சக்கை போடு போடும் பார்த்தசாரதி சார்,
நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்புத் திறமையைக் கொண்ட பாடல்களை ஆய்வு செய்ய ஆரம்பித்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுவும் நம்மவர் மிகக் கடினமான இருவேறு நடிப்புப் பரிமாணத்தை ஒரே சமயத்தில் வேறுபடுத்திக் காட்டும் 'சக்கை போடு போடு ராஜா' பாடலை நீங்கள் ஆய்வு செய்துள்ளவிதம் புதுமையாகவும், அதேசமயம் மிகச் சரியாகவும் உள்ளது. நடிகர் திலகத்தின் நடிப்பை நயமாக ஆய்வு செய்துள்ளீர்கள். நாடகக் கலைஞர்களைப் பற்றிய தங்களின் அப்பிப்பிராயமும் அருமை. நாடகத்துறையில் இருந்து வந்த பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் வெள்ளித்திரையில் நாடக பாணியைக் கடைப்பிடித்தாலும் சில காலங்களுக்குள்ளேயே தங்கள் அசாத்திய அனுபவத்தால் அற்புதமாக வெள்ளித்திரைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு இன்றுவரை மறக்க முடியாத கலைஞர்களாய் நம் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறார்கள். அதவும் நம் நடிகர் திலகம் பற்றி கேட்கவே வேண்டாம். பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே நடித்து வியக்க வைத்தாரென்றால், படம் முழுவதும் கட்டில் மெத்தையில் படுத்துக் கொண்டே 'மருமகள்' படத்தில் பட்டையைக் கிளப்புவார்.அற்புதமான ஆய்வுக்கு ஆனந்தமான நன்றிகள்.
தங்களுடைய இந்த புது முயற்சியை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறோம். பாடல்களில் நடிகர் திலகம் அசத்தியிருக்கும் நடிப்புத் திறமைகள் உங்கள் மூலம் புதிய பரிணாமத்தில் திரியில் பிரகாசிக்கப் போகிறது என்பதால் 'எங்க காட்டுல மழை பெய்யப் போகுது....
அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks