-
6th April 2012, 07:26 AM
#2621
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்.
தங்களுடைய பாராட்டிற்கு மனம் குளிர்ந்த நன்றிகள்.
5.11.2003 துக்ளக் இதழில் வெளிவந்த வண்ணநிலவன் அவர்களின் 'சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்' கட்டுரையைப் படித்ததும் மனம் உற்சாகத்தில் குதூகலித்தது. இதை விட புகழாரம் நடிகர் திலகத்திற்கு சூட்ட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். மிகைப்படுத்தப்படாத வெகு நேர்த்தியான கட்டுரை. வண்ணநிலவனுக்கு நிலவை பரிசாக வழங்கலாம். வண்ண நிலவனின் கட்டுரையைப் பாதுகாத்து இப்போது வெளியிட்டு மனம் குளிரச் செய்த தங்களுக்கு என்ன பரிசு வழங்கலாம் என்றுதான் தெரியவில்லை.(பரிசுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பம்மலார் ஆகி விட்டீர்கள்). அற்புதமான கட்டுரையை அகம் குளிர பதிவு செய்தததற்கு எண்ணிலடங்கா நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 6th April 2012 at 07:31 AM.
-
6th April 2012 07:26 AM
# ADS
Circuit advertisement
-
6th April 2012, 08:05 AM
#2622
Senior Member
Diamond Hubber
'கர்ணன்' நானிலம் போற்றும் 4-ஆவது வாரம்.

அன்புடன்,
வாசுதேவன்.
-
6th April 2012, 08:24 AM
#2623
Senior Member
Diamond Hubber
இன்று புனித வெள்ளி

'ஞான ஒளி' பெறும் ஆண்டனி

"தேவனே என்னைப் பாருங்கள்"....
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 6th April 2012 at 09:30 AM.
-
6th April 2012, 09:24 AM
#2624
Senior Member
Diamond Hubber
Kattabomman !


With the digitised version of “Karnan” becoming a hit, many are on the race to give yesteryear films a new lease of life. For one, Raj TV, which has the rights of many Tamil hits, is looking at digitising many Sivaji Ganesan and MGR films. Rajendran of Raj TV says: “I watched a few scenes of James Cameron's 3D version of ‘Titanic' recently. It was a fantastic experience! That made me think ‘why not make 3D versions of a few yesteryear films?' In fact, we are working on making ‘Veerapaandiya Kattabomman' digital. I'm sure it will be an enjoyable experience for the audience.” Looks like the Tamil audience can look forward to visual treats on the big screen soon!
thanks to myclipscr.blogspot.in
அன்புடன்,
வாசுதேவன்.
-
6th April 2012, 09:37 AM
#2625
Senior Member
Diamond Hubber
Chennai's treat with 3D Classic Movie Releases
http://reviews.in.88db.com/index.php...vie-news/16171
அன்புடன்,
வாசுதேவன்.
-
6th April 2012, 10:18 AM
#2626
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
டியர் சந்திர சேகரன் சார்,
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 04-04-2012 - அன்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது சிறந்த நற்பணிக்கோர் எடுத்துக் காட்டு. பேரவைக்கு நற்பணிகள் ஒன்றும் புதிதல்லவே! தங்களோடு தோளோடு தோள் நின்று நற்பணிகளை கர்ணராய் ஓசையில்லாமல் செய்து வரும் அன்புச் சகோதரர் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், தங்களுக்கும், தங்கள் பேரவை அமைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்களின் அரும்பணி. மதுரை சரஸ்வதி தியேட்டரில் 'கர்ணன்' காவியத்திற்காக வைக்கப் பட்டுள்ள பதாகைகள் அருமை. அந்த நிழற்படங்களுக்கும் என் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாசுதேவன் சார், தங்களின் இதயப்பூர்வமான பர்ராட்டுதல்களுக்கு நன்றி.
-
6th April 2012, 10:22 AM
#2627
Junior Member
Junior Hubber
திரு. பம்மலார் அவர்களுக்கு,
"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!
நட்புடன்!
-
6th April 2012, 03:08 PM
#2628
Senior Member
Diamond Hubber
-
6th April 2012, 03:49 PM
#2629
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார், வாசுதேவன், சந்திரசேகர்,
தங்களுடைய ஆவணப் பதிவுகள், காட்சிப் பதிவுகள் மற்றும் நிகழ்ச்சிப் பதிவுகளைக் காண நடிகர் திலகம் இல்லையே என்கிற குறை மனதில் ஏற்படுகிறது. பாராட்டுக்கள்.
டியர் சிவாஜி தாசன்,
இனிமேல் கடவுளின் விஸ்வரூபம் என சொல்வதை விட கர்ண ரூபம் என சொல்லலாம், பிரம்மாண்டத்தின் அடையாளமாக நிஜமாகவே மாறி விட்டது. தங்களுடைய வருகை அந்த பிரம்மாண்டத்தை நினைவூட்டும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து சூப்பர் பதிவுகளைத் தாருங்கள்.
ஒரு குட்டி கோ-இன்சிடென்ஸ்... இந்த புத்தகத்தை நெகிழ்ச்சியுடன் படித்து முடித்துவிட்டு டிவியை ஆன் செய்தால் அதில் சிவாஜி சார்.. 'ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..' என்று பாடுகிறார்... நடந்துக் கொண்டே...
என்ன புத்தகம்...
யார் ஏன் இப்படி எழுதியுள்ளார்கள்
இங்கே காணுங்கள்
-
6th April 2012, 03:52 PM
#2630
Senior Member
Devoted Hubber

Originally Posted by
sivajidhasan
திரு. பம்மலார் அவர்களுக்கு,
"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!
நட்புடன்!
இதையெல்லாம் கவனிக்க கூடாது என்பதற்காக தான் வடஇந்திய நடிகைகளும் , கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டில் பாடல் காட்சிகள். வெளிநாட்டு ஒப்பனைஆளர்.
நாம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதால் அவருடைய ஓவ்வொரு அசைவும் , தலை முடியில் இருந்து கால் நகம் வரை ரசித்தோம், ரசிக்கின்றோம் , ரசிப்போம்.
Bookmarks