-
14th April 2012, 02:48 AM
#2811
Senior Member
Veteran Hubber
நந்தன வருடத்தில் ஆனந்தமாக ஆறாவது ஆண்டில் ஏறுநடை போடும் நமது நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
Raghavendran Sir, Hats off to You !
தங்களுக்கு ஒரு அன்புப்பரிசு:

பாசத்துடன்,
பம்மலார்.
-
14th April 2012 02:48 AM
# ADS
Circuit advertisement
-
14th April 2012, 03:19 AM
#2812
Senior Member
Veteran Hubber
முத்தான முப்பது ஆண்டுகள்
[14.4.1982 - 14.4.2012]
CONGRATS ILAIYA THILAGAM !

HATS OFF !! KEEP IT UP !!!
With Love & Affection,
Pammalar.
-
14th April 2012, 03:35 AM
#2813
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
Pammalar,Vasu Sir,
The hard work done by both of you despite your gruelling woking sessions is amazing.I cant stop admiring you two guys as I feel diminished in my stature in front of you and your devotion to our almighty acting God.I know how much of personal sacrifice to be made to accomodate this as routine. Infact the thread was so boring without all big names of you two along with Karthick,Sharda and their mysterious absence. Sharda Madam,we all miss you for your vivid account on young,vibrant and handsome nadigar Thilagam.
Dear Gopal Sir,
Thank you so much for your whole-hearted appreciation !
As you rightly pointed out, we are missing the services of mr_karthik & Sister Saradha, two towering pillars of our thread for more than a quarter. Hope Nandhana varudam brings them to our fold.
Warm Wishes & Regards,
Pammalar.
-
14th April 2012, 04:04 AM
#2814
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா & mr_karthik,
தங்களுக்கு உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
நமது திரியின் தூண்களான தாங்கள் இருவரும் இதில் காலாண்டுக்கும் மேலாகப் பங்குபெறாமல் இருப்பதை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அது ஒரு இனம் புரியாத சோகம். தங்கள் இருவருடைய பங்களிப்புகளுக்கு இணை தாங்கள் இருவர் மட்டுமே.
நானும், வாசு சாரும் இடுகை செய்யும் ஒவ்வொரு பதிவுக்கும் அலுக்காமல்,சளைக்காமல் உடனுக்குடன் உளமாரப் பாராட்டும் உயர்ந்த உள்ளம் படைத்த தாங்கள் இருவரும் நந்தன வருடம் பிறந்துள்ள இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தங்கள் மேலான பங்களிப்புகளை வாரி வழங்க விரைந்துவர வேண்டும். எங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். இது எனது-எங்களது அன்பான-பாசமான வேண்டுகோள். இதற்கு தாங்கள் செவி மடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உளமாரப் பாராட்டுவதும் மனிதனுக்குரிய ஓர் உயர்ந்த பண்பு என்பதனை மிக நேர்த்தியாக உலகுக்கு உணர்த்திய தங்கள் இருவருக்கும் மீண்டும் நமது திரியின் சார்பில் ஒளிமிகு நந்தன வருட நல்வாழ்த்துக்கள் !
பாசத்துடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 15th April 2012 at 02:27 AM.
pammalar
-
14th April 2012, 04:41 AM
#2815
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய மேன்மையான பாராட்டுக்கு எனது மென்மையான நன்றிகள் !
"வியட்நாம் வீடு" விஷுவல்கள் வியப்பின் விளிம்பைத் தொட்டது !
"அவன் தான் மனிதன்" பதிவுகள் பதிவுவித்தகர் தாங்கள் ஒருவரே என்று பறைசாற்றுகிறது !
['ஆனந்த விகடன்' விமர்சனம் இதம், 'பொம்மை' படங்கள் பதம்]
"ஹரிச்சந்திரா" : ஆஹா, வருணிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன் !
டியர் சந்திரசேகரன் சார்,
நாகர்கோவில் மற்றும் நெல்லையில் சிவாஜி பேரவை சார்பில் நடைபெற்ற "கர்ணன்" 25வது நாள் விழாப் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அருமை. வழங்கியமைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
14th April 2012, 06:39 AM
#2816
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivajidhasan
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது நடிகர் திலகம்.காமி ற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்!
congrats and goodwishes to raghavendran for successful completion of five years of nadigarthilagam.com we will always be wth you for all your endaveour.
Karnan 5weeks successful run function was arranged by fellow rasigargal very nicely and meaningfully.
-
14th April 2012, 08:03 AM
#2817
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பதிவுகளைப் பற்றிய பாராட்டுதல்களுக்கும் தலை வணங்குகிறேன்.
தங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ நம் நடிகர் திலகத்தை உளமார வேண்டுகிறேன்.
தங்களால்தான் காணக் கிடைக்காத பல அரிய ஆவணப் பதிவுகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அதுவும் வியட்நாம் வீடு, அவன்தான் மனிதன் போன்ற படங்களின் விமர்சனங்கள் அன்றைய பத்திரிக்கைகளின் வாயிலாக நீங்கள் வழங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நான் அது போன்ற பத்திரிக்கைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கிடைப்பது மிக அரிதாக குதிரைக்கொம்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது. சேர்த்து வைத்திருந்த சில ஆவணங்களும் சரியான பராமரிப்பின்றி சேதமுற்று விட்டன. ஆனால் எங்களை விட தாங்கள் வயதில் குறைந்திருந்தாலும் சிறுவயது முதற்கொண்டே சிறுத்தொண்டர் போல நம் இறைவனாரின் மேல் உள்ள அளவு கடந்த பக்தியினால் இந்தியாவெங்கும் தேடி அலைந்து குருவி சேர்ப்பது போல உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காக மெனக்கெட்டு செலவிட்டுள்ளீர்கள்.
அதுமட்டுமல்ல. எனக்கு தலைவர் பற்றிய அரிய ஆவணம் ஒன்று கடலூரில் ஒரு கடையில் கிடைத்தது. அதை வாங்கலாம் என்று விலை விசாரித்தால் அதற்கு கடைக்காரர் சொன்ன விலையில் என் தலை சுற்றியது. இரண்டாவது அக்கால பொம்மை, பேசும்படம், சினிமா எக்ஸ்பிரஸ்,ஜெமினி சினிமா போன்ற பத்திரிக்கைகளைக் கேட்டால் இன்றைய தலைமுறையினர் பல பேர் சிரிக்கிறார்கள். அக்காலத்து ஆசாமிகளோ அதெல்லாம் "இப்போது எப்படி சார் கிடைக்கும்? என்று ஏளனப் பார்வை வீசுகிறார்கள். அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் அதற்கு அவர்கள் சொல்லும் விலையே தனி. பெரிய நூலகங்களில் கேட்டாலோ அங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். விதிமுறைகள்.
ஆனால் நாங்கள் செய்த பாக்கியம் எல்லோருக்குமாய் சேர்த்து நீங்கள் கிடைத்து விட்டீர்கள். தாங்கள் இதற்காக எவ்வளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. எவ்வளவு ஆவணங்கள்!. எவ்வளவு புகைப்படங்கள்!
நம் தலைவரின் ரசிகர்கள் விழா எது எடுத்தாலும் பேனர்களுக்கு புகைப்படம் வேண்டுமா... படங்களைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் ஆதாரத்துடன் வேண்டுமா...தலைவரைப் பற்றிய புத்தகங்களுக்கு அனைத்து விஷயங்களும் வேண்டுமா... கல்யாணப் பத்திரிகை அடிக்க தலைவரின் ஸ்டில் வேண்டுமா....
"கூப்பிடு பம்மலாரை"
என்று அனைவரும் ஒரு சேர அழைப்பது தங்களைத் தான். அந்த நம்பிக்கைக்கும் தாங்கள் பங்கம் வைக்காமல் கேட்டவருக்கு கேட்டபடி 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா' என்ற கூற்றுக்கேற்ப ஆவணங்களையும், ஸ்டில்களையும் கர்ணனாய் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீகள். அவ்வளவு ஆவணகளையும் எலி, கரப்பான், கரையான், மழை, புயல், வெயில் அனைத்தையும் மீறி பாதுகாப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. பல்வேறு இடங்களில் சுற்றி தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து வைத்துள்ள அபூர்வ ஆவணங்களையும், புகைப்படங்களையும் எங்களுடன் மனமகிழ்ச்சியோடு தாங்கள் பகிர்ந்து கொள்வது தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் மரியாதையை மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறது. ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் பணமாக மாற்றி கொள்ளத் துடிக்கும் இந்தக் காலத்தில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் இரவு பகல் பாராமல் திரிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு மிக உயர்ந்த உள்ளமும், எண்ணமும் வேண்டும். அது தங்களிடம் தாராளமாய் உள்ளது. பகலில் தாங்கள் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவுடன் பல இரவுகளில் தூங்காமல் கண் விழித்து திரியே கதியென்று இருப்பதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். கை பேசியைக் கூட சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இடைவிடாமல் பதிவுகள் இட்டதை நான் நன்கு அறிவேன்.
ஏதோ உங்களைப் புகழ்வதற்காக இதை எழுதுகிறேன் என்று தாங்கள் நினைக்க வேண்டாம். நானும் ஆவணைங்களுக்காக அலைந்து திரிந்து ஏமாந்ததுதான் மிச்சம். 'சே' என்று அலுத்து, சலித்து, வெறுத்து விட்டு வந்து விட்டேன். விடா முயற்சி சென்று வெற்றி பெறுவதற்கு நான் ஒன்றும் பம்மலார் அல்லவே!
அன்பன்
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 14th April 2012 at 12:07 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th April 2012, 08:37 AM
#2818
Junior Member
Junior Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு நண்பர்களே!
பொதுவாகவே எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு. நடிகர் திலகத்தின் சில நல்ல படங்கள் அசந்தர்ப்பமாக, துரதிருஷ்டவசமாக தோல்வி அடைந்து விடும் போது மனம் மிக வருத்தப்படும். படம் நன்றாக இருந்தும் காலம் தாழ்ந்து வரும் போது ஜனங்களின் ரசிப்புத்தன்மை மாறிவிட்டது என்ற போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இதுபோன்ற படங்கள் படுகுழியில் தள்ளப்படும். நம் ரசிகர்கள் மத்தியில் கூட இது போன்ற அற்புத படங்கள் எடுபடுவதில்லை.
நேற்று இந்தப் படத்தை மறுபடி முழுவதுமாகப் பார்த்தேன். நடிகர் திலகத்தைப் பார்த்து மீண்டும் பிரமித்துப் போனேன். அப்படிப்பட்ட சாந்தமான நடிப்பை வாரி வழங்கியுள்ளார் அவர். என்ன ஒரு தேஜஸ் அவர் முகத்தில்!. அப்படியே ஒளி வெள்ளம் வீசுகிறது அவர் ஹரிச்சந்திர மன்னனாக வரும் போது. சோகமும் துன்பமும்,கண்ணீரும்,கம்பலையுமாய் வெட்டியானாக வரும் போது அப்படியே உருமாறிப் போய் கண்களில் சோகத்தைத் தேக்கி அவர் அந்தப் பாத்திரத்தின் தன்மையை நூறு சதவிகிதம் நம் கண்கள் முன் பிரதிபலிக்கிறாரே, அவ்வளவும் விழலுக்கிறைத்த நீராய்ப் போய் விட்டது என்று எண்ணும் போது வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை.
நம்மிலும் பெரும் பாலோனோர் இந்த மாதிரிப் படங்களைப் பற்றியும் பேசுவதில்லை. தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். நான் யாரையும் குற்றம் கூறவில்லை.
நாம் பெரும்பாலும் தெய்வமகன், வீ.பா.க.பொம்மன், வசந்த மளிகை, திருவிளையாடல், உத்தம புத்திரன், கர்ணன், பட்டிக்காடா பட்டணமா போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைப் பற்றி அதிகம் நமக்குள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் இந்த ஹரிச்சந்திரா போன்ற திரைப் படங்களில் அவர் நடிப்பைப் பற்றி அவ்வளவாக யாரும் பேசுவதோ, எழுதுவதோ, விமர்சிப்பதோ கிடையாது. இது ஏன் என்றே எனக்குப் புரிய வில்லை. இன்னும் சொல்லப் போனால் சூப்பர் ஹிட் படங்களை விட இது போன்ற படங்களில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் நடிகர் திலகம். ஹரிச்சந்திரா வரிசையில் நானே ராஜா, முதல் தேதி, தெனாலி ராமன், ராணி லலிதாங்கி, மணமகன் தேவை, அம்பிகாபதி, பாக்கியவதி, அவள் யார், எல்லாம் உனக்காக, வளர்பிறை, அறிவாளி, நெஞ்சிருக்கும் வரை, பாதுகாப்பு, தங்கைக்காக, இருதுருவம், துணை, தியாகி, ஹிட்லர் உமாநாத் என்று ஒரு நீள் பட்டியலே இருக்கிறது. இவற்றையெல்லாம் நாம் மறந்து விட வில்லை. ஆனால் போதிய அளவிற்கு முக்கியத்துவம் நாமே கொடுப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. படம் தோல்வியடைந்து இருக்கலாம். தோல்வியடைந்து விட்டதனாலேயே ஒரு படம் குறைந்து விட்டதாக ஆகி விடாது. அதில் நம்மவரின் உன்னதமான காலத்தை வென்ற நடிப்பு இருக்கிறதல்லவா! நமக்கு அது ஒன்று போதுமே! ஆனால் நடிகர் திலகம் இப்படங்களில் செலுத்தியிருக்கும் அபார உழைப்பு மற்ற மாபெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மேற்கூறிய படங்களின் பட்டியலில் பெரும்பான்மையான படங்களின் dvd-க்கள் கிடைக்கின்றன. இது போன்ற கடந்த காலங்களில் சுமாரான வெற்றியையோ, அல்லது தோல்வியையோ தழுவிய படங்களில் நம் நடிகர் திலகம் காட்டியுள்ள அசாத்திய திறமைகளை எல்லோரும் அறியும் வண்ணம் நாமனைவரும் வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அன்புடன்,
வாசுதேவன்
திரு. வாசுதேவன் அவர்களுக்கு!
உங்கள் ஆதங்கம் நியாயமானது தான். எனக்கும் இது சம்பந்தம்மாக ஒரு ஆதங்கம் உண்டு. அதாவது, நடிகர் திலகம் அவர்களைப் பற்றி பேசுகிற போது ஏனோ முதல் 25 ஆண்டுகளோடு நிறுத்திக் கொள்கிறோம் என்று. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளைப் பற்றி நாம் பேசுவதில்லை. மக்களும் பேசுவதில்லை, மீடியாக்களும் பேசுவதில்லை, அவர்களோடு சேர்ந்து நாமும் பேசுவதில்லை. இனிவரும் காலங்களிலாவது இந்த குறை களைய வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி!
நட்புடன்!
Last edited by sivajidhasan; 14th April 2012 at 08:55 AM.
-
14th April 2012, 08:39 AM
#2819
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
நந்தன வருடத்தில் மட்டுமல்ல நவயுகத்திற்கும் ஈடுஇணையற்ற நாயகனாய் விளங்கும் நம்மவர் நடிகர் திலகம் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த புகைப்பட ஸ்டில் அட்டகாச அருமை. இணையில்லா அழகுடன் ஜொலிக்கும் நம் இளம் வயது நாயகரின் அந்த புகைப்படம் இதயத்தில் இனம் புரியா இன்பத்தை அள்ளி வழங்குகிறது. புத்தாண்டிற்கு புதுமைப் பரிசு வழங்கிய தங்களுக்கு புளகாங்கித நன்றி!
நமது நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை திரு. ராகவேந்திரன் சாருக்கு அவருக்குப் மிகவும் பிடித்த 'சுமதி என் சுந்தரி' ஸ்டில் மூலம் தெரிவித்திருப்பது சுந்தரம்.
இளைய திலகத்தின் முப்பதாண்டு கலைச் சேவையை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு தாங்கள் வாழ்த்துக் கூறியிருப்பது அற்புதம். அந்த ஸ்டில்லும் கொள்ளை அழகு.
அன்பன்
வாசுதேவன்.
-
14th April 2012, 08:43 AM
#2820
Junior Member
Junior Hubber
திரு. Kc shekar அவர்களுக்கு,
தமிழகம் முழுவதும் தாங்கள் நடத்தி வரும் கர்ணன் வைபவத்திற்கும், நலத்திட்டங்களுக்கும் என் நன்றியோடு கலந்த வாழ்த்துக்கள்!
நட்புடன்!
Bookmarks