As far as i can, i will publish my creations, for our GOD SIVAJI.
I would like to tell u one thing,friday i had been to kovai,to see karnan in brooke fields,but i could not get the ticket.
because already tickets had been reserved,even college students want to see karnan,for want of the tickets,
collage students are booking for next day show,i felt very happy in that moment.
Last edited by BALAA; 17th April 2012 at 03:08 PM.
ஆகஸ்ட் 2011-ல் நமது நடிகர் திலகம் திரியில் புயலெனப் புகுந்த தாங்கள், கடந்த எட்டரை மாதங்களில், எட்டரை ஆண்டுகளின் சேவையினை எந்தவித பிரதிபலனும் கருதாது செய்துள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தங்களின் இத்தொண்டுக்குப் பின்னால் உள்ள அசாத்திய-அசுர உழைப்பு மிகுந்த போற்றுதலுக்குரியது, சிறந்த பாராட்டுதல்களுக்குரியது. எப்படி நடிகர் திலகத்தை நினைக்காத நாளில்லையோ அதுபோல தாங்கள் இந்தத்திரியில் பதிவுகளை அளிக்க ஆரம்பித்தநாள்முதல் அகிலமெங்கும் உள்ள அண்ணலின் அன்புள்ளங்கள் திருவாளர் வாசுதேவனை நினைக்காத நாளில்லை என்றும் அடித்துக் கூறலாம்.
அப்பேர்ப்பட்ட புகழுக்குரிய தாங்கள், நமது இதயதெய்வத்தின் இந்தத் திரியை திருக்கோயிலாக மதித்து வணங்கும் தாங்கள், சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட உச்சக்கட்ட கருத்து வேற்றுமைகளால், திரியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பது, நமது திருக்கோயிலான இந்தத்திரிக்கு நல்லதல்ல. இந்த உண்மையை இங்குள்ள எல்லோரையும் போல் தாங்களும் உணர்ந்திருப்பவர்தான். எனவே தாங்கள் நடந்தவற்றையெல்லாம் அன்புகூர்ந்து மறந்து, நமது திரிக்குத் திரும்பி, மீண்டும் முன்போல் தங்களின் இணையற்ற-மேலான பங்களிப்புகளை-பதிவுகளை ஆரவாரத்துடன் அளிக்குமாறு தயவுகூர்ந்து மாறா அன்புடனும், மிகுந்த உரிமையுடனும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த பதிவிற்கு தாங்கள் நிச்சயம் செவி சாய்ப்பீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
ஊற்றாகப் பெருகும் பாசத்துடன்,
உங்கள் பம்மலார்.
Last edited by pammalar; 17th April 2012 at 08:42 PM.
Would like to share a happy news which i feel all our N.T. devoted fans wishes is our beloved N.T. Blessings.
Today, we are blessed with 2nd boy child, nevertheless i really felt it was prabhu for us after ramkumar.
JAIHIND
M. Gnanaguruswamy
டியர் ஞானகுருசுவாமி சார்,
மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி !
தங்களின் பெரிய குழந்தையும், புதுவரவாக தற்பொழுது அவதரித்துள்ள இந்த இளைய குழந்தையும், நமது நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களான ராம்குமார், பிரபு போலவே, வாழ்வில் எல்லா நலன்களும் பெற்றுத் திகழ்ந்து, தீர்க்காயுளுடன் வாழ்வாங்கு வாழ, எனது வளமான வாழ்த்துக்கள் !
நடிகர் திலகத்தை நேசிக்கும் தங்களைப் போன்ற தேசிய நெஞ்சங்களுக்கு எந்நேரமும், எப்பொழுதும் நல்லதே நடக்கும் !
Bookmarks