-
29th April 2012, 08:26 PM
#3111
Senior Member
Seasoned Hubber
-
29th April 2012 08:26 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2012, 12:48 AM
#3112
மதுரையில் இன்று கர்ணனின் 50-வது நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றதாக விழாவிற்கு சென்றிருந்த நண்பன் தெரிவித்தான். விழா 9 மணிக்கு என்று சொன்னாலும் கூட நண்பன் அங்கே செல்லும்போது சற்று நேரம் ஆகிவிட்டதாம். ஆனால் முதலில் ஒரு மெல்லிசை குழுவினர் நடிகர் திலகத்தின் படப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தனராம். காலை 11.15 மணி அளவில்தான் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியதாம். மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள chamber of commerce என அறியப்படும் வர்த்தகசபை அரங்கில் விழா நடைபெற்றது. காலையில் நடக்கும் விழா, அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் நடக்கிறது. ஆகவே சற்று நிதானமாகவே சென்ற நண்பன் அரங்கத்தின் வாசலுக்கு சென்றபோது அதிர்ந்தே போனானாம். காரணம் தரைதளம், பால்கனி எனப்படும் முதல் தளம் இவற்றில் போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பி மக்கள் கூட்டம் அரங்கத்தின் வாசலையும் தாண்டி நின்ற காட்சியை பார்த்து அசந்தே போனானாம். உள்ளே முன்கூட்டியே சென்றிருந்த மற்றொரு நண்பர் மூலமாக ஒரு இருக்கை கிடைத்து அமர்ந்திருக்கின்றான். அரங்கத்தின் அருகிலேயே அமைந்திருக்கும் அபிராமி அரங்கில்தான் கர்ணன் ஓடிக் கொண்டிருக்கிறது. chamber அரங்கத்தையும் திரையரங்கத்தையும் இணைக்கும் தெருவின் ஒரு மூலையில் கர்ணன் பட கட்அவுட் பெரிய அளவில் ஒன்று வைக்கப்பட்டிருந்ததாம்.
மதுரை முகவை மாவட்டத்தில் கர்ணன் படம் வெளியிட்ட அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் மேடையில் கௌரவிக்கப்பட்டனராம். பிறகு சிறப்பு விருந்தினர்கள் பேச அழைக்கப்பட்டனராம். முதலில் மதுரை மாவட்ட ஐ.என்.டி.யு.சி தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜ் வரவேற்று பேசியிருக்கிறார். பிறகு வந்தவர் ஈ.வி.கே.எஸ். காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள பேச தெரிந்தவர்களில் ஒருவரான இளங்கோவன் தன் வழக்கமான பாணியில் பேசியிருக்கிறார். எப்போதுமே அடிமட்ட தொண்டனின் மனமறிந்து பேசக் கூடிய ஈ.வி.கே.எஸ்.இம்முறையும் அப்படியே பேசியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு விஷயம் சொன்னாராம். இது போன்ற விழாக்களுக்கு இங்கே சிறப்பு அழைப்பாளர்களாக நாங்கள் வந்திருப்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம் இப்போது என்னை எடுத்துக் கொண்டால் நான் நடிகர் திலகத்தால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டவன். அந்த நன்றிக் கடன் எனக்கு எப்போதும் உண்டு. வி.என்.சிதம்பரத்தை எடுத்துக் கொண்டால் அவர் திரையரங்க உரிமையாளர். அவரின் அரங்கில் பல நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட்டு லாபம் ஈட்டியவர். நடிகர் திலகத்தின் குடும்ப நண்பர். அவர் இங்கே வந்திருப்பது ஆச்சரியமில்லை. சேரனின் தந்தையார் மேலூர் திரையரங்கத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றியவர். அந்த சூழலில் பிறந்து வளர்ந்து பின் தன் தொழிலையும் சினிமாவாக ஆக்கி கொண்ட சேரன் வந்ததிலும் ஆச்சரியமில்லை. நடிகர் திலகத்தோடு சுமார் முப்பது படங்களில் இணைந்து நடித்து அவர் மனதில் தனியிடம் பிடித்த ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வந்ததிலும் ஆச்சரியமில்லை. ஆனால் சிவாஜியால் எந்த லாபமும் அடையாத உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இங்கே திரண்டு வந்திருக்கிறீர்களே, நீங்கள்தான் உண்மையிலே போற்றுதலுக்குரியவர்கள் என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்ததாம்.
அடுத்து பேசிய வி.என்.சி. தனக்கும் நடிகர் திலகத்திற்கும் இருந்த நட்பை பற்றி பேசினாராம். நடிகர் திலகம் மறைந்த அன்று மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தவர் இறுதியாக நடந்தவற்றை சொன்னபோது கண்கலங்கி விட்டாராம்.
அடுத்து பேசிய மதுவந்தி கர்ணனின் சிறப்புகளைப் பற்றி அந்த படம் இப்போதுள்ள தலைமுறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி அதற்கு உதாரணமாக தன் எட்டு வயது மகன் படம் பார்த்து விட்டு வந்து சொன்னதைப் பற்றி நடிகர் திலகத்தின்பால் தன் தந்தையார் மற்றும் தன் குடும்பத்தினர் வைத்துள்ள அன்பு பக்தியைப் பற்றி எல்லாம் பேசினாராம். தெளிந்த நீரோடை போல் அமைந்த அவர் பேச்சுக்கு once more கேட்டனராம் ரசிகர்கள்.
வழக்கம் போல் சேரனின் உணர்வுபூர்வமான பேச்சக்கு பலத்த வரவேற்பாம். பேச்சை தொடங்குவதற்கு முன் அரசாங்கம் கூட செய்ய தயங்கும் ஒரு காரியத்தை தன் சொந்த செலவில் நடத்திக் கொடுத்த வி.என்.சிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று சொன்ன சேரன், மதுரையில் நடிகர் திலகத்திற்கு தன் சொந்த செலவில் சிலை வைத்ததற்காக இந்த நன்றி என்று சொல்லி மேடையில் வி.என்.சி. காலில் நெடுங்சாங்கிடையாக விழுந்தாராம். பிறகு மைக்கைப் பிடித்த அவர் பேச்சில் அனல் பறந்ததாம். கர்ணன் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசியதை போலவே நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் சொன்னவர் அவர் ஒரே ஒரு முறை அரசியலில் வெற்றி வாய்ப்பை இழந்ததை வைத்துக் கொண்டு அவரை தோல்வி அடைந்தவர் என்று சொன்னால் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? தோல்வி அவருக்கல்ல, தமிழக மக்களுக்குத்தான் என்று ஆவேசப்பட்டாராம்.
அடுத்து முக்கியமான மணி மண்டபம் விஷயத்தை கையில் எடுத்தவர் உணர்ச்சி பிழம்பாக மாறி போனாராம். நாம் ஏன் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கு பின்னால் சென்று யாசித்து நிற்க வேண்டும்? நடிகர் திலகத்தால் வாழ்வு பெற்றவர்கள், நடிகர் திலகத்தால் நடிப்பை அறிந்துக் கொண்டவர்கள் எல்லாம் அவரால் பலன் அடைந்தவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்யாமல் ஒதுங்கி நிற்கிராகள் என்பதற்காக நாமும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்பார்க்க வேண்டாம். நாமே இடம் வாங்கி நாமே மணி மண்டபம் அமைப்போம். சிவாஜி ரசிகர்கள் இதை கையிலெடுத்தால் அதற்கு தோள் கொடுக்க உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் ஓடோடி வருவார்கள். பணம் ஒரு பொருட்டே அல்ல. இன்று ஒரு சபதம் எடுத்துக் கொள்வோம். அதற்கு ஆரம்பம் இந்த மதுரை மண்ணில் இருந்தே தொடங்கட்டும் என ஆவேச முழக்கமிட்ட போது அலைகடல் என மக்கள் கூட்டம் ஆர்பரித்ததாம்.
