அரசியலே அழுக்கென்பார் அறிந்த மாந்தர்
அரசியலில் நாகரிகம் விழைவா ருள்ளார்.
உரசியதும் எரிகின்ற நெருப்புக் குச்சி
ஒத்தபலர் உலவிடுமோர் மேடை அஃதாம்,
வருசினத்திற் கடிமையென வளைந்து கையால்
வாய்வீச்சால் வம்புசெய்த வழியோர் பல்லோர்,
முரசறைந்து செயல்திட்டம் முளைப்பித்துப் பின்
முனைந்தொருகாய் பழம்படுத்தா தணைந்தோர் கோடி!.
Bookmarks