் உறவும்' தேவி விமர்சனம் தேனமுது. நிஜமாகவே நல்ல படம். நல்ல மெசேஜ் சொன்ன படம். வழக்கம் போல நடிகர்திலகத்தின் படங்களாலேயே இந்தப் படமும் பாதிக்கப் பட்டது. வித்தியாசமான வேடத்தில் அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம். எல்லாம் விழலுக்கிழைத்த நீராகி விட்டது. பின் புற்றீசல் போல தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருந்தால்?...

    அருமையான பதிவுகளை பதிப்பித்ததற்கு பாராட்டுக்கள்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 2nd December 2011 at 12:45 PM.

  7. #1336
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மத்திய அமைச்சர் கிராமங்களில் மருத்துவ சேவை ஆற்ற வேண்டியதைப் பற்றி மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். அவர் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருந்தால் தன்னுடைய துறைக்கு இப்படத்தைப் பிரச்சாரப் படமாக ஆக்கியிருப்பார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1337
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்
    டின்செல் டவுனின் டீட்டி (Tinsel Town Deity) யின் டிசம்பர் அணிவகுப்பினை அட்டகாசமாக தந்துள்ளீர்கள். ஆவணங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
    நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1338
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    TFMLover அவர்களின் கருணையினால் எல்லாம் உனக்காக திரைக்காவியத்தில் மற்றொரு பாடல் சுசீலாவின் கொஞ்சும் குரலில் கோபத்தைப் போக்கி சாந்தம் வரவழைக்கும் பாடல்

    கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று கோபம் ஏனடா ... கேளுங்கள்... பாருங்கள்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1339
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)



    10. "வாராய் என் தோழி வாராயோ"; படம்:- பாச மலர் (1961); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்:- எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர்; ; இசை:- மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ. பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, சுகுமாரி மற்றும் குழுவினர்.

    இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், அந்த வைர வரிகளுக்காக சிலிர்க்கும்; எப்போது பார்த்தாலும், அதை எடுத்த விதத்துக்காகவும், அதில் நடித்த நடிக/நடிகையர்களின் நடிப்புக்காகவும், புல்லரிக்கும். இப்போதெல்லாம், கான்செப்ட் சாங், தீம் சாங் என்று என்னவெல்லாமோ சொல்லுகிறார்கள். இந்தப் பாடலைப் போல ஒரு கான்செப்ட் சாங்கை ஐம்பது வருடங்களுக்கு முன்பே யோசித்து அதைக் கச்சிதமாக எடுத்ததற்கு இந்தத் தமிழ் சமுதாயம் என்றென்றைக்கும் இந்தக் குழுவிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

    இந்தப் பாடல் வந்த புதில் இருந்து, இன்று வரை, ஏன் என்றென்றும் திருமணப் பந்தல்களில், நிரந்தரமாகக் குடியேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மற்றொரு பாடல், (அதுவும் நடிகர் திலகம் தான்; வேறென்ன சொல்வது, எந்த நிகழ்ச்சிக்கும், நினைவு கூறுதலுக்கும், அது கோவில் திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும், இந்திய சரித்திரத்தை நினைவு கூறுவதாகட்டும் - சுதந்திர எழுச்சி உட்பட - யாருக்கும், இவரது படங்கள்/காட்சிகள்/பாடல்களை விட்டால் வேறு கதியே இல்லை - அப்படி தமிழர்களின் வாழ்வில் ஊனும் உயிருமாய்க் கலந்து விட்ட யுக, மகாக் கலைஞன்.) பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி - ஆனால், இந்தப் பாடல் சோக ரசத்துடன் இருப்பதால், வாராய் என் தோழி வாராயோ அந்தப் பாடலை முந்துகிறது. இந்தப் பாடலை மிகச் சரியாக யோசித்து, அதை கவனத்துடன் செதுக்கி அந்தப் பாடலின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக நுழைத்து மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர் ஏ.பீம்சிங் அவர்கள் தான் இந்தப் பாடலின் முதல் நாயகன்.

    அடுத்து, வரிகள். எப்பேர்ப்பட்ட அர்த்தம் தொனிக்கும் வரிகளையும், சூசகமாகக் கையாள்வதில் சூரன் கவியரசு என்பதை நிரூபித்த பாடல். இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மயங்குகிறாள் ஒரு மாது பாடலிலும், இதே வித்தையை அற்புதமாக செய்தார். ஒரு மங்கல நிகழ்ச்சியில் இடம் பெறுகின்ற பாடல் - ஆனால், தோழி பாடுகின்றாற்போல் வருகின்ற பாடல் என்பதால், வெறுமனே, மங்களமான வார்த்தைகள் மட்டுமே வருவதாக எழுத முடியாது. இது சினிமா என்கின்ற பொழுதுபோக்கு ஊடகம் அதில் சொல்லப் படுபவை வெகு ஜனங்களுக்காக என்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு எந்த இடத்திலும், டாகுமெண்டரி உணர்வு யாருக்கும் வராவண்ணம் வார்த்தைகளை எழுதி, அதாவது, தன்னுடைய உயிர்த்தோழியை இலேசான குறும்புடன் சூசகமாக சில வார்த்தைகளை வைத்துப் பாடுவதாகவும் எழுதி, பாடலின் கண்ணியத்தைக் கடைசி வரை காப்பாற்றிய - அதன் மூலம், மொழியின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலை நாட்டிய எழுத்து வேந்தர், கவியரசு கண்ணதாசனை எப்படி பாராட்டுவது - இந்த யுகக் கவியை நாளும், பொழுதும் நினைத்து நினைத்து கர்வப்படுவதை விட வேறென்ன வேலை ஒவ்வொரு தமிழனுக்கும்?

    அடுத்து பாடியவர். மறுபடியும் எல்.ஆர். ஈஸ்வரி. இந்த அற்புதப் பாடகியை உலகத்திற்குப் பெரிய அளவில் வெளிக்காட்டிய பாடல். இவரது முதல் மூன்று முத்தான பாடல்களில், ஒரு பாடலை இப்போது தான் எழுதினேன்; அடுத்த பாடல், இப்போது இடம் பெறுகிறது. ஆக, ஒவ்வொரு கலைஞனின் சிறந்த முதல் ஐந்து படைப்புகளை குறிப்பிடச் சொன்னால், அதில் குறைந்தது அறுபது சதவிகிதம், நடிகர் திலகம் நடித்த படங்களில் இருந்து தானே வருகிறது? இந்தப் பாடல் நெடுக வரும் அந்தக் குறும்பை, கொப்பளிக்கும் எனர்ஜியை, வேகத்தை, ஆரவாரத்தை, ஈஸ்வரி அவர்களை விட எந்தப் பாடகியும் இந்த அளவிற்குச் சிறப்பாகக் காட்டியிருக்க முடியாது.

    இப்பொழுது இசை. ஒரு விழாப் பாடலுக்குத் (மங்களகரமான பாடலும் கூட) தேவைப்படுகின்ற வேகம், எனர்ஜி மற்றும் ஆர்பரிக்கும் சந்தோஷ உணர்வு அத்தனையும் இதில் காட்டியாக வேண்டும். இந்த உணர்வுகளை மெல்லிசை மன்னர் தந்த விதம் அருமை. குறிப்பாக இரண்டு விஷயங்கள் இந்தப் பாடலின் இசையமைப்பில் கூறியாக வேண்டும். ஒன்று, குழுவினரின் சிரிப்பொலி அந்தப் பாடலின் பின்னணி இசையோடு இயைந்து வரும் (மூன்றாவது சரணம் - இரவோடு இன்பம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ! என்னும்போது). அடுத்து, சமஸ்கிருத வேதங்கள் அடங்கிய - திருமணம் நடைபெறும்போது புரோகிதர்களால் ஓதப்படுகின்ற வரிகள் - பாடலோடு மீண்டும் இயைந்து வருகின்ற விதம். இந்த இரண்டு சங்கதிகளும் மிக முக்கியமாக - பாடலின் அடிப்படை விஷயமான அந்த வேகம் / டெம்போவைக் கொஞ்சமும் குறைக்காமல், மேலும் மெருகூட்டிச் செல்லும் அந்த விதம். நிறைய பேர் இந்த விஷயத்தைக் கவனித்திருக்கக் கூடும். இல்லையென்றால், ரசித்து இன்புறலாம்.

    கடைசியில் நடிப்பு. சுகுமாரி எனக்குத் தெரிந்து இந்தப் படத்தில்தான் முதன் முறையாக நிறைய நேரம் வருவார் - இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் (பின்னாளில் இவர் இயக்குனர் பீம்சிங்கின் மனைவியானது வேறு விஷயம்.). மிக அருமையாகவும் அதே சமயம் அளவோடும் பாடி நடித்து - யார் இந்தப் புதுமுகம் என்னும் அளவுக்குப் பெயர் வாங்கினார். என்றுமே, இது போல் ஒரு பாடலுக்கு நடனம் மற்றும் பாடி நடிப்பவர்கள் பெரிய அளவுக்கு உடனே பெயர் வாங்குவதில்லை. (உதாரணம் ஏ.சகுந்தலா - அவருமே கூட இந்தப் பாடலில் குழுவினரோடு நடனம் ஆடியிருப்பார். இது போல் இன்னும் சில நடிகைகளும் உண்டு.). நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்கும் இந்தப் பாடலில் பெரிதாக வேலை இல்லை. இருப்பினும், இந்தப் பாடலில் அவ்வப்போது வரும் சில வரிகளுக்கேற்ப, அவருடைய நாணத்துடன் கலந்த முக பாவங்கள் இன்னமும் யாருடைய கண்களை விட்டும் அகல மறுக்கின்றன.

    கடைசியில், நடிகர் திலகம். இந்தப் பாடலிலும், - அதாவது இது ஒரு குழுவினர் ஆக்கிரமிக்கும் பாடல். இந்தப் பாடலிலும், நடிகர் திலகம் அற்புதமாக சில பல ரீயாக்ஷன்களைக் காண்பித்து, பார்ப்பவர்களின் கவனத்தை தன் மீதும் தக்க வைத்துக் கொண்டார். இது எல்லோரும் அறிந்த ஒன்று. மேற்கூறிய வரிகள் வரும் போது, சாவித்திரி ஒரு வித நாணத்துடன் போகும்போது, அந்த இடத்தில் நிற்கும் நடிகர் திலகம் தானும் ஒரு வித பாவத்துடன் - கண்ணியம் தென்படும் ஒருவித பாவம். அதற்கு ஒரு இலக்கணத்தை அன்றே வகுத்துச் சென்றிருப்பார்! அதிலும், அப்போது வரும் இலேசான காற்றில் அவருடைய தலை முடி ஒரு விதமாக ஆடும். அவரது முடி கூட நடிக்கும்!! இந்தக் குறிப்பிட்ட போர்ஷனை பின்னாளில் வந்த ஒரு சினிமாவில் மொத்தமாகப் பயன்படுத்தி, இந்த ரீயாக்ஷனை நகைச்சுவை நடிகர் செந்திலை விட்டு செய்யச்சொல்லியிருப்பார்கள். நல்ல வேளை, அவர் பெரிதாக நையாண்டி செய்யாமல், நகைச்சுவையோடு மட்டுமே அணுகியிருப்பார் - இந்நாட்களில் நடிக்கும் நடிகர்களைப் போல் இல்லாமல்! அடுத்து, கடைசியில் மாங்கல்ய தாரணம் நடக்கும் போது, கையில் இருக்கும் அட்சதையை கண்களில் நீரைத் தேக்கி வைத்து மணமக்கள் மேல் போடும் இடம். தங்கையின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணத்தில் ஒரு அண்ணன் எப்படி உணர்வானோ, அதை நூறு சதவிகிதம் நடித்துக் காண்பித்து பார்ப்பவர் அத்தனை பேரின் கண்களிலும் - முக்கியமாக, ஒவ்வொரு தகப்பன், தாய் மற்றும் சகோதர சகோதரிகளின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்த அற்புதத் தருணமல்லவா அது! இது வெறும் ஒரு நொடியில் காட்ட வேண்டிய காட்சி தானே. இது போல், எத்தனையோ படங்களில் எத்தனையோ நடிகர்களுக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது - அது எப்படி, இவர் ஒருவர் மட்டும், அந்த ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்காமல், தன்னுடைய நூறு சதவிகித அற்பணிப்பைத் தந்தார்? ஆம், இந்த ஒரு காரணத்தினால் தான், அவர் மட்டுமே நடிகர் திலகமானார். உலகம் உள்ளளவும், இந்தப் பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார்!