தன் சார்பாக முதல் தவணையாக ஒரு லட்சம் தருவதாக சேரன் அறிவிக்க,உடனே மதுரை மாவட்ட கர்ணன் விநியோகஸ்தர் ஒரு லட்சம் தருவதாக அறிவிக்க அதை தொடர்ந்து மதுரை திண்டுக்கல் முகவை ராஜபாளையம் போன்ற மன்றங்கள் தங்கள் ஒரு தொகையை சொல்வதாக அறிவித்தார்களாம். வி.என்.சி இரண்டு லட்சமும் திவ்யா சொக்கலிங்கம் மூன்று லட்சமும் அறிவிக்க சேரன், ஈ.வி.கே.எஸ். அவர்களை இதில் பங்கு சேருமாறு அழைக்க அவரும் இதை நன்றாக பரிசீலித்து நல்ல முறையில் செயல்படுத்தலாம் என கூற, உங்களிடமிருந்து லட்சங்களை அல்ல லட்சியத்தில் பங்கு பெறவே அழைக்கிறோம் என சேரன் கூறினாராம். உடனே மீண்டும் மைக் பிடித்த ஈ.வி.கே.எஸ். மத்திய அரசாங்கத்தை ஆள்வது காங்கிரஸ் என்பதால் நீங்கள் என்னிடம் இதை கூறுகிறீர்கள். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் காங்கிரஸ் நமக்காக ஒன்றும் செய்யாது. நாம்தான் காங்கிரசிற்காக இதை செய்ய வேண்டி இருக்கும் என்று போட்டு உடைக்க பலத்த ஆரவாரமாம்.
கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணி தாண்டியும் நடைபெற்ற விழா முடிந்த பின்னும். கூட்டம் அப்படியே இருந்தது என நண்பன் சொன்னான். மெல்லிசை நிகழ்ச்சி மீண்டும் தொடரும் என ஒரு அறிவிப்பு வந்ததாம். ஆனால் மதியத்திற்கு மேல் வேறு வேலை இருந்ததால் நண்பன் அரங்கை விட்டு வெளியேறி வந்தானாம். ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு மனதில் மிகுந்த மகிழ்வோடு கிட்டத்தட்ட 60 மற்றும் 70-களில் நடிகர் திலகத்தின் ஒரு படத்திற்கு ஓபனிங் ஷோ போனால் என்ன மகிழ்ச்சி வருமோ, அன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விழாவில் கலந்துக் கொண்டால் என்ன சந்தோஷம் கிடைக்குமோ அதை மீண்டும் அனுபவித்தேன் என கூறிய நண்பன் இந்த நிகழ்ச்சி இப்படி இன்றைய தேதியில் நடக்கிறது என சொல்லி என்னை போக தூண்டிய உனக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் என சொன்னபோது நானே விழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.
அன்புடன்
-
30th April 2012, 12:48 AM
#3113
Senior Member
Veteran Hubber
அடிகளாரே, பன்மடங்கு பாராட்டுக்கு பரமானந்த நன்றி..!
"ராஜபக்தி"யின் தயாரிப்பாளர் பி.ராஜமாணிக்கம் செட்டியார்...[நரசு ஸ்டூடியோஸ் அல்ல...]
கோபால் அடிகள் பாடியுள்ள கோபால் புராணம் உண்மையிலேயே கோலாகலம்....!
தசரதராமனுக்கும் "துணை" நிற்கிறார் கோபாலகிருஷ்ணன், வாழ்த்துக்கள்....!
Thanks, BALAA Sir.
-
30th April 2012, 01:06 AM
#3114
Senior Member
Veteran Hubber
மதுரையில் நடைபெற்ற "கர்ணன்" 50வது நாள் விழா கவரேஜுக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள், முரளி சார்.
தங்களுக்கு நேரடி ஒளிபரப்பு போல விழாத் தகவல்களை வழங்கிய தங்களின் நண்பருக்கும் கனிவான நன்றிகள் !
மணிமண்டப matterஐ உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் revive செய்துள்ள இயக்குனர் சேரன் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள் !
-
30th April 2012, 01:32 AM
#3115
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
Some Tid bits of Pudhiya Paravai:
1. First Colour movie of Sivaji Films
2. Sixth film of Arur das With Sivaji sir
3. 98th Film of Sivaji Sir
4. One among few fims where M.R. Radha plays a positive character
4. It was released in the year 1964
5. It is one of the Eight movies released in 1964. Itwas a kind of pshyscological thriller
6.Out of Eight movies released in this year 6 movies celebrated 100 days
7. Songs were a major plus for this movie
8. For a change Sowcar madam did not cry in this movie
9. Cinematography captured the locales with a sense of grandeur
10. The climax dialouge uttered by NT was shot after the shooting was called off ( Arur das got this idea in last miunte and suggested it . NT called back all technicians & this scene was shot)
11. Enge Nimathi used maximum instruements and it was written by Kannadasan ( who lost peace as he was suffering from financial distress)
12. It was a adaptation of Bengali film where the hero narrates the whole episode in court scene , it was completely changed.
13. The whole story, Screenplay, dialouges were written within 7 days ( only @ nights)
14.The white dress, transperent shirt was popular after this movie
15. One of the most sought films of NT , sucessful even its subsequent re release & expected to release like Karnan ( only 2 achieve new sucess.)
Good Post, Mr. ragulram11..!
A few corrections & additions:
- PP, Fourth color film for NT after VPK(1959), Sri Valli(1961) & Karnan(1964)
- Seven NT films came in 1964 and five of them celebrated 100 days
NT's 1964 filmography:
1. Karnan - 14.1.1964 - 108 Days
2. Pachchai Vilakku - 3.4.1964 - 105 Days
3. Aandavan Kattalai - 12.6.1964 - 70 Days
4. Kai Kodutha Deivam - 18.7.1964 - 108 Days
5. Pudhiya Paravai - 12.9.1964 - 132 Days
6. Muradan Muthu - 3.11.1964 - 80 Days
7. Navarathiri - 3.11.1964 - 108 Days
-
30th April 2012, 01:56 AM
#3116
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
தன் குருவை என்றுமே மறக்காத நடிகர் திலகத்தின் பிள்ளை
Thanks for the Wonderful Video, Mr. joe....!
-
30th April 2012, 02:36 AM
#3117
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
A melodious song composed by M. Goviindarajulu Naidu for the film Raja Bakthi. This film was a multi-starrer with Nadigar Thilagam Sivaji Ganesan in the lead, Vyjayanthimala, Pandari Bai, Padmini and P. Bhanumathi. Bhanumathi plays a negativie character. All songs were class. Another popular song in this movie is "Karka Kasadara Katravai" sung by the legendary M.L. Vasantha Kumari.
Thanks, Raghavendran Sir for sharing this rare song [பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே...] from RAJABAKTHI(1960) sung by Smt. Balasaraswathi & penned by Kavignar K.Rajavelu..!
-
30th April 2012, 03:21 AM
#3118
Senior Member
Veteran Hubber
சமீபத்திய பதிவுகளைப் பாராட்டி மின்னஞ்சல் மூலம் அருமைச் சகோதரர் வாசுதேவன் அவர்கள் அளித்த மடல்:
அன்பு பம்மலார் சார்,
தங்கள் பரந்த அன்பு உள்ளத்துக்கு நன்றிகள். மின்னஞ்சல் மூலம் தங்களுக்கு நான் அனுப்பிய பதிவுகளை நமது திரியில் அனைவரும் காணும்படி பதிப்பித்தமைக்கு நன்றி. பதிவுகளுக்கான அன்புப் பாராட்டுதல்களை அழகாக தந்ததற்கு மேலும் நன்றிகள். திரியில் பங்கு கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும் தங்கள் மூலமாக திரும்பவும் திரியில் பங்கு கொண்டது பன்மடங்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
கவிதைகளில் கலக்கி (கலங்க வைக்கும்) வரும் நண்பர் கோபால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு அனுப்பும் இந்த மின்னஞ்சல் மூலமாக.
சரி... இனி 'தெய்வப்பிறவி' ஆவணங்கள் பற்றிய தங்களது பதிவுக்கு வந்து விடுகிறேன். அது எப்படி சார்?... நேற்று கலக்கல் ஸ்டில்கள். இன்று பட்டையைக் கிளப்பும் 'தெய்வப்பிறவி' தங்கமான Mail விளம்பரங்கள். அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டீர்கள். பிடியுங்கள் என் கோடானு கோடி மனம் நிறைந்த நன்றிகளை.
8.4.1960 'மெயில்' விளம்பரத்தில் A brilliant emotional movie master piece என்ற அந்த அற்புத வாக்கியம் சத்தியங்கள் நிறைந்த பலிதமான வாக்கியம்.
Reserve in advance விளம்பர கட்டிங், இதர அற்புத விளம்பரங்கள், குறிப்பாக applauded by one and all பொறிக்கப்பட்டிருக்கும் கட்டிங், 100 housefull shows விளம்பரம், talk of the town விளம்பரம் என அனைத்து ஆறு விளம்பரப் பதிவுகளும் தலை வாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை விருந்தாய் ருசிக்கின்றன. பரிமாறிய தங்களுக்கு கைம்மாறு ஏது? 'மெயில்' விளம்பர பதிவுகளை ஈ மெயில் மூலம் பாராட்டும் வாய்ப்பு தந்ததற்கு அகம் மகிழ்கிறேன். அன்றைய talk of the town 'தெய்வப்பிறவி' என்றால் என்றும் 'talk of the hub' எங்கள் பம்மலார் அல்லவோ!
'தெய்வப்பிறவி' பற்றிய சாதனைக் குறிப்புகளின் பட்டியல் அசர வைக்கிறது.
ஊட்டி வரை உறவு என்று மட்டும் விட்டு விடாமல் மதுரையிலும், திருச்சியிலும் விளையாட்டுப்பிள்ளையாய் உறவுகள் கொண்டிருக்கும் சத்தியவானின் காவியங்கள் சாதனை படைக்க வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி!
vasudevan.
எப்பொழுதும் போலவே இதயத்தில் மிச்சம் வைக்காமல் உச்சமாகப் பாராட்டும் வாசு சார், தங்களுக்கு எனது அகம் குளிர்ந்த நன்றிகள்....!
-
30th April 2012, 03:29 AM
#3119
Senior Member
Veteran Hubber
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
நீதியின் நிழல்
[13.4.1985 - 13.4.2012] : 28வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் [சென்னை]

குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும் கணிசமான திரையரங்குகளில் 10 வாரங்கள் [69 நாட்கள்] ஓடிய "நீதியின் நிழல்" ஒரு வெற்றிக்காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
30th April 2012, 04:09 AM
#3120
Junior Member
Newbie Hubber
Pammalaar Sir,
Pl.Convey my Thanks to Mr.Vasu Devan.
Mainly,I appreciate your eye for details on each and every item and articles in the thread. As usual thanks for your mentioning of my reviews.
Yes.I stand corrected on Raja bakthi producer.
Waiting for my Sumathi cum Sundari Darling. Needhiyin Nizhal is Prabhu film.I am little annoyed with this Film as it spoilt the chances of Balu Mahendra-Sivaji Combo.
Bookmarks