-
3rd December 2011, 02:54 PM
#1351
Senior Member
Diamond Hubber
அன்பு பார்த்தசாரதி சார்,
சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
3rd December 2011 02:54 PM
# ADS
Circuit advertisement
-
3rd December 2011, 03:52 PM
#1352
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
சூட்டோடு சூட்டாக அடுத்து ஒரு அற்புதப் பாடலோடு களம் இறங்கி ஆய்வுசெய்து வழக்கம் போல ஜெயக்கொடி நாட்டி உள்ளீர்கள். அதுவும் என் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி (போன முறை பட்டத்து ராணி, இம்முறை "வாராயென் தோழி வாராயோ") அவர்களின் பொன்னான இரு பாடல்களை ஆய்வு செய்து ஆனந்தப்படுத்தியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
Dear Parthasarathy Sir,
Very good analysis about evergreen songs. Thanks
-
3rd December 2011, 03:54 PM
#1353
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
Your recent Treasures (ponnukku mElAna pokkishanggaL) are simply superb.
the eye catching ads of.....
Kodeeswaran
KaLwanin Kadhali
Parambariyam
Paritchaikku NEramaachu
AnbaiththEdi
and the review of 'Oorum Uravum' are making us very happy.
Thanks for your unvaluable service, and continue for all of us.
Dear Pammalar,
Thank you for your valuable service to this thread and for NT fans all over the world
-
3rd December 2011, 04:01 PM
#1354
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
டிசம்பர் மாதம் வெளியான கலைக்குரிசிலின் காவியங்கள் பட்டியல் அருமை. ஒவ்வொரு காவியத்திற்கும் ஒரு மினி இமேஜையும் இணைத்திருப்பது excellent !
Dear Vasudevan Sir,
Thank you for your valuable postings.
-
3rd December 2011, 04:05 PM
#1355
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
உலக எய்ட்ஸ் தினமான இன்று [டிசம்பர் 1], எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்பட வீடியோவை பதிவிட்டது ஒரு சிறந்த timely gesture !
"எல்லாம் உனக்காக" காவியப் பாடலான 'மலரும் கொடியும் பெண்னென்பார்' பாடலை youtube இணையதளத்தில் தரவேற்றிய TFMLover அவர்களுக்கும், அதனை இங்கே இடுகை செய்த தங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் !
Dear Ragavendran Sir,
Thanks for your timely post
-
4th December 2011, 04:39 PM
#1356
Senior Member
Diamond Hubber
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).

நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.
தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.
அந்த அற்புத போஸ்

மேரியம்மாவை மடியில் கிடத்தி கதறும் காட்சி

"மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"
என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.
தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்

தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,
"என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...
என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்
"இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"
என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக
"முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.
அதிர வைக்கும் ஆங்கார சொடுக்கு

ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா?...

சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)
பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.
சங்கிலி முருகனிடம் "ஜகா"வாங்குவது போன்று கலாய்க்கும் காட்சி

தொடர்கிறது....
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 4th December 2011 at 06:09 PM.
-
4th December 2011, 05:35 PM
#1357
Senior Member
Diamond Hubber
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்). (தொடர்கிறது)....
N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே
"டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"
என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,
"ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T
"என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?
நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?
நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.
பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,
"உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...
உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...
என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,
"சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)
"எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி

உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,
"இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"
என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,
"பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"
என்று நிறுத்தி
தன் கரத்தை பாக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில்
"விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)
"விஷ்"....என்ற வெட்டுவது போன்ற பாவனை

"குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)
பின் தொடர்ந்து,
"நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"
என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...
"அணு அணுவா" அற்புத ஆக்ஷன்

மீசையை கம்பீரமாகத் தடவும் காட்சி

கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..
"எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,
அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,
துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,
"be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..
"எட்றா துண்டை" மிரட்டி மிரள வைக்கும் காட்சி

துண்டை லாவகமாக அணியும் காட்சி

"be careful" சங்கிலி முருகனை எச்சரிக்கும் காட்சி

போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.
தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.
தியாகராஜனைப் பின்னி எடுத்துவிட்டு "தம்" போடும் காட்சி

"சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.
பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.
தியாகராஜனை அடித்துவிட்டு மனம் வெதும்பும் அற்புத உணர்வுப் பிரதிபலிப்புகள்

(ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)
(தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 5th December 2011 at 07:02 AM.
-
5th December 2011, 02:23 AM
#1358
Senior Member
Veteran Hubber
அன்பிற்குரிய ஆய்வுச்செம்மல் வாசுதேவன் சார்,
தங்களின் கைவண்ணத்தில் ஜொலிஜொலிக்கின்ற "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரையின் மூன்றாம் பாகத்தை எதனுடன் ஒப்பிட்டுப் புகழ்வது ? முப்பாலுடனா, முக்கனியுடனா, முத்தமிழுடனா - இவை மூன்றையும் சேர்த்து அதனோடு தங்களின் மூன்றாம் பாகத்தை ஒப்பிட்டாலும் அந்த மூன்றையும் விஞ்சி நிற்கிறதே தங்களின் இந்த மூன்று.
படப்பிடிப்புக் கட்டுரை எழுதி பிரமாதப்படுத்தினீர்கள் ! படக்கட்டுரையிலும் புகுந்து விளையாடுகிறீர்கள், தாங்கள் "கட்டுரைத் திலக"மும் தான் !
ஒவ்வொரு காட்சிக்குண்டான முத்திரை வசனங்களோடு நமது நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகளை தாங்கள் அலசியுள்ளவிதம் அதியற்புதம் ! அந்தந்த காட்சிக்கான நிழற்படங்களையும் அங்கங்கே இணைத்து நிழற்படத்திலகம் என்பதனை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள் !
மொத்தத்தில், "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரையினுடைய மூன்றாம் பாகத்தின் இரு பதிவுகளும், இரு கண்களுக்கு ஒப்பான கண்ணான பொன்னான பதிவுகள் !
அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவல் பீறிட்டு எழுகிறது !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 5th December 2011 at 02:26 AM.
pammalar
-
5th December 2011, 02:43 AM
#1359
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
நடிகர்திலகம் திரியின் ஏழாம் பாகம்.....
பார்வையாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டி சாதனை.
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் விலை மதிக்க முடியாத ஆவணப்பொகிஷப் பதிவுகளாலும் மற்ற நண்பர்களின் சீரிய பங்களிப்பினாலும் இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையில்லை.
குறிப்பாக தாங்கள் இந்த ஏழாம் பாகத்தில் அள்ளித்தந்திருக்கும் சாதனைப்பொன்னேடுகளால், முந்தைய பாகங்களை விட இது பல மடங்கு பொலிவு பெற்றதாக விளங்குகிறது. அவற்றால் இங்கு வருகைதந்து மகிழ்வோர் எண்ணிக்கை மிகக்கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இதற்கு முழுமுதற்காரணமாக விளங்கிய தங்களுக்கும், தங்கள் சீரிய முயற்சி மற்றும் அயராத உழைப்பு இவைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
நீங்கள் தேடித்தேடி அளித்திருக்கும் வரலாற்று ஆவணப்பொக்கிஷங்கள், நடிகர்திலகத்தின் ஐம்பதாண்டுகால திரையுலக வரலாற்றில் அங்கங்கே ஒளி வீசும் வைரங்கள், வைடூரியங்கள், விலை மதிப்பில்லா முத்துக்கள். அவற்றின் 98 சதவீத ஆவணங்களை தீவிர ரசிகர்களாகிய நாங்கள் கூட பார்த்ததில்லை. அவற்றை தேடிச்சேகரித்து அனைவரின் பார்வைக்கும் அள்ளி வழங்கி, ஒவ்வொரு ரசிகர்களையும் 'ஆவணக்காப்பாளர்களாக' மாற்றிய தங்களுக்கு எங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
தன்னிகரில்லா தங்கள் சிறப்பான சேவை தொடர வாழ்த்துகிறோம்.
டியர் mr_karthik,
தங்களின் தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுக்களுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது சிரம் தாழ்த்திய சிகர நன்றிகள் !
நம் ஒவ்வொருவரது பங்களிப்பினாலும், நமது திரி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. வருங்காலத்தில் நமது திரி இன்னும் பற்பல சாதனைகளுக்கு சொந்தமாகப்போவது திண்ணம் !
எல்லாப் புகழும், பெருமையும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 5th December 2011 at 02:49 AM.
pammalar
-
5th December 2011, 02:57 AM
#1360
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
Dear Pammalar,
Thank you for your valuable service to this thread and for NT fans all over the world
Dear Chandrasekaran Sir,
Thanks for your whole-hearted appreciation !
Regards,
Pammalar.
Bookmarks