Results 1 to 10 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post


    அஞ்சா அரசு! அடடா!



    அருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.
    கவிதையைப் படித்துத் திறனாய்வு செய்து பாராடிய தாங்களுக்கு என் நன்றி.

    இந்தக் குருவிகள், கூரைக்குக் கீழும் கூரைப்பலகைக்கு மேலுமுள்ள இடைவெளியில் வாழ்கின்றன. இவ்வளவு உயரத்துக்குப் பூனைகள் ஏறிப் போவதில்லை.( 3 storey building) எலிகளும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. வேறெந்த "உயிரி"யும் (other than insects etc) செல்லாத இடம். இந்தக் குருவிகளுக்கே உரிமைபூண்ட இடம்போல ஆகிவிட்டது. ஒருவன் நிலம் வாங்கினால்கூட, அங்கு விளவனவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும் அத்துமீறி யாரும் அங்கு புகுந்துவிடாதபடியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியனாய் இருக்கின்றான்.அவன் பட்டா பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆகவேதான் "பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் மிகப் பண்ணாகும் நல்லிடம்" என்று வருணித்தேன். இந்தக் குருவிகள் அதிகாலையிலேயே எழுந்து ஒலிசெய்கின்றன. அதிலும் பண் ( இசை) இருக்கிறது...இதனைக் குறிப்பாக உணர்த்தியுள்ளேன்.

    குழந்தைகள் விரும்பும் பாடல் எழுதுவது கடினம் என்று நினைக்கிறேன்.

    பள்ளிப் பிள்ளைகள் படிக்க விரும்பும் பாடலாக இது அமையுமானல் அஃது எனக்கு மகிழ்வு தரும்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •