-
20th April 2012, 03:49 PM
#2961
திரு கோபால் அவர்களின் ஹரிச்சந்திரா ஒரு பார்வை மதனின் திரைபார்வை விஞ்சி விட்டது .
Nt அவர்களின் ரசிகர்கள் கூட மிக சிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்து விட்டது
வாழ்க தமிழ் வளர்க சிம்ம குரலோன் புகழ்
-
20th April 2012 03:49 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2012, 03:56 PM
#2962
அன்புள்ள அப்பா
கவிஞர் வைரமுத்து அவர்கள் உடன் nt போட்டோ மிக அருமை (அன்புள்ள அப்பா என்று நினைக்கிறன் சரியா)
ஒரு சாயலில் ஷோபன் பாபு போல் தோற்றம். அன்புள்ள அப்பா திரைப்படத்திற்கு கல்கியின் விமர்சனம் நினைவிற்கு வருகிறது
"பிறவி கலைஞன் ஐயா "
-
20th April 2012, 04:33 PM
#2963
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தெய்வப்பிறவி மற்றும் ஹரிச்சந்திரா படங்களைப் பற்றிய உங்களுடைய சுருக்கமான, ஆனால், அழகான ஆய்வு பிரமாதம்.
குறிப்பாக, தெய்வப்பிறவி. ஒரு கட்டிட மேஸ்திரியின் பாத்திரத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எந்த வித பிரத்தியேக ஒப்பனையுமின்றி, அவருடைய அசல் சுருள் முடியை சரியாகச் சீவாமல் வெறுமனே விட்டு, மீசையை மட்டும் ட்ரிம் செய்யாமல் விட்டு, அசல் மேஸ்திரி போன்றே தோற்றமளித்திருப்பார்.
அன்பாலே தேடிய என் - பாடலில் மிக மிக இயல்பாக நடித்திருப்பார். இன்று சொல்லப்படும் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் நடிகர் திலகம் - பத்மினி ஜோடியிடம் அற்புதமாக மிளிரும்.
இந்தப் படத்தைப் பற்றி மேலும் விரிவாக அலசலாம்.
ஹரிச்சந்திரா - திரு. வாசுதேவன் அவர்கள் பதிந்திருந்த பல புகைப் படங்களைப் பார்த்தால், இந்தப் படம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எடுத்திருப்பது நன்றாகப் புலனாகும். அப்படியென்றால், ஒரு காட்சிக்கும் அடுத்து வருகிற காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவது எவ்வளவுக் கஷ்டம்? அதையும், மிக அழகாக செய்திருப்பாரே நடிகர் திலகம். மற்ற கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பை நல்கியிருப்பார்கள்.
அருமையான ஆய்வு. தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
20th April 2012, 04:35 PM
#2964
Senior Member
Senior Hubber
அன்புள்ள கிருஷ்ணா ஜி,
நீண்ட நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். அசத்துங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
20th April 2012, 04:37 PM
#2965
Senior Member
Regular Hubber
dear Raghavendra, Murali sir
Why vasudevan and pammalar are not writing nowdays
regarrds
kumar
-
20th April 2012, 05:02 PM
#2966
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
parthasarathy
. இன்று சொல்லப்படும் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் நடிகர் திலகம் - பத்மினி ஜோடியிடம் அற்புதமாக மிளிரும்.
Best of Sivaji - Padmini duet IMO is "madhavi ponmayilaal" song, oruthar nadippu expressions, mannerism la kalakkirupar na, innoruthar dance la asathiruppar (also her expressions particularly when Sivaji's character tries to come too closer for her comfort)....... music, dance and acting would have complemented each other perfectly......... it is a chanceless song........
-
20th April 2012, 05:09 PM
#2967
Junior Member
Newbie Hubber
Pammalaar sir ,
உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை என் சிறு வயது ஞாபகத்துக்கு கை பிடித்து அழைத்து செல்கிறது.நான் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் பெரும் ரசிகன்.Vietnaam வீடு சம்பந்த பட்ட பதிவுகள் ஒரு விலை மதிப்பில்லா ரத்னம்.பொக்கிஷம்.என்னை இந்த ஹப் இல் போதை கொள்ள செய்ததில் பெரும்பங்கு உங்களுடையதே.நீங்கள் சேகரித்ததை பலன் கருதாமல் தரும் மனம் பொன் போன்றது.உங்களுடன் நான் பேசிய நேரங்கள் விலை மதிப்பிலா வாழ்வின் நிமிடங்கள்.உங்களின் நலம் வேண்டி பிரார்த்திக்கும் உங்கள் ரசிகன்.
உங்கள் நலம் நாடும்,
கோபால்
Last edited by Gopal.s; 24th April 2012 at 02:58 PM.
-
20th April 2012, 05:11 PM
#2968
Junior Member
Newbie Hubber
krishnaji,
welcome back after a long gap.It is refreshing to have you with us.
Parthasarathy Sir,
Nanri.We are on the same boat in pick of films.
-
20th April 2012, 05:16 PM
#2969
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
மிக நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த திரைக் காவியம், பரீட்சைக்கு நேரமாச்சு, தற்பொழுது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
-
20th April 2012, 05:22 PM
#2970
Senior Member
Seasoned Hubber
இத்திரைப் படத்தில் நெஞ்சைத் தொடும் சிறந்த காட்சி. ஆச்சார அனுஷ்டானமான அந்தணர் குடும்பத்தில் தன் மகனைப் போலவே காட்சியளிக்கும் ஆனந்தைத் தன் மனைவியின் மன நிம்மதிக்காக வசிக்க வைத்து, புலால் உண்பவனான அவனுக்காக மிகுந்த தர்ம சங்கடத்துடன் புலால் அங்காடியின் வாசலில் நின்று அவன் விரும்பிய உணவைப் பொட்டலமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து அவனுக்குத் தரும் இக்காட்சி நடிகர் திலகம் எந்த வயதிலும் தன் நடிப்பில் தன்னுடைய திறமையை நிலைநாட்ட முடியும் என்று நிரூபித்த காட்சியாகும். குறிப்பாக அந்தப் பொட்டலத்தை குடைக்குள் மறைத்து வருவதும். சூதக மந்திரத்தை சொல்லிக் கொண்டே ஸ்நானம் செய்வதும், பின் அவன் மனம் வருந்தும் போது அவனைத் தேற்றுவதும்...
ஒரு நிஜமான அய்யங்கார் எப்படி உணர்வார் என்பதை நிரூபித்த காட்சி..
சூப்பரோ சூப்பர்...
அந்தக் காட்சியைக் காணுங்கள்.
இக்காட்சி நம்முடைய நடிகர் திலகம் திரியின் முந்தைய பாகத்தில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் மீண்டும் தரப் படுகிறது.
இக்காட்சி நம் கோபால் சாருக்கு சமர்ப்பணம்.
Last edited by RAGHAVENDRA; 20th April 2012 at 05:27 PM.
Bookmarks