    நமது நண்பர்கள் மற்றும் ஏனையோர் இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களையும், இந்தப் பாடலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போது, சிலருக்கு பாடல்களைத் தேர்வு செய்ததில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். சிலரது பார்வையில் வேறு சில பாடல்கள் இவைகளை விடச் சிறப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும், என்னுடைய பார்வையில் இந்தப் பாடல்கள் மற்றவைகளை முந்துகின்றன என்பதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்று தான். இவை, இன்றளவும், எல்லோராலும், இன்றைய இளம் தலை முறையினராலும் ரசிக பேதமின்றி ரசிக்கப் பட்டு சிலாகிக்கப்பட்டு கேட்பதற்கு மட்டுமல்லாமல், பார்பதற்கும் விரும்பப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுகின்றது. அதற்குக் காரணம் ஒரு சிறந்த பாடலுக்குத் தேவைப் படுகின்ற அத்தனை அம்சங்களும் நூறு சதவிகிதம் வெற்றிகரமாக அமைந்து, அந்த குழுப்பணி (டீம்வொர்க்) முழுமையாக நிறைவேறியது. அதனால் தான் இந்தப் பாடல்களை சிரஞ்சீவித் துவம் பெற்ற பாடல்கள் என்று தலைப்பு கொடுத்தேன்.

    இந்தத் தொடரில் நான் அவ்வப்பொழுது எழுதி வந்த பாடல்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளுக்கு உடனுக்குடன் என்னைப் பாராட்டி அங்கீகரித்த, அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய கோடானு கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

    தொடரும்,

    நன்றியுடன்,

    இரா. பார்த்தசாரதி

  11. #1340
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    டியர் பார்த்த சாரதி சார்,

    தங்களின் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாடலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை பசுமையாக நெஞ்சில் நிரந்தரமாகக் குடியேறி விட்டது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த எல்.ஆர். ஈஸ்வரி அவர்களைப் பற்றி நீங்கள் புகழ்ந்துள்ள விதம் மனத்தைக் குதூகலிக்கச் செய்கிறது. அந்த அற்புதப் பாடலுக்கு அவர்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. நடிகர் திலகத்தின் அந்த சுழலும் மேடையின் எதிர் நடையையும் காலம் உள்ளவரை மறக்க முடியாது. சுற்றக்கூடிய தட்டிற்கு எதிர்ப்புறம் வேகத்துடனும், அதே சமயம் கம்பீர ஸ்டைலுடனும் நடக்க அவரை விட்டால் வேறு யார்?

    மொத்தத்தில் பார்த்தசாரதி சாரால் 'பட்டத்துராணி' மேலும் மெருகேறி பளிங்குச் சிலை போல் மின்னுகிறாள்.

    பாராட்டுக்களுடன்,
    வாசுதேவன்.
    அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

    தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்,

    இரா. பார்த்தசாரதி

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •