-
30th January 2012, 11:54 PM
#11
Senior Member
Senior Hubber
ஹாய் மால்ஸ்! நேற்று உங்கள இடுகைக்கு முன்னால் நழுவல் என்ற் தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.இன்று பார்த்தால் அனல் அடிக்கும்பாட்டு..சூட்டோடு சூட்டாக மீதியையும் எழுதி விட்டேனே...! நிறைய எழுத் நினைத்துச் சுருக்கிவிட்டதால் கொஞ்ச்ம் சுமாராய்த் தான் இருக்கும்.
***
நழுவல்கள்
**
விரும்பி எழவும் முடியவில்லை
…விழித்து நோக்கவும் தெரியவில்லை
குருட்டாம் போக்காய் குறுகித்தான்
...ஒடுங்கி நன்றாய் இருந்தாச்சு
புருவஞ் சுருக்கிக் கண்மூடிப்
...பொய்யா யுறங்கி இருந்ததுவும்
இருட்டில் நழுவி ஓர்நாளில்
...உலகம் பார்க்க வந்தாச்சு.
விழிகள் வெற்றாய்ப் நோக்குங்கால்
...வெளிச்சம் கண்ணில் அடித்திடவே
கிலியால் உதடுகள் தான்கோணி
...கோவென் றழுதால் அன்னையவள்
வலியச் சேர்த்தே அணைத்த்படி
...அமுதம் தன்னை புகட்டுங்கால்
துளீயாய்ச் சிரித்துத் துஞ்சியதில்
...சென்ற நேரம் கொஞ்சமல்ல.
கிட்ட இருந்தும் வாராமல்
...கூவி அழைத்தும் கேளாமல்
எட்டி எடுக்க் முடியாமல்
...ஏயென் றழவும் அன்னையும்தான்
தட்டித் தழுவிப் புற்ம்போட்த்
...தவழ்ந்து பொம்மை தானெடுத்துக்
கட்டிப் பிடித்தே தூங்கியதில்
....கழிந்த காலம் எத்தனையோ
தளர்நடை பழ்கும் போது
....த்யக்கமும் கொண்டி டாமல்
உள்றலாய்ச் சொற்க ளோடு
...உயரமாய் உள்ள வற்றை
மலர்ச்சியாய் எடுக்கப் பார்த்து
...ம்றுபடி முய்ற்சி செய்து
கலவரம் அடைந்து க்த்தும்
...காலமும் போன தங்கே.
பள்ளியில் படித்த பாடம்
...பருவமும் அடைந்த பின்பு
துல்லிய மாக மேலே
...தொட்ர்ந்த்து வேறு திக்கில்..
கல்வியும் முடித்த பின்பு
...கனிவுடன் வேலை தேடி
நல்லிடம் த்னிலே சேர
...ந்ழுவிய் காலம் பலவே
பழுதுகள் ஏதும் இல்லா
...பக்குவ மாக வேலை
பார்த்த்தில் மனைவி சேய்கள்
...பாய்ந்துதான் சேர இன்றோ
வழுக்கிடும் தரையைப் போலே
...வாழ்வதன் சுவைகள் எல்லாம்
நழுவுது மெல்லக் கொஞ்சம்
....நாரணன் பேரைச் சொல்லி
-
30th January 2012 11:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